வெள்ளி, 12 மார்ச், 2021

அவன் வேறு ! நான் வேறு !


சாலையில் நடந்து போகையில்
பனிமழை சாரல்
குடையெடுத்து
வந்திருக்கலாமோ
என்ற சலிப்பில்
நான் வேகமாய் நடக்க,
நல்லவேளை
குடையெடுத்து
வரவில்லை
என்ற சந்தோசத்தில்
மெதுவாய் பின்தொடர்கிறான்
மகன்!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விரும்பு
கருத்துத் தெரிவி

எதுசரி

  எதுவும் சரியாக இல்லை 

எதையும் சரியாக விடுவதில்லை 

சரிவதெல்லாம் சரியாக இருப்பதில்லை 

சரிந்தவர்களும் சரியாக மாண்டதில்லை 

சாதித்தவர்களும் சரிகளில் சரியாகவில்லை







சூழல்

 அத்துமீறலுக்கு அணை போட்டு

விட்டு விலக்காமல் விதி போட்டு

மனத்தில் தொடு தொடராமல் மூடி போட்டு

என் இதயத்தில் கால்மேல்கால் போட்டு

அமர்ந்திருக்கிறது நினைவுகள் !

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தாடி இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்
Muhunthan Mahalingam, Mallika Jeya மற்றும் 28 பேர்
2 கருத்துக்கள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

குறுங்கதை

 

அவனது கதை இது
நினைவுகள் முணுமுணுக்கப்படுகிறது.
அவன் சிந்தனை சிதறுகின்றது
மூளை வரள்கிறது,
கிறுக்கிய தாள் கிழிக்கப்படுகிறது,
அந்தப் பெயர் உச்சரிக்கப்படுகிறது,
உறவு பேசப்படுகின்றது
கருத்துக்கள் தீர்மானிக்கப்படுகிறது,
ஒரு உறவு முறிகிறது.
உணர்வுகள் ஏகாந்தம்மாகின்றது
கதை மூடுகின்றது
பிரமையை . ........

புதன், 30 டிசம்பர், 2020

வரலாறு ராகம்






ஒரு வரலாறு 

அடைக்கப்பட்ட குரலுக்குள் 

அலைமோதும் வடுக்களின் 

 நினைவுகூரல் 

மௌனமாக பிராத்திக்கின்றது !

பிளவுபட்ட இனம் 

ஆய்வுகள் இல்லாமல் 

வாய்களை மூடி 

ஒப்பாரி படிகின்றன 

காணாதவனை காண்பதற்கு !

தாழ்ப்பாள் இட்ட  கதவுக்கு பின் 

இதுயெல்லாம் அரசியல் என்று 

மௌனமாக தொலைந்து விடுகின்றான் 

மனிதம்  !

-பங்கிரையான்- 



எதிர்பார்ப்பு (ஏ) மாற்றம்



ஜன்னல்களைவிட்டு

வெளியேஅசைகின்றது 

பாதுகாப்பற்ற  

வெண்பனிக் காற்று!

உள்ளே   உறைகின்ற 

கால இடைவெளி

தனிமையை  

தக்கவைக்கின்றன  

ஏகாந்த  உணர்வு !

நிகழ்கால  வருடத்தை

எதிர்கால வருடம் 

அலசி  பார்க்கிறது 

புதிய கனவொன்று!

  - பங்கிரையான்-


காதல்




தனிமையில் 

தனிமையான காதல் !

ஒருவரும் ஒருவரை 

அறிய காதல் !

ஒற்றை கதிரையில் 

உட்காந்திருக்கும் 

ஒருதலை காதல் !

அவன் தெரிந்த  அவள் 

தெரிந்தும் ,தெரியாமல் 

இவன்  காதல்!

 காலத்தின் பிரளயத்தில் 

உளவியலுக்கான 

ஏக்கத்தின் காதல் !

காதலின் தனித்துவம் 

காதலிப்பவனுக்கே 

புரியும் காதலென்று !

-பங்கிரையான்-

-

ஒரு மடல்


Old_books

பரணில் இருக்கும் ஒரு புத்தகம் நான்.
நான் ஒருவேளை
ஒப்பந்தமாகவோ, பக்திப்பாடலாகவோ
அல்லது காமசூத்திரத்தின் ஒரு அத்தியாயமாகவோ
அல்லது அந்தரங்க துன்பத்தின் உச்சரிப்பாகவோ இருக்கலாம்
ஆனால் இவை எவையும் நான் அல்ல எனத் தெரிகிறது
(அப்படி இருந்தால் எவரேனும் என்னைப் படித்திருக்கலாம்)
புரட்சிக்காரர்களின் கூட்டத்தில் வெளிப்படையாக
அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்
நான் அதனுடைய கைப்பட எழுதப்பட்ட நகல்
அதில் காப்புறுதிக்கான முத்திரை இருக்கிறது
ஆனால் எப்போதும் அது வெற்றிகரமாக அமுல்படுத்தப்படவில்லை
அது செயல்முறைப்படுத்துவதற்காக பாதுகாப்பாக உள்ளது
இப்போதுதான் சில சிட்டுக்குருவிகள் வந்தன
வாயில் வைக்கோலை சுமந்துகொண்டு
என் மேனியில் அமர்ந்து
அடுத்த தலைமுறை குறித்து கவலைகொண்டன
(அடுத்த தலைமுறைக்கான கவலை என்பது எத்தனை வியப்புக்குரியது)
சிட்டுக்குருவிகளிடம் சிறகுகள் இருக்கின்றன
ஆனால் தீர்மானங்களுக்கு சிறகுகள் இல்லை
(தீர்மானங்களுக்கு இரண்டாம் தலைமுறை இல்லை)
சிலசமயங்களில்
பிரச்சினை என் கட்டுகளை கழற்றிவிடுகிறது
என் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது
என்பதை மோப்பம் பிடிக்க நினைக்கிறேன்
நான் மோப்பம் பிடிக்க முனைகையில்
பறவை எச்சத்தின் புகைநாற்றம் மட்டுமே உள்ளது.
ஓ! எனது உலகமே, உன்னுடைய எதிர்காலம் என்ன !
உன்னுடைய இன்றைய நிலையில் நான்.

ஞாயிறு, 22 நவம்பர், 2020




  ஏகாந்த இரவு

ஆசைமனம் சிறிது தூங்க  

ஓய்வெடுத்த பகல்நினைவு 

மதுக்கோப்பைக்குள் 

தத்தளிக்கும் வண்டு ஒன்றை 

காட்சி படுத்துகின்றது 

 யாவும் இந்த இரவுக்கு மட்டும் 

சொந்தமானவை !



50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்மொழிக்கா உழைத்த ரஷ்ய தமிழறிஞரான அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி பற்றி ஒரு பார்வை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் தாடி





""1941 ஆண்டு சித்திரை மாதம் 27 திகதி" ரஷியாவில் பிறந்த இவருடைய முழுப்பெயர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மொஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆசிய ,ஆபிரிக்க நாடுகளுக்கான தொடர்பான ஆய்விபிரிவில் ஆய்வாளர்கவும் விரிவுரையளராகவும் முன்னர் பணியாற்றியவர் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டு "முல்லைத்திணையின் பிரிவு "என்ற தலைப்பில் தன் ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதியானவர் .நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட ஐவகைத்திணைகள் பற்றி கற்றறிந்த இவர் காடும் காடு சார்ந்த நிலம்பற்றி ஆய்வுமேற்கொண்டிருப்பது இலங்கை ,இந்திய தமிழர்களை ஆச்சரியபடித்திய இலக்கண தகவல்
தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார்.
இவர் பல ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராக துப்யான்ஸ்கி ரஷ்யாவில் தமிழ்மொழியை கற்பித்துவந்தார். ரஷ்யாவில் உள்ள 10 பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் பல தமிழ் கவிதை , இலக்கிய நூல்களை ரஷ்ய மொழியில் பதித்து வெளியிட்டவர்.
இவர் தொல்காப்பியம் துணை நிற்கிறது. சங்க இலக்கியங்களுக்கு சங்க இலக்கியங்கள் பற்றிச் சொல்கிறது. சங்கம் பற்றி விளக்கம் கூறுகிறது. முச்சங்கங்களின் வரலாற்றைக் கூறுகிறது. சங்க இலக்கியங்கள் பற்றி அறிமுகம் செய்கிறத நூல்களை கற்று . எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது. சங்க இலக்கியத்தின் யாப்புப் பற்றியும், உவமைகள் பற்றியும் கூறுகிற. சங்கப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள், வாழ்வியல் செய்திகள்
ஆகியவற்றைக் கூறுகிற இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் பற்றி சிறப்பாக அறிந்து கற்று
தமிழ்நாடு கோயம்புத்தூரில் 2010-இல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை பலத்த விவாதத்தை எழுப்பியது.
கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை அவர் நடத்திவந்தார்.
துப்யான்ஸ்கி தனது ஆய்வுக் கட்டுரையில் . “ சங்க இலக்கியங்களுக்கும், தொல்காப்பியத்துக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளை அவரது கட்டுரை சுட்டிக்காட்டியது. அதற்காக சில உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார்.‘‘தொல்காப்பியம் நொச்சித் திணைப் பற்றி எங்கும் பேசவில்லை. உழிஞைத் திணைப் பற்றிப் பேசும்போது அதன் துணைப் பிரிவாக ஒரே ஒரு இடத்தில் நொச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை நொச்சித் திணையை விரிவாகப் பேசியுள்ளது.
பிரிவு குறித்து தொல்காப்பியம் பேசிய இடத்தில் பிரிவுக்கான காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் குறிப்பிட்டு
பெண்ணோடு கடற்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அத்தகைய நிகழ்வு எதுவும் சங்கப் பாடல்களில் இல்லை. தலைவனின் தோழன் காதலர்கள் சந்திப்பதற்காகப் பன்னிரெண்டு விதமான காரியங்களைச் செய்வது குறித்தும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
ஆனால், சங்கப் பாடல்களில் அத்தகைய நிகழ்வுகளை எங்குமே நாம் காணமுடியவில்லை’’ என்று துப்யான்ஸ்கி குறிப்பிட்டு சுட்டிக்காட்டி தனது ஆய்வுக் கட்டுரையில் எழுப்பிய ஒரு பிரச்சனையை யாரும் விவாதிக்கவில்லை
அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு
தனது #"79-ஆவது வயதில் மொஸ்கோவில் 18.11.2020" அவர் காலமானார்.
"பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர்
இவர் எமது தமிழுக்கும் ,தமிழருக்கும் நெருக்கமானவர் ,இவரின் வரலாற்றை எமது மொழியுடனும் ,இனத்துடனும் , இணைத்தே பார்க்கவேண்டும்


ஞாயிறு, 4 அக்டோபர், 2020

காலை நிலம்


காலை தென்றல்

மெல்ல வீச..

கிளையை விட்டு 

விலக போகும் 

பழுத்த இல்லை ஒன்று 

பனியின் குமிழியை 

தங்கி நின்று அசைத்து ஆட 


கண்கள் விரும்புவதை

நான் உணர்கின்றேன் ..!

மனம் விரும்புவதை

நான் யாசிக்கின்றேன் ..!

 

வாழ்வு நேசித்து அமுத சுரபி

 என் நெஞ்சில். 

மிதந்து பின் அமிழ்கிறது.


நம்பிக்கையான நாளாக

அமையட்டும்!


-பங்கிரையான் -

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

1983ஆம் ஆண்டு ஜுலை 23

 983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் இந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளது
தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் (இரத்த காயம்)
.

சம காலப்பகுதியில் சிங்கள பேரினவாதத்தின் உந்துதலில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீதும் சிங்கள காடையர்களாலும் கைதிகளாழும் கொடூரமான தாக்குதல்கள் இடம் பெற்றன.
சிறைச்சாலையில் நிகழ்தேறிய கலவரச் சம்பவத்தில் காந்தியம் பிதா மருத்துவர் சோ. இராஜசுந்தரம்,குட்டிமணி ,தங்கதுரை ,ஜெகன் , தமிழ் அரசியல் கைதிகள் உற்பட 53 பேர் வரையான அநாகரியமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.

”சுதந்திரத்தமிழீழத்தை என் கண்கள் காணவேண்டும் அதனால் இறந்தபின் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்“ என்று தன் இறுதி ஆசையை நீதிமன்றத்தில் சொன்னதற்காய் ஜூலை-25 அன்று ‪‎ வெலிக்கடை‬ சிறைச்சாலையில் வைத்து ”குட்டிமணியின்“ கண்கள் உயிருடனிருக்கும்போதே சிங்களக்காடையர்களால் பிடிங்கி புத்தனின் காலடியில் போடப்பட்டது

குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்

1983 ஜூலை 23 தமிழரின் வாழ்வில் ஆறாத வடுவாக நிலைத்து விட்டது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், இரவு மற்றும் வெளிப்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், சன்கிளாஸ்கள், தாடி மற்றும் குளோஸ்-அப்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

வரலாற்று குறிப்பு





இன்று புரட்டாசி -5 தேசபக்த மாவீரர், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம்
உலகநாதன் சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் மக்களிடம் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.
திருநெல்வேலியில் ஒரு பொதுகூடத்தில்ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து பேசும்போது அவரை பேச மறுத்தும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறுமாறும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்படடர்
விடுதலைக்கு பின்
வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்து பின் தூத்துக்குடி வந்தார்.
தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம், , ’வ.உ.சிஅய்யா நடத்தி வந்த சுதேசி கப்பல் இது தான் காணகிடைக்காத புகைப்படம்.. prpppioy’ எனச்சொல்லும் உரை


ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஏகாந்த இரவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், இரவு, மரம், வெளிப்புறம், இயற்கை மற்றும் தண்ணீர்
முதுவேனி பொழுது
செவ்வானம்
தவழும் மேகம்.
அந்தித தாரகை,
அலைமோதும் கடல்
இயற்கையின் கலை
அபிநாகின்றது
மனித உணர்வுகளுடன்
உணரும் காட்சிகள்
இது எனது
அடையாளமற்ற இடங்கள்
அடையாளம் தேடி அலைகிறேன்
என்னை தொடர்கிறது
என் காதல்.

திங்கள், 29 ஜூன், 2020

புதிய அரசியல் அறிவியல்



அறிமுகம்
  1. கழகங்கள்
  1. கூட்டமைப்புகள்
  1. தேவாலயம்
  1. நிர்வாக அமைப்புகள்
உதாரணங்கள்
  1. நாட்டிடை அரசியல் அறிவியல் குழுமம்
  1. இந்திய அரசியல் அறிவியல் குழுமம்
  1. இந்திய பொது நிர்வாக நிறுவனம்
  1. அமெரிக்க அரசியல் அறிவியல் குழுமம் தூய அறிவியல் நிலையை பெறவேண்டும் என்ற இலக்கை நோக்கி நடத்தை இயல் செல்லும் போது, அரசியல் அறிவியலுக்கு ஒரு தொழில் ரீதியான அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.
  1. முன் அறிதல் மற்றும் விளக்கங்களை அளிப்பதில் அரசியல் அறிவியல் தக்க நெறிமுறைகளைக் கொண்டு அரசியல் நடத்தைகளைப் பயன்படுத்துவதாகும்.
  1. தனிமனித நடத்தை மற்றும் அரசியல் குழுக்களின் நடத்தைகளை எண்ணிக்கை அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அரசியல் புதிர்களை விளக்கச் செய்வதாகும்.
  1. முன்கூட்டி அறிதலை துணைசெய்யும் வகையில் புள்ளியல் விவரங்கள் அளவிடப்படவேண்டும்.
  1. ஒரு கோட்பாட்டின் மூலம் ஆராய்ச்சிகள் அமைய வேண்டும். மேலும் அவ்வாராய்ச்சிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்ற கருத்து முன்படிவத்தினை பெற்றிருக்க வேண்டும்.
  1. உண்மையான அறிவியல் ஆராய்ச்சி முறைகளை அரசியல் அறிஞர்கள் பின்பற்றவேண்டும்.
  1. அளவிடமுடியாத கருத்துகளாகிய மக்களாட்சி, சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை எண்ணிக்கையளவில் ஆராயமுடியவில்லையென்றால் அவைகளை ஒதுக்கவேண்டும்.
  1. அரசியல் அறிவியல் ஒரு பல இயல் அறிவாக உருவாகவேண்டும்.
  1. பல்நோக்கு பகுப்பாய்வு, சர்வே ஆராய்ச்சி, கணக்கு மாதிரிகள் துணைகொண்டு அரசியல் அறிவியல் ஆராய்ச்சி வழிமுறைகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
அரசியல் அதிகாரம் என்றால் என்ன?
ஆளுமையின் தன்மை மற்றும் முக்கியத்துவம்
  • பாரம்பரிய ஆளுமை
  • தலைமைபண்பு ஆளுமை
  • சட்ட - பகுத்தறிவு ஆளுமை
உயர் வகுப்பு கோட்பாடு
  1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை எப்பொழுதும் இருக்கும்.
  1. சிறுபான்மையினரான உயர்குடியினர் பெரும்பான்மையான மக்களை ஆள்வார்கள். உயர் குடியினரை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். "ஆட்சி செய்யும்’ உயர் குடியினர் மற்றும் ‘ஆட்சி செய்யா’ உயர் குடியினர் ஆவார்கள். இவ்விரு உயர் குடியினர் சமூக சமன்நிலையை செய்கின்றார்கள்.
  1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சலுகைகளையுடைய மக்கள் உள்ளனர். ஆகவே சமூக வாழ்வில் சமத்துவமின்மை தவிர்க்க இயலாதது. (சமூக வகைபாடுகள்)
  1. ஒவ்வொரு சமுதாயத்திலும் உயர் குடியினர் சிறுபான்மையினராகவே இருந்து பெரும்பான்மையான மக்களை ஆட்சி செய்வர்.
  • ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு குறிப்பிட்ட அதிகாரம் உடையவர்கள் சமுதாயத்தை கட்டுப்படுத்துவார்கள். எந்தவிதமான அரசாங்கமோ அல்லது பொருளாதாரமோ, அவற்றில் என்றும் உயர்குடி ஆட்சிதான் கோலோச்சும். பெரும்பான்மையான மக்கள் தங்களை ஆட்சி செய்யமாட்டார்கள்.
  • கிடைக்கின்ற வளங்களை தக்க அமைப்பு ரீதியாகவும், கூட்டு முயற்சியிலும் பெருமளவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். உயர்குடி உறுப்பினர்கள் அதிகாரத்தை மையப்படுத்தி ஆட்சி செய்வார்கள்.
  • கிடைக்கின்ற அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி உயர்குடி வகுப்பினர் தங்கள் அதிகாரத்தை பாதுகாத்தும், விரிவுபடுத்தியும் கொள்வர். தங்களுக்கு பயன்படும் என்றாலொழிய அதிகாரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். தன்னிச்சையாக தங்கள் அதிகாரத்தை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
  • தங்கள் சமுதாயத்தை ஆட்சி செய்ய பல நுட்ப முறைகளை உயர் குடியினர் பின்பற்றுவர். பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல், காவல் மற்றும் இராணுவத்தை தங்கள் நலன் காக்க பயன்படுத்துதல், கல்வி முறை மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்களை தங்களுக்கு சாதகமாக சூழ்ச்சியாக நடத்துதல், தங்களை எதிர்பவர்களை தனிமைப்படுத்துவது அல்லது தீர்த்துகட்டுவது, தங்கள் அதிகாரத்தையும் ஆட்சியையும் நியாயப்படுத்தும் அரசியல் கொள்கைகளை உருவாக்குவது போன்ற வழிகளை பின்பற்றி தங்கள் ஆட்சியை நிலைப்படுத்துவர்.
  • தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களின் சுயநலத்தை பேணவும், தங்களின் அதிகார இடத்தை தக்க வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுவர். இரண்டு காரணங்களுக்காக மார்கீசிய கோட்பாட்டினை உயர் கோட்பாட்டாளர்கள் மறுக்கின்றனர்.
சமூக வர்க்க கோட்பாடு
  1. இராணுவத்தின் துணைகொண்டு, சிறு குழு தலைவர்கள் அரசியல் ரீதியாக ஆட்சி செய்வது.
  1. நுட்ப பணியாளர்களை சார்ந்து ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள்இத்தகைய நுட்ப பணியாளர்கள் சமுதாயத்தின் அன்றாட நடவடிக்கையை கட்டுப்படுத்தி ஆட்சி செய்வர்.
  1. பொருளாதார மந்தநிலை ஏற்படுகின்ற காலங்களில் சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சியினைப் பெருக்குதல்.
  1. பல வர்க்கங்களின் மீது அடக்குமுறையைப் பயன்படுத்துதல், குறிப்பாக மத்திய வருவாய் வர்க்கத்தினர் மீது. காரல் மார்க்ஸின் உயர்குடி வகுப்பினர் அல்லா கோட்பாடு ஒரு சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் எவ்வாறு பிரித்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆரம்ப காலம் முதற்கொண்டே விளக்கியது மார்கீசிய கோட்பாடாகும். மார்க்ஸின் கூற்றுப்படி ஒவ்வொரு நாகரீகமடைந்த சமுதாயத்திலும் அரசியல் அதிகாரம் என்பது சமமான அளவில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. பொருள் உற்பத்தி செய்யும் முறையை தங்கள் வசமாக்கி கொண்டு ஆட்சியில் உள்ளவர்கள் அரசியல் அதிகாரத்தை ஒருமுகப்படுத்துவர். ஆகையால் அரசியல் தலைவர்கள் ஆதிக்க வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆவார்கள். அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க சமூக பொருளாதார காரணிகள் தீர்மானிக்கின்றது. ஆளப்படுவோருக்கும், ஆள்வோருக்கும் இடையே தொடர்ச்சியாக நடைபெறும் சச்சரவுகள் சமூக முறைமைகளை நிலை நிறுத்துகிறது. இத்தகைய சச்சரவுகள் உற்பத்தி சக்திகளை தீர்மானம் செய்கின்றது. வர்க்கரீதியாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என இருவேறு கூறாக மாறும் வர்க்க வேறுபாட்டுடன் வர்க்க பேதங்கள் உருவாக்குகின்றன. சச்சரவுகளின் தன்மைகளின் அடிப்படையில் அதிகார பகிர்ந்தளிப்பு நடைபெறுகிறது. ஆகவே பொருளாதார தன்மையை தீர்க்கவல்லது மார்க்கீசிய கோட்பாடு. அது வர்க்க போராட்டத்தை தூண்டவல்லது. வன்முறை அடிப்படையில் புரட்சியை ஆதரிப்பது. ஆகவே மற்ற சிந்தனையாளர்கள் மார்க்சீய கோட்பாட்டினை எதிர்க்கின்றார்கள்.
தொடர்புடையது
அரசு இயங்குகின்ற தன்மை பற்றி அறியும் இயல் அரசியல் அறிவியல் என்பதாகும். அரசாங்கத்தின் கட்டுமானம் மற்றும் அதன் இயக்கத்தை படிப்பதும் இதில் உள்ளடங்கியதாகும். அதனடிப்படையில் அரசியல் அறிஞர்கள் கீழ்க்கண்ட சமூக நிறுவனங்களை பற்றி படிக்க முற்படுகின்றனர்.
ஜான் போதான் (1530 - 1596) என்ற பிரெஞ்சு தத்துவ ஞானி 'அரசியல் அறிவியல்’ என்ற பதத்தைப் பயன்படுத்தினார். முடிவு எடுப்பதில் அதிகார ஒதுக்கீடு மற்றும் அதிகார இடப்பெயர்வை பற்றிய செய்திகளை அரசியல் அறிவியலாளர்கள் கற்கின்றனர்.
அரசியல் அறிவியல் என்பது நேர்மறை எண்ணக் கருத்துகளை முன் நிறுத்துவதிலும், அரசியலை பகுப்பாய்வு செய்வதிலும் மேலும் கொள்கை உருவாக்கத்திற்கு தேவைப்படும் கருத்துகளை சிபாரிசு செய்வதிலும் முற்படும். பாரம்பரிய அரசியல் அறிவியல் என்பது மனதளவில் உருவாகும் எண்ணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அறிவை வளர்ப்பதாகும். மேலும் அவைகள் ஒழுக்கலாறு அடிப்படையிலானவை. பாரம்பரிய அரசியல் கோட்பாடுகள் உத்தேசம் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முன் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி கேள்வி ஞானத்தால் உருவாகுவதாகும். ஆனால், புதிய அரசியல் அறிவியல் என்பது புள்ளி விவரங்களோடு சார்ந்த அறிவியல் அடிப்படையிலான கேள்வி ஞானமாகும். அரசியல் அறிவியலின் அறிவியல் தோற்றம் என்பது 1950-களில் நடைபெற்ற நடத்தை இயக்கத்தால் ஏற்பட்டதாகும்.
அறிவியல் ரீதியான அரசியல் என்பது 1950-களில் கண்ட நடத்தை இயல் புரட்சியின் மூலம் நாம் கண்டதாகும். இவ்வியக்கத்தின் பிறகே இவ்வியலின் பல உறுப்பினர்கள் அரசியல் பாடத்திற்கு ஒரு அறிவியல் தன்மை இருப்பதாக உணர்ந்து கொண்டனர். அரசியல் நடத்தைகளை உணர்வதிலும், எண்ணளவு அடிப்படையில் அரசியல் உணர்வுகளை துல்லியமாக எதிர்பார்ப்பதிலும், அனைவரும் ஏற்றுக் கொண்ட மதிப்பு அடிப்படையில் அல்லாத ஆராய்ச்சி வழிமுறைகளில், அரசியல் அறிவியல் நடத்தை இயலின் மூலம் நிலைநிறுத்தியது. நடத்தை இயக்கத்தின் பிறகு இவற்றில் சிறிது மாறி இருந்தாலும் நேர்மறை அறிவியல் மாதிரியை இன்றளவும் அரசியல் அறிவியல் பின்பற்றிவருகிறது. இதன் காரணமாய் எண்ண அடிப்படையில் உருவாகும் அரசியல் கோட்பாடுகள் ஒரளவு மங்கத் தொடங்கின. உண்மையில் வெறும் சிந்தனை அடிப்படையை அரசியல் கோட்பாடுகள் எண்ணளவு அடிப்படையிலான ஆதரிக்கவில்லை, என்பதால் நடத்தை இயல், எண்ணம் அடிப்படையிலான அரசியல் கோட்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பணி சார் குழுமங்களின் ஆதரவினால் அரசியல் படிப்பு என்பது தொழில்ரீதியான இயல் என்ற அந்தஸ்தைப் பெற்றது.
நடத்தை இயலின் காரணமாய் அரசியல் அறிவியலோடு தன்னை ஐக்கியப்படுத்தியது. இத்தகைய ஐக்கியப்படுதல் என்பது அன்று முதல் இன்று வரை எந்தவொரு மாற்றமில்லாமல் தொடர்கின்றது. அரசியலைப் பற்றிய உண்மையான அறிவை பெறவேண்டும் என்றால் அரசியல் அறிவியல் ஒரு அறிவியல் அடிப்படையிலான, தனித்தன்மைபெற்ற இயல் என்றும், தொழில்ரீதியான ஐக்கியப்படுத்துதல் என்ற நிலையில் இவ்வியல் தன்னைக் காட்டிக் கொள்ளவேண்டும். அறிவியல் அடிப்படையிலான வழிமுறைகளின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் குறிக்கோள் அடிப்படையிலான, எண்ணங்களின் அடிப்படையில் விடுபட்ட மதிநுட்ப ரீதியாக அரசியலை புதுமைப்படுத்துவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். மதிப்பீட்டிலிருந்து விடுபட்ட (Value-free) அறிவியலில் எண்ணம் அடிப்படையிலான குறிக்கோள்கள் கிடையாது.
ஒரு தொழில் ரீதியான பார்வையின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் புதிய அரசியல் அறிவியலை அறிமுகப்படுத்தினர். அரசு அமைப்புகளில் அரசியல் அறிவுகளைப் புகுத்தினார்கள். பகுத்தறிவு ரீதியான அரசியல் கட்டளைகள், புதிய அரசியல் சமுதாயத்தை உருவாக்குவதில் சமூக பொறியாளர்களான சார்லஸ் மேரியம் மற்றும் ஹெரால்டு லாஸ்கி போன்றோர் முற்பட்டனர்.
புதிய அரசியல் அறிவியல் அறிஞர்கள் குடிமக்களை ஒரு கருவாக மேலும் உற்றுநோக்கி அறிவதில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். சுதந்திர மக்களாட்சி அரசை ஊக்கப்படுத்துவதில் புதிய அரசியல் அறிஞர்கள் நாட்டம் கொண்டனர். அறிவியல் அடிப்படையிலான அரசியல் சாத்தியமென்றும் அதனடிப்படையில் உருவாகும் அரசியல் அறிவு சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்கவல்லது என்ற அடிப்படையில் இயங்கினார்கள்.
நுட்ப ரீதியாய் உருவாக்கப்பெற்ற அரசியல் அறிவியல் அறிவினை அரசியல் அறிஞர்கள் அரசாங்கப் பணிகளில் தக்க வழிகளில் செலுத்தி பயன்பெறச் செய்தனர்.
மெரியம் தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகளில் அரசியல் அறிவியல் ஆழ்ந்த அறிவியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கருதினார். எதிர்பார்ப்பு மற்றும் யோசனை அடிப்படையிலான எண்ணங்களை விடுத்து அரசியல் அறிவியல், அறிவியல் நுட்பங்களையும், வழிமுறைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை காணத் துடித்தார். மனித நாகரீகத்தை முழுமை படுத்துவதில் எங்ங்ணம் அறிவியல் துணை புரிந்ததோ, அதே வகையில் அரசியல் அறிவியல் மனித நாகரீகத்தை காப்பதிலும், செழுமை படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். அறிவின் பரிணாம வளர்ச்சியினையும் மற்றும் மனித உணர்வுகளையும் கட்டுப்படுத்தும் குடிமக்கள் கல்வியின் மூலம் மக்களாட்சி மாண்புகளை வளர்க்க முற்பட்டார். இதன் மூலம் முழுமைப்பெற்ற சமுதாயத்தை மற்றும் மனித இனத்தை காணமுற்பட்டார். நடத்தை இயல் அறிஞர்களாகிய ஹினஸ் யூலா (Heinz Eulau) மற்றும் டேவிட் ஈஸ்டன் (David Easton) நடத்தை இயல் ஆராய்ச்சி முறைகளை கண்டறிந்து, பயன்படுத்தி ‘புதிய அரசியல் அறிவியலை” வளர்க்க முற்பட்டனர். புதிய அரசியல் அறிவியலின் குணாதிசயங்களாய் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
யூலாவின் கருத்துப்படி பெரு அளவு பகுப்பாய்வு (Macro level analysis) என்பது நிறுவனங்களையும் சிறு அளவு பகுப்பாய்வு (Micro level analysis) என்பது தனிமனிதனையும் அடிப்படையாகக் கொண்டு அமையும். அறிவியல் ரீதியான அரசியல் என்பது அரசியல் நடத்தைகளை பெரு அளவு மற்றும் சிறு அளவு பகுப்பாய்வின் மூலம் நன்கு தெளிவு படுத்துவதாகும். ஒருமைதன்மை மற்றும் சீரான நெறிகளை வளர்ப்பதில் எண்ணிக்கை அடிப்படையிலான அறிவியல் தன் நோக்கினை செலுத்தும். நிறுவனங்களின் தாக்கம் தனிநபர் நடத்தையிலும், தனிநபர் தாக்கம் நிறுவனங்களின் மேலும் உள்ளவற்றை நாம் அறிவியல் ரீதியாய் அறியலாம்.
அரசியல் அறிஞர்கள் புள்ளியியல் விவரங்களையும், அதன் முடிவுகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும் என யூலா கருதுகின்றார். அளவிடுவது, இன்றைய ஆராய்ச்சி வழிமுறைகள், சோதனைக்குரிய கருத்து முன்படிவங்கள் ஆகியவைகள் செயல்பாட்டிற்குரிய மேலும் நம்பிக்கைக்குரிய அரசியல் அறிவினை பெருக்கும். எண்ணிக்கை அடிப்படையிலான அரசியல் அறிவியல் என்பது பல அரசியல் கருத்துகளுக்கு ஆதாரமாகவும், நம்பிக்கை தன்மையை கொடுப்பதிலும் முன் நிற்கும். நடத்தை இயல் மூலம் அறியப்படும் அரசியல் அறிவியல் என்பது பகுத்தறிவாக இருக்கும்.
மாக்ஸ் வீபரின் கூற்றுப்படி அரசியல் அதிகாரம் என்பது வரலாற்று சமூகங்களில் எதேச்சதிகார வர்க்கம் தன்வசம் உள்ள ஒரு பரிசாகும், தற்கால சமுதாயத்தில் அது செல்வத்தின் படைகளாகும். தற்கால சமுதாயத்தில் அரசியல் அதிகாரத்தினை அடைவதில் சச்சரவுகள் இருந்தாலும், அரசியல் அதிகாரத்தினை இன்று குழுக்களின் சமூக அந்தஸ்து, அரசியல் குழாம், மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவைகள் அரசியல் அதிகாரத்தினை பெற்று விளங்குகின்றன.
சமுதாயத்தில் அரசியல் மற்றும் அரசியல் நிறுவனங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கருத்து முன்படிவமாக, அரசியல் என்பது நாம் அன்றாட வாழ்வில் காணும் அதிகார உறவுகளை தெளிவுப் படுத்துவதாகும். உதாரணமாக, பெற்றோர்களிடையே அதிகார உறவுகள் இருப்பதைக் காணலாம். ஆகவே சமுதாயத்தில் சிறு அரசியல் (Micro Politics)மற்றும் பெரு அரசியல் (Macro Politics) உள்ளது. நாம் அன்றாட வாழ்க்கையில் காண்பது சிறு அரசியலாகும். நிறுவன அளவில் உள்ள அதிகார உறவுகள் பெரு அரசியல் எனலாம்.
அரசியல் சமூகவியல் என்ற பாடம் அரசு மற்றும் சமுதாயத்திற்கிடையே நிலவும் உறவுகளை பற்றிய படிப்புகளாகும். அதிகாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நாம் அ மற்றும் ஆக்களுக்கிடையே உள்ள உறவுகளை அறிந்து கொள்ளவேண்டும். ஆ என்ற நபர் ஒரு காரியத்தை செய்யவேண்டாம் என்று நினைத்திருந்தாலும் அ அந்த காரியத்தை ஆ யின் மூலம் செய்து முடித்தால், அத்தகைய செயல்பாடு அ என்ற நபர் ஆ என்பவர் மீது செலுத்திய அதிகாரம் என நாம் கருதலாம். இதனடிப்படையில் அதிகாரம் என்பது ஒரு முக்கியமான முன் கருத்துப்படிவமாகும். மற்றொரு வகையில் நியமன அதிகாரம் என்பது ஆளுமையாகும் (Authority). உதாரணமாக, ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தங்கள் மக்கள் மீது அதிகாரம் செலுத்த முற்படுவர். இதன் காரணமாய் நியமன அதிகாரத்தை மக்கள் மீது இத்தலைவர்கள் செலுத்துகின்றனர் என்று மக்களை நம்பச் செய்வார்கள்.
அதிகாரம், நியாயத்தன்மை மற்றும் ஆளுமை ஒன்றொடு ஒன்று தொடர்புடையது. மேலும் இணைந்தே செல்வதாகும். மற்றவர் செய்ய மறுப்பினும், அதை அவர்கள் கொண்டே செய்வது என்ற அதிகாரம் பல வகைகளை கொண்டதாகும். ஆளுமை என்பது அதிகாரத்தைப் போலத்தான். ஆனால் ஆளுமைக்கு நிறுவனங்களின் துணையுண்டு. ஆளுமையில்லாமல் அதிகாரம் மட்டுமே இருக்குமிடத்தில் அதிகாரத்திற்கு நியாயத்தன்மை தேவைப்படுகிறது. அதிகாரத்திற்கு நம்பிக்கை மற்றும் நியாயத்தன்மையிருக்குமேயானால் அது ஆளுமையாகும். அதிகாரம் (Power) மற்றும் ஆளுமை (Authority) அரசியல் சமூகவியல் அறிஞர்களை சிந்திக்கச் செய்யும் இரு அடிப்படையான முன் கருத்துப்படிவமாகும். தனிமனித கருத்து, குழுக்களின் நடத்தை குணாதிசயங்கள் மக்களின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை இயக்கவல்லது அதிகாரமாகும். (உதாரணம் பெற்றோர் மற்றும் குழந்தைகள் அரசாங்கம் மற்றும் வரிகள்) ஆளுமை என்பது அதனோடு தொடர்புடைய நிறுவனங்களையும் குறிப்பிடுவதாகும். நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கிடையே தான் ஆளுமை வெளிப்பாடு அடையும்.
நம் வாழ்க்கையின் வழி நடத்த சமூக அமைப்புகள் சட்டம் மற்றும் வழிகாட்டிகளை உருவாக்குகின்றது. அத்தகைய சட்டம் மற்றும் விதிமுறைகள் ஆளுமையாகும். (உதாரணம்: பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர்கள்). பெரும் அளவிலான நிறுவனங்கள் வீழ்கின்ற போது (USSR) அதிகாரம் அவற்றினை கைப்பற்றும். நிலைத்த தன்மையுடைய ஆளுமையை உருவாக்கவேண்டுமென்றால், அதற்கு நியாயத்தன்மை தேவைப்படுகிறது. சுருங்கக்கூறின், அரசின் மூன்று முக்கிய குணாதியசங்கள் என்னவென்றால், அது அதிகாரம், ஆளுமை மற்றும் நியாயத்தன்மையாகும். அதிகாரம் என்பது பல்வேறு வடிவங்களை எடுத்தாலும் துன்புறுத்துதல், தாக்கம் மற்றும் கட்டுப்பாடு) ஆளுமையோடு செயல்படுத்தப்படும் அதிகாரம் அடிப்படையில் ஒருவரின் எண்ணத்தை மற்றவரின் மேல் திணித்து செயல்படுத்துவதாகும்.
மாக்ஸ்வீபரின் கருத்துப்படி ஆளுமை என்பது மூன்று வகைப்படும்
அரசாட்சிகள் மற்றும் பேரரசுகளில் உள்ள பாரம்பரிய சமுதாயத்தில் நாம் பாரம்பரிய ஆளுமையைக் காணலாம். பாரம்பரிய ரீதியாக அதிகாரத்தை இச்சமூகங்களில் காணலாம். தனிமனித மாண்புகளின் மூலம் தலைமை ஆளுமை அதிகாரம் உருவாகும். தலைமை ஆளுமை பண்பையுடைய ஒரு தலைவன் மிக எளிதில் தன் மக்களோடு தொடர்பு கொள்வார். ஒரு சில சிறப்பு குணாதியசங்களின் திறமையின் காரணமாய் தலைமை ஆளுமை நபர்கள் தோன்றுகின்றார்கள். இன்றைய உலகில், சட்டப்பகுத்தறிவு அடிப்படையிலான ஆளுமையை நாம் அரசியல் சாசனத்தின் மூலம் பெறுகின்றோம்.
ஒரு சமுதாயத்தில் செல்வம், அதிகாரம், முன்னுரிமைகள் மற்றும் உயர் தகுதிகளைப் பெற்றவர்களை உயர் வகுப்பினர் என்று கூறுகிறோம்.
உயர் குடியினர் என்பதை பரிட்டோ கீழ்க்கண்ட வகையில் விளக்குகிறார்.
உயர் குடியினர் என்ற கருத்து முன்படிவம், உயர்ந்த தகுதிகள், திறமை மற்றும் சிறப்பு சலுகைகளை பெற்றவர்களை குறிப்பதாகும். பரிட்டோவின் விளக்கப்படி உயர்குடியை இரண்டு விதமாக பார்க்கலாம்.
உயர் குடியினர் கோட்பாட்டாளர்கள் கூறுவது என்னவென்றால் மக்களாட்சி அமைப்புகளில் ஆட்சி செய்கின்ற ஒரு சில உயர் குடியினரே கொள்கை முடிவினை எடுக்கின்றார்கள். பல குழுக்களுக்கிடையே நடைபெறும் பகிரங்க போட்டியின் விளைவாய் ஏற்படும் கொள்கை முடிவுகள் அல்ல என்பதை நாம் அறியலாம். ராபர்ட் மைக்கேல் கூற்றுப்படி கீழ்க்கண்டவைகள் உயர்குடி வகுப்பினரை விளக்கும் கொள்கைகள் ஆகும்.
1. மார்கீசியம் குறிப்பிடுகின்ற 'ஆதிக்க வர்க்கம்’ என்பது தவறு, ஏனெனில் தற்கால தொழிற்கூட சமுதாயங்களில் உயர்குடி வகுப்பினரின் தொடர்ச்சியான சுழற்சி முறைதான் வழக்கில் உள்ளது.
2. ஒவ்வொரு சமுதாயத்திலும் சமூக படிநிலைகள் இருப்பதால் வர்க்கம் என்ற பிரிவு முக்கியத்துவம் பெறுகின்றது.
மக்களாட்சி மற்றும் உயர்குடியினர் கோட்பாட்டில் உள்ள அடிப்படை முரண்பாடுகள்.
1 உயர்குடியினர் கோட்பாடு என்பது ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை இருப்பதை குறிப்பிடுகின்றது. ஆனால் மக்களாட்சி கோட்பாடு சமுதாயத்தில் சமத்தவம் இருப்பதாகக் கூறுகிறது.
2 உயர் குடியினர் கோட்பாடு என்பது ஒரு சில உயர் குடியினரே பெரும்பான்மையான மக்கள் மீது ஆதிக்கம் செய்வதாகப் பகர்கின்றது. ஆனால் மக்களாட்சி கோட்பாடு என்பது பெரும்பான்மையாளர்களே ஆட்சி செய்கின்றனர் எனக் கருதுகின்றது. ராபர்ட் மைகேல் அதிகார வர்க்க எதேச்சதிகார ஆட்சியைப் பற்றி கூறுகிறார்.
தற்கால மக்கள் நலம் நாடும் அரசுகளில் அதிகார வர்க்கத்தின் ஆட்சி அதிகாரங்கள் வளர்ந்து வருவதாகக் கூறுகின்றார்.
தன்மை மற்றும் மற்றவரை கவருதலின் நன்மைகள்
அரசியல் சமூகவியல் என்பது எங்ங்ணம் மற்றவரை கவருதல், அரசியல் அதிகாரம் மற்றும் அதன் பகிர்வு ஆகியவற்றைப் பற்றி அறிவதாகும். தற்கால சமுதாயத்தில் மற்றவரை எந்தளவுக்கு நாம் கவருகிறோம் என்ற அடிப்படையில் நாம் வளமை பெறுகின்றோம். ஆகவே அதிகாரம் என்பது மற்றவரை கவரும் விதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. மற்றவரை கவருதல் என்பது ஒரு நபரின் நடத்தையை இயல்பாக கட்டுப்படுத்துவதாகும். இது அவர்கள் விரும்பும் வண்ணமாக இல்லாமல் எதிராகவும் இருக்கலாம். ஹரால்டு லாஸ்வேல் மற்றும் ஆபிரகாம் கப்பலான் மற்றவரை கவருதல் என்ற கருத்தை விளக்க முற்படும் பொழுது ‘கவருகின்ற தன்மையின் அடிப்படையில் அரசியல் தன்மைகள் தீர்மானிக்கப்படுகிறது’ எனக் கூறுகின்றார்கள். மற்றவரின் நடத்தையை பாதிப்பு அடையச் செய்யும் குணாதியசத்தை நாம் கவருதல் எனக் கூறுகிறோம். சில சமயம் மற்றவரை கவரும் தன்மை உச்சநிலையில் இருக்கும். இத்தகைய தருணத்தில் அதிகாரத்தை வைத்திருப்போர் அதிக கவருகின்ற தன்மையை பெற்றிருக்கவேண்டும்.
மூர்க்கதனம்
கவருதல் என்பதற்கான ஈடு கொடுக்கும் தன்மையில் சிறிது குறையும் பொழுது மூர்க்கத்தனத்தோடு கூடிய அதிகாரத்தை நாம் பயன்படுத்துகின்றோம். இதை நாம் மூர்க்கத்தனமான கவருதல் எனக் கூறுகிறோம். அச்சுறுத்துதல் அல்லது கட்டுப்பாட்டுகளை விதித்தல் என்ற விதத்திலான கவருகின்ற தன்மைகளை நாம் பயன்படுத்துகின்றோம். இத்தகைய அச்சுறுத்துதல்கள் பாராட்டுகள் அல்லது கொடுமைப் படுத்துதல் என்பவற்றோடு துணைவரும். தண்டனைகள் என்பது எதிர்மறையான கட்டுபாடுகள் எனவும், பாராட்டுகள் நேர்மறையான கட்டுப்பாடுகள் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மற்றவரை கவரும் தன்மையின் அளவு
மற்றவரின் நடத்தையை தாக்கம் செய்கின்ற வகையில் பயன்படுத்தும் எதிர்மறையான அல்லது நேர்மறையான கட்டுப்பாடுகளை நாம் அதிகாரம் என்ற பொருள் விளக்கத்தை அளிக்கின்றோம்.
அதிகாரம் என்பது தனிநபரின் சொத்து அன்று. அடிப்படையில் அது மற்றவையோடு தொடர்புடையதாகும். மற்றவர்களை தொடர்புபடுத்தியே அதிகாரம் பயன்படுத்தப்படும். ஏனையவரின் நடத்தையை பாதிக்கச் செய்வது அதிகாரம் எனக் கூறுகிறோம். ஒரு சமுதாயத்தில் அதிகாரம் செலுத்துகின்றவர், அதிகாரம் செலுத்தப்படுகின்றவர்கள் என்று உறவுகள் அதிகாரத்திற்கு தொடர்புடையவனவாக உள்ளது. நகரம் மற்றும் கிராம சமுதாயங்களில் இத்தகைய அதிகார உறவுகளை நாம் காணலாம். அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் அரசியல் அதிகாரம் செயலாக்கப்படுகிறது. அரசின் அதிகாரத்தின் மூலம் அரசியல் தீர்மானிக்கப்படுகிறது. சமுதாயத்தின் பல அடுக்குகளில் காணப்படும் அதிகாரத்தைக் காட்டிலும் எந்த விதத்திலும் அரசின் அதிகாரம் வேறுபட்டது அல்ல. ஆகவே சமுதாய மாற்று காரணிகளின்பார்வையில் அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது. சமூக செயல்பாட்டின் அடிப்படையில், அரசியல் அதிகாரம் தீர்மானம் செய்யப்படுகிறது. சமுதாயம் செயல்படும் விதம் மற்றும் அரசியல் அதிகாரங்கள் மாறும் தன்மைபடைத்தது.
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்