ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வெகு விமரிசையாக நடைபெற்ற அரங்கேற்றம்

நோர்வே லிலேஸ்ரோம் (Liilestørm)  இசையரங்கில் நிறைந்த மக்களுடன் நடந்த எனது நண்பன் குகநேசன்னின் மகள் நீராவின்  அரங்கேற்றம்
வெகு விமரிசையாக நடைபெற்றது.
 அவர்கள் சலங்கை பூஜையை நடாத்த அரங்கேற்ற நாயகி குருவிடமிருந்து சலங்கையை பக்திபூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.
நாட்டிய கலைமாமணி திருமதி மாலதி யோகேந்திரன் நடன அமைப்பு  எழுச்சிக்கு ஈடாக இசைக்கலைமணி  Dr .  கரிகரன் சுயம்பு அவர்கள்  பாடல்களை இசைத்தார்.
நீரா  சிறு வயது முதலே சுமார் 8 வருடங்கள் பரதக்கலையை முறைப்படி கற்றுவந்த காரணத்தால் அவருடைய நடனங்கள் மிகவும் காத்திரமாகவும், சிறப்பாகவும் அமைந்திருந்தன.

பாடல்களுக்கு ஏற்றவாறு அவருடைய உடல் அசைவும், பாவனைகளும், உடல் மொழியும், கருத்துணர்ந்து முத்திரைகளும், தாளம் தப்பாத அசைவுகளும் அவையோருக்கு தொடர் மகிழ்வினை உண்டாக்கி அவை நிறைந்த கரகோஷத்தை தொடர்ந்து எழுப்பியவண்ணமிருந்தன.


நிகழ்ச்சிக்கு வந்த மக்களை வரவேற்பது, விருந்தளித்து, நல்ல அரங்கில் நிகழ்ச்சி வழங்கி கலையையும், கலைஞரையும் பெருமைப்படுத்துவதில் அரங்கேற்றத்திற்கு பக்கபலமாக நின்றஅணைத்து நண்பர்களும்  சிறந்த பணியாற்றினார்கள்.

புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் பல்வேறு நாடுகளில் இருந்தும் உறவினர்கள் வந்து அரங்கேற்ற நாயகியை இதயபூர்வமாக வாழ்த்தியது நெஞ்சை உருக்கும் நிகழ்வு.

நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து வருகைதந்த விதுவங்களின் மிருதங்கம் ,வயலின் , புல்லாங்குழல் போன்ற பாடலுக்கு பக்கபலமான இசைகருவிகளை  இசைத்தனர்.

பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கே உரிய புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம்,சப்தம்  ,வர்ணம் பதம் , கீர்த்தனம்,கவடிசிந்து , தில்லானா, மங்களம் என்ற ஒழுங்கில் அனைத்து நடங்களும் சிறப்புடன் நடைபெற்றன.
நடன அரங்கேற்றம் கண்ட பல  நடன கலைகர்கள் வெளிப்பாட்டை மிகச் சிறப்பாக அரங்கப்படுத்தி இன்றைய நாளை வெற்றிநாளாக மலரச் செய்துள்ளார் என்று பிரதமவிருந்துனர் காரைக்குடி  R .கிருஷ்ணமூர்த்தி  பாராட்டினார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது மனதிற்கு பெரு மகிழ்வு தந்த நடன நிகழ்வு என்றும் கூறி, அனைத்திற்கும் காரணமான தாயார் சித்திரவை  நீண்ட நேரம் புகழ்ந்துரைத்தார்.
மேலும் ஆற்றும் இசைப்பணிகளை பெரிதும் மெச்சி, அத்தோடு அனைத்து வாத்தியக் கலைஞர்களையும் பாராட்டினா

நிகழ்ச்சியில் வரவேற்ப்புரை வழங்கிய  பிரித்தானியாவில்   இருந்து வந்திருந்த செல்வி அழகா தமிழிலும் ,ஆங்கிலமொழியிலும் வழங்கினார்

இனிய குரல்லால் செல்வி கவிதாவும் கவிப்புயல் இளவலை விஜெந்திரனும் நிகழ்வை தொகுத்து வழங்கினர். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய முத்தமிழ் அறிவாலய முதல்மைஅசிரியர் திரு .சிவநாதன் அவர்கள்  புலன்பெயர்நாட்டில் முத்தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் நீரா என்று புகழ்த்து வாழ்த்துமடல் ஒன்றை வாசித்து, உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீராவின் பாடசாலை ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் நாயகி நீர அழகான தமிழில் நன்றி கூறி  மங்களா நிகழ்வுடன்
விழா இனிது நிறைவடைந்தது.

மனதிற்கு மகிழ்வு தந்த அரங்கேற்றம்