ஞாயிறு, 22 நவம்பர், 2020




  ஏகாந்த இரவு

ஆசைமனம் சிறிது தூங்க  

ஓய்வெடுத்த பகல்நினைவு 

மதுக்கோப்பைக்குள் 

தத்தளிக்கும் வண்டு ஒன்றை 

காட்சி படுத்துகின்றது 

 யாவும் இந்த இரவுக்கு மட்டும் 

சொந்தமானவை !



50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்மொழிக்கா உழைத்த ரஷ்ய தமிழறிஞரான அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி பற்றி ஒரு பார்வை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் தாடி





""1941 ஆண்டு சித்திரை மாதம் 27 திகதி" ரஷியாவில் பிறந்த இவருடைய முழுப்பெயர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மொஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆசிய ,ஆபிரிக்க நாடுகளுக்கான தொடர்பான ஆய்விபிரிவில் ஆய்வாளர்கவும் விரிவுரையளராகவும் முன்னர் பணியாற்றியவர் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டு "முல்லைத்திணையின் பிரிவு "என்ற தலைப்பில் தன் ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதியானவர் .நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட ஐவகைத்திணைகள் பற்றி கற்றறிந்த இவர் காடும் காடு சார்ந்த நிலம்பற்றி ஆய்வுமேற்கொண்டிருப்பது இலங்கை ,இந்திய தமிழர்களை ஆச்சரியபடித்திய இலக்கண தகவல்
தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார்.
இவர் பல ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராக துப்யான்ஸ்கி ரஷ்யாவில் தமிழ்மொழியை கற்பித்துவந்தார். ரஷ்யாவில் உள்ள 10 பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் பல தமிழ் கவிதை , இலக்கிய நூல்களை ரஷ்ய மொழியில் பதித்து வெளியிட்டவர்.
இவர் தொல்காப்பியம் துணை நிற்கிறது. சங்க இலக்கியங்களுக்கு சங்க இலக்கியங்கள் பற்றிச் சொல்கிறது. சங்கம் பற்றி விளக்கம் கூறுகிறது. முச்சங்கங்களின் வரலாற்றைக் கூறுகிறது. சங்க இலக்கியங்கள் பற்றி அறிமுகம் செய்கிறத நூல்களை கற்று . எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது. சங்க இலக்கியத்தின் யாப்புப் பற்றியும், உவமைகள் பற்றியும் கூறுகிற. சங்கப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள், வாழ்வியல் செய்திகள்
ஆகியவற்றைக் கூறுகிற இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் பற்றி சிறப்பாக அறிந்து கற்று
தமிழ்நாடு கோயம்புத்தூரில் 2010-இல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை பலத்த விவாதத்தை எழுப்பியது.
கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை அவர் நடத்திவந்தார்.
துப்யான்ஸ்கி தனது ஆய்வுக் கட்டுரையில் . “ சங்க இலக்கியங்களுக்கும், தொல்காப்பியத்துக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளை அவரது கட்டுரை சுட்டிக்காட்டியது. அதற்காக சில உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார்.‘‘தொல்காப்பியம் நொச்சித் திணைப் பற்றி எங்கும் பேசவில்லை. உழிஞைத் திணைப் பற்றிப் பேசும்போது அதன் துணைப் பிரிவாக ஒரே ஒரு இடத்தில் நொச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை நொச்சித் திணையை விரிவாகப் பேசியுள்ளது.
பிரிவு குறித்து தொல்காப்பியம் பேசிய இடத்தில் பிரிவுக்கான காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் குறிப்பிட்டு
பெண்ணோடு கடற்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அத்தகைய நிகழ்வு எதுவும் சங்கப் பாடல்களில் இல்லை. தலைவனின் தோழன் காதலர்கள் சந்திப்பதற்காகப் பன்னிரெண்டு விதமான காரியங்களைச் செய்வது குறித்தும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
ஆனால், சங்கப் பாடல்களில் அத்தகைய நிகழ்வுகளை எங்குமே நாம் காணமுடியவில்லை’’ என்று துப்யான்ஸ்கி குறிப்பிட்டு சுட்டிக்காட்டி தனது ஆய்வுக் கட்டுரையில் எழுப்பிய ஒரு பிரச்சனையை யாரும் விவாதிக்கவில்லை
அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு
தனது #"79-ஆவது வயதில் மொஸ்கோவில் 18.11.2020" அவர் காலமானார்.
"பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர்
இவர் எமது தமிழுக்கும் ,தமிழருக்கும் நெருக்கமானவர் ,இவரின் வரலாற்றை எமது மொழியுடனும் ,இனத்துடனும் , இணைத்தே பார்க்கவேண்டும்