புதன், 4 ஜூலை, 2012

ஆதங்கம்


 திருமணமான 
 
இத்தனை ஆண்டுகளில்

எத்தனை முறை

கூறியிருப்பாய்….

என்னையே

உனக்கு கொடுத்தேனே

என்று….. 


எண்ணிப் பார்ப்பாயா

என்றேனும்….

நீ உன்னை

என்னிடம் இழந்த

அதே நொடியில்தான்

நானும் என்னை

உன்னிடம் இழந்திருக்கிறேன்

என்பதனை….