வெள்ளி, 16 ஜனவரி, 2015

அறைகூவல்


விளம்பரங்கள் என்னை 
துரத்துகின்றன
என்னை பற்றி 
அதில் எதுவும்மில்லை !

உற்றுப் பார்த்தேன்
என்னுள் 
கனவுகளின்
கடைசி  நிஜத்தை
ஏமாற்றம் ...................?

துணிவில்லா கேள்வி !


உனக்கு என்னை பற்றிய
கேள்விகளும்
எனக்கு உன்னை பற்றிய
கேள்விகளும் ஏராளம்
அத்துணை கேள்விகளும்
நம் முன் பரப்பி வைத்திருந்தும்
கேட்க துணிவில்லை
உனக்கு !

பதில் கிடைக்காமல்
எப்போதும் போல் கேள்விகள்
மட்டும் வினா குறி போல்
தொக்கி நிற்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியில் !

எனக்குள் வரும் கேள்விகளுக்கு
எனக்கெல்லாம் தெரியும்டி
என்கிற உன் திமிர் !

உனக்குள் வரும் கேள்விகளுக்கு
மறைப்பது எல்லாம்
மன்னிக்க மாட்டேன் எனும்
ஆணவம் தடுக்கும்

ஆனாலும் எப்போதும்போல்
பேசிகொள்வோம் சர்க்கரையாக
மனத்தினும் மட்டும் அக்கறையாக
கேள்விகள் திரும்ப திரும்ப ஒலிக்கும்
விடை தெரியாமல்....................????????

என்ன நினைத்தோமோ அது நடந்துள்ளது!

பெருஇனவாத  சிங்கள இன மக்கள் மத்தியில் செல்வாக்கு வாக்குகள் இருந்தாலும், வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கின்ற சிறுபான்மை மக்களான தமிழ் , முஸ்லிம்கள்லே 
 ராஜபக்சேவுக்கு தங்களின் முழு எதிர்ப்பையும் காண்பித்து வட ,கிழக்கு மாகாண மக்கள்  ஓட்டளித்துள்ளதால் அவர் தோல்வியை சந்தித்திருப்பதாக அங்கிருந்து அலசும் அரசியல் ஆய்வு தெரிவிக்கிறது. 
கடந்த 2010–ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜபக்சே 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகள் வாங்கி இருந்தார். இந்த தடவை அதில் சுமார் 2½ லட்சம் வாக்குகளை பறி கொடுத்துள்ளார்.

இந்த 2½ லட்சம் வாக்குகளுடன், தமிழர்களும், முஸ்லிம்களும் எதிர்த்து வாக்களித்ததால் அவர் 4½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டுள்ளது.
யாராக இருந்தாலும் சரி, ஒருவர் மனிதநேயத்துக்கு விரோதமாக, ஒரு இனத்தை அல்லது சக தோழர்களை  அடிமைபடுத்தி அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அவர்களை நிச்சயம் மக்கள் தோற்கடிப்பார்கள் என்பதை சரித்திரம் மறுபடியும் மறுபடியும் நமக்கு நினைவூட்டுகிறது என்று தெரிகின்றது

ராஜபக்‌ஷ சகோதரர்களைத் & Co தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது.

                    ஆனால், இதன் அர்த்தம் 
  1)  தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல.

  2) தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். 

3) மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. 

மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை.

 தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரிக்கு ஆதரவாகவே விழும்.
இன்று எமது தமிழ் மக்கள் தங்களுக்கான ஐ னநாயகத்தை கையில் ஏந்தி உள்ளார்கள் தங்கள் உரிமை போராட்டத்துக்கான இன்னும் ஒரு படி முன் வைத்துள்ளார்கள் 

தமிழ் கவி இயற்றினேன் !

சிந்தையில் சுரந்த தமிழால் 
கற்பனை ஊறியது என்னுள் 
முத்தமிழ் என்னுள் மூண்டதுமே 
ஒளிர் விட்ட்து  தமிழ் 
வாழிய தமிழ் வாழிய 
தமிழ் வாழிய வாழியவே !

பகலும் இரவும் சேரும் அந்த மயக்கம் தரும் மாலை நேரம்


இருளின் ஆக்கிரமிப்பு 
ஒதுக்கப்படும்  பகலவன்.
வெண் பனி மூடிய சாலை 
வழுக்கும் பனியில் 
சறுக்கி செல்லும் 
சிதறிய  மக்கள்
கரையும் நாட்கள்
 உறைந்து கொண்டிருக்கும் -மனம் !