வியாழன், 30 அக்டோபர், 2025

ஞாபக மணப்பு -பங்கிரையான்-



ஒவொருமுறையும்
ஊர் போகும் போது
வழி மறந்துபோகும்
புதிதாய் தளிர்த்திருக்கும்
வீடுகளும் ,மண்டபங்களும்

குறிப்பு வைத்துக்கொண்டு
ஏதும் கண்டுபிடிக்க முடியாது இங்கே
பழைய அடையாளங்களை
ஏமாத்துக்காரர் அழிப்பார்கள்

பருத்த வேப்பமரத்தை தேடுகிறேன்
இடிக்கப்பட்ட என் வீட்டைத் தேடுகிறேன்
காலியான என் நிலத்திலிருந்து
மீண்டும் திரும்பவேண்டும் நான்

வலக்கை இடக்கை பார்க்கும் போது
வர்ணம் பூசுசிய தகரத்தால்
சுற்றி அடைக்கப்பட்டுருக்கின்றது
இவர்கள் தான் ஊரின் சொல்லிகள்

ஏதேனும் புதிதாக பேசுவார்கள்
ஏதேனும் ஒன்று இல்லாமலும் ஆகிறது
இப்போது இதுவொன்றுதான் வழி
அகம் பக்கம் நிலத்தை பார்த்து
கேட்கவேண்டும் இது என் நிலம் என்று

என்னிடம் நேரமில்லை
மத்தியான வெயிலில்
யாரும் பார்த்து அடையாளம்கண்டு
உள்ளே அழைக்கலாம் என்னை.

என் முகத்தில் தண்ணீர் தெளித்து
ஞாபக மணப்புடன் திரும்பினேன்
-பங்கிரையான்-

கனவு

 சில கனவுகளை நிஜமென
எண்ணி மகிழ்வதும்…
பல நிஜங்களை கனவு என
எண்ணி மறப்பதும்….
அதைக் கடந்து போவதும்
தான் வாழ்க்கை…..
 -பங்கிரையான்-


 என்ஜினீரிங் படிக்கும் 

மகனிடம் தேநீர் தயாரி

 என்றால் 

சுவைகளை 

அளவிடுகின்றான்

உளவியல்

 தொழிலாளர் உளவியல்
படித்த மகளிடம்
பசிக்குது என்றேன்
போதும் என்று
புத்திமதி

 -பங்கிரையான்-

காலம் நிற்பதில்லை


எப்பவும் போலவே
மழை மழையாகவே
இருக்கிறது...!
நிகழ்வு வெவ்வேறு
வாழ்வையும் வீழ்வையும்
விகாரப்படுத்துகிறது !
ஒற்றை மனம் ஒன்று
இருமைக் கொள்கைகுள்
முக்கு முடங்கி
முகவரி முடிந்து போன
உறவுகளின் நினைவு !
ஒற்றை குடைக்குள்
நடப்பவனிடம்
உள்ளேயும் வெளியேயும்
தனக்கான நம்பிக்கைகள்
காலம் தொடர்கின்றது அவன் பின் !
-பங்கிரையன்-

வாழ்ந்த வீடு -பங்கிரையன்-

 வாழ்ந்த வீடு

மௌனத்தின்

பதுங்கு குழியாய்

சலனமற்றிருக்கிறது

குடும்ப வீடு!

குருவிகளற்ற கூடாய்

அது

எதிர்பார்ப்புகளின்

ஏக்கங்களைச் சுமந்து

காத்திருக்கிறது!

சத்தமிட்டு

விழித்தெழுகின்றன

உறைந்த மௌனத்தின்

உறங்காத குரல்கள்!

பழமையின்

சுவடுகள் கலையாமலிருக்க

சருகு போர்த்தி

அடைகாக்கிறது

முற்றம்!

-பங்கிரையான்-

பிடித்த சொல்லாடல் கவிதை

 அறிவாலறிந்து செவி மடுப்பாய்

அவன் கூறும் கூற்றை நம்பும் நீ

உன் கூற்றுவன் அவன்தானென உணராமல்

தூண்டில் இரைகண்டு மீன் மாட்டுமாற்போல

மொழிந்ததை உன் நலனுக்கென செவிமடுத்து செயல்படும்

நிந்தன் அறிவு மூயீரையும் பண்டமாற்றுக்கு பகிர்ந்தாயோ???

காலம்


மழையில் நனைந்து 

 வெறிச்சோடிய

அறுவடை நிலமாய்

சகதியாகவே இருக்கிறது

இன்று என் மனம்