புறநானூறுறில் துறையும் அவை, கணியன் பூங்குன்றன் பாட்டு.யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா தலைப்பை தங்கியது அரங்கம்
#பரதக்கலை ஆரம்பம்
மேடையிலிருந்து ஒளி மங்கி பரவ, நட்டுவனார் இசைக்கருவிகளுடன் இசை முழங்க ,ஆசிரியர் கவிதா லட்சுமி அவர்களின் நெறிப்படுத்தலில் ஆடல்நாயகன்
*திருக்குறள் > விருத்தம்
*திருக்குறள் > அலாரிப்பு
*தாடகை > கவித்துவம்
*கூனியின் > கதையாடல்
*இராவணன் > வர்ணம்
*பாஞ்சாலி / சூர்ப்பனகை > பதம்
*சிகண்டி /சகுனி > கீர்த்தனம்
திருக்குறள் ,இராமாயணக் காப்பிய பாடபேதங்களில் இருந்து முகாந்திரமாக விமர்சனக்கு ஏற்ற கதைமாந்தர்களை வகைப்படுத்தப்பட்ட பாடல்கள் பாரத நாட்டிய முக்கிய அம்ச அணுகப்பட்டது
சந்த நயமும் ஓசை நயமும் கொண்டு நோர்வே வாழ் இலக்கிய முன்னோடிகள் கவிஞர்கள் உமாபலன் ,ரூபன் சிவராஜா உடன் கவிதா லக்சுமி இவர்களே பாடல்களை எழுதினார்கள்
காட்சி அமைப்புகள் எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாது அந்த எளிமை காரணமாக எவ்விதத்திலும் அக்கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடாமல் ஆசிரியர் கவிதா லட்சுமி அவர்களின் நெறி ஆற்றலும் நடன அமைப்பும், கவிஞர்களின் பாடல் வரியமைப்பு, பக்கவாத்திய இசை செய்திருந்தது பார்த்தவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.
ஆடற்கலைத்திறனை வெளிக்காட்டி இருவரின் உற்சாகமாக அரங்கினில் மெய்சிலிர்க்க வைத்து, கைதட்டலை அள்ள போதுமாக இருந்தது. இதில் முக்கியமாக சொல்லப்படவேண்டிய செய்தி ஆரம்பம் முதல் இறுதிவைரை மண்டபத்தில் அமர்ந்திருந்த மக்களை தம்வசமிழுத்து, நடனத்தை இரசிக்க வைத்தது மட்டுமன்றி, யாரும் கேட்காமலே மக்கள் தாங்களாகவே கரகோசம் செய்து மகிழ்ச்சியை காட்டி பாராட்டியமை நடனக்கலைஞர்களின் திறமைக்கு கிடைத்த பரிசு என்றே சொல்ல முடியும்.
வளரும் சமூகத்தை முன்னிலை நகர்த்த முயற்சிக்கும்
பொது அமைப்புகளின் நிர்வாக /பிரதிநிதிகளுக்கு ஓர் வேண்டுகோள் பாரபட்சம் இன்றி இளம் சிறார்களை கௌரவிக்க பழகுங்கள்
தாழ்த்திப் பேசுவதும் தக்கது அன்று.
அனைவரையும் சமமாக மதிப்பதே தக்கது ஆகும்.
மனிதநேயம் நாம் போற்றத் தக்கது ஆகும்.
நல்லவர் உள்ளம்
வல்லவன் இல்லம்
தொல்லைகள் இல்லா
எல்லையில் இன்பம்