ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

வாசிப்பில் பிடித்த கவிதை

 Bilderesultat for பாட்டனார் வீடு
////////////////////////////////////////////////////////
பாட்டனார் வீட்டுக்குட்
படியேறி எல்லாரும்
அடிவைக்க முடியாதாம்.
வைக்கிறபேர் அனைவருமே
அமருமென்று சொல்லாமல்
உட்கார முடியாதாம்
அமர்வதற்குத் தகுதியிலார்
கைகட்டித் தம்தோளிற்
துணிகழற்றி நிற்பாராம்
பாட்டனார் வளவுக்குட்
கண்டநின்ற பேரெல்லாம்
கால் பதிக்க முடியாதாம்.
வரத்தகுந்த பேரெல்லாம்
முன்படலை வழியாக
உள் நுழைய முடியாதாம்
பின்படலை வழிவருவோர்
குரல்கொடுத்து உத்தரவு
பெற்றாற்தான் வரலாமாம்.
பாட்டானார் செத்துப்போய்
பலகாலம் இப்போது.
ஊர்ச்சனங்க ளெல்லாரும்
போய்வருவார் தெருவழியே.
வாகனங்கள் விரைந்தோடும்.
வாலிபங்கள் விசிலடிக்கும்.
வாசல்வரை வருவோரை
வழிமறிக்க இயலாது.
வீட்டுக்குள் நுழைவோரின்
சாதிகுலந் தெரியாது.
பாட்டனார் குலப்பெருமை
பழங்கதையாய்ப் போயாச்சு.
பேரர்மார் சந்திப்பிற்
பாட்டன்மார் காலத்துப்
பழங்கதைகள் பேசிடுவார்.
போயொழிந்த காலத்தின்
மேன்மைகளைக் கீர்த்திகளை
மீட்டுமிக மனம் நெகிழ்வார்
சுற்றிவரும் வரலாற்றின்
பொற்காலம் மீளுமெனத்
தேற்றித் தம்வழி மீள்வார்.
அயல் மண்ணில் அனைவருமே
அகதிகளாய் வாழ்ந்தாலும்
கரியவராய் அந்நியராய்க்
கழித்தொதுக்கப் பட்டாலும்
பாட்டனார் இருக்கின்றார்
பழங்கள்ளின் போதைதர.

பொன் நாள் வாழ்த்து

Image may contain: 1 person, flower and plant
//////////////////////////////////////////////////////
வாழ்வில் அழகான தருணம்
புதிதாய் பூத்த மலர்களின் மேல்
பனித்துளியாய் சிலிர் என்ற புன்சிரிப்பில் 
புன்னகைக்கும் நீர்த்துளியாய்
விடிந்த இன் நாள் நீ பிறந்த நாள் !
நாட்கள் நகருவதும்
வருடங்கள் வருவதும்
அவை நம்மை கடப்பதும்
விந்தையில்லையே
இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது!
அன்பின்வழிநின்று..
அறிவுவலம்வந்து..
#அன்பு#ஆதரவு#பகிர்தல்
இது மூன்றுக்கும் அர்த்தமாய்
பண்பின்விளக்கேற்றி பாசச்சுடராக..
நன்மைபல புரிந்து நாளும் வாழுகின்ற
தோழி எனிலும் துளியும் மிகையில்லை..!
புரிந்தோ புரியாமல் வேதாந்தத்தில்
மூழ்கியவாள் நீ -ஆனாலும்
உன் சித்தர்ந்தம் எனக்கு பிடிக்கும்
பெருமையை பிறருக்கு கொடுத்து
தான் மட்டும் சிறுமை பெறுகின்றவள் -நீ
துணி மணி வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்கின்றவள் -நீ
உனக்குள் இருக்கும்
சுயநலமே உனக்கான யுத்தி
புதிய அகவையில்
புயலாய் புகுந்து
வளங்களையும் நலன்களையும்
அகமகிழ பெற்று
அகத்திலும் புறத்திலும்
சந்தோசத்துடன்
நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்
அன்பு தோழமை 

உரிமை பருவத்துக்குள் பிரவேசம்


**********************************************
புதிய அகவையில்
புயலாய் புகுந்து
மகிழ்வான பதினெட்டு வருடம் !
அகவைகள் அனைத்துமே
அழகு நிறைந்தவை
மலரும் இதயம்
நிறைந்த வாழ்த்துக்கள் !
அகவையின் உயர்வில்
ஆளுமைகள் உமதாக்கி ,
வெற்றியின் பாதையில்
வெற்றி நடை போட்டு ,
உச்சமான உவகை நிறைத்து
பல்லாண்டு வாழ்ந்து !
இனிய சவால்கள்
இதமான தென்றல்கள்
காற்றில் மலரும் கீதங்கள்
இரவில் நிசப்தங்களை
காதலிக்க கற்றுக்கொள் !
நாளை உன்கரங்கள் இல்லாமையை
போக்க உதவட்டும்
ஏழைகளின் தோழனாய் நாளெல்லாம்
நீ நடைபோட இன் நாளில்
தாழ்வின்றி என்னென்றும் நீ வாழ
வாழ்த்துகிறேன் வாழ்த்துகின்றோம் !

இனிய நாள் வாழ்த்து

உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
வந்து வாழ்த்துக்க்ள் 
என்றாய் …
எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை…
ஆவாரம் பூ போலே,
இல்லாமை இல்லாது
தாழ்வின்றி என்றென்றும்,
பல்லாண்டு வாழ்க
வாழ்த்துகின்றேன் வாழ்த்துகின்றோம் !

அடிமைபட்ட ஆண் மனம்



//////////////////////////////////////////
காலை உன் குரல் கேட்ட..
அந்த நிமிடங்களில்!
என்னை மறந்து உன் குரலில்
தொலைந்தே போனேன்..!
காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து
உன் குரல் தொடுத்த இனிமையான
அன்பான பண்பான வார்த்தைகள் !
என்னில் புகுந்து இதயத்தை உனது வசமாக்கியது..!
உன் குரல் மட்டும் கேட்க்காமல் போய் இருந்தால்
இன்றய நாள் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்!

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018




No automatic alt text available.

1956 ஆம் ஆண்டில் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால்(த்) தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது.
குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால்(த்) தலை அமைந்திருந்தது.
தபால்(த்) தலையைப் பார்த்த சிங்களத் தலைவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்தத் தபால்(த்) தலையை மீளப் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.
பலரின் எதிர்ப்புக்களை அடுத்து இலங்கை அரசானது, விஜயனின் வருகை பற்றிய தபால்(த்) தலையை மீளப் பெற்றுக் கொண்டது.

பொன் நாள் வாழ்த்து



Image may contain: 1 person, flower and plant
//////////////////////////////////////////////////////
வாழ்வில் அழகான தருணம்
புதிதாய் பூத்த மலர்களின் மேல்
பனித்துளியாய் சிலிர் என்ற புன்சிரிப்பில் 
புன்னகைக்கும் நீர்த்துளியாய்
விடிந்த இன் நாள் நீ பிறந்த நாள் !
நாட்கள் நகருவதும்
வருடங்கள் வருவதும்
அவை நம்மை கடப்பதும்
விந்தையில்லையே
இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது!
அன்பின்வழிநின்று..
அறிவுவலம்வந்து..
#அன்பு#ஆதரவு#பகிர்தல்
இது மூன்றுக்கும் அர்த்தமாய்
பண்பின்விளக்கேற்றி பாசச்சுடராக..
நன்மைபல புரிந்து நாளும் வாழுகின்ற
தோழி எனிலும் துளியும் மிகையில்லை..!
புரிந்தோ புரியாமல் வேதாந்தத்தில்
மூழ்கியவாள் நீ -ஆனாலும்
உன் சித்தர்ந்தம் எனக்கு பிடிக்கும்
பெருமையை பிறருக்கு கொடுத்து
தான் மட்டும் சிறுமை பெறுகின்றவள் -நீ
துணி மணி வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்கின்றவள் -நீ
உனக்குள் இருக்கும்
சுயநலமே உனக்கான யுத்தி
புதிய அகவையில்
புயலாய் புகுந்து
வளங்களையும் நலன்களையும்
அகமகிழ பெற்று
அகத்திலும் புறத்திலும்
சந்தோசத்துடன்
நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்
அன்பு தோழமை
சன்