
1956 ஆம் ஆண்டில் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால்(த்) தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது.
குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால்(த்) தலை அமைந்திருந்தது.
தபால்(த்) தலையைப் பார்த்த சிங்களத் தலைவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்தத் தபால்(த்) தலையை மீளப் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.
பலரின் எதிர்ப்புக்களை அடுத்து இலங்கை அரசானது, விஜயனின் வருகை பற்றிய தபால்(த்) தலையை மீளப் பெற்றுக் கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக