திங்கள், 19 ஏப்ரல், 2021

 எத்தனைநாள் தான்
தனிமையில் உரையாடி
கொண்டிருப்பது
என் முகத்துடன்
காலத்தாலும் ..
தனிமையிலும் ..
மூடப்பட்ட
நானில்லாதா என்முகத்தை
சாமர்த்தியமாக பேசி
விலக பார்க்கிறேன் !


கவிதை


ஓர் இடத்தில் கவிதை என்பது
கற்பனை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணர்வு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தேடல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மகிழ்ச்சி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பசி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மௌனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வேகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தீர்வு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அன்பு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உண்மை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பொய்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கானல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊற்று.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பேச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மூச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தைகளின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கையின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விதை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விலை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணவு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
குப்பை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மருந்து.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நாதம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாளம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உயிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சுவாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
இலக்கணம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பிழை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நந்தவனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பாலை நிலம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எளிமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதுமை......
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஆடம்பரம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வலி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வழி.......
ஓர் இடத்தில் கவிதை என்பது
அமைதி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணர்வுகளின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீரின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வீரத்தின் மொழி......
ஓர் இடத்தில் கவிதை என்பது
கையாளாகாத தனத்தின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எண்ணத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சமூகத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழகு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழுகை.....
கவிதை எங்கேயும் இல்லை
உனக்குள்ளேயே இருக்கிறது
உன்னை சுற்றி இருக்கிறது
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
Yaso Sivakumar, Suseenthira Sambhanthar மற்றும் 8 பேர்
1 கருத்து
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்