சனி, 15 அக்டோபர், 2011
நானோர்இலங்கை குடிமகன்!
என்றைக்காவது சாப்பிடுவோம் என்ற
இறுமாப்பில் நிமிர்ந்துப் பார்க்கும்
என் நெஞ்செலும்புகள்.
என் முனகல் சத்தத்தை கேட்க முடியாமல்
தூங்கிப் போகும் இரவுகள்.
தோப்புகளாய் வளர்ந்திருக்கும் என்
மயிர்க் கால்களை விடுத்து ஓடிப் போகும்
என் மயிற்றுப் பேண்கள்.
என் எலும்புகளில் இரத்தத்தின் ருசி
தேடி ஏமாந்துப் போகும் என் குடி
நீர்ப் பானைக் கொசுக்கள்.
வறண்டுப் போயிருக்கும் என் தொண்டைக்
குழியை ஈரப் படுத்த என் குடிசைக்குள்
ஓடி வரும் மேல்தட்டு வர்க்கத்தின்
சாக்கடை நீர்.
இவ்வளவும் இருந்தும்...
குடிமகன் நான்...
இலங்கையில்
அப்பா என்றொரு அற்புதம்
விரல் கொடுத்து வழிநடத்தினாய்
விழும் போது தாங்கிகொண்டாய்
அழும் போது ஆறுதல் தந்தாய்
நான் ஆனந்தித்திருக்க வழிசெய்தாய்
வானத்து நிலவும்,வண்ண பூக்களும்
வாழ்வில் வர வகை செய்தாய்
அப்பா என் அப்பா
உன் மார்பில் எட்டி உதைத்தபோதும்
மீசை பற்றி இழுத்தபோதும்
அந்த ஆனந்த முகத்தில்
எத்தனை அமைதி
கடை வீதிகளில்
உன் கரம் பிடித்து நடந்தபோது
கர்வத்தில் உயர்ந்திருந்தேன்...
நட்பில் கோபம் கூட கவிதைதான்
என்மீது நீ கொண்ட அக்கறையாய்
உன் கோபம் வெளிபடுகையில்
ரசிக்கிறேன் அதையும் கவிதையாய்
வர்ணனை இன்றி எதுகை மோனை இன்றி
உன் கோபம் ஒரு கவிதையாய்
என் முதல் கவிதை ம்மா ம்மா ம்மா ம்மா
அம்மா உன்னைப்பற்றி கவிதையா
என்னால் முடியாது!
இயற்கையை ரசித்து
பொய் கலந்து எழுதுவேன்
நட்பை விவரித்து
கவிதைகளா எழுதுவேன்
கடவுளைப் பற்றி
கதை கதையாக எழுதுவேன்
அம்மா உன்னைப் பற்றி
என்ன எழுதுவேன்!
எதைஎதையோ படைத்த
இயற்கைக்கு
நன்றி!
உன்னையும் படைத்த தற்காக!
அம்மா!
நான் சொன்ன முதல் வார்த்தையே !
கவிதை தானே
என்னால் முடியாது!
இயற்கையை ரசித்து
பொய் கலந்து எழுதுவேன்
நட்பை விவரித்து
கவிதைகளா எழுதுவேன்
கடவுளைப் பற்றி
கதை கதையாக எழுதுவேன்
அம்மா உன்னைப் பற்றி
என்ன எழுதுவேன்!
எதைஎதையோ படைத்த
இயற்கைக்கு
நன்றி!
உன்னையும் படைத்த தற்காக!
அம்மா!
நான் சொன்ன முதல் வார்த்தையே !
கவிதை தானே
வலிதீராத வாழ்க்கை
வலிதீராத வாழ்க்கை...
அழுகிறது மனம்
புரியாத வலியுடன்
துடிக்கிறது தேகம்
புரியாத உணர்வுடன்
கண்ணீர் வடிக்கிறது கண்கள்
புரியாத நிகழ்வுகளுடன்
எரிகிறது அங்கங்கள்
புரியாத வேதனைகளுடன்
பிறந்தபோது அழுதிருந்த
தாயின் கடன்...
வளர்ந்தபோது அழுதிருந்த
தந்தையின் கடன்....
பிரிந்தபோது அழுதிருந்த
துணையின் கடன்.....
விட்டகன்றபோது அழுதிருந்த
சேயின் கடன்.....
அத்தனையும் தீர்ந்திடாத
பரிமாற்றத்தின் வலிகளாய்....
வாழ்வோடு பிணைந்திட்ட
துயர்களின் தொடர்களோடு......
அழுகிறது மனம்
புரியாத வலியுடன்
துடிக்கிறது தேகம்
புரியாத உணர்வுடன்
கண்ணீர் வடிக்கிறது கண்கள்
புரியாத நிகழ்வுகளுடன்
எரிகிறது அங்கங்கள்
புரியாத வேதனைகளுடன்
பிறந்தபோது அழுதிருந்த
தாயின் கடன்...
வளர்ந்தபோது அழுதிருந்த
தந்தையின் கடன்....
பிரிந்தபோது அழுதிருந்த
துணையின் கடன்.....
விட்டகன்றபோது அழுதிருந்த
சேயின் கடன்.....
அத்தனையும் தீர்ந்திடாத
பரிமாற்றத்தின் வலிகளாய்....
வாழ்வோடு பிணைந்திட்ட
துயர்களின் தொடர்களோடு......
தாடியின் தத்துவம் தெரியுமா உனக்கு?
தாடியின் தத்துவம் தெரியுமா உனக்கு?
காதலிக்கும் போது, என் காதலி முகம் பார்க்க வேண்டுமென்பதற்காக
சவரம் செய்து எங்கள் முகத்தை சலவைக் கல்லாக வைத்திருக்கிறோம்!
பிரிவு நேர்ந்தால்,
அவள் முகம் பார்த்த கண்ணாடியில், வேறு யாரும்
முகம் பார்த்து விடக் கூடாது என்பதற்காக
ஒரு கருப்புத் திரை போட்டு வைத்திருக்கிறோம்
அதற்கு நீங்கள் தாடி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





