விரல் கொடுத்து வழிநடத்தினாய்
விழும் போது தாங்கிகொண்டாய்
அழும் போது ஆறுதல் தந்தாய்
நான் ஆனந்தித்திருக்க வழிசெய்தாய்
வானத்து நிலவும்,வண்ண பூக்களும்
வாழ்வில் வர வகை செய்தாய்
அப்பா என் அப்பா
உன் மார்பில் எட்டி உதைத்தபோதும்
மீசை பற்றி இழுத்தபோதும்
அந்த ஆனந்த முகத்தில்
எத்தனை அமைதி
கடை வீதிகளில்
உன் கரம் பிடித்து நடந்தபோது
கர்வத்தில் உயர்ந்திருந்தேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக