எந்தவொரு புள்ளியிலும்
சந்திக்காத தண்டவாளம்
இரு உணர்வுகளை
தங்கி பயணிக்கின்றது
இந்த தொடர்வண்டி
பயணங்கள் புதுசு அல்ல
நினைவுகள் புதிசானாவை
புறம் பார்க்கும் காட்சி
அகம் காணும் கனவு
தினமும் பல நினைவுகளை
சுமந்து செல்கின்றது
பல நிற மனிதர்களின்
எதிரும் புதிரும் இருக்கும்
மனிதர்களை மறந்து
இரயிலை விட வேகமாய்
போகிறது உரையாடல்
கண்பார்த்து
காத்திருந்தது
மனம்
எதற்கு
காத்திருக்கிறேன் என்பது
மறந்துப் போய் விட்டது
நான் அடையவேண்டிய
தரிப்பிடம் தாண்டிவிட்டது .