மாணவர்களால் மாணவர்களுக்கு எடுத்து காட்டான விழாவாக இருந்தது
இந்த மண்ணிற்கும் நமக்கும், இந்த விவசாயத்திற்கும் நமக்கும், ஆனா உறவு முறையை கருப்பொருளாக கொண்ட
கண்காட்சி திருவிழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்தது மிகவும் முக்கியமாக இதுவொரு அறுவடைத் திருநாள் என்பதால் நம் கலாச்சாரத்தில்
இந்நாள் மிக முக்கியமான இடம் வகித்தது என்பதை வரைபடங்கள் ,பொருகள் உடைகள் உணவுகள் ஆதரப்ப்டுத்தப்பட்டது முக்கியமாக
பார்க்க முடிந்தது
பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து,
பானையின் கழுத்தில்
மஞ்சள் பூசி மாவிலை
கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள்.
இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று
மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். என்ற அவர்களின் விளக்க உரை சுவாரசியமாக இருந்தது
"உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை" என்று அன்றே
சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை.
திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை அவர்கள் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்து உண்மையான "வள்ளுவ நினவு பூஜை'யாக திருவள்ளுவரின் தினத்தையும்
அடையலப்படித்தி நினவு கூறினார்கள் .
இன்றிய தை பொங்கல் திருநாள் ஒரு இனத்தின்
கலாச்சார மேம்பாட்டைப் புலப்படுத்த கூடிய அவற்றில் ஒரு சமுக நோக்கு இருப்பதையும் நாம்
உணர்ந்து கொள்ள முடிந்தது இது அறிவுக்கும் உயர்வளிக்கும் நிகழ்வாகவே இருந்தது
எங்கெங்கெல்லாம் தமிழினம் பரவி இருக்கின்றதோ, அங்கெல்லாம்
தமிழ் மணம் பரப்பும், தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாவாகப்
கிடைத்த பெருமையாகும்.
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், "சூரியனை' கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு
அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய நற்றமிழர்! வாழிய தமிழ்!
முத்தமிழுக்கு ஒரு பெருமை !





















