வெள்ளி, 29 ஜூலை, 2011

சாதியும் சாமியும் ..ஒஸ்லோ முருகன்


உச்சி முதல் பாதம் வரை

ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்

தகதகனு மின்னுதய்யா

தள்ளி நின்னு பார்க்கையிலே

மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி

வகையாய் முருகனை அதுல வச்சு

வடம் பிடிச்சு இழுக்கையில

வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி

கிழக்கு வழி போனா ஒரு சாதி

எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்துட்டான்

சாக்கடையில சாச்சு புட்டான்

தேரேரி வந்த முருகன்

தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற முருகனுக்கு

காக்கி சட்டை

காவலுக்கு நிக்குதய்யா