ஞாயிறு, 24 அக்டோபர், 2021

நழுவிய நாட்கள்




 

 கடந்து தான் போயிற்று,காலம்

கைகளில் பிடிபடாமல்,

நழுவி விழுந்து

நெடு தூரம் போகிறது...!

நேற்றுப்போல் இருக்கிறது

நினைவுகளின் ஈரம்

நெருடல் நிறைந்த

நெஞ்ச வெளிகளில்

வேர் எறிந்து,

நினைவுகள் மட்டும்

முளைத்துக்கொண்டே

இருக்கின்றன....!

செத்துக்கொண்டேயிருக்கிறது

நிஜம்...!!

பழைய கஷ்டங்கள் மறைக்கப்படுகின்றது 

புதிய கஷ்டங்கள் புதுமையாக்கம் பெறுகின்றது !


பங்கிரையான் 

·24 அக்டோபர் 201