வியாழன், 26 அக்டோபர், 2023

காலம் நிற்பதில்லை



ப்பவும் போலவே
மழை மழையாகவே
இருக்கிறது...!

 

நிகழ்வு வெவ்வேறு
வாழ்வையும் வீழ்வையும்
விகாரப்படுத்துகிறது !

 

ஒற்றை மனம் ஒன்று
இருமைக் கொள்கைகுள்
முக்கு முடங்கி
முகவரி முடிந்து போன
உறவுகளின் நினைவு !

 

ஒற்றை குடைக்குள்
நடப்பவனிடம்
உள்ளேயும் வெளியேயும்
தனக்கான நம்பிக்கைகள்
காலம் தொடர்கின்றது அவன் பின் !

 

-பங்கிரையன்-