
பதினேழாவது வயதில் மக்களின்
புரட்சியாளன்..
ஐம்பதாவது வயதில் கிட்லரின் விரிவாளன்..
நீ பிரிந்து போனது
எனக்கெந்த மகிழவையும் தரவில்லை..
சுதந்திரம் கிடைத்த உணர்வைவிட..
துவண்டு போன மனதில்
நம்பிக்கை கொன்டு
கை தூக்கி நின்றது..
முகங்களின் சலனமற்ற சந்தோசம்..
கண்கழில் மலர்ந்த கண்ணீர் பளிங்குகளாய்
விழிகளெல்லாம் நனைந்தன..
வார்த்தைகள் கொதிப்பற்ற மகிழ்வாய்
எல்லாம் கிடைத்த உணர்வு..
எத்தனையே நாள் நெஞ்சுக் குழிக்குள்ளே..
நிஜங்களைத் தொலைத்துவிட்ட
நினைவுப் போராட்டம்..
எத்தனைநாள்கள் விடை தெரியாமல்
கலைந்து போன கனவுகள்..
விடியலை நோக்கி
நின்ற ஏக்கம்..
இருண்ட என் இனத்தால்
உருவான கனவுகள்..
உணர்வறிய கதிர்களாய்
உடைந்து எறிந்த நினைவுள்..
பயம் என்ற வார்த்தையை
வீரத்திற்குள் புதைத்து விட்டு..
மண் மீது காதலால் தாகம்
என்ற வேகத்தால் வந்த
எத்தனை பூக்கள் விரியமுன்
விதைக்கப்பட்டது உன் கரங்களால்..
கண்ணியமிக்க தோழர்களை
கண்ணி வைத்து பிடித்திழுத்து
கதற கதற தீயில் எரித்த வரலாறு..
தரம்கெட்ட உன்செயல்கல் தலைசுமந்த – நீ
தள்ளாடி நடந்து தட்டேந்த வைத்த
உன் சிந்தனை- உனை
தள்ளாடியில் தான்டவம் ஆடவைத்தது
உனக்கு இரங்கல் உரைவைக்க
எவன் வருவான் என்றெண்ணி
நிலவுகாத்த கிளிபோல்
அன்று இன்று நாளை என்று
இரவ பகலாய் காத்து கிடக்கின்ற
–உன் விழுதுகள்..
கண்ணீரில் நனைந்து
உன் கல்லறைக்கு கோட்டைக்கட்ட
நான் கோமாளியும் இல்லை
அங்கு மௌனவிப்பவர்கள்
புரட்சிகர சிந்தனையாளர்கள்..
எங்களுக்குள் இடைவெளிகள் அதிகம்
என்றாலும்
உன் கல்லறையில்
நாம் பூ வைக்க வேண்டும்
நீ வீரன் என்பதற்காக அல்ல
நாம் வாழ்வதற்காக -நீ
வீழ்ந்தாய்..!!
மழை முடிந்த மாலைகளில்
இப்போதும் காண்கிறேன்,
தனியாய் சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சியை..!!!!!
-சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக