வெள்ளி, 25 செப்டம்பர், 2015

இன்று இலங்கை தமிழ் தேசிய அரசியல் ஆனது பிராந்திய ஆளுமை மருசிரமைப்பு புரட்சியை எதிர்கொண்டுள்ளது .....!



சில சமுக சிந்தனையாளர் உடன்  நடத்தப்பட்ட விவாதம், உரையாடல் ஊடக   முன்வைக்கப்படும் கருத்துக்கள், சொல்லாடல்கள், கடந்த காலங்களில் இவை தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரபூர்வமான நிகழ்வுகளுடன் சமகால யதார்த்தங்களும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டு

ஒரு தேசிய இனத்தின் அடையாளங்களை பொது மொழியிலும் உளவியல் உருவாக்கத்திலும், பொது பொருளாதாரத் தொடர்பிலும் பொதுவான வாழ்விடப் பகுதியிலும் காண்கிறபொழுதும் கூட நம்மில் பொது மொழி, உளவியல் உருவாக்கத்தையும் முதன்மை அடையாளங்களாக வைத்துக் காண்கிற பொழுது இத்தகைய பன்முகத் தன்மையின் ஊடாகவும் தமிழர் ,தமிழ் முஸ்லிம்கள் ,மலையாக தமிழர் என அடையாளங்களை நாம் தொகுத்துக் கொள்ள முடியும்.


மொழிச் சிறுபான்மையினரை ஒருபோதும் தமிழர்களாக கருதஇயலாது. அதே சமயம் சிறுபான்மை தேசிய இனத்தவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள உருதுமொழி பேசுகின்ற


ஒரு சாரார் ஒரு தேசிய இனத்தை தமது அரசியல் சமூக குறுகிய நலன்களுக்காக, எதிர் நிலை கொண்டு மறுத்துரைக்கின்ற போது, அத்தேசிய இனம் தனது தேசிய இன, அடையாளத் தனித்துவத்தை இழந்து விடும் என நினைப்பது                                                                                                                " உரலை நினைத்துக்கொண்டு அவலை இடிக்கும் "கதைதான்.
இது இலங்கை மலையாக வாழ் தமிழ்மக்கள் ,தமிழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகின் எந்த தேசிய இனத்திற்கும் பொருந்தக் கூடியதே.

இலங்கை மலையாக தமிழ் மக்கள் ,தமிழ் முஸ்லிம்கள் தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ, அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான், தேசிய இன விடுதலையை, இனங்களின் தனித்துவத்தை, அம் மக்களின் அபிலாசையை மதிப்பவர்களின் கடமையுடன் கூடிய அரசியல் நேர்மையுமாகும்.

வரலாற்றின் தோல்விகளிலிருந்து எமது  பலவீனங்களிலிருந்து, எமது சிந்தனைக் கோளாறுகளில் இருந்து பாடம் கற்காத நாங்கள் , சுயவிமர்சனம் செய்ய முடியாத நாங்கள் , ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமைக்காக அதன் அடையாள இருப்புக்காக போராடுவதாகச் சொல்லிக் கொண்டு ஏனைய தேசிய இனங்களின் தனித்துவங்களையும் அத்தேசிய இன மக்களின் அரசியல் அபிலாசைகளையும் மறுத்துரைப்பது, ஒரு தேசியஇன கருத்தாளர்களின் கபடத்தனத்தை அம்பலமாக்கப் போதுமானதாகும்.

எமது தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் மலையாக தமிழர் ,தமிழ் முஸ்லிம்கள் அப்பேச்சுவார்த்தைகளில் தாம் ஒரு தனித்த தேசிய இனமாகையால் தமக்கான தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்த குரல் எழுப்பப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவர்களின்  இக் கோரிக்கையை இக் குறுந் தமிழ்த் தேசியஇன வாதிகள் நிராகரித்து வந்துள்ளனர்

வைகாசி 18



தமிழ் இனம் காக்க
சிங்கள இனத்தை அழிப்பவர்கள்
சிங்கள  இனம் காக்க
தமிழினம்  அழிப்பவர்கள்
தன் இனத்தினுள்ளே
 தம்  இனம் காக்க
தம் இனம்மழிப்பார்களோ
மனிதன்
மனிதனாய் வாழ
இன்னும் எத்தனை
எத்தனை வைகாசி
18 கேட்டிடுமோ

புதியதோர் வரவு



வீட்டு முத்தத்தில் அமைந்திருந்து பார்க்கும்பொழுதேமுளைத்து வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறதுரகசியத்தின் செந்நிற பூ மரம்.அதன் கிளைகளில் தலைகீழாய் தொங்குகின்றனஅன்பின் மொட்டுக்கள் ஒவ்வொரு மொட்டுகளில் இருந்தும் வெவ்வேறுஉருவத்துடன் வெளிக்குதிக்கிறார்கள் காதலர்கள் .சர்ப்பமென சுருண்டிருக்கும் அவளது உடலின் கதவுகளை தங்களது இரட்டை நாவினால்எட்டித்தள்ளி உள்நுழைந்து தின்னத்துவங்குகிறார்கள்.காதலனின் எச்சில்கள் படும் இடமெங்கும்முளைக்கின்றன புதியதோர் வரவு 

புலன்பெயர் இளையோர் !

புலன்கெட்டுக் கிடக்கும் சில புலன்பெயர் தமிழர்களின் ஆள்மைதனத்தையும
செயல் திட்டம்களையும் வன்முறை உணர்வுகளையும் ஏற்க்க மறுத்த தாயகத்தின் தமிழ் மக்களின் தேர்தல் முடிவுகள் !
இன்றிய இளையோகளே யுத்தத்தினால் சீரழிந்து போன எம் மக்களுக்காக உங்கள் பங்களிப்புக்களை வழங்க முன் வாருங்கள். அவர்களது வாழ்வாதாரம் கல்வி துறைசார் சிந்தனைக் குழாமை மீளக் கட்டியெழுப்ப உங்களாலான கடமைப்பாடுகளை தட்டிக்கழிக்காது முன் வாருங்கள்
அதனை விடுத்து தலைகழன்ற தலைமைகளின் கட்டளைகளுக்;கு சதிராட்டம் போடாதீர்கள்.
போராட்டம் என்று உசுப்பிவிட்டால் புலிக்கொடியை தூக்கவும் பிரபாகரனின் உருவப்படத்தை தாங்கவும் புலிச்சின்னம் பொறித்த ரீ சேர்ட்டுக்களை அணிவதாலும் உங்கள் கைகளில் பச்சை குத்துவதும் எமக்கான எம் மக்களுக்கான தேசிய சுயஉரிமை விடுதலை கிடைத்துவிடும்மல்ல
உங்களின் சிந்தனையில் மாற்றங்களை உருவாக்குங்கள் 

இன்று நல்ல நாள்


வாழ்வில் ஒருநாள் போனதை
உனக்குச் சொல்லி
மறைகிறது
மாலைச் சூரியன்..

உறுதியான நம்பிக்கையை
உனக்குக் காட்டி
உதிக்கிறது
காலைக் கதிரவன்-
புதிய நாளாய்..

நடத்து இந்த நாளை
நம்பிக்கை
நல்லதாய்க் கொண்டு...!

நினைவுக்கு பிறந்த நாள்




என் கைபிடிக்க நின்ற நிலவொன்று
மிளிர்ந்த நாள் இன்று
என் கைசேர மலரொன்று
மலர்ந்த நாள் இன்று
என் கரை தொட அலையொன்று
ஆர்பரித்தது நாள் இன்று
என் கனவு தொட்ட வானவில்
வளைந்த நாள் இன்று
என் மன சிற்பிக்குள்
நுளைந்த முத்து
பிறந்தது நாள் இன்று.
எனது நினைவலைகளில் மிதக்கும்
மனம் காணும் இன்பங்களை
அவள் காண இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்" .
என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்