தனிமையில்தர்க்கத்தின்தனித்துவமானதன்னல காதல் !வறண்டுஓடைக்கரையில் ...நாணல், பூக்களின்உவமை ஒத்திஅறிய காதல் !ஒரு கணத்தில்ஒருவன் தெரிந்த ஒருத்திதெரிந்தும் ,தெரியாமல்தொட்ட காதல்!ஒற்றை கதிரையில்உட்காந்திருக்கும்உணர்வு உளஎண்ணத்தில்ஒருதலை காதல் !முதிர்ந்த மனம்முணு முனுக்கும்முடங்களின்உள்ளத்தின் உலாஏக்கத்தின் காதல் !காதலின் தனித்துவம்காதலிப்பவனுக்கேபுரியும் காதலென்று !-பங்கிரையான்-2020
திங்கள், 18 டிசம்பர், 2023
ஒற்றை -பங்கிரையன்-
வெள்ளி, 24 நவம்பர், 2023
காணும் யாவும் -பங்கிரையன்-
இயற்கை இயல்பு
இழப்பு என்பது நியதி
வாழ்வென்பது தொடர்ச்சி
உயிர்கோளத்தில்
மனிதம் சிறிது
பூமி மேற்பரப்பில்
பிரிந்து கிடக்கின்ற
பெருங்கடல்
யுத்தம் என்பது முறைமை
உயர்ந்தவனும் தாழ்த்தவனும்
எதோ ஒன்று நிர்ப்பந்தம்
சமூகம் என்பது பொதுமை
மனநிலை மையப்புள்ளி
விண்ணும் மண்ணும்
யாரும் யாவும்
இன்நெறியில் இயங்கலாம்
- பங்கிரையான்
ஞாபக மணப்பு
குறிப்பு வைத்துக்கொண்டு
ஏதும் கண்டுபிடிக்க முடியாது இங்கே
பழைய அடையாளங்களை
ஏமாத்துக்காரர் அழிப்பார்கள்
பருத்த வேப்பமரத்தை தேடுகிறேன்
இடிக்கப்பட்ட என் வீட்டைத் தேடுகிறேன்
காலியான என் நிலத்திலிருந்து
மீண்டும் திரும்பவேண்டும் நான்
வலக்கை இடக்கை பார்க்கும் போது
வர்ணம் பூசுசிய தகரத்தால்
சுற்றி அடைக்கப்பட்டுருக்கின்றது
இவர்கள் தான் ஊரின் சொல்லிகள்
ஏதேனும் புதிதாக பேசுவார்கள்
ஏதேனும் ஒன்று இல்லாமலும் ஆகிறது
இப்போது இதுவொன்றுதான் வழி
அகம் பக்கம் நிலத்தை பார்த்து
கேட்கவேண்டும் இது என் நிலம் என்று
என்னிடம் நேரமில்லை
மத்தியான வெயிலில்
யாரும் பார்த்து அடையாளம்கண்டு
உள்ளே அழைக்கலாம் என்னை.
என் முகத்தில் தண்ணீர் தெளித்து
ஞாபக மணப்புடன் திரும்பினேன்
-பங்கிரையான்-
மரணமில்லா இறப்புகள். -பங்கிரையான்
மரணித்த எம் தோழர்களின்
துக்கங்கள் விழுங்கிய எழுத்துக்களில்உயிர் வாழ்கிறதென் கவிதை
காலத்தை மற்றவந்த காவியத்தின்
புதையலை தாங்கி நிட்க்கும்
கல்லறைகளுக்கு உயிர் ஊட்டி
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்
பொருள் இல்லாவிடினும்,
சுவை இல்லாவிடினும்
வரலாறுகளாய் அவர்களை பற்றிய
இனி இறக்கப்போகும் தன்னிகரில்லா
எவனாவது வாசிக்கக்கூடும், அவன்
இறந்தபின்னும் கவிதை உயிரோடிருக்கும்
என்னையும் சேர்த்து
இறந்தவர்களின் சுவடுகளோடு.
- பங்கிரையான்-
வியாழன், 26 அக்டோபர், 2023
காலம் நிற்பதில்லை
எப்பவும் போலவேமழை மழையாகவேஇருக்கிறது...!
நிகழ்வு வெவ்வேறுவாழ்வையும் வீழ்வையும்விகாரப்படுத்துகிறது !
ஒற்றை மனம் ஒன்றுஇருமைக் கொள்கைகுள்முக்கு முடங்கிமுகவரி முடிந்து போனஉறவுகளின் நினைவு !
ஒற்றை குடைக்குள்நடப்பவனிடம்உள்ளேயும் வெளியேயும்தனக்கான நம்பிக்கைகள்காலம் தொடர்கின்றது அவன் பின் !
-பங்கிரையன்-
திங்கள், 9 அக்டோபர், 2023
வாழ்ந்த வீடு
வாழ்ந்த வீடு
மௌனத்தின்
பதுங்கு குழியாய்
சலனமற்றிருக்கிறது
குடும்ப வீடு.
குருவிகளற்ற கூடாய்
அது
எதிர்பார்ப்புகளின்
ஏக்கங்களைச் சுமந்து
காத்திருக்கிறது.
சத்தமிட்டு
விழித்தெழுகின்றன
உறைந்த மௌனத்தின்
உறங்காத குரல்கள்.
பழமையின்
சுவடுகள் கலையாமலிருக்க
சருகு போர்த்தி
அடைகாக்கிறது
முற்றம்
சனி, 24 ஜூன், 2023
ஈர் இருபத்தைந்து ஆண்டு அகவையாள்
***************
பூமி பிரயாளத்தின்
தமிழுக்காய் உழைக்கும் வல்லொலி
என்பது சபையோர் தற்குறிப்பேற்ற அணி
பூப் போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னலிட்டு
புதியதோர் அகவை நிறைவு.
நறுமணவீசும் ஐந்து தசாப்தம்
ஆகாசம் வாழ்வில்
அழகான தருணங்களில்
எனக்குக்கிடைத்த அன்பான மித்திரன்
அவன்பால் ..நட்பில்
உருவானாய். அழகான நட்பாய்
அதில் என்றுமே அழியாத தோழியாய்
கை பிடித்து கை தளராய்
தோளில் முகம் சாய்த்து
ஆசை தான் அதிகமாகி
அங்கம் தான் புனிதமாகி
அகிலத்தை ரசித்து
அகம் முழுதும் நிறைந்தவலாய்
அகமதியால் காதலை இழந்து
அன்புக்கு அடையாளமாய்
வையம் போற்றும்
நுண்ணறிவு மிக்க
ஈர் ஆண் மகன்கள் - உன்
கரம் பெற்றடுத்தாய்
வாழ்வை பதியென கொண்டபின்
விதியை வென்றிடத்துணிந்து
கடமைக்கு என்றவர்
இசைந்து போகையில்
அவன் துணையாய்
எதிர்கொண்டாய்
அலெக்சீவா சேவை
புரிவீரென வாழ்த்தி
மகிழ்வது நான் கூறும்
உவமையணி
உளமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்து.!
ஞாயிறு, 18 ஜூன், 2023
அப்பாவின் பொக்கிஷம் -பங்கிரையன்-
அப்பாவின் வரைபட
கிறுக்கலில்
நிரம்பி இருக்கும்
நாள்கள் வருடங்ககள்
என்று சுருண்டு சுருங்கி
கிடக்கும் இந்த டைரி !
சில பக்கங்கள் அப்பாவின்
கடவுள் நம்பிக்கைபோல்
காட்சி இன்றி மறைந்திருக்கும்
அழுக்கேறிய டைரியில்
வாங்கிகணக்கு,
வழக்குகளும்
ஆன்மிக கொடுப்பனவு
ஆசாரியர் ,பூசாரியர்
விரிவாக்க பதிவுகளும்
அந்த டைரியெங்கும்
அப்பாவின் எழுத்துக்களில்
நிரம்பியிருக்கும்
டைரியின் பக்கங்களில்
மருமக்கள் ,
பிறமக்கள்
உற்றவர்கள் ,
உறவினர்கள்
கணக்குகளும்,
கருத்துக்களும்
நீதிகோரி மௌனித்திருக்கும்
வாழ்த்த காலங்களின்
கணங்களை
பொத்திவைத்து
சொல்வதாய் இருந்த
அந்த கடைசிச் சொல்
சொல்லாமலே உறைந்துபோன
இந்த உறவு மூட் டை பொக்கிஷம்
- பங்கிரையான்-
வெள்ளி, 12 மே, 2023
தமையன் 60 ,வாழ்வின் சிறு பக்கம்
இலங்கையின்வடபுலத்தின்செம்மண் விதை நிலத்தில்கற்றவர்கள் கற்று விளைந்தகட்டுவனாம் இவன் ஊர் !
அடர்ந்து வளர்ந்த
பனைமர சோலையில்
வழுக்கி விளையாடும்
ஈரக் காற்று அழகையும்
கிராமத்தானின் மனதையும்
அம்பலவாணர் ஓடுபாதையோரத்தில்
உட்கார்ந்து ஆளுமை பேசும்
பங்கிரை கிராமத்தில் ..
கந்தனும் நகுலையும்
தவமிருக்க
புது தளிர்களை ஏந்தி,
பூத்துக்குலுங்கும்
வசந்த கால பங்குனி திங்கள்
இவன் ஜனனம்
காரடையான் நோன்பு,
காதல் பண்டிகையாம்
காமன் பண்டிகை,
கொண்டாடும்
பங்குனி உத்திரம்
இவனை பெற்றவருக்கு
பெரும் விழா
தனித்துவ குடும்பத்தின்
மூத்த அடையாளம்
பெற்றவர் ஒரு புறம்
பெற்றிடாதவர் மறுபுறம்
தவம் கொன்று
தினம் தவழ்ந்து செல்ல
தலை பிள்ளை இவன்
சின்னம்மாள்
பெரியம்மாள் கருவறைதனில்
பிறந்திடா மகனாய்
என்னம்மாள் என்றெண்ணி,
கொடுந்தமிழில் கொஞ்சிபேசும்
பாசக்காரன்
என்னப்பன் என்னம்மாள் அவர்தம்
அம்மம்மாள் அம்மப்பன்
கதை பேசி கரம் வீசி
பேரன்பு கொண்ட பேரன் இவன்
தம்பி என்ற உறவை
மித்திரன் என்று உறவுகொண்டு
ஓர் கோப்பையில் உண்டு
ஓர் உடையை மாற்றி அணிந்து
ஓர் உயிர் ஈருடலாய் வாழ்ந்த
தமையன் இவன்
எனக்கு எதுன்னாலும்
என் அண்ணன் வருவான்
என்று நம்பும் தங்கயைகள்
தங்கை அவள் தனக்கு மேல் என்ற
எண்ணம் கொண்டு
அக்காத்தால் என்றழைத்து
பாசமழை பொழியும் அண்ணன்!
பக்கத்து வீட்டு
புளியமரத்தில்
இரவு வேளைகளில்
எட்டிப்பார்த்தால்
எச்சில் பேய்கள்
கட்டிக் கொள்ளும் என்றும்
இவன் எண்ணம் !
கடவுள் நம்பிக்கை
நற்செயல்களுக்கும்,
நல்சிந்தனைக்குள்ளும்
ஏற்றத்தாழ்வற்ற
கருணை உள்ள இவன் !
ஊரெல்லாம் சுற்றிவந்து
உருளாக பொதிகையெல்லாம்
உள்மனம் ,வெளிமனம் ஏதும் இன்றி
நகைச்சுவையை புதினம்
கூறும் ஊர் குருவி இவன் !
தொலை தூரம் கடந்து
இரு மனம் இணைந்து
திருமணம் புரிந்து
இரு சிறார்களின்
தந்தை !
பணம்மின்றி மனிதரை
மதிக்க தெரிந்த இவனுக்கு
போகும் ஊரெல்லாம் உறவு !
தனக்கான நேரத்தில்
தன்னலம் கொண்டு
தனியாகவே தனி இன்பம்
காண்பவன் !
அழுக்காறு அவாவெகுளி
இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
குறளுக்கு இணங்க
நல்லறம் கொண்டு
வாழ்க காலம்முழுதும் வளமுடன்
வாழ்க வாழியவே
செவ்வாய், 4 ஏப்ரல், 2023
இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? (கேள்வி-பதில் வடிவில் ஓர் எளிய அறிமுகம்)
1) தத்துவம் என்றால் என்ன?
இந்த உலகம் எங்கிருந்து வந்தது? மனித இனம் இவ்வுலகில் எவ்வாறு தோன்றியது? வாழ்க்கையின் சாரம் என்ன? இது போன்ற கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும் போது தன்னை அறியாமலேயே தத்துவத்தின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு எந்த விடையளித்த போதிலும் அதற்கு ஒரு தத்துவத்தின் உட்பொருள் இருக்கும். இவை அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்திற்குத் தக்கப்படி அமைந்திருக்கும். இவ்வகையில் தத்துவம் சமூக வாழ்வின் பிரதிபிலிப்பாகவே திகழ்கிறது.
2) தத்துவத்தைச் சுருக்கமாக ஒற்றை வரியில் கூறமுடிமா?
முடியும். இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றுடைய வளர்ச்சியின் மிகப் பொதுவான விதிகளைத் தத்துவம் ஆராய்கிறது.
3) அப்படி என்றால் தத்துவம் என்பது அவ்வளவு எளிதானதா?
இதில் எளிது கடினம் என்பதைவிட நமக்குத் தேவையானதா? தேவையற்றதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தேவையானதை எளிதாகவோ கடினமாகவோ கற்றுத்தான் ஆக வேண்டும். கற்கும் வழி அறிந்தால் எளிதானது, வழி அறியாதவரை கடினமானது. சுருக்கம் எளிமையாகத்தான் இருக்கும். அதனை விரித்துப் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.
4) இயற்கைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் தத்துவம் என்ன சொல்கிறது?
தொடக்கக் காலத்தில், இயற்கை, சமூகம் என்று தத்துவம் பிரித்து விவரிக்கவில்லை இருந்தாலும் இரண்டையும் விளக்கியிருக்கிறது. இந்த விளக்கம் தத்துவத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது
5) இந்த இரண்டு பிரிவு எது?
ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம்
6) இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
தத்துவம் எழுப்புகின்ற கேள்விக்கு அளித்திடும் பதிலைக் கொண்டு ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
7) அது என்ன கேள்வி-பதில்?
கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது மனிதன் தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதா? படைக்கப்பட்டது என்று பதிலளிப்பவர்கள் கருத்துமுதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்களது விளக்கம் உலகம் ஏதோ ஒரு விதத்தில் படைக்கப்பட்டது என்கிற அனுமானத்தில் இருந்து தொடங்குகிறது. இயற்கைதான் முதன்மையானது என்று கருதுபவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள்.
8) இரு பிரிவுகளிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றனவா?
ஆம். கருத்துமுதல்வாதத்திலும் பொருள்முதல்வாதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.
9) கருத்துமுதல்வாதத்தின் பிரிவுகள் எத்தனை?
ஒன்று அகநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று புறநிலை கருத்துமுதல்வாதம். அனைத்து கருத்துமுதல்வாதங்களும் இவ்விரு பிரிவுக்குள் அடங்கும்.
10) அகநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?
உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கருதுகிறது. இத்தத்துவத்தில் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரியாவில் மாஹி, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோர். அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியல், பின்நவீனத்துவம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
11) புறநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?
காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும், வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கிறது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது படைப்புக்கான சக்தி இவ்வுலகிற்கு அப்பால் காணப்படுகிறது. அதனால் தான் தமிழில் இதற்கு அப்பாலைத் தத்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. புறநிலை கருத்துமுதல்வாதத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், கிரேக்கத்தில் பிளாட்டோ, ஜெர்மனியில் ஹெகல், இந்தியாவில் ராமானுசர், மத்துவர், சைவசித்தாந்தியான மெய்கண்டர் போன்றோர்கள்.
12) இதே போல் பொருள்முதல்வாதத்திலும் பிரிவுகள் இருக்கின்றனவா?
ஆம் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றொன்று இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம்.
13) இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
இயந்திரகதிப் பொருள்முதல்வாதத்தையும், பகுத்தறிவுவாத நாத்திக பொருள்முதல்வாத்தையும் இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்று கூறலாம். மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதம் இயந்திரகதி தன்மையினைப் பெற்றதாக இருந்தது. இயற்கை, சமூகம் ஆகியவற்றை இயந்திரகதி வழியில் இயங்குவதாக விளக்கியது. இயற்கைப் பற்றிய விளக்கத்தில் இயலுலகிற்கு அப்பால் இருந்து தொடங்காமல், இயற்கையிடம் இருந்தே தொடங்கியது என்ற வகையில் இது முற்போக்கானதே. ஆனால் சமூகமும் இயற்கையும் மாறுதல் அற்றவையாகவும் மாற்ற முடியாதவையாகவும் விளக்கியது. பகுத்தறிவுவாதம் ஆன்மீகத்தை எதிர்க்கும் வகையில் அது பொருள்முதல்வாதமே. ஆனால் இந்த ஆன்மீகத்தின் தோற்றத்தை மனிதனது சிந்தனையில் கண்டது. அதற்கான புறநிலையை அறிந்து அதனடிப்படையில் போராடாமல், வெறும் அறிவுத்துறை போராட்டமாகச் சுருக்கியது. சிந்தனையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பகுத்தறிவில் கண்டது. பகுத்து அறியப்படுபவை எங்கிருந்து வந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. கடவுளை மறுத்தலே அறிவுக்கு வழியாகக் கண்டது. கருத்தின் சார்புக்கும், அதன் மாற்றத்திற்கும் காரணமான பொருளயாத புறநிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. சிந்தனையைத் தர்க்க வழிப்பட்டதாகச் சுருக்கி விளக்கியது.
14) மார்க்சியம் எத்தகைய பொருள்முதல்வாதம்?
மார்க்சியம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கையையும் சமூகத்தையும் அறிந்திட முடியும், இவை இரண்டும் நமக்குப் புறத்தே நம்மைச் சார்ந்திடாமல் புறநிலையில் இயங்குகின்றன என்கிறது இத் தத்துவம். பொருள்முதல்வாதம் உலகை உள்ளது உள்ளபடியே காணவேண்டும் என்பதையும், உலகின் பொருளாயத ஒற்றுமையின் அடிப்படையைப் பருப்பொருளின் இணைப்பில் காண வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பொருள்முதல்வாத சிந்தனையில் புகழ்பெற்றவை கிரேக்கத்தில் டெமாக்கிரிட்டஸ், இந்தியாவில் சாங்கியம், ஆதிபுத்தர், உலகாயதர். சார்வாகர், அணுவாதம் பேசும் வைசேஷிகர் போன்றோரின் சிந்தனைகள். இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனையாளர்யாளர்களில் புகழ்பெற்றவர் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஜார்ஜ் தாம்சன், இந்தியாவில் தேவிபிரசாத் சாட்டோபாத்தியாயா, கோசாம்பி, ஆர்.கே.சர்மா, நா.வானமாமலை, கோ.கேசவன், இலங்கையில் கைலாசபதி போன்றோர்கள்.
மரபுவழிப்பட்ட பொருள்முதல்வாதத்தன் தொடர்ச்சியே நவீன மார்க்சிய பொருள்முதல்வாதம். பழைய பொருள்முதல்வாதத்தில் காணப்படும் குறைகளையும் அதன் இயக்கமறுப்பியல் தன்மையையும் நீக்கி முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைத் தோற்றுவித்தது.
15) இந்த இரண்டு தத்துவப் போக்கிற்கும், அடுத்தப் போக்கு அல்லது நடுப் போக்கு என்று எதேனும் இருக்கிறதா?
தத்துவத்தில் இரண்டு போக்கிற்கு இடையே நடுப்போக்கு என்றும் மூன்றாம் போக்கு என்றும் ஏதும் கிடையாது. தத்துவம் எழுப்பும் கேள்விக்குப் பதில் அளிப்பதில் இருந்து விலகுவதின் மூலம் இந்த நடு மூன்றாம் போக்கினர் கருத்துமுதல்வாதப் பாதையிலேயே பயணிக்கின்றனர். கதம்பவாதப் போக்கு கருத்துமுதல்வாத முடிவுக்கே இறுதியில் இட்டுச் செல்லும்.
16) கருத்துமுதல்வாதம் சிறந்ததா? பொருள்முதல்வாதம் சிறந்ததா?
இதற்கு நேரடியாக அல்லாமல் வேறுவிதமாகப் பதிலளிக்கலாம். அதாவது கருத்துமுதல்வாதம் தமது வாதத்தை அனுமானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கிறது. பொருள்முதல்வாதம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்தில் கருத்துமுதல்வாதம் சிறப்பைப் பெற்றிருந்தது. ஏன் என்றால் பொருள்முதல்வாதத்திற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி அப்போது பெறவில்லை.
17) அதனால் தான் அன்று கருத்துமுதல்வாதத்தின் கையோங்கியிருந்ததா?
ஆமாம். இதனை எங்கெல்ஸ் சிறப்பாக விளக்கி இருக்கிறார். சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்துவதற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி ஏற்படாத அந்தக் காலத்திய பொருளமுதல்வாதம், இயற்கைப் பொருள்முதல்வாதமாகவே இருந்தது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை எட்டாத அன்றைய நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியில் ஒரு கடவுள் கோட்பாட்டிற்கும் கருத்துமுதல்வாதம் வந்தடைந்தது. எனவே பழைய பொருள்முதல்வாதம் அன்றைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது என்கிறார். விஞ்ஞான வளர்ச்சினால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதத்தை நிலைமறுக்கிறது.
18) இன்றும் கருத்துமுதல்வாதம் மேலோங்கி தானே இருக்கிறது?
ஆம். உண்மை தான். இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்கள் சமூகச் சூழநிலையில் அடங்கி இருக்கிறது. மனித அறிதலின் போதாமையை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நீக்கிவிட்டது உண்மையே, ஆனால் சமூகத்தின் வழியிலான அழுத்தம் முதலாளித்துவச் சமூகத்தில் கடுமையாகத் தொடர்கிறது. முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் முரண்களுடைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படுத்தும் அச்ச உணர்வும் பாதுகாப்பின்மையும் இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்களாகிறது. அச்ச உணர்வே கருத்துமுதல்வாதத்தின் பிறப்பிடம். அதனால் தான் கம்யூனிஸ்டுகளின் நாத்திகப் போராட்டம் சித்தாந்தப் போராட்டமாகச் சுருக்கிவிடாமல், சமூக வேர்களை அகற்றும் போராட்டத்துடன் இணைத்துக் காணப்படுகிறது.
19) இயக்கவியலுக்கும் இயக்கமறுப்பிலுக்கும் என்ன வேறுபாடு?
இயற்கையிலோ, சமூகத்திலோ ஒரு மாற்றம் நிகழ்கிறது என்றால் அந்தக் காரியம் காரணத்தின் தொடர்ச்சியாகவே நடைபெறுகிறது. இந்தக் காரணக் காரிய இயக்கத்தை அறிவியல்படி விளக்குவது இயக்கவியல் விதியாகும். காரணக் காரியத்தை மறுப்பது இயக்கமறுப்பியல்.
20) இயக்கவியல் விதி எவை?
இயக்கவியலின் பொது விதிகள் மூன்றாகும்.
1. அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.
(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)
2. எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)
3. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of the Negation)
21) இந்த மூன்றையும் அறிந்தால் இயக்கவியலை அறிந்து கொள்ளமுடியுமா?
எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் அதற்குரிய வகையினங்கள் (Categories) இருக்கின்றன. அந்த வகையினங்களினுடைய வகைப்பிரிவின் அடிப்படையில்தான் அந்த விஞ்ஞானங்களின் விதிகளைப் புரிந்து செயற்படுத்த முடியும்.
22) இயக்கவியலின் வகையினங்கள் எவை?
1. தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)
2. காரணமும் விளைவும் (Cause and Effect)
3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)
4. உள்ளடக்கமும் வடிவமும் (Content and Form)
5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)
6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)
23) இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மாற்றத்தை காரணக் காரியத்துடன் அதாவது அதன் இயக்கப் போக்குடன் விளக்குவது இயக்கவியல். இன்றைய இருப்பிற்கான காரணத்தையும், நாளை ஏற்படப் போகும் மாற்றத்தையும், அதன் இயக்க விதியின் அடிப்படையில் கூறப்படுவதால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றழைக்கப்படுகிறது.
மார்க்சிய பொருள்முதல்வாத தத்துவம் தம்முள் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயற்கையின் இருப்பைப் பற்றிப் பேசுகிறது, இது இயக்கவியல் பொருள்முதல்வாதம். மற்றொன்று சமூக இருப்பு, வளர்ச்சி, மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. இது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.
24) மார்க்சியப் பொருள்முதல்வாத்துடன் இணைந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எவை?
நவீன பொருள்முதல்வாதமான மார்க்சியத் தத்துவம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொணடு தம்மை நிலைநிறுத்தியது. 1.ஆற்றலின் உருமாற்றம், 2.உயிரணு, 3.பரிணாமக் கொள்கை ஆகியவை, விஞ்ஞானத்தின் மூன்று புதிய கண்டுபிடிப்புகளாகும்.
25) இந்த மூன்று கண்டுபிடிப்புகளும் என்ன முடிவுகளைத் தருகின்றன?
பொருளும் அதன் இயக்கமும் நிரந்திரமானவை, தோற்றுவிக்கவும் அழிக்கவும் முடியாதவை என்பதை ஆற்றலின் உருமாற்றம் பற்றிக் கோட்பாடு அறிவித்தது.
தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான ஒற்றுமை கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து உயிரிகளும் ஒரேவித உயிரணுக் கட்ட்டமைப்பைப் பெற்றுள்ளதை உயிரணு பற்றிய கோட்பாடு கண்டறிந்தது.
எளிய உயிரினத்திலிருந்து சிக்கலான உயிரினங்களாக வளர்ச்சியடைந்து இருக்கின்றன. இன்றைய உயிரினங்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உயிரிகளிலிருந்து ஏற்பட்ட நீண்ட பரிணாமப் போக்கின் விளைவுகளாகும் என்பதைப் பரிணாமக் கோட்பாடு வெளிக்கொண்ர்ந்தது.
இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளின் வழியாக, இயற்கை முழுவதின் இடைத் தொடர்பை எவ்வித அயலான கலப்பின்றி, உள்ளதை உள்ளவாறு நவீன பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டது. கருத்துமுதல்வாதத்தால் இதுவரை முன்வைக்கப்பட்ட மேலுலகத்தின் அப்பாற்பட்ட தொடர்பு தேவையற்றது என விஞ்ஞான வழியில் மறுக்கப்பட்டது.
26) இயக்கவியல் பொருள்முதல்வாதம் எவற்றை எல்லாம் விளக்குகிறது?
குறிப்பாகப் பருப்பொருள், அதன் இயக்கம், விசும்பும் காலமும், உணர்வுநிலை என்பது பற்றிப் பேசுகிறது.
27) பருப்பொருள் என்றால் என்ன?
பொருள்முதல்வாத கண்ணோட்டம், பருப்பொருளை (Matter) அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது. பருப்பொருள் என்பது மனிதனது உணர்வுநிலையைச் சாராது, அதாவது அதனைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றானா? சிந்திக்கவில்லையா? என்பதைச் சாராது, புறநிலையில் இருக்கிறது. பருப்பொருள் எத்தகைய தனித்தன்மையைப் பெற்றிருந்தாலும் ஒரு பொது அம்சத்தைக் கொண்டுள்ளது. அது நமது உணர்வுநிலையைச் சாராமல், புறநிலையில் இருக்கிறது.
28) பருப்பொருளும் இயக்கமும் என்றால் என்ன?
உலகில் காணப்படும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முற்றிலும் இயக்கமோ, மாற்றமோ இல்லாத பொருள் என்று சொல்வதற்கு இவ்வுலகில் எதுவும் இல்லை. பருப்பொருளின் இருப்பு என்பது இயக்கத்தில் தான் நிலவுகிறது. இயக்கம் இன்றிப் பருப்பொருள் இல்லை. அதே போன்று பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. இயக்கத்திலுள்ள பருப்பொருள் என்பது விசும்பிலும் காலத்திலும் தவிர்த்து வேறு நிலையில் செயற்படுவதில்லை.
29) விசும்பும் காலமும் (Space and Time) என்றால் என்ன?
பருப்பொருளின் இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகிறது. விசும்பு என்பது பருப்பொருளின் இருத்தலையும், மற்ற பொருளுடன் கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது. காலம் என்பது பருப்பொருள் இருத்தலின் கால அளவிலும், அடுத்தடுத்து தொடர்கின்ற நிகழ்வின் கால வரிசையிலும் காணப்படுகிறது. பொதுவாகப் பருப்பொருள் நீளம், அகலம், உயரம் கொண்டதாக இருக்கிறது. அந்தப் பரிமாணம் எடுத்துக் கொள்ளும் இடத்தின் அடிப்படையில்தான் அப்பருப்பொருள் விசும்பில் இடம் பெறுகிறது. ஆகப் பருப்பொருள் இடத்தைத் தவிர வேறு வகையில் தம் இருப்பை நிலைநிறுத்துவதில்லை. பருப்பொருள் அண்மையிலோ சேய்மையிலோ, இடதோ வலதோ, மேலோ கீழோ, காணப்படுகிற மற்ற பொருட்களுடன் விசும்பில் இருக்கிறது. அதாவது பருப்பொருளின் தொடர்பு என்பது விசும்பில் தான் நிகழ்கிறது. கண்ணில் படும் பருப்பொருளுக்குத் தான் நீளம் அகலம் உண்டு அதனால் தான் பொதுவாகப் பருப்பொருளுக்கு என்று கூறப்பட்டது. கண்ணில் படாத ஆனால் அதனைக் கருவிகள் மூலமோ மற்றவற்றின் உதவியோடு அறிந்திடும் பருப்பொருட்கள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே உள்ள உறவுகள், அப்பொருட்களைச் சுற்றிலும் நடைபெறும் உறவுகளோடு விசும்பின் உறவுகளாகின்றன. இந்த உறவுகள் எல்லையற்றது. இதன்படி எல்லைக்குட்பட்ட வடிவமாக இருந்துகொண்டே எல்லையற்ற நிலைக்கு விரிந்து சென்று வரம்பற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. இது காலத்துக்கும் பொருந்துகின்றது. குறிப்பிட்ட பொருளின் நிலைப்பாட்டின் தொடக்கமும் இறுதியும் இருக்கிறது. ஆனால் இதன் தொடக்கத்துக்கு முன்பே எண்ணிலடங்கா தொடர்ச்சிகள் இருந்து மறைந்துள்ளன. அதேபோல் குறிப்பிட்ட பொருளின் முடிவுக்குப் பின்பும் தொடர்கிறது. ஆக இந்தத் தொடர் நிகழ்வுக்குத் தொடக்கமும் இறுதியும் இல்லை. விசும்புமும் காலமும் என்றென்றும் வரம்பின்றி நிலைத்திருக்கிறது.
30) உணர்வுநிலை (Consciousness) பற்றிக் கூறுங்கள்?
உணர்வுநிலையைக் கொண்டே மனிதன் தமது செயல்களை அமைத்துக் கொள்கிறான். அதனால் தான் தத்துவ விவாதங்களில் உணர்வுநிலை முதன்மை இடம் பெறுகிறது.
31) உணர்வுநிலையைக் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் எவ்வாறு பார்க்கிறது?
கருத்துமுதல்வாதம் உணர்வுநிலை எவ்வாறு தோன்றியது என்பதை ஆராயாமல் மனிதனது மூளையின் செயற்பாடாக மட்டுமே பார்க்கிறது. பொருளாயத உலகோடு ஏற்படுகிற பரஸ்பர வினையினால் உண்டான மூளையின் பிரதிபலிப்பாகப் பொருள்முதல்வாதம் பார்க்கிறது. மனிதன் தன்னைச் சுற்றி நடைபெறுவதைப் பார்த்திடும் போது ஏற்படுகிற விழிப்புநிலையில் இருந்து உணர்வுநிலை தோன்றுகிறது. அதாவது தனது வாழ்நிலையில் இருந்து தமக்கான உணர்வுநிலையைப் பெறுகிறான். புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பே உணர்வுநிலை என்கிறது பொருள்முதல்வாதம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



