இலங்கையின்வடபுலத்தின்செம்மண் விதை நிலத்தில்கற்றவர்கள் கற்று விளைந்தகட்டுவனாம் இவன் ஊர் !
அடர்ந்து வளர்ந்த
பனைமர சோலையில்
வழுக்கி விளையாடும்
ஈரக் காற்று அழகையும்
கிராமத்தானின் மனதையும்
அம்பலவாணர் ஓடுபாதையோரத்தில்
உட்கார்ந்து ஆளுமை பேசும்
பங்கிரை கிராமத்தில் ..
கந்தனும் நகுலையும்
தவமிருக்க
புது தளிர்களை ஏந்தி,
பூத்துக்குலுங்கும்
வசந்த கால பங்குனி திங்கள்
இவன் ஜனனம்
காரடையான் நோன்பு,
காதல் பண்டிகையாம்
காமன் பண்டிகை,
கொண்டாடும்
பங்குனி உத்திரம்
இவனை பெற்றவருக்கு
பெரும் விழா
தனித்துவ குடும்பத்தின்
மூத்த அடையாளம்
பெற்றவர் ஒரு புறம்
பெற்றிடாதவர் மறுபுறம்
தவம் கொன்று
தினம் தவழ்ந்து செல்ல
தலை பிள்ளை இவன்
சின்னம்மாள்
பெரியம்மாள் கருவறைதனில்
பிறந்திடா மகனாய்
என்னம்மாள் என்றெண்ணி,
கொடுந்தமிழில் கொஞ்சிபேசும்
பாசக்காரன்
என்னப்பன் என்னம்மாள் அவர்தம்
அம்மம்மாள் அம்மப்பன்
கதை பேசி கரம் வீசி
பேரன்பு கொண்ட பேரன் இவன்
தம்பி என்ற உறவை
மித்திரன் என்று உறவுகொண்டு
ஓர் கோப்பையில் உண்டு
ஓர் உடையை மாற்றி அணிந்து
ஓர் உயிர் ஈருடலாய் வாழ்ந்த
தமையன் இவன்
எனக்கு எதுன்னாலும்
என் அண்ணன் வருவான்
என்று நம்பும் தங்கயைகள்
தங்கை அவள் தனக்கு மேல் என்ற
எண்ணம் கொண்டு
அக்காத்தால் என்றழைத்து
பாசமழை பொழியும் அண்ணன்!
பக்கத்து வீட்டு
புளியமரத்தில்
இரவு வேளைகளில்
எட்டிப்பார்த்தால்
எச்சில் பேய்கள்
கட்டிக் கொள்ளும் என்றும்
இவன் எண்ணம் !
கடவுள் நம்பிக்கை
நற்செயல்களுக்கும்,
நல்சிந்தனைக்குள்ளும்
ஏற்றத்தாழ்வற்ற
கருணை உள்ள இவன் !
ஊரெல்லாம் சுற்றிவந்து
உருளாக பொதிகையெல்லாம்
உள்மனம் ,வெளிமனம் ஏதும் இன்றி
நகைச்சுவையை புதினம்
கூறும் ஊர் குருவி இவன் !
தொலை தூரம் கடந்து
இரு மனம் இணைந்து
திருமணம் புரிந்து
இரு சிறார்களின்
தந்தை !
பணம்மின்றி மனிதரை
மதிக்க தெரிந்த இவனுக்கு
போகும் ஊரெல்லாம் உறவு !
தனக்கான நேரத்தில்
தன்னலம் கொண்டு
தனியாகவே தனி இன்பம்
காண்பவன் !
அழுக்காறு அவாவெகுளி
இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
குறளுக்கு இணங்க
நல்லறம் கொண்டு
வாழ்க காலம்முழுதும் வளமுடன்
வாழ்க வாழியவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக