பாயும் நினைவுகளாய்
மறைந்து கிடக்கின்றன.
சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
பாயும் நினைவுகளாய்
மறைந்து கிடக்கின்றன.
உளியின் ஓசை
சிலையின் எழுச்சி!
அலைகளின் ஓசை
கடலின் எழுச்சி!
சலங்கை ஓசை
நாட்டிய எழுச்சி!
அருவியின் ஓசை
நீரின் எழுச்சி!
பண்களின் ஓசை
இசையின் எழுச்சி!
சொற்களின் ஓசை
மொழியின் எழுச்சி!
மழலையின் ஓசை
இனிமையின் எழுச்சி!
எழுசீர் ஓசை
ஒளியின் அங்கலாய்ப்புகளில்
போதிய அளவிற்கு
வெண்மை நிறமாக தோற்றமளிக்கும்
இரவின் கூர் அந்தகாரம்
யுத்தத்தின் முடிவில்
குழும தலைமை சொல்லாத
வார்த்தைகள் சொன்னதாக பேச்சு !
தேர்வானவர்கள் என்று
தேர்வு செய்த சொற்களை
தேர்ந்தவர்கள் தெரிவு செய்து
தேய்ந்த போனவர்களை
வியபரிக்கும் தேர்வு பெற்றவர்கள்
இன் யுகத்தின் அங்கத்தவர்கள் !
முன்னாள் கவசங்கள்
முகம் காட்டுவதில்லை
காலம் கடந்தது அவர்களுக்கு
தெரியப்போவதில்லை!
உறையில் உறங்குகின்றது
கவனமாகவே ஆயுத ஆயுள்
இரவு பகல் புரியாமல்
யாருக்கும் புரியப்போவதில்லை !
கூர்மை குறிப்புடன்
தன் பறந்தலை செய்கிறது
எதிர்காலத்து பறவை
இணையே இல்லாத
சிறப்பாளர் மத்தியில்
உலகம் ஒன்றுதான்
உணர்ந்து கொண்டால்
இருளின் மொழியில் …..
ஏதோ உரையாட செல்கின்றன
நுண்கதையாடலை
அறியப்படாத புலத்திலிருந்து
எனக்கு
தெரியாது என தெரிந்ததால்
-பங்கிரையான்-
வாழ்ந்த வீடு
மௌனத்தின்
பதுங்கு குழியாய்
சலனமற்றிருக்கிறது
குடும்ப வீடு!
குருவிகளற்ற கூடாய்
அது
எதிர்பார்ப்புகளின்
ஏக்கங்களைச் சுமந்து
காத்திருக்கிறது!
சத்தமிட்டு
விழித்தெழுகின்றன
உறைந்த மௌனத்தின்
உறங்காத குரல்கள்!
பழமையின்
சுவடுகள் கலையாமலிருக்க
சருகு போர்த்தி
அடைகாக்கிறது
முற்றம்!
அறிவாலறிந்து செவி மடுப்பாய்
அவன் கூறும் கூற்றை நம்பும் நீ
உன் கூற்றுவன் அவன்தானென உணராமல்
தூண்டில் இரைகண்டு மீன் மாட்டுமாற்போல
மொழிந்ததை உன் நலனுக்கென செவிமடுத்து செயல்படும்
இரவு சூரியன்
என்பதும்பூரண சூரியகதிர்கள் தான்
இராவெலாம்பொழிந்து கொண்டிருக்கும்மழை துளிகள்ஒரு துளி பகல் கதிர்கள்உள்ளே நுழைய முடிவதில்லை
இரவுதனக்கான நிறங்களைமட்டுமே பேசுகிறதுகாலம் சாய்ந்து போகிறதுஎனக்கும் அவளுக்கும் ஆனாகாதல் உக்கிரம் அடைகின்றது
-பங்கிரையன்-