வெள்ளி, 29 மே, 2026

அக்கினிக் குஞ்சு சிறகு விரிக்கும்! -பங்கிரையான்-

 




பாயும் நினைவுகளாய்

மறைந்து கிடக்கின்றன.


வலி சுமந்த சமூகம்,
விடியலைத் தேடி ஓடும் மனிதரில்
விழுந்த காயங்கள் ஆயிரம்—
ஒவ்வொரு அடியிலும்
மௌனத்தின் சிதறல்கள்.,
மனிதன் தேடும் விடியல்
தூரத்தில் மங்கலாய் தெரிகிறது.

குரல் எழுப்பாத நெஞ்சங்கள்
காற்றில் கலந்துவிடும் போது,
நீதியின் நிழல் கூட
தன் பாதையை மறந்துவிடுகிறது.

ஆனால்—

அந்த கரும்புகையின் பின்னால்
ஒளிந்து கொண்டிருக்கும் தீப்பொறி,
ஒரு நாள் வெடித்து எழும்;
மௌனத்தின் சங்கிலிகளை உடைத்து
சத்தமாக பேசும்.
அக்கினிக் குஞ்சு 
சிறகு விரிக்கும்!

அப்போது,
யுகத்தின் காவலகம்
அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து
உண்மையின் வெளிச்சத்தை
மீண்டும் காக்கத் தொடங்கும்.
 -பங்கிரையான்-

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

ஓசைகளும் எழுச்சியும் -பங்கிரையான்-

 உளியின் ஓசை

சிலையின் எழுச்சி!


அலைகளின் ஓசை

கடலின் எழுச்சி!


சலங்கை ஓசை

நாட்டிய எழுச்சி!


அருவியின் ஓசை

நீரின் எழுச்சி!


பண்களின் ஓசை

இசையின் எழுச்சி!


சொற்களின் ஓசை

மொழியின் எழுச்சி!


மழலையின் ஓசை

இனிமையின் எழுச்சி!


எழுசீர் ஓசை

இலக்கணத்தின்  எழுச்சி!
 -பங்கிரையான்-

இருளுக்குள் வெளிச்சம்

 ஒளியின் அங்கலாய்ப்புகளில்

போதிய அளவிற்கு 

வெண்மை நிறமாக தோற்றமளிக்கும் 

இரவின் கூர் அந்தகாரம் 

  மனதை ஆற்றுப்படுத்துகிறது....!

 -பங்கிரையான்-

சமூக காட்சி -பங்கிரையான்-

 யுத்தத்தின் முடிவில் 

குழும தலைமை சொல்லாத 

வார்த்தைகள் சொன்னதாக பேச்சு !


தேர்வானவர்கள் என்று 

தேர்வு செய்த சொற்களை 

தேர்ந்தவர்கள் தெரிவு செய்து 

தேய்ந்த  போனவர்களை 

வியபரிக்கும்  தேர்வு பெற்றவர்கள் 

இன்  யுகத்தின் அங்கத்தவர்கள் !


முன்னாள் கவசங்கள் 

முகம் காட்டுவதில்லை 

காலம்  கடந்தது அவர்களுக்கு 

தெரியப்போவதில்லை!

உறையில் உறங்குகின்றது 

கவனமாகவே ஆயுத ஆயுள் 

இரவு பகல் புரியாமல் 

யாருக்கும் புரியப்போவதில்லை !


கூர்மை  குறிப்புடன் 

தன் பறந்தலை செய்கிறது 

எதிர்காலத்து பறவை

இணையே இல்லாத

 சிறப்பாளர் மத்தியில் 

 உலகம் ஒன்றுதான் 

உணர்ந்து கொண்டால் 

அனுபவம் கோடி ...!

 -பங்கிரையான்-

தெரியாத ஒன்று

 இருளின் மொழியில்  …..

ஏதோ உரையாட  செல்கின்றன  

 நுண்கதையாடலை

அறியப்படாத புலத்திலிருந்து

எனக்கு 

தெரியாது என தெரிந்ததால்

                                                                          -பங்கிரையான்-

 


வியாழன், 30 அக்டோபர், 2025

ஞாபக மணப்பு -பங்கிரையான்-



ஒவொருமுறையும்
ஊர் போகும் போது
வழி மறந்துபோகும்
புதிதாய் தளிர்த்திருக்கும்
வீடுகளும் ,மண்டபங்களும்

குறிப்பு வைத்துக்கொண்டு
ஏதும் கண்டுபிடிக்க முடியாது இங்கே
பழைய அடையாளங்களை
ஏமாத்துக்காரர் அழிப்பார்கள்

பருத்த வேப்பமரத்தை தேடுகிறேன்
இடிக்கப்பட்ட என் வீட்டைத் தேடுகிறேன்
காலியான என் நிலத்திலிருந்து
மீண்டும் திரும்பவேண்டும் நான்

வலக்கை இடக்கை பார்க்கும் போது
வர்ணம் பூசுசிய தகரத்தால்
சுற்றி அடைக்கப்பட்டுருக்கின்றது
இவர்கள் தான் ஊரின் சொல்லிகள்

ஏதேனும் புதிதாக பேசுவார்கள்
ஏதேனும் ஒன்று இல்லாமலும் ஆகிறது
இப்போது இதுவொன்றுதான் வழி
அகம் பக்கம் நிலத்தை பார்த்து
கேட்கவேண்டும் இது என் நிலம் என்று

என்னிடம் நேரமில்லை
மத்தியான வெயிலில்
யாரும் பார்த்து அடையாளம்கண்டு
உள்ளே அழைக்கலாம் என்னை.

என் முகத்தில் தண்ணீர் தெளித்து
ஞாபக மணப்புடன் திரும்பினேன்
-பங்கிரையான்-

கனவு

 சில கனவுகளை நிஜமென
எண்ணி மகிழ்வதும்…
பல நிஜங்களை கனவு என
எண்ணி மறப்பதும்….
அதைக் கடந்து போவதும்
தான் வாழ்க்கை…..
 -பங்கிரையான்-


 என்ஜினீரிங் படிக்கும் 

மகனிடம் தேநீர் தயாரி

 என்றால் 

சுவைகளை 

அளவிடுகின்றான்

உளவியல்

 தொழிலாளர் உளவியல்
படித்த மகளிடம்
பசிக்குது என்றேன்
போதும் என்று
புத்திமதி

 -பங்கிரையான்-

காலம் நிற்பதில்லை


எப்பவும் போலவே
மழை மழையாகவே
இருக்கிறது...!
நிகழ்வு வெவ்வேறு
வாழ்வையும் வீழ்வையும்
விகாரப்படுத்துகிறது !
ஒற்றை மனம் ஒன்று
இருமைக் கொள்கைகுள்
முக்கு முடங்கி
முகவரி முடிந்து போன
உறவுகளின் நினைவு !
ஒற்றை குடைக்குள்
நடப்பவனிடம்
உள்ளேயும் வெளியேயும்
தனக்கான நம்பிக்கைகள்
காலம் தொடர்கின்றது அவன் பின் !
-பங்கிரையன்-

வாழ்ந்த வீடு -பங்கிரையன்-

 வாழ்ந்த வீடு

மௌனத்தின்

பதுங்கு குழியாய்

சலனமற்றிருக்கிறது

குடும்ப வீடு!

குருவிகளற்ற கூடாய்

அது

எதிர்பார்ப்புகளின்

ஏக்கங்களைச் சுமந்து

காத்திருக்கிறது!

சத்தமிட்டு

விழித்தெழுகின்றன

உறைந்த மௌனத்தின்

உறங்காத குரல்கள்!

பழமையின்

சுவடுகள் கலையாமலிருக்க

சருகு போர்த்தி

அடைகாக்கிறது

முற்றம்!

-பங்கிரையான்-

பிடித்த சொல்லாடல் கவிதை

 அறிவாலறிந்து செவி மடுப்பாய்

அவன் கூறும் கூற்றை நம்பும் நீ

உன் கூற்றுவன் அவன்தானென உணராமல்

தூண்டில் இரைகண்டு மீன் மாட்டுமாற்போல

மொழிந்ததை உன் நலனுக்கென செவிமடுத்து செயல்படும்

நிந்தன் அறிவு மூயீரையும் பண்டமாற்றுக்கு பகிர்ந்தாயோ???

காலம்


மழையில் நனைந்து 

 வெறிச்சோடிய

அறுவடை நிலமாய்

சகதியாகவே இருக்கிறது

இன்று என் மனம்


புதன், 21 ஆகஸ்ட், 2024

அழகு மிளிர்ந்த புதுமை -பங்கிரையன்-


எதுகும் மாற்றமில்லை எல்லாம் புதிது
விறுவிறுப்பான நாட்டிய அரங்கம்
தீதும் நன்றும்


கடந்த 17 ஆவணி 2024 சனிக்கிழமை கலசாதன பள்ளி மாணவர்களின் இருவரின்
மண்டபம் நிரம்பிய நாட்டிய அரங்கம்
புறநானூறுறில் துறையும் அவை, கணியன் பூங்குன்றன் பாட்டு.யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா தலைப்பை தங்கியது அரங்கம்
பெண் அர்ச்சகர் சைவ சமைய ரீதியான முறையை தமிழில் ஆராதனைகளை நிகழ்த்தி நிகழ்வை தொடங்கி வைக்க

#பரதக்கலை ஆரம்பம்
மேடையிலிருந்து ஒளி மங்கி பரவ, நட்டுவனார் இசைக்கருவிகளுடன் இசை முழங்க ,ஆசிரியர் கவிதா லட்சுமி அவர்களின் நெறிப்படுத்தலில் ஆடல்நாயகன்
#ஹரிணி நகுலேஸ்வரதாஸ் ,
#தீபிகா மகேசன்
இருவரும்




அலங்கரிக்கப்பட்ட அரங்கில் மலர்வணக்கம் நடனத்தை மலர்த்தூவி குரு, இசைக்கலைஞர்களுக்கு சிரம்தனை தாழ்த்தி மற்றும் காண்போரையும் வணங்கி உடலும் மனமும் மலர்தது வீற்றிருந்த காட்சி ஒவ்வொருவர் மனதையும் அரவணைத்து கொண்டிருக்கும் என எண்ணலாம் .

*திருக்குறள் > விருத்தம்
*திருக்குறள் > அலாரிப்பு
*தாடகை > கவித்துவம்
*கூனியின் > கதையாடல்
*இராவணன் > வர்ணம்
*பாஞ்சாலி / சூர்ப்பனகை > பதம்
*சிகண்டி /சகுனி > கீர்த்தனம்
திருக்குறள் ,இராமாயணக் காப்பிய பாடபேதங்களில் இருந்து முகாந்திரமாக விமர்சனக்கு ஏற்ற கதைமாந்தர்களை வகைப்படுத்தப்பட்ட பாடல்கள் பாரத நாட்டிய முக்கிய அம்ச அணுகப்பட்டது
சந்த நயமும் ஓசை நயமும் கொண்டு நோர்வே வாழ் இலக்கிய முன்னோடிகள் கவிஞர்கள் உமாபலன் ,ரூபன் சிவராஜா உடன் கவிதா லக்சுமி இவர்களே பாடல்களை எழுதினார்கள்
இவர்களின் பாடலுக்கு பக்கவாத்திய கலைஞர்கள் இசை வாத்தியங்கள் கொண்டு இசைக்க ,உணர்ச்சி ததும்பப் பல பாவனைகளில் அபிநயம் பிடிப்பதற்கு ஏற்றதா அமைந்தது என்றால் அது மிகையாகது.

இதிகாச கதையை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக முன் கூடியே தொகுப்பாளர் கவிஞர் இளவாலை விஜேந்திரன் சிறு குறிப்பாக சொல்லப்பட்டது காண்போர் எழிதில் உள்வாங்கி புரிதலுடன் இரசிக்க கூடியதாக அமைந்தது

காட்சி அமைப்புகள் எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாது அந்த எளிமை காரணமாக எவ்விதத்திலும் அக்கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடாமல் ஆசிரியர் கவிதா லட்சுமி அவர்களின் நெறி ஆற்றலும் நடன அமைப்பும், கவிஞர்களின் பாடல் வரியமைப்பு, பக்கவாத்திய இசை செய்திருந்தது பார்த்தவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.


போட்டிக்கு ஆடும் கலைஞர்கள் போல, போட்டியும் போட்டு, பாசமும் காட்டி, நட்பாய் நல்ல நளினமும் புரிந்து ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று . நடனம் தந்தமையும், ஆரம்பம் முதல் இறுதி வரை களைப்போ சளைப்போ காட்டாமல் அரங்கினை ஆட்சி செய்தமையும் அவர்களின் நடனத்திறமை என்றே சொல்லமுடியும்.


ஆடற்கலைத்திறனை வெளிக்காட்டி இருவரின் உற்சாகமாக அரங்கினில் மெய்சிலிர்க்க வைத்து, கைதட்டலை அள்ள போதுமாக இருந்தது. இதில் முக்கியமாக சொல்லப்படவேண்டிய செய்தி ஆரம்பம் முதல் இறுதிவைரை மண்டபத்தில் அமர்ந்திருந்த மக்களை தம்வசமிழுத்து, நடனத்தை இரசிக்க வைத்தது மட்டுமன்றி, யாரும் கேட்காமலே மக்கள் தாங்களாகவே கரகோசம் செய்து மகிழ்ச்சியை காட்டி பாராட்டியமை நடனக்கலைஞர்களின் திறமைக்கு கிடைத்த பரிசு என்றே சொல்ல முடியும்.

மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட ஒரு அரங்கேற்றம். ஆடையலங்காரம் ஒலி, ஒளி அமைப்பு, மேடை ஒழுங்கமைப்பு என்பனவும் பாராட்டுக்குரியது. வெறுமனமே அரங்கேற்றம் என்று பாராது, அரங்கேற்றத்திற்கு பின்னாலுள்ள உழைப்பும் சிந்திக்கப்பட வேண்டியது. இந்நிகழ்வுக்காக பாடுபட்ட பெற்றோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.



வளரும் சமூகத்தை முன்னிலை நகர்த்த முயற்சிக்கும்
பொது அமைப்புகளின் நிர்வாக /பிரதிநிதிகளுக்கு ஓர் வேண்டுகோள் பாரபட்சம் இன்றி இளம் சிறார்களை கௌரவிக்க பழகுங்கள்
தாழ்த்திப் பேசுவதும் தக்கது அன்று.
அனைவரையும் சமமாக மதிப்பதே தக்கது ஆகும்.
மனிதநேயம் நாம் போற்றத் தக்கது ஆகும்.
நல்லவர் உள்ளம்
வல்லவன் இல்லம்
தொல்லைகள் இல்லா
எல்லையில் இன்பம்
மகிழ்வுடன்
சண் நரேந்திரன்





Alle reaksjone

திங்கள், 8 ஜூலை, 2024

"சாய்வு காலம்"

 இரவு சூரியன்

என்பதும்
பூரண சூரியகதிர்கள் தான்

 

இராவெலாம்
பொழிந்து கொண்டிருக்கும்
மழை துளிகள்
ஒரு துளி பகல் கதிர்கள்
உள்ளே நுழைய முடிவதில்லை

 

இரவு
தனக்கான நிறங்களை
மட்டுமே பேசுகிறது
காலம் சாய்ந்து போகிறது
எனக்கும் அவளுக்கும் ஆனா
காதல் உக்கிரம் அடைகின்றது

                                                                        -பங்கிரையன்-