உளியின் ஓசை
சிலையின் எழுச்சி!
அலைகளின் ஓசை
கடலின் எழுச்சி!
சலங்கை ஓசை
நாட்டிய எழுச்சி!
அருவியின் ஓசை
நீரின் எழுச்சி!
பண்களின் ஓசை
இசையின் எழுச்சி!
சொற்களின் ஓசை
மொழியின் எழுச்சி!
மழலையின் ஓசை
இனிமையின் எழுச்சி!
எழுசீர் ஓசை
இலக்கணத்தின் எழுச்சி!
-பங்கிரையான்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக