திங்கள், 4 நவம்பர், 2013
ஸ்ரீ நெல்லைக் கண்ணனின் தமிழ் மழை
http://www.youtube.com/v/7YRy1PfvM40?version=3&autohide=1&autoplay=1&attribution_tag=XJl3JcHECeUc2tG-H2-JEQ&showinfo=1&autohide=1&feature=share
Part-1 Siddhar Phenomenon Color Concept
http://www.youtube.com/v/MynGCOjsnwk?version=3&autohide=1&showinfo=1&autohide=1&autoplay=1&feature=share&attribution_tag=nwMdoVE4a-ILlfSVNI6bMw
ஆரிய-திராவிட கூட்டு
http://www.youtube.com/v/Ttl8hnA4pF8?version=3&autohide=1&showinfo=1&autohide=1&autoplay=1&feature=share&attribution_tag=5MkUuyQt2IfdIe7JcqjIZQ
ஞாயிறு, 3 நவம்பர், 2013
நம்பிக்கை !!!
திரும்பி வருவோம் என்ற அதீத நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் காற்று மண்டலம் நுரையீரல் தொடுகின்றது….
முட்டி மோதி முளைத்து தளைப்போம் என்ற நம்பிக்கையில்தான் விதைகள் மண்ணுள் மூழ்கி தற்கொலையுறுகின்றன…
ஒவ்வொரு மாலையிலும் தொலைத்த சூரியனை, எப்படியும் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் தான் – தினமும் பூமி அந்தரத்தில் சுழன்று தேடுகின்றது…
இன்றில்லாவிடிலும் என்றாவது ஒருநாள் எனை நீ உணர்வாய் எனும் அதீத நம்பிக்கையில் தான் உன் நினைவுகள் தாங்கி இன்னும் வாழ்கிறேன்
நம்பிக்கை !
முகம் அறிய முகப்புத்தகத்தில் நட்பு தோழமை
இன அறியோம் !
மத அறியோம் !
மொழி அறியோம் !
ஊர் அறியோம் !
பிறப்பிடம் அறியோம் !
நட்பெனும் மொழியால் !
அனைவரும் இங்கே ஓர் தளம் !
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை தோழமை நட்பால் !
புரிந்து கொண்டோம்!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
ஏமாற்றங்கள் சிறிதுமில்லை!
அவரவர் கருத்துக்களை இடம் (பரி) மாற்றிக்க கொள்வோம்!பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் !சின்ன சின்ன சண்டைகள் இடுவோம்!சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்!ஆண்டுகள் புரண்டன நட்புகள் பல சேர்ந்தனர்!சிந்தனை பரிமாற்றம் பெற்றன.
புலன் உறவுமுறை !
இது வரை, நாம் வாழ்ந்த வாழ்க்கையில் பலர் நம்முடன் நேரடியாகவோ பழகி இருக்கலாம், சிலர் மறைமுகமாகவோ நம்முடன் பழகி இருக்கலாம்!
பழகியவர்கள் எல்லாம் நண்பர்களும் அல்ல
பழகாதவர்கள் எல்லாம் எதிரியும் அல்ல!
நம்முடன் பழகியதில் நமக்கு பலர் பிடிக்காமலும் இருக்கலாம், சிலர் பிடித்தும் இருக்கலாம்!
பிடித்தவர் நம்மை விட்டு பிரிந்தும் இருக்கலாம், பிடிக்காத ஒருத்தரிடம் நாம் பழகிக்கொண்டும் இருக்கலாம்!
நம்மை பிடித்த ஒருத்தர் தனக்கு, பிடிக்காத ஒருத்தர் இடம் கட்டாயம் பழக வேண்டிய சூழலும் இருக்கலாம்,
நம்ம மனசுக்குப் பிடிச்ச ஒருத்தர், நம்ம கிட்ட பழகாமலும் இருக்கலாம்!
சில உறவுகள் நம்மிடம் தேவைக்காக பழகலாம், தேவை முடிந்ததும் நகரலாம்!
அதுபோல நாமும் சில தேவைக்காக பிறர் இடம் பழகியும் இருக்கலாம் தேவை முடிந்ததும் அவர்களை மறந்தும் இருக்கலாம்!
எது எப்படியோ இன்னார்தான் வந்து நம்மிடம் வந்து பழக வெண்டும் என்பது எழுதி வைக்காத ஒரு உண்மை:-)
அதனால், நம்மை, தேடிவரும் உறவுக்கு ஆதரவு கொடுப்போம், ஆரோக்கியமான ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க்குவோம்!
மனித உறவுகள் இடையே மனஸ்தாபங்கள் இருந்தாலும், மறந்து விட்டு பழகுவோம்!
சண்டைகள் தவிர்ப்போம், சந்தோஷமாய் இருப்போம்!
எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொல்வோம் ஏமாற்றங்களைத் துரத்திடுவோம்!
அன்பை அதிகரிப்போம், ஆசைகளை ஒலித்திடுவோம்!
அப்படியே இறுதி வரை. ஒற்றுமையாய் இருந்துவிடுவோ
நவராத்திரி ஆரத்தி தட்டை அழகாக அலங்கரிக்க சில டிப்ஸ்...
பூக்கள்
ஆரத்தி தட்டை அலங்கரிக்க சிறந்த பொருள் என்றால் அது பூக்கள் தான். ஆகவே தட்டில் அழகான பூக்களை வைத்து அலங்கரிக்கலாம். குறிப்பாக சாமந்திப் பூ சிறந்ததாக இருக்கும்.
வெற்றிலை
ஆரத்தி தட்டைச் சுற்றி வெற்றிலையை வட்டமாக அடுக்கி, அதில் பூக்கள் மற்றும் இதர பூஜை சாமான்களை வைத்து அலங்கரிக்கலாம். இதனால் ஆரத்தி தட்டு அழகாக இருப்பதோடு, நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.
முத்து
மற்றும் மணிகள் பெரும்பாலானோர் காப்பர் தட்டில் ஆரத்தி செய்வார்கள். ஏனெனில் அதனை பராமரிப்பு மிகவும் எளிமையானது மற்றும் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கக்கூடியது என்பதால் தான். ஆகவே அந்த காப்பர் தட்டில், முத்து அல்லது மணிகளைக் கோர்த்து கற்பனைக்கேற்ப அலங்கரிக்கலாம். இதுவும் ஒரு வித்தியாசமான தோற்றத்
பெயிண்ட்
ஆரத்தி தட்டில் விருப்பமான பெயிண்ட் அடித்து, அதில் முத்துக்களை பதித்து, விளக்குகள் மற்றும் வேண்டிய பொருட்களுக்கும் அதே நிற பெயிண்ட் அடித்து அலங்கரிக்கலாம். இதனால் விளக்கு ஏற்றும் போது, இது மிகவும் க்யூட்டாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






