திரும்பி வருவோம் என்ற அதீத நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் காற்று மண்டலம் நுரையீரல் தொடுகின்றது….
முட்டி மோதி முளைத்து தளைப்போம் என்ற நம்பிக்கையில்தான் விதைகள் மண்ணுள் மூழ்கி தற்கொலையுறுகின்றன…
ஒவ்வொரு மாலையிலும் தொலைத்த சூரியனை, எப்படியும் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் தான் – தினமும் பூமி அந்தரத்தில் சுழன்று தேடுகின்றது…
இன்றில்லாவிடிலும் என்றாவது ஒருநாள் எனை நீ உணர்வாய் எனும் அதீத நம்பிக்கையில் தான் உன் நினைவுகள் தாங்கி இன்னும் வாழ்கிறேன்
நம்பிக்கை !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக