நாள் முழுவதும் அமைதி
இதயத்தில் அடைபட்ட
வார்த்தைகளுக்கு
விடுதலை என்றோ??
தெரியவில்லை.
பேச்சு சுதந்திரம் என் உரிமை
பேசுவதற்கு ஆள் இருந்தால் தானே ??
அதை நடைமுறைபடுத்துவதற்கு.
ஒருவேலை
ஊமையாக பிறந்திருந்தால்
தனிமை இனிமைதானோ என்னமோ??
தெரியவில்லை.
என் இன்பங்களும் துன்பங்களும்
தனிமையிலே கரைகின்றன.
தனிமையின் அவதி
மரணத்தின் கடைசி நாள்
கடைசி நிமிடம்.
