சனி, 24 செப்டம்பர், 2022

சின்னப்பெடியங்களின் சங்கமம்

 நிகழ்வொன்றுக்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்று நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்

பலவருடங்களுக்கு பின் எதிர்பாராவிதத்தில் எம் ஊர் உறவினர்களை "லா கோர்னேவ் ( La Courneuve) " என்ற
இடத்தில் சந்திக்க நேர்ந்தது எதிர்பார்ப்பு இன்றி கிடைக்கும் அன்பு பெருமழைக்கு ஈடானது .
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எம்மை ஆவலுடன் சந்திப்பதற்காக பாரிஸ் நகரத்தில் வாழும் கட்டுவனுர் மக்கள் திரண்டார்கள்
"ஊரில் தெருக்கள் இருக்கும் ,தெருக்கள் எல்லாம் எம் ஊர் மக்கள்"
மிக நெருக்கமான உறவுகள் கட்டிஅணைத்து
“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து..!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
உறவினர்கனுடன் பேசுகையில்
பயம்
மனநெருடல்
என்னை உலுக்கியது
எம் பேரு ஞாபகமிருக்கா..?
என கேட்டு விடுவார்களே..?
நான் யார் என்பதை அறிமுகப்டுத்தும்போது நீ சின்னப்பெடியனாக இருந்தாய் என்று நினைவுக்கு தெரிந்த பல கதைகளை ஒவொருவரும் கூறும்போது நான் அறிந்திடாத சொந்த, பந்த எங்கள் உறவு அமைப்பு பெரும் வியப்பை ஏற்படித்திஇருந்தது
சொந்தம் என்பது யார் ?
பந்தம் பிணைபு யார் ?
சுவாரஸ்யமான உறவுமுறை தகவல்கள் நீண்டுகொண்டே இருந்தது
1983ம் ஆண்டுக்கு பின் துரதிஷ்டமாக எம் மண்ணின் முகங்கள் சிதைக்கப்பட்டு பூர்விகக்குடிமக்கள் சிதறுண்டு ,வாழ்வியல் சிதறடிக்கப்பட்ட பின் உறவுகளின் உறவுமுறைகள் வாழ்வியல் சிறப்பம்சங்களை இழந்துவருகின்றோம்
உறவுகள் உறுதிபெற அடிப்படை நம்பிக்கை.கொண்டு உறவுகளைப் பேணுவோம் என்ற கருப்பொருளைக் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாக மாறி விட்டது.
உறவுகள் தரும் அனுபவங்கள் மிகவும் இனிமையானது. இந்த இனிய அனுபவம் நமக்கு கிடைத்தது போல், நமது வாரிசுகளுக்கு கிடைக்குமா என்பது வேதனைக்குரியது.



புதன், 14 செப்டம்பர், 2022

"அழகம்மாவின் தேடல் புத்தக வெளியீடு " 06.08.22 அன்று ஒஸ்லோ

 


ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும் - நீ"
உயர்ந்த மனிதனாக’ வாழும் வழிமுறைகளைச் சொல்கிற ,பட்டுக்கோட்டை கல்யாணானசுந்தரத்தின் பாடல் நினைவுகளுடன் இந்த மலர் வெளியீட்டை உணர்கின்றேன்
அன்பு பல்வேறு வகையான விளக்கங்களை கொண்டிருந்தாலும் அது தாய்க்கும் ,மகனுக்கும் ஏற்பட்டிருக்கும் அன்யோன்யம், ஆறுதல் மற்றும் நேர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கிறது. தோழர் பத்மநாதனின் உறவுமுறை தொகுப்பு
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதர்களும் துன்பத்தால் துவள்வது இயற்கை, அப்போது மனிதநேயம் கொண்ட மனிதனாக முடிந்த உதவி, பசித்தவற்கு உணவழித்தல், தாகமாய் இருப்போற்கு நீர் கொடுத்தல், வறுமைகோட்டுக்குள் வாழும் மனிதர்கள் கண்டு ஊக்கிவித்தல் , தலைமுறைக்கான உயர் தரம் கற்கும் மாணவர்களின் நன்மை கருதி பிரபல பாட ஆசானாக, சமூகத்தின் தேவைகருதி செயல்பட்டுவரும் ஆசிரியர் தோழர் பத்மநாதன் தன் தாயின் வரலாற்று திறமையை வாழும் காலத்தில் கௌரவித்து
தாயின் பேனாவில் இருந்து வெளியான கையெழுத்துபரிபாஷையை தொகுத்து வெளியில் கொட்டுவந்துளார்
இது சுயசரிதையும் அல்ல... சுயவிளம்பரமும் அல்ல, ஒரு பெண் தான் வாழ்த்த வாழ்நாளில் தனக்கான சவால்களுடன் ஒரு குடும்பதின் தாயாக , சிரியதாயாக, பாட்டியாக ,கற்பியல் ஆசானாக தன் வாழ்வை வாழும் ஒரு அம்மாவின் அன்பு , ஆர்வம், திறமை, தொழில் ஆன காலச்சுவடு
"அழகம்மாவின் தேடல்"
ஆசிரியர் அழகம்மாவின் ஆங்கில மொழி ஆளுமையிழும் அவரது அறிவியல் சிந்தனையில் இருந்தும் எழுதப்பட்ட இந்த ஓரெழுத்து இரு மொழி என்று இலக்கண சொற்களாக இந்த நன்நூலில் அமைந்துள்ளது
, எதிர்காலச் சமுதாயத்துக்குப் பயன் படக்கூடிய வித்தக இந்த புத்தகத்தின் வாயிலாகக் கிடைக்கும் என்று நம்புகின்றேன்