திங்கள், 6 பிப்ரவரி, 2012

மீண்டும் வருமா வசந்தம்




முடிந்த அத்தியாயத்திற்கு
முகவுரை தேடுகிறேன்...
விடிந்த இரவுக்கு
விளக்கேற்ற விழைகிறேன்..!
பட்டமரத்தில்
பசுந்தளிர் தேடுகிறேன்..!
அணைந்த நெருப்பில்
குளிர்காய முயல்கிறேன்..!
விரிசல் கண்ணாடியில்
ஒற்றை உருவம் தேடுகிறேன்..!
ஓட்டைப் பானையில்
நீர் நிரப்ப முயல்கிறேன்..!
வாடிய மலரில்
வர்ணம் தேடுகிறேன்..!
சிந்திய கண்ணீரை
சேகரிக்க நினைக்கிறேன்..!