ஞாயிறு, 26 மார்ச், 2023

உரிமைச் சொல்லாடல் மீதான திறனாய்வு


உரிமைச் சொல்லாடல் மீதான திறனாய்வு

நான்கு நூல்கள், நான்கு பரிந்துரையாள


ர்கள்
சனிக்கிழமை 25.03.23 மாலை நோர்வே ஒஸ்லோவில்
கனடா ,பிரித்தானிய என நாடுகளின் இருந்து வருகை தந்த
அறிஞர் ,நெறிஞர்கள் ,சமூக மெய்யியலாளர்,முற்போக்கு சிந்தனையாளர்கள்,கல்விச் சிந்தனையாளர்கள், தற்கால சமூக அரசியல் விரும்பிகள் என மண்டபம் திரள் கொண்ட பங்களிப்பாளர்களுடன் தோழர் சமுத்திரனின்( பேராசிரியர் சண்முகரத்தினம்) அவர்களின் #சமுத்திரனின் எழுத்துக்கள்" நூல் அறிமுக விழா


பேராசிரியர் சண்முகரத்தினம் பல்துறைசார்ந்த ஆளுமையும், விஞ்ஞானபூர்வமான இயற்பியல்(Experimental Science) பார்வையைக் கொண்ட அவரது செயற்பாடு இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பு ,இவர் சமுத்திரன் என்ற புனைபெயரில் சமூகம் சார்ந்த தன கருத்துக்களை தயகம்மின்றி முதிர்ந்த வயதிலும் போர் முனைப்புடன் எழுதிவருபவர்
இவரின் திறந்த வெளி அரசியல் பார்வையும் நடைமுறைசார்ந்த போராட்டமும், சிரமப்படாமல் எளிதானதொரு இயல்பாகக்சி பார்வை அவரது மார்க்சிய சார்புநிலை,மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர், அதனை மாறிவருகின்ற எமது சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து அதற்கான நடைமுறையை முன் வைத்த சொல்லாடல்
தமிழ்ச் சமூகத்தில் சாதி, மதம், இனம், மொழி அடையாளங்கள் என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அம்மக்களை அணிதிரட்டுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைய முடியும். என்ற நம்பிக்கை கொண்ட சிந்தனையே இந்த நூல்கள்


#நூல் பதிவு :
சமூகம் சார்ந்த நீண்ட பார்வை கொண்ட Fauzer Mahroof அவர் சார்ந்த குழிவினார் தோழர் சமுத்திரனுடன்
இணைந்து, இதழில்,இணையங்களில் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளை தேர்வுசெய்து , பின் அவை செம்மையாக்கப்பட்டு, நூலக சமூகம் இயல் பதிப்பகதினரால் , இலண்டன், பாதிக்கப்பட்டது .
Fauzer Mahroof அவர் சார்ந்த குழிவினார் மிகவும் மதிப்புக்கும், இவர்களின்
செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் கடமைப்பாடு எமக்கு உண்டு
இலங்கையின் மீள் சிந்திப்புக்கான சில முன்மொழ்வுகள் ,சர்வதேச அரசியல் பொருளாதாரம் ,இலங்கையின் சிங்கள பெரும் தேசியவாத இனவாதத்தின் அடிப்படைகளும் மேலாதிக்கமும் ,கலை இலக்கிய சமூக அரசியல் விமர்சனப்பார்வை
அரசியல் தத்துவ உரையாடல்களில் அறம்சார் (ethics) வறட்சி ஏற்பட்டபோது அந்த வெற்றிடத்தை நிரப்பும் சொல்லாடல்கள் நிரம்பி சொற்பிறப்பு சமுத்திரனின் எழுத்துக்கள்
உலகப் பொருளாதாரம் பாரிய மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரமிது. இச்சந்தர்ப்பத்தில் புவியில் முரண்பாடுகள், வர்த்தகப் போர், பொருளாதார தடை என்பன இடம்பெற்ற வண்ணமுள்ளன.
இன்றிய நடைமுறையில் உள்ள ‘மனித உரிமை’க்கும், மனித உரிமை அமைப்புகளின் சொல்லாடல்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன.
அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக இதன் மூன்று நூல்கள் முக்கியமான இடையீட்டையும், பங்களிப்பையும் செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், இக்கட்டுரையானது சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அரசியல் வன்முறைகளை மனித உரிமைச் சொல்லாடல்களைக் கொண்டு அணுகுவதை விமர்சனத்திற்குட்படுத்துகிறது.
மனித உரிமைச் சொல்லாடல்கள் நவதாராளவாதச் சிந்தனைகள் வளர்ந்துவந்த சமயத்தில் மீண்டும் புழக்கத்திற்கு வந்ததன் பின்னணியையும் பேசுகிறது.
#தாராளவாதம்’ Liberalism என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம். இச்சொல்லை அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும், சமய கொள்கைகளுக்கும் கூட சொல்லலாம். இக்கட்டுரையில் பேசப்படுவது பொருளாதார தாராளவாதம். நவதாராளவாதம் இதன் ஒரு அம்சமே.
‘நவதாராளவாதம் அறமற்ற தர்க்க விதிகளைக் கொண்டு மனிதர்களை வெறும் பொருளாதார உயிரிகளாகக் கருதுகிறது’ எனும் பொதுவான புரிதலை தோழர் சமுத்திரன் தர்க்கரீதியான நிலைத்தன்மை (Logical consistency) கூறுகின்றார்
உரையாடல் :
விழாவுக்கு வந்தவர்களுடன் இணைந்து காத்திரமான நேரடி உரையாடலின்போது
#கூட்டுறவுசங்களின் ஊடக தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம், முதல் நிலை உற்பத்தி, வேளான் உற்பத்தி, கடற்தொழில் உற்பத்தி மற்றும் தொழில்கள் வளர்ச்சிகளை செயல் மேன்மை முறை உத்திகளை நடைமுறைப் படுத்துவதன் ஊடக உயர்வுகளை காணமுடியும் என்று சுட்டிக்காட்டி இவர் ,தமிழதேசியத்தின் பொருளாதார கட்டமைப்புகளை பெரும் தேசியவாத அரசு தன் கட்டமைப்புக்குள் உள்வாங்க முயற்சிப்பதை கவனத்துக்கு எடுக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்
#பேரினப் பொருளாதார முதலீடு பொருந்தாரா வேறுபாடுகள் இயல்புமுறை ,அணுகுமுறை சமந்தமானது பொருளாதார இயல்
இயல் தனித்த அழகுகளிக்கிடையே செயல் பிணைப்பு
வடக்கின் காசு கலசரமும், இலங்கையில் பேரினப் பொருளாதார முதலீடு மக்களின் நுகர்வு மட்டத்தில் தாக்கம்
ஒரு நாட்டின் முழுப் பொருளாதாரத்திலும் ஏற்படுகின்ற மாற்றங்களையே இப்பேரினப் பொருளாதாரம் ஆய்வு
ஒரு மாறியில் ஏற்படுகின்ற மாற்றம் முழுப் பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏட்படுத்துகின்ற நிலைப்பாடு
பேரினப் பொருளியல் மாறியான பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பு நாட்டின் பொது விலை மட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது மக்களின் நுகர்வு மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சேமிப்பு முதலீடு என்பவற்றில் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் சர்ந்து அறிவியல் ரீதியான உரையாடல்
தோழர் சமுத்திரனின் இடதுசாரிச் சிந்தனை கருத்துகளினுள் சமூக மாற்ற கருத்தமைவுகள் உறைந்துக் கிடக்கின்றன அதன் வரலாற்றுச் சூழமைவை அறிவதன் மூலம்
மேற்குலக விழுமியங்கள் உலகப் பொதுமைகளாக மாறுவதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள முடியும்.
உரையின் நிறைவாக, அனைத்து பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள் சிறப்பாகவும் செயல்படுத்த உதவும் என்று நம்பிக்கை
“சுதந்திரம் குறித்த மொழியை தனித்துவ குழுக்களிடம் விட்டுவிட முடியாது. விட்டுவிடவும் கூடாது. முதலாளித்துவத்தின் மீதான விமர்சனம் முக்கியம். ஆனால் அதுவே போதுமானதும் அல்ல. சோசலிசத்தின் ஊடாக மாற்றங்களை உருவாக்கும் சாத்தியத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்













(படம் :ரமேஷ் )


எல்லா உணர்ச்சிக

அம்மா

 அந்தப்பக்கம்

இந்தப்பக்கம்
எந்தப்பக்கம்
வந்தப்பக்கம்
இப்படி!
எப்பக்கம்
உறவுகள் இருந்தாலும்
மனம் புரிந்த
என் அழகி என் அம்மா .

புரியவே புரியாத புரிந்த பதில்கள்


நானே புரிந்துகொள்ள இயலாத
சில திரைமறைவு ரகசியங்களை…
விளக்கப்படாத விவரங்களை…
ஒருவேளை…
உனக்கு நான் புரியவைக்கக்கூடும்.
உன் பார்வை துளைத்த
வினாக்களுக்கான விடைகளை
ஒருவேளை..…
என்றேனும் நான் உனக்குக் கையளிக்கக்கூடும்.
உள்ளுக்குள் பின்னிப் பின்னி
குமைந்துகொண்டிருக்கும் கனவுகளின்
முறுக்கிழைச் சிக்கல்களை
ஒருவேளை…..
என்றேனும் நான் எளிதாய் விடுவிக்கக்கூடும்.
நீ நீயாக இருந்து கொண்ண்டு
என்னை நம்பும் போதுதான்
-பங்கிரையான்-
1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்ச

ஞான இலக்கிய அறிவுப் பகிர்வு

 

இந்திய ஞானமரபு சார்ந்த சுயச்சார்புள்ள திரிபுகள் பலநூறாண்டுக்காலமாக இங்கே நிகழ்ந்து வருகின்றன. நுட்பமான சொல்லாராய்ச்சிகள், அதி நுட்பமான சந்தர்ப்பத் திரிபுகள் மூலம் இதைச்செய்துகொண்டே இருக்கிறார்கள். என்வரையில் ஒருபோதும் இந்த விவாதங்களுக்குள் செல்லாமல் வெளியில் நிறுத்தி ஒரு பெரும் தர்க்க விவாதக்களனாகவே நாம் பார்க்க வேண்டும்.
வேதங்களும் அவைதிகமரபுகளும் எல்லாம் ஒரேகால கட்டத்தில் ஒரே வெளியில் இயங்கியவையே. ஆகவே அடிப்படையான கருத்துருவகங்கள், கலைச்சொற்கள் ஆகியவை அவற்றுக்கெல்லாம் பொதுவானவையே.
இதைவைத்து இன்றும்கூட பல வைதிக சிந்தனையாளர்கள் எல்லாவற்றையும் வேதமரபில் சென்று கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சாங்கியத்தில் (சாங்கியம் இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும். கடவுள் இல்லை ,உனக்குள்ளே இருக்கிறான்) எனும் தத்துவக் கொள்கை.
ஒரு கருத்து அல்லது கலைச்சொல் இருந்தால் அச்சொல் எங்கேனும் வேதத்தில் வருமென்றால் வேதத்தில் இருந்து அது முளைத்தது என வாதிடுகிறார்கள்.
ஞானமரபை வைதிகம், அவைதிகம் என இருபெரும்பிரிவாகப் பிரிப்பது இந்திய தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கு மிக உதவியானது. வைதிகமரபுகள் வேதங்களை மூலநூல்களாகக் கொண்டிருக்கும். அவற்றின் அடிப்படையான ஞானதரிசனம் வேதங்களில் தெளிவான தொடக்கப்புள்ளியைக் கொண்டிருக்கும்.
அவ்வகையில் பூர்வ மீமாம்சமும் உத்தரமீமாம்சம் என்னும் வேதாந்த மரபும்தான் முழுமையாகவே வேதச்சார்பு கொண்டவை.
சாங்கியம், யோகம், வைசேஷிகம்,நியாயம் என்னும் நான்கு தரிசனங்களுக்கும் வேதங்கள் மூலநூல்களாக ஆரம்பத்தில் இருக்கவில்லை. அவற்றின் மையத்தரிசனம் வேதங்களை ஆதாரமாகக் கொண்டதும் அல்ல. வேதங்களின் மையத்தரிசனத்துக்கு மாறானவற்றையே அவை சொல்கின்றன. பிறகால ஞானமரபுகளில் சமணமும் பௌத்தமும் அவைதிகமரபைச்சேர்ந்தவை.
சாங்கிய தர்சனத்தில் வைதிகமரபின் கூறுகள் நுழைந்தன. கூடவே வைதிகமரபில் சாங்கிய தர்சனத்தின் அம்சங்கள் நுழைந்தன. சாங்கியம் முக்கியமாக உபநிடதங்களுடன் விவாதித்து வளர்ந்தது. ஆகவே சாந்தோக்கியம்,கடம் போன்ற பல உபநிடதங்களில் சற்றே மாறியவடிவில் சாங்கிய தர்சனத்தின் அம்சங்கள் உள்ளன. அதை கார்பே என்னும் இந்திய ஆய்வாளர் வைசேடிக தத்துவம் சுட்டிக்காட்டுகிறார்.
இதைவைத்து உபநிடதங்களில் உள்ள சிலவரிகளின் நீட்சியே சாங்கியம் என வாதிடுபவர்கள் சிலர் உள்ளனர்
வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றிவிட்டது” இந்திய ஆய்வாளர்கள் கூறுகிறார், வேதகாலத்தில் ‘சர்வ வல்லமையுள்ள கடவுள்’ என்ற கருத்தே தோன்றவில்லை. “கண்ணால் காணாததை நம்பாதே” என்பது போன்ற கருத்துக்கள் தோன்றி
படித்ததில் பொறுக்கியது
குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்சிகளும்:
Umapalan Sinnadurai, Ratnasingam Srimogan மற்றும் 8 பேர்

எண்ணம்

 எண்ணம்

ஒரு உணர்வு
எண்ணம் ஒரு தவிப்பு
எண்ணம் ஒரு துல்லியம்
எண்ணம் ஒரு ஒத்திசைவு
எண்ணம் ஒரு எதிர்பார்ப்பு
எண்ணம் ஒரு உருகுநிலை..
எண்ணம் ஒரு கற்பகவிருட்சம்..
எண்ணம் ஒரு கனவு .
வெறுமையிலும் தனிமையிலும்
கை கோர்த்து தோள்சாயும் . மனசாட்சி..
1 நபர், தாடி மற்றும் உட்புறம் இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்

அகவை எண்பதைக் காணும் பெற்றவள்

 

எம்
இதய சிம்மாசனத்தில்
கம்பீரமாய் வீற்றிருக்கும்
தாயே உனக்கு பிறந்தநாள்
வாழ்த்து
இன்று
உனக்காக எதுவும்
கொடுப்போம் என்றாலும்,
பழக்கதோஷம் விடவில்லை.
உன்னிடம்
அனைத்தையும்
வாங்கித்தானே பழகியிருக்கிறேம் .
பிறந்தநாள் தர்மமாய்
கொடுத்து விடு
உன் ஆசிர்வாதத்தை
நாங்கள் வாழ்ந்து விடுகின்றோம்
எங்களுக்கு
கிடைத்த வெகுமதி-நீ
தாயே வாழவேண்டும்
காலம் முழுதும்
வாழ்க வாழியவே .
1 நபர், பலூன் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர


தமையன் 60 ,வாழ்வின் சிறு பக்கம்

இலங்கையின்
வடபுலத்தின்
செம்மண் விதை நிலத்தில்
கற்றவர்கள் கற்று விளைந்த
கட்டுவனாம் இவன் ஊர் !
அடர்ந்து வளர்ந்த
பனைமர சோலையில்
வழுக்கி விளையாடும்
ஈரக் காற்று அழகையும்
கிராமத்தானின் மனதையும்
அம்பலவாணர் ஓடுபாதையோரத்தில்
உட்கார்ந்து ஆளுமை பேசும்
பங்கிரை கிராமத்தில் ..
கந்தனும் நகுலையும்
தவமிருக்க
புது தளிர்களை ஏந்தி,
பூத்துக்குலுங்கும்
வசந்த கால பங்குனி திங்கள்
இவன் ஜனனம்
காரடையான் நோன்பு,
காதல் பண்டிகையாம்
காமன் பண்டிகை,
கொண்டாடும்
பங்குனி உத்திரம்
இவனை பெற்றவருக்கு
பெரும் விழா
தனித்துவ குடும்பத்தின்
மூத்த அடையாளம்
பெற்றவர் ஒரு புறம்
பெற்றிடாதவர் மறுபுறம்
தவம் கொன்று
தினம் தவழ்ந்து செல்ல
தலை பிள்ளை இவன்
சின்னம்மாள்
பெரியம்மாள் கருவறைதனில்
பிறந்திடா மகனாய்
என்னம்மாள் என்றெண்ணி,
கொடுந்தமிழில் கொஞ்சிபேசும்
பாசக்காரன்
என்னப்பன் என்னம்மாள் அவர்தம்
அம்மம்மாள் அம்மப்பன்
கதை பேசி கரம் வீசி
பேரன்பு கொண்ட பேரன் இவன்
தம்பி என்ற உறவை
மித்திரன் என்று உறவுகொண்டு
ஓர் கோப்பையில் உண்டு
ஓர் உடையை மாற்றி அணிந்து
ஓர் உயிர் ஈருடலாய் வாழ்ந்த
தமையன் இவன்
எனக்கு எதுன்னாலும்
என் அண்ணன் வருவான்
என்று நம்பும் தங்கயைகள்
தங்கை அவள் தனக்கு மேல் என்ற
எண்ணம் கொண்டு
அக்காத்தால் என்றழைத்து
பாசமழை பொழியும் அண்ணன்!
பக்கத்து வீட்டு
புளியமரத்தில்
இரவு வேளைகளில்
எட்டிப்பார்த்தால்
எச்சில் பேய்கள்
கட்டிக் கொள்ளும் என்றும்
இவன் எண்ணம் !
கடவுள் நம்பிக்கை
நற்செயல்களுக்கும்,
நல்சிந்தனைக்குள்ளும்
ஏற்றத்தாழ்வற்ற
கருணை உள்ள இவன் !
ஊரெல்லாம் சுற்றிவந்து
உருளாக பொதிகையெல்லாம்
உள்மனம் ,வெளிமனம் ஏதும் இன்றி
நகைச்சுவையை புதினம்
கூறும் ஊர் குருவி இவன் !
தொலை தூரம் கடந்து
இரு மனம் இணைந்து
திருமணம் புரிந்து
இரு சிறார்களின்
தந்தை !
பணம்மின்றி மனிதரை
மதிக்க தெரிந்த இவனுக்கு
போகும் ஊரெல்லாம் உறவு !
தனக்கான நேரத்தில்
தன்னலம் கொண்டு
தனியாகவே தனி இன்பம்
காண்பவன் !
அழுக்காறு அவாவெகுளி
இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
குறளுக்கு இணங்க
நல்லறம் கொண்டு
வாழ்க காலம்முழுதும் வளமுடன்
வாழ்க வாழியவே

-பங்கிரையன்-
1 நபர் மற்றும் , ’Years Young’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்