சனி, 5 நவம்பர், 2011

என் முதல் கவிதை ம்மா ம்மா ம்மா ம்மா

அம்மா உன்னைப்பற்றி கவிதையா



என்னால் முடியாது!





இயற்கையை ரசித்து



பொய் கலந்து எழுதுவேன்



நட்பை விவரித்து



கவிதைகளா எழுதுவேன்





கடவுளைப் பற்றி



கதை கதையாக எழுதுவேன்



அம்மா உன்னைப் பற்றி



என்ன எழுதுவேன்!





எதைஎதையோ படைத்த



இயற்கைக்கு



நன்றி!



உன்னையும் படைத்த தற்காக!





அம்மா!



நான் சொன்ன முதல் வார்த்தையே !



கவிதை தானே

கருத்துகள் இல்லை: