சனி, 5 நவம்பர், 2011

போர்க்களமாய் என் வாழ்வு…….

எண்ணிட முடியா சோதனைகள்

ஏக்கம் நிறைந்த வேதனைகள்....

ஏன் பிறந்தேன்

ஏன் வளர்ந்தேன் இம் மண்ணில்...

அன்புக்கு ஏங்கினேன்.....

அறிவை தேடினேன்....

அணைத்திடும் உறவுகளை தேடினேன்

அனைத்தும் அன்னியமாய் இன்று

அங்கலாய்க்கிறது என் மனம்...

போர்க்களமாய் என் வாழ்வு

போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று

போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்

போரட்டமே வாழ்வாகி போனதிங்கு...

உறவிருந்தும் உதவியின்றி

ஊமையாய் நானிங்கு...

உயிருடன் ஊசலாடுகிறேன்

உயிரற்ற ஜடமாக.....

கருத்துகள் இல்லை: