வியாழன், 30 அக்டோபர், 2025

வாழ்ந்த வீடு -பங்கிரையன்-

 வாழ்ந்த வீடு

மௌனத்தின்

பதுங்கு குழியாய்

சலனமற்றிருக்கிறது

குடும்ப வீடு!

குருவிகளற்ற கூடாய்

அது

எதிர்பார்ப்புகளின்

ஏக்கங்களைச் சுமந்து

காத்திருக்கிறது!

சத்தமிட்டு

விழித்தெழுகின்றன

உறைந்த மௌனத்தின்

உறங்காத குரல்கள்!

பழமையின்

சுவடுகள் கலையாமலிருக்க

சருகு போர்த்தி

அடைகாக்கிறது

முற்றம்!

-பங்கிரையான்-

கருத்துகள் இல்லை: