இயற்கை இயல்பு
இழப்பு என்பது நியதி
வாழ்வென்பது தொடர்ச்சி
உயிர்கோளத்தில்
மனிதம் சிறிது
பூமி மேற்பரப்பில்
பிரிந்து கிடக்கின்ற
பெருங்கடல்
யுத்தம் என்பது முறைமை
உயர்ந்தவனும் தாழ்த்தவனும்
எதோ ஒன்று நிர்ப்பந்தம்
சமூகம் என்பது பொதுமை
மனநிலை மையப்புள்ளி
விண்ணும் மண்ணும்
யாரும் யாவும்
இன்நெறியில் இயங்கலாம்
- பங்கிரையான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக