வெள்ளி, 12 மார்ச், 2021

உளவியல் உணர்வுநிலை:


ஒவொரு மனிதனின் சிந்தனை
இரு வகைகள் பிரிவுகள் மட்டுமே
* கருப்பு (இரவு )
* வெள்ளை (பகல் )
இரண்டும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது
1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்
Yaso Sivakumar, Suganthini Kandasamy மற்றும் 8 பேர்

அவன் வேறு ! நான் வேறு !


சாலையில் நடந்து போகையில்
பனிமழை சாரல்
குடையெடுத்து
வந்திருக்கலாமோ
என்ற சலிப்பில்
நான் வேகமாய் நடக்க,
நல்லவேளை
குடையெடுத்து
வரவில்லை
என்ற சந்தோசத்தில்
மெதுவாய் பின்தொடர்கிறான்
மகன்!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விரும்பு
கருத்துத் தெரிவி

எதுசரி

  எதுவும் சரியாக இல்லை 

எதையும் சரியாக விடுவதில்லை 

சரிவதெல்லாம் சரியாக இருப்பதில்லை 

சரிந்தவர்களும் சரியாக மாண்டதில்லை 

சாதித்தவர்களும் சரிகளில் சரியாகவில்லை







சூழல்

 அத்துமீறலுக்கு அணை போட்டு

விட்டு விலக்காமல் விதி போட்டு

மனத்தில் தொடு தொடராமல் மூடி போட்டு

என் இதயத்தில் கால்மேல்கால் போட்டு

அமர்ந்திருக்கிறது நினைவுகள் !

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தாடி இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்
Muhunthan Mahalingam, Mallika Jeya மற்றும் 28 பேர்
2 கருத்துக்கள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

குறுங்கதை

 

அவனது கதை இது
நினைவுகள் முணுமுணுக்கப்படுகிறது.
அவன் சிந்தனை சிதறுகின்றது
மூளை வரள்கிறது,
கிறுக்கிய தாள் கிழிக்கப்படுகிறது,
அந்தப் பெயர் உச்சரிக்கப்படுகிறது,
உறவு பேசப்படுகின்றது
கருத்துக்கள் தீர்மானிக்கப்படுகிறது,
ஒரு உறவு முறிகிறது.
உணர்வுகள் ஏகாந்தம்மாகின்றது
கதை மூடுகின்றது
பிரமையை . ........

புதன், 30 டிசம்பர், 2020

வரலாறு ராகம்






ஒரு வரலாறு 

அடைக்கப்பட்ட குரலுக்குள் 

அலைமோதும் வடுக்களின் 

 நினைவுகூரல் 

மௌனமாக பிராத்திக்கின்றது !

பிளவுபட்ட இனம் 

ஆய்வுகள் இல்லாமல் 

வாய்களை மூடி 

ஒப்பாரி படிகின்றன 

காணாதவனை காண்பதற்கு !

தாழ்ப்பாள் இட்ட  கதவுக்கு பின் 

இதுயெல்லாம் அரசியல் என்று 

மௌனமாக தொலைந்து விடுகின்றான் 

மனிதம்  !

-பங்கிரையான்- 



எதிர்பார்ப்பு (ஏ) மாற்றம்



ஜன்னல்களைவிட்டு

வெளியேஅசைகின்றது 

பாதுகாப்பற்ற  

வெண்பனிக் காற்று!

உள்ளே   உறைகின்ற 

கால இடைவெளி

தனிமையை  

தக்கவைக்கின்றன  

ஏகாந்த  உணர்வு !

நிகழ்கால  வருடத்தை

எதிர்கால வருடம் 

அலசி  பார்க்கிறது 

புதிய கனவொன்று!

  - பங்கிரையான்-


காதல்




தனிமையில் 

தனிமையான காதல் !

ஒருவரும் ஒருவரை 

அறிய காதல் !

ஒற்றை கதிரையில் 

உட்காந்திருக்கும் 

ஒருதலை காதல் !

அவன் தெரிந்த  அவள் 

தெரிந்தும் ,தெரியாமல் 

இவன்  காதல்!

 காலத்தின் பிரளயத்தில் 

உளவியலுக்கான 

ஏக்கத்தின் காதல் !

காதலின் தனித்துவம் 

காதலிப்பவனுக்கே 

புரியும் காதலென்று !

-பங்கிரையான்-

-

ஒரு மடல்


Old_books

பரணில் இருக்கும் ஒரு புத்தகம் நான்.
நான் ஒருவேளை
ஒப்பந்தமாகவோ, பக்திப்பாடலாகவோ
அல்லது காமசூத்திரத்தின் ஒரு அத்தியாயமாகவோ
அல்லது அந்தரங்க துன்பத்தின் உச்சரிப்பாகவோ இருக்கலாம்
ஆனால் இவை எவையும் நான் அல்ல எனத் தெரிகிறது
(அப்படி இருந்தால் எவரேனும் என்னைப் படித்திருக்கலாம்)
புரட்சிக்காரர்களின் கூட்டத்தில் வெளிப்படையாக
அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்
நான் அதனுடைய கைப்பட எழுதப்பட்ட நகல்
அதில் காப்புறுதிக்கான முத்திரை இருக்கிறது
ஆனால் எப்போதும் அது வெற்றிகரமாக அமுல்படுத்தப்படவில்லை
அது செயல்முறைப்படுத்துவதற்காக பாதுகாப்பாக உள்ளது
இப்போதுதான் சில சிட்டுக்குருவிகள் வந்தன
வாயில் வைக்கோலை சுமந்துகொண்டு
என் மேனியில் அமர்ந்து
அடுத்த தலைமுறை குறித்து கவலைகொண்டன
(அடுத்த தலைமுறைக்கான கவலை என்பது எத்தனை வியப்புக்குரியது)
சிட்டுக்குருவிகளிடம் சிறகுகள் இருக்கின்றன
ஆனால் தீர்மானங்களுக்கு சிறகுகள் இல்லை
(தீர்மானங்களுக்கு இரண்டாம் தலைமுறை இல்லை)
சிலசமயங்களில்
பிரச்சினை என் கட்டுகளை கழற்றிவிடுகிறது
என் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது
என்பதை மோப்பம் பிடிக்க நினைக்கிறேன்
நான் மோப்பம் பிடிக்க முனைகையில்
பறவை எச்சத்தின் புகைநாற்றம் மட்டுமே உள்ளது.
ஓ! எனது உலகமே, உன்னுடைய எதிர்காலம் என்ன !
உன்னுடைய இன்றைய நிலையில் நான்.

ஞாயிறு, 22 நவம்பர், 2020




  ஏகாந்த இரவு

ஆசைமனம் சிறிது தூங்க  

ஓய்வெடுத்த பகல்நினைவு 

மதுக்கோப்பைக்குள் 

தத்தளிக்கும் வண்டு ஒன்றை 

காட்சி படுத்துகின்றது 

 யாவும் இந்த இரவுக்கு மட்டும் 

சொந்தமானவை !



50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்மொழிக்கா உழைத்த ரஷ்ய தமிழறிஞரான அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி பற்றி ஒரு பார்வை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் தாடி





""1941 ஆண்டு சித்திரை மாதம் 27 திகதி" ரஷியாவில் பிறந்த இவருடைய முழுப்பெயர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மொஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆசிய ,ஆபிரிக்க நாடுகளுக்கான தொடர்பான ஆய்விபிரிவில் ஆய்வாளர்கவும் விரிவுரையளராகவும் முன்னர் பணியாற்றியவர் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டு "முல்லைத்திணையின் பிரிவு "என்ற தலைப்பில் தன் ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதியானவர் .நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட ஐவகைத்திணைகள் பற்றி கற்றறிந்த இவர் காடும் காடு சார்ந்த நிலம்பற்றி ஆய்வுமேற்கொண்டிருப்பது இலங்கை ,இந்திய தமிழர்களை ஆச்சரியபடித்திய இலக்கண தகவல்
தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார்.
இவர் பல ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராக துப்யான்ஸ்கி ரஷ்யாவில் தமிழ்மொழியை கற்பித்துவந்தார். ரஷ்யாவில் உள்ள 10 பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் பல தமிழ் கவிதை , இலக்கிய நூல்களை ரஷ்ய மொழியில் பதித்து வெளியிட்டவர்.
இவர் தொல்காப்பியம் துணை நிற்கிறது. சங்க இலக்கியங்களுக்கு சங்க இலக்கியங்கள் பற்றிச் சொல்கிறது. சங்கம் பற்றி விளக்கம் கூறுகிறது. முச்சங்கங்களின் வரலாற்றைக் கூறுகிறது. சங்க இலக்கியங்கள் பற்றி அறிமுகம் செய்கிறத நூல்களை கற்று . எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது. சங்க இலக்கியத்தின் யாப்புப் பற்றியும், உவமைகள் பற்றியும் கூறுகிற. சங்கப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள், வாழ்வியல் செய்திகள்
ஆகியவற்றைக் கூறுகிற இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் பற்றி சிறப்பாக அறிந்து கற்று
தமிழ்நாடு கோயம்புத்தூரில் 2010-இல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை பலத்த விவாதத்தை எழுப்பியது.
கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை அவர் நடத்திவந்தார்.
துப்யான்ஸ்கி தனது ஆய்வுக் கட்டுரையில் . “ சங்க இலக்கியங்களுக்கும், தொல்காப்பியத்துக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளை அவரது கட்டுரை சுட்டிக்காட்டியது. அதற்காக சில உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார்.‘‘தொல்காப்பியம் நொச்சித் திணைப் பற்றி எங்கும் பேசவில்லை. உழிஞைத் திணைப் பற்றிப் பேசும்போது அதன் துணைப் பிரிவாக ஒரே ஒரு இடத்தில் நொச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை நொச்சித் திணையை விரிவாகப் பேசியுள்ளது.
பிரிவு குறித்து தொல்காப்பியம் பேசிய இடத்தில் பிரிவுக்கான காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் குறிப்பிட்டு
பெண்ணோடு கடற்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அத்தகைய நிகழ்வு எதுவும் சங்கப் பாடல்களில் இல்லை. தலைவனின் தோழன் காதலர்கள் சந்திப்பதற்காகப் பன்னிரெண்டு விதமான காரியங்களைச் செய்வது குறித்தும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
ஆனால், சங்கப் பாடல்களில் அத்தகைய நிகழ்வுகளை எங்குமே நாம் காணமுடியவில்லை’’ என்று துப்யான்ஸ்கி குறிப்பிட்டு சுட்டிக்காட்டி தனது ஆய்வுக் கட்டுரையில் எழுப்பிய ஒரு பிரச்சனையை யாரும் விவாதிக்கவில்லை
அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு
தனது #"79-ஆவது வயதில் மொஸ்கோவில் 18.11.2020" அவர் காலமானார்.
"பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர்
இவர் எமது தமிழுக்கும் ,தமிழருக்கும் நெருக்கமானவர் ,இவரின் வரலாற்றை எமது மொழியுடனும் ,இனத்துடனும் , இணைத்தே பார்க்கவேண்டும்


ஞாயிறு, 4 அக்டோபர், 2020

காலை நிலம்


காலை தென்றல்

மெல்ல வீச..

கிளையை விட்டு 

விலக போகும் 

பழுத்த இல்லை ஒன்று 

பனியின் குமிழியை 

தங்கி நின்று அசைத்து ஆட 


கண்கள் விரும்புவதை

நான் உணர்கின்றேன் ..!

மனம் விரும்புவதை

நான் யாசிக்கின்றேன் ..!

 

வாழ்வு நேசித்து அமுத சுரபி

 என் நெஞ்சில். 

மிதந்து பின் அமிழ்கிறது.


நம்பிக்கையான நாளாக

அமையட்டும்!


-பங்கிரையான் -

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

1983ஆம் ஆண்டு ஜுலை 23

 983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் இந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளது
தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் (இரத்த காயம்)
.

சம காலப்பகுதியில் சிங்கள பேரினவாதத்தின் உந்துதலில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீதும் சிங்கள காடையர்களாலும் கைதிகளாழும் கொடூரமான தாக்குதல்கள் இடம் பெற்றன.
சிறைச்சாலையில் நிகழ்தேறிய கலவரச் சம்பவத்தில் காந்தியம் பிதா மருத்துவர் சோ. இராஜசுந்தரம்,குட்டிமணி ,தங்கதுரை ,ஜெகன் , தமிழ் அரசியல் கைதிகள் உற்பட 53 பேர் வரையான அநாகரியமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.

”சுதந்திரத்தமிழீழத்தை என் கண்கள் காணவேண்டும் அதனால் இறந்தபின் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்“ என்று தன் இறுதி ஆசையை நீதிமன்றத்தில் சொன்னதற்காய் ஜூலை-25 அன்று ‪‎ வெலிக்கடை‬ சிறைச்சாலையில் வைத்து ”குட்டிமணியின்“ கண்கள் உயிருடனிருக்கும்போதே சிங்களக்காடையர்களால் பிடிங்கி புத்தனின் காலடியில் போடப்பட்டது

குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்

1983 ஜூலை 23 தமிழரின் வாழ்வில் ஆறாத வடுவாக நிலைத்து விட்டது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், இரவு மற்றும் வெளிப்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், சன்கிளாஸ்கள், தாடி மற்றும் குளோஸ்-அப்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

வரலாற்று குறிப்பு





இன்று புரட்டாசி -5 தேசபக்த மாவீரர், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம்
உலகநாதன் சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் மக்களிடம் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.
திருநெல்வேலியில் ஒரு பொதுகூடத்தில்ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து பேசும்போது அவரை பேச மறுத்தும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறுமாறும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்படடர்
விடுதலைக்கு பின்
வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்து பின் தூத்துக்குடி வந்தார்.
தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம், , ’வ.உ.சிஅய்யா நடத்தி வந்த சுதேசி கப்பல் இது தான் காணகிடைக்காத புகைப்படம்.. prpppioy’ எனச்சொல்லும் உரை