செவ்வாய், 24 ஜனவரி, 2023

இலக்கிய பரதம்

 புலம்பெயர் நாட்டின் துருவ நட்சத்திரமாய் வலம் வரும் கவிதா லக்ஷிமியின் கலாசாதனா நடன பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம் 22.01.2023 ஞாயிறு மாலை நோர்வே கலாசார கலையரங்கில் நடைபெற்றது


அரங்கம் 1
பதினோராடல்:
தமிழ் கடவுள்கள் ஆடிய பதினொன்று வகையான நடனங்களை
தெய்வம் பல்வேறு உருவம் கொண்டு ஆடியதாக , சிலப்பதிகாரம் மாதவி இப்பதினோரு வகையான ஆட்டங்களில் சிறந்து விளங்கியதாகக் கூறுகிற பதினோராடல்

பாடல்களுக்கு கலாசாதனா நடன பள்ளியின் மாணவர்கள் கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து, இடை, முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அவர்களின் அபிநயங்கள் நிகரற்றவை .அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆடலுக்கு இசையும் ,ஒளியும் மிகவும் மெருகூட்டியது என்றால் அது மிகையாகாது.
அரங்கம் 2
உயிர்மிகும் ஓவியங்கள்


நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர் ராஜா இரவி வர்மா


கவிதா லட்சமி ராஜா ரவி வர்மாவின் ஓவியத்துக்கு பின்நவீனத்துவ நாட்டிய அபிநயங்கள் , நவீன இலக்கியகலை, விமர்சன மரபு ரசனையை புதுக்கவிதை நாட்டிய மரபின்னுடாக ஓவியமரபை அரங்கத்தில் அழகா கொண்டுவந்தார்
எப்போதும் கவிதா லக்ஷிமியின் புலனுகர்வுகளின் கற்பனை விரிந்து விரிந்து பெருகும்
ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும்,பறந்து பறந்து சிகரம் தேடும்
சுய பார்வை தன்னிறைவுடனும் . இலக்கிய ஞானத்துடன் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்…
இலக்கியம் வளர்த்த அழகுக் கலைகள்
வாழ்த்துக்கள் வளர்க்க





திங்கள், 16 ஜனவரி, 2023

காலம் கடந்த காதல் கவிதைகள

 





எப்போதாகிலும்
உன் நினைவுகளில்
வந்து போகலாம்
நான்

எப்பவுமே
என்னோடு இருக்கிறாய்
நேசத்துக்குரியவளாக
நீ

கிழித்து
கூறுபோட்டு போனது
நீ சொன்னதான
வார்த்தை
உன்னோடு தொலைந்து
போயிற்று
உனக்கும் எனக்குமெயான
என் காதல்

உன்னை நேசிப்பதாக
சொன்ன
அந்த
ஒத்தை வார்த்தையோடு
தொலைந்து
போனவனாகிறேன்
நான்

நாற்பதை
தொட்டுவிட்டது வயசு
இன்னமும்
நிற்கிறது
செல் பட்ட
அந்த
பூ நாறும் மரம்


-பங்கிரையன்-

விடை

 


இழந்த காலம்
இழந்த வெளிச்சம்
ஒலிகளின் மறைவு
நிலங்களின் மாற்றம்
நான் பேசுவது மறைவு !
ஏன் ?
மறைந்தவர்களை
மறைய போபவர்கள்
பேசவேண்டும்
காலம் காத்திருக்கும்
மனிதர்கள் !
நான் இன்மைபற்றியே
பேசுகின்றேன் !

-பங்கிரையான்-
30.01.22

 மகன்

என்னிடம் எதோ பேசினான்
பறவையை கண்டவனுக்கு
வானம் தெரிவதில்லை என்றேன்
சிரித்தான் போனான்
வந்தான் மீண்டும் சிரித்தான்
விட்டு விலக்குவதுபோல்
சென்றுவிடடான் !








உழவே தலை




வெண்பனி மீது பொன்மலர் சூடும்
செங்கதிரோனை வாழ்த்தி
கண்பனி சூடி எம் நினைவோடு
ஏங்கும் எம் தேசத்தின்
கமக்காரனை கை கூப்பி
வாழ்த்தி வணங்குவோம் !

தீது மனம் படைத்தோரும்
தீய குணம் உடையோரும்
இல்லறம், நல்லறம்.
குற்றம் குறையையும் ஏற்று
புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் நேசமுடன்
சுற்றமுடன் நிறைவாய்க்
வாழ்த்தி வணங்குவோம் !

புலம்பெயர் உலகமெங்கும்
மொழியால் ஒன்றுபட்டு
தலைமுறை கண்ட பண்பை
தலைமுறைக்கு கூறி
உழவே தலை என
வாழ்த்தி வணங்குவோம்!

பொங்கல் மகிழ்வுகண்டு
பொங்கலோ பொங்கல்
கூவிய பல குரல்கள்
சொற்களை தாண்டி
தேசத்தின் ஏழையின்
வாசலில் பொங்கி
வாழ்த்தி வணங்குவோம்!

-பங்கிரையான்- 

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

திருநங்கை நர்த்தகி நடராஜ்

 


திருநங்கை நர்த்தகி நடராஜ் பல உயரங்களை எட்டினா பரதநாட்டியக் கலைஞர்.

இவர் நோர்வே வாழ் தமிழ்கலைஞர்களின் அனுசரணையில் வந்த இவரை சந்திக்கவும் இவரின் கலையை பார்த்து ரசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது

அவர் உரையாடும்போது தன் பால் அடையாளம், தான் காதல் கொண்ட தமிழ் மொழி இலக்கியத்தின் ஊடன் கலை மற்றும் இலக்கண , இலக்கியத்தின் மேல் அவர் கொண்ட நேசம் ,தன்னை தங்கி பயணிக்கும் அவரின் தோழி ஷக்தி இவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என வாழ்வியல் கூறினார்


திருநங்கையாக இருப்பதால் மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவியிடையே இருக்கவேண்டிய ஒப்புமைகள் உணர்வுகளை தன்னுள் இயல்புடையதக வெளிப்படுகின்றது என்றும்
அவருடய நாட்டிய உடல் மொழி ,கண் அபிநய பாஷை உள்ளத்து உணர்ச்சிகளை மிக்க அற்புதமாக வெளிப்படுத்தி காட்டினார்

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம் -
என பாரதி கூறியது போல

பாரதியின் கனவுக்குள் நர்த்தகி நடராஜ் சென்றார் அவரின் கனவுக்குள் நாமும் சென்றோம்
பல காலங்களுக்கு பின் அன்புத்தமான நடனக்கலையை பார்த்த மனநிறைவு




திங்கள், 9 ஜனவரி, 2023

தமிழராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்-1974

 

                                          நடந்ததென்ன?
  
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி  தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த உலகத் தமிழர்கள் பெரும் அளவில் தயாராகி வந்தனர். 
இந்தத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த இலங்கை அரசாங்கம் அப்போது விரும்பவில்லை. கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மேயர் மூலம் யாழ்ப்பாணத்தி லுள்ள விழா அமைப்பாளர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தியது. மாநாட்டிற்கான திறந்தவெளி அரங்குகளை நிர்மாணிப் பதற்கான அனுமதியும் கடைசி நிமிடம் வரை வழங்கப்படவில்லை.
ஆயினும் 1974ஆம் ஆண்டு  4வது உலகத் தமிழராய்ச்சி மகாநாட்டை  யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தீர்மானம் எடுத்தது. அப்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கை யின் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் நெருங்கிய ஆதரவாளராகவும் அந்தக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் இருந்த யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா அதனை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாது தடுப்பதற்குப் பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்தார். இதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்பதில் அரசாங்கம் முனைப்பாக இருந்ததால், யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இந்த மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக, யாழ்ப்பாணத் திற்குச் செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த அந்நிய மொழியியலாளர்களான தமிழ் ஆராய்ச்சி யாளர்கள் ப
 அதேவேளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியின் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க அஞ்சியோ என்னவோ தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தம்பையா, யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்துவதை விரும்பவில்லை. ஆயினும் எனைய அனைவரும் யாழ்ப்பாணத்திலேயே நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால்,அவர் வேறு வழியின்றித் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனால் தமிழ்மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த அனுமதிக்கமுடியாது என்று கருதிய பேராசிரியர்.சு.வித்தியானந்தன் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பைத் து

அரசின் இந்த நெருக்கடியான கட்டுப்பாடுகளின் மத்தியிலும் பேராசிரியர். சு.வித்தியானந்தன் அவர்களின் தலைமையின்கீழ் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்டன. அதற்கமைய திட்டமிட்டபடிஇ 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜனவரி 3 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்இ வடமாகாணத்திற்கு வெளியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள்; யாழ்ப்பாண நகருக்கு வந்து சேர்ந்தனர்.ணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார். 


ஜனவரி மாதம் 10ஆம் திகதியே மாநாட்டின் இறுதி நாளாக இருந்ததால். அன்றைய நாள் மிகவும் சிறப்பாக ஆய்வரங்க நிகழ்ச்சிகள் மற்றும் பண்பாட்டு ஊர்வலங்கள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆய்வரங்கத்தின் இறுதி நிகழ்ச்சியாக “மொழியின் மகத்துவம் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு;” என்னும் தலைப்பில் தமிழ்மொழி ஆய்வாளர்களினால் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நைனா முகமது அவர்கள் இறுதியாக சிறப்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அலங்கார ஊர்திகளின் பண்பாட்டுப்பவனி இடம்பெற்ற பொழுது, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலத்தின் பொழுது, புகைக்கூண்டுகள், பொம்மலாட்டம், நடன நிகழ்ச்சிகள், சிலம்படி மற்றும் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றன. உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி, உணர்வு பூர்வமாகக் கொண்டாடிய அந்த வெற்றி விழாவைக் கண்டு சகிக்காத சிங்களப் பொலிசார், 10 ஆம் திகதி இறுதிநாள் கலை, பண்பாட்டு ஊர்வலம் நடைபெற்றபொழுது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடிஇ உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்ரர்; சந்திரசேகராவின்  தலைமையில் 40 பொலிசாரைக் கொண்டுவந்து தமிழ் மக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர். அதேவேளை மின்கம்பியை நோக்கிப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டதும். மின்கம்பி அறுந்து விழுந்ததில் பலருக்குக் காயங்களையும் ஏற்படுத்தியது. அதேவேளை மாநாட்டு ஆய்வரங்க மேடைகளும், அலங்காரப் பந்தல்களும் பொலிசாரினால் உடைத்தெறியப்பட்டன. இந்த மிலேச்சத் தனமான தாக்குதலில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது தமிழ் இளைஞர்கள்; கொல்லப்பட்டு, 50க்கு மேற்பட்டோர் படுகாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதுவரை நிலவிய மகிழ்ச்சியும், உற்சாகமும் இருந்த இடம் தெரியாமல்போய் சிறிது நேரத்திலேயே அந்த இடம்; மயான பூமியாகக் காட்சி அளித்தது. 



அன்று இந்தப் படுகொலைகளை மேற்கொண்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்; சந்திரசேகராவுக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா “பொலிஸ் அத்தியட்சகராகப்” பதவி உயர்வு வழங்கிக் கௌரவித்தார். 


01 வேலுப்பிள்ளை கேசவராஜன்  -மாணவன்   15  வயது            


02 பரம்சோதி சரவணபவன்              26


03 வைத்தியநாதன் யோகநாதன்              32



04 ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம்    ஆசிரியர்          53


05 புலேந்திரன் அருளப்பு தொழிலாளி           53



06. இராசதுரை சிவானந்தம ;     மாணவன்          21 


07 இராஜன் தேவரட்ணம்                        26 


08 சின்னத்துரை பொன்னுத்துரை- ஆயுள்வேத வைத்தியர்  56  


;09. சின்னத்தம்பி நந்தகுமார்       மாணவன்         14







01 வேலுப்பிள்ளை கேசவராஜன்  -மாணவன்   15  வயது            

02 பரம்சோதி சரவணபவன்              26

03 வைத்தியநாதன் யோகநாதன்              32

04 ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம்    ஆசிரியர்          53

05 புலேந்திரன் அருளப்பு தொழிலாளி           53

06. இராசதுரை சிவானந்தம ;     மாணவன்          21 

07 இராஜன் தேவரட்ணம்                        26 

08 சின்னத்துரை பொன்னுத்துரை- ஆயுள்வேத வைத்தியர்  56  

;09. சின்னத்தம்பி நந்தகுமார்       மாணவன்         14

சனி, 7 ஜனவரி, 2023

பனியின் துன்பம்



வானத்தின் குளிர்ந்த

 நீர்குவளை வற்றும் வரை 

கொட்டித்தீர்க்கின்றது பனி 

எல்லா நிலையிலும் நிலைகுலைந்த!

 

அவசர ஊர்தி 

அமரர் ஆருடம்  

பொதுமக்கள் பேருந்து  

எது  எப்படியும் 

வந்தாலும், சென்றாலும்

வெண் கம்பளத்துக்குள் 

புகுந்து முடங்கி இருக்கிறது சாலை !

 

நீடிக்கும் பனிப் பொழிவால் 

மரங்களும் செடிகளும் 

உறைந்த நீரை போர்த்து 

அழகு பேசுகின்ற்து !



குளிர்ந்த கற்று 

உள்புகுந்த  உடம்பில்  

வெண்கலம்  செங்கலத்துடன்  மோதுண்டு

 உஷ்ணமடையச்  செய்கின்றது ! 


பயணம் செல்லும் பாதசாரிகள் 

பாதகமாக  இழித்து உயிரற்றவாங்கும் 

சாலையின்  அனுபவங்களை   

பரிமாறி கொள்கின்றனர்!



சதுக்கங்கள், சறுக்கலை -ச்சோ

என பரிதாபப்பட்டாலும்

ஓடும் வாகனங்கள் 

யாரும் யாருக்காகவும் 

ஒருபோதும் நிறுத்தமாட்டார்கள்

பாதிவழியில் பயணத்தை !



நானும் என் பயணத்தை 

நிறுத்தியது இல்லை 

 சாலை ஓரத்தில் யாருக்காகவும் 

நீங்கள் ஏற்காவிட்டாலும்

நானும் நாளாந்த பயணிதான்,

நீண்ட நெடுஞ்சாலை தனிலே !


அதிகம் 

ஆனால்

 யாரும்

 யார்மேலும் 

 அனுதாபப் படாதீர்கள்

நானும் இந்த அண்டத்தில் ஒருவன் !

  -பங்கிரையான்-

வெள்ளி, 30 டிசம்பர், 2022

கட்டுவன்

 



குட்டுவன் கடலைத்தாண்டி

இராவண தேசம் கண்டு
கட்டினன் தனக்கேயாங்கு
தனித்துவப் பண்பு மேவ
மண்வளம் செழிக்க நாளும்
சிந்தினன் வியர்வைதன்னை
பெற்றனன் விருத்தியூராம்
பெருமைகள் சூழக்கண்டு
குட்டுவனூர் மருவியாங்கு
கட்டுவனாம் மாற்றங்கண்டு
பல்கலைகள் பயின்றேநாளாய்
புத்துயிரும் பெறமின் சீரே
மயிலையும் குப்பிளான் சூழ
தெல்லியூர் குரும்பையூர் ஈறாய்
புன்னாலை தொடவேநோக்க
மல்லாகம் புறத்தேயாமே
கரண்டையின் ஐயன் காக்க
மருதடித் துதிக்கை பற்றி
வானமே எல்லையுமாக்கி
பெற்றனன் இறைநல் ஆசி
பத்திரன் வீரன் நிற்க
காப்பவன் வைரவன் நோக்க
உயருகை அவற்றேயாகி
உதித்தது அரும்பொற் சாதி
விசுவநாத புலவோன் பெரியோன்
ஆக்கிய ஆட்டம் கூப்பி
நெடுதிடும் ஆடவர்மேலாய்
அதிர்ந்த நல்வசந்தன் கூத்து
ஆதிய நன்னிலமே மாறி
காத்தவன் கண்ணயர் தருணம்
ஓட்டினன் ஊரை நிசியில்
மறைந்தன ஊரவனுறக்கம்
பட்டவை விழலேயாகி
உதிரமும் உறையக் கூர்வாள்
குத்தியே இதயம் வெம்பி
கிளம்பினன் இலட்சியம் விலக
தன்னிறை பொருள்சேராங்கே
திமிரவன் கட்டுவனூரான்
மற்றவன் தயத்தே ஒடுங்க
நித்தமும் விழிநீர் மல்கி
சிரந்தாழ் நிலையில்நாளும்
தன்னவன் நம்பியவெண்ணம்
மீண்டுமோர் பிறப்பைச்செய்தான்
கட்டுவனை கட்டிக்காத்தான்
விடியலின் வெளிச்சம்தன்னில்
ஊரது நிழலும் காண
புயலென நகர்ந்தான் மீண்டு
புதியதோர் உலகம் செய்வான்
கட்டுவன் துளிர்க்கும் இந்நாள்
உதடுகள் மலரக்கண்டு
மாறிய பொன்னாள் ஏனோ
உள்ளகம் குளிரல் காணேல்
பாட்டனவன் கையை பற்றி
பாரிதோ உன் ஊர்மொழிய
பாட்டனும் உயிரோடில்லை
கட்டியவன் கல் வீடில்லை
வளமாரி வளமும் மிதமே
மும்மாரி பொழிவும் நிதமே
சிவக் கொழுந்தன்னான் இல்லா
ஊரது எனக்கினியன்றே
விளக்கம்:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குட்டுவர் என்கிற திராவிட ஆதிக்குடியொன்று கடல்தாண்டி வந்து இராவண தேசமென்று சொல்லப்படுகின்ற இலங்கையில் தனக்கென ஒரு வதிவிடத்தை உருவாக்கிக்கொள்கிறது. தன்னுடைய அயராத உழைப்பினால் மண்வளத்தின் செழுமையை ஆதாரமாய்க் கொண்டு தன்னுடைய ஊரை அந்தக் குடியினர் விருத்தியடையச் செய்கின்றனர். காலங்கள் உருண்டோட அந்தக் குட்டுவர் வாழ்ந்த குட்டுவனூர் என்ற இடத்தின் பெயர் மருவிக் “கட்டுவன்” ஆகியது. தொடர்ந்து அந்த வம்சமும் பெருகி அம்மக்கள் பல கலைகளையும் பயின்று கட்டுவனுக்கு புத்துயிர் வழங்கத் தொடங்கினர். மயிலிட்டி, குப்பிளான், தெல்லிப்பளை, குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன், மல்லாகம் போன்ற அயற் கிராமங்களைக் கொண்டு கட்டுவனின் அமைவிடம் அமைந்தது. கரண்டை ஐயப்பனதும், மருதடி விநாயகரதும் இறையாசிகளை வானளாவப் பெற்றதுமட்டுமின்றி வீரபத்திரரும், காக்கும் கடவுளாம் வைரவரும் வீற்றிருக்கும் அவ்வூருக்கு இறைவிருத்தியும் சேரச் சேர அவ்வூரவரின் வாழ்க்கைத் தராதரமும் அதுவாகவே வளர்ந்தது.
அவ்வூரின் அரும்பெருஞ் சொத்தெனப் போற்றப்படும் 17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஸ்வநாதர் என்கிற புலவர் (அவருடைய ஆறாவது பரம்பரை வாரிசு நானாம்) எழுதிய வசந்தன் நாடகம் அவ்வூரின் கடும் உடலுழைப்பினால் கட்டுறுதிமிக்க தேகம் கொண்ட ஆண்களினால் இசையோடு தாளலயப் பாணியில் ஆடப்பட்டு அந்தக் கிராமத்தின் பண்பாடுகள் இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றன.
இவ்வாறான தொன்மைமிக்க வரலாறு கொண்ட அந்த ஊரின் கடவுள் சற்றே கண்ணயர்ந்த வேளையில் அந்த ஊரின் தூக்கம் கெட்டது. அந்தச் சமுதாயம் சிறுகச் சிறுக வளர்த்துவந்த ஒரு சாம்ராச்சியமே ஆட்டம் காணும்படியாக அவ்வூரின் மக்கள் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். உடலின் இரத்தம் உறைந்துபோக முன்னர் கூரிய வாளொன்றினால் இதயத்தைப் பதம்பார்ப்பது போன்ற வலியை கட்டுவனின் குடியினர் உணரலாயினர். தமக்குத் தேவையானதைத் தாமே உருவாக்கி அடுத்தவன் நிழலில் வாழாத தன்னிறைவு நிலையில் வாழ்ந்த “திமிருள்ளவன்” என்கிற பதத்துக்குரிய கட்டுவன் வாழ்மக்கள் தலைதாழ்ந்து மற்றவனின் தயவுடன் வாழவேண்டிய வேதனைமிக்க ஒரு இக்கட்டுக்குள் தள்ளப்படுகிறார்கள். ஆனாலும் தைரியமிக்க கட்டுவனானின் நம்பிக்கை தளரவில்லை. முப்பது ஆண்டுகள் கழித்து ஓர் விடியல் பிறந்தது. கட்டுவனில் மீண்டும் அவன் கால் தடம் பதிந்தது. ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். அனைவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி ஆரவாரம். கட்டுவன் மீண்டும் அவர்களுக்கே உரித்தானது. ஆனால் இந்த மீள்குடியேற்றம் என்னைமட்டும் ஏனோ மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. காரணம், என் பாட்டன் வாழ்ந்த இடம்தான் எனக்குக் கட்டுவன். “எங்களுடைய ஊரை மீண்டும் பாருங்கள் அப்பப்பா” என்று மீளக்குடியமரும் வேளையில் அவரின் கையைத் தொட்டுக்கூற என் பாட்டன் இன்று உயிரோடில்லை. அவர் கட்டிய வீடும் இன்று அங்கில்லை. வளமாரி வைரவர் இருக்கிறார் என்பதற்காகவோ… மும்மாரியும் பொழிந்து வளம் கொழிக்கும் ஊராக இருக்கிறதே என்பதற்காகவோ என் பாட்டன் சிவக்கொழுந்தர் இல்லாத அந்த ஊரை என்னால் நேசிக்க முடியவில்லையே என்று வருந்தி நிற்பதைக் கூறுகிறது இவ்வரிகள்.
ரஞ்சித் தவா
(சிவக்கொழுந்தரின் பேரன்)
கட்டுவன்

புதன், 28 டிசம்பர், 2022

மதப் புராணம்

 

சிலப்பதிகாரம் ,
மணிமேகலை,
சீவக சிந்தாமணி,
வளையாபதி ,
குண்டலகேசி
பௌத்த காவியம்
பெரியபுராணம்,
கந்தபுராணம்,
திருவிளையாடல்
சைவ சமயம் காவியம் .
கம்பராமாயணமும் ,
வில்லிபாரதமும்
வைணவ காவியம்
தேம்பாவணி,
இரட்சணிய யாத்திரிகம்,
இரட்சணிய மனோகரம்,
இயேசு காவியம்
சீறாப்புராணம்
இசுலாமியக் காவியம்

துயரம் ஒன்று நேரும் என உணர்த்தும் பகுதி,
உள்ளவாறு வருணிக்கப்படுகிறது.
மனிதனை ஆழ்வதற்கு

அரசியல்சாரா அறிவுஜீவி: ஓட்டோ ரெனே காஸ்டில்லோவின் ஒரு கவிதை



ஒரு நாள்
என் நாட்டின்
அரசியல்சாரா அறிவுஜீவிகள்
எளிய எம் மக்களால்
விசாரனை செய்யப்படுவார்கள்.
அவர்கள்
தங்கள் தேசம்
மெல்ல மெல்ல
இறந்து கொண்டிருந்த பொழுது
என்ன செய்து கொண்டிருந்தார்கள் என
கேள்வி கேட்கப்படுவார்கள்.
யாரும்
அவர்களுடைய உடைகளைப் பற்றியோ
கனமான மதிய உணவிற்குப் பிறகான
நீண்ட துாக்கத்தைப் பற்றியோ
கேட்கப் போவதில்லை,
யாரும்
அவர்களுடைய “சூன்யத்தைப் பற்றிய கருத்துக்கள்”
குறித்த மலட்டு விவாதங்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பப் போவதில்லை,
யாரும்
அவர்களுடைய உயர் பொருளாதார வாசிப்பு குறித்து
கவலைப்படப் போவதில்லை.
அவர்கள் இவர்களிடம்
கிரேக்கப் புராணங்கள் குறித்தோ
அல்லது அவர்களிடையே
இறந்து போன கோழைகளின் மரணம் குறித்த
சுய பச்சாதாபங்களை குறித்தோ
கேள்வி கேட்கப் போவதில்லை.
அவர்கள்
இவர்களின் மொத்த பொய்யின் நிழலில் பிறந்த
வறட்டு நியாயங்கள் எதைப்பற்றியும் கேட்கப் போவதில்லை.
அந்த நாள்
எளிய மனிதர்கள் வருவார்கள்.
அவர்கள்
இந்த அரசியல்சாரா அறிவுஜீவகளின்
புத்தகங்களிலோ கவிதைகளிலோ
எந்த இடமும் இல்லாதவர்கள்,
ஆனால் தினம்தோறும்
இவர்களுடைய
ரொட்டியையும் பாலையும்,
சப்பாத்தியையும் முட்டையையும்
விநியோகிப்பவர்கள்.
அவர்களின் வாகனங்களை ஓட்டுபவர்கள்,
இவர்களுடைய நாய்களையும் தோட்டங்களையும்
பராமரிப்பவர்கள்
இவர்களுக்காக வேலை செய்பவர்கள்,
அவர்கள் கேட்பார்கள்:
“உங்களுடைய கனிவும், பண்பும், இரக்கமும்
எங்கே எரிந்து போயின
ஏழைகள் துன்புற்றுக் கொண்டிருந்த பொழுது
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”
என் இனிய நாட்டின்
அரசியல்சாரா அறிவுஜீவிகளே
உங்களால் பதில் கூற முடியாது.
உங்கள் தைரியத்தை
பினம்திண்ணி கழுகைப் போன்ற
உங்கள் மௌனம் தின்று தீர்க்கும்.
உங்களின் சொந்த விரக்தி
உங்கள் ஆத்மாவை ஆக்கிரமிக்கும்.
நீங்கள் அவமானத்தால் விக்கித்து நிற்பீர்கள்.

வள்ளுவனும் /கிராமத்தானும்

 



"சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்"

-திருக்குறள் -664(வினைத் திட்பம்)

கிராமிய கவிதை பாணியில் உரை :

இருக்கணும் இருக்கணும்
தெடமா இருக்கணும்,
எந்தச் செயலையும் செய்யிறதில
தெடமா இருக்கணும்..

இந்தச் செயல
இப்புடி இப்புடி செய்வேண்ணு
சொல்லுறது ரெம்ப லேசு,
சொன்னபடி அதச்
செய்யத் தொடங்கி காலத்தில
செய்து முடிக்கிறது
கடினமான காரியந்தான்..

அதால
இருக்கணும் இருக்கணும்
தெடமா இருக்கணும்,
எந்தச் செயலையும் செய்யிறதில
தெடமா இருக்கணும்…!