திருநங்கை நர்த்தகி நடராஜ் பல உயரங்களை எட்டினா பரதநாட்டியக் கலைஞர்.
இவர் நோர்வே வாழ் தமிழ்கலைஞர்களின் அனுசரணையில் வந்த இவரை சந்திக்கவும் இவரின் கலையை பார்த்து ரசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததுஅவர் உரையாடும்போது தன் பால் அடையாளம், தான் காதல் கொண்ட தமிழ் மொழி இலக்கியத்தின் ஊடன் கலை மற்றும் இலக்கண , இலக்கியத்தின் மேல் அவர் கொண்ட நேசம் ,தன்னை தங்கி பயணிக்கும் அவரின் தோழி ஷக்தி இவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என வாழ்வியல் கூறினார்
திருநங்கையாக இருப்பதால் மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவியிடையே இருக்கவேண்டிய ஒப்புமைகள் உணர்வுகளை தன்னுள் இயல்புடையதக வெளிப்படுகின்றது என்றும்
அவருடய நாட்டிய உடல் மொழி ,கண் அபிநய பாஷை உள்ளத்து உணர்ச்சிகளை மிக்க அற்புதமாக வெளிப்படுத்தி காட்டினார்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம் -
என பாரதி கூறியது போல
பாரதியின் கனவுக்குள் நர்த்தகி நடராஜ் சென்றார் அவரின் கனவுக்குள் நாமும் சென்றோம்
பல காலங்களுக்கு பின் அன்புத்தமான நடனக்கலையை பார்த்த மனநிறைவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக