திங்கள், 16 ஜனவரி, 2023

உழவே தலை




வெண்பனி மீது பொன்மலர் சூடும்
செங்கதிரோனை வாழ்த்தி
கண்பனி சூடி எம் நினைவோடு
ஏங்கும் எம் தேசத்தின்
கமக்காரனை கை கூப்பி
வாழ்த்தி வணங்குவோம் !

தீது மனம் படைத்தோரும்
தீய குணம் உடையோரும்
இல்லறம், நல்லறம்.
குற்றம் குறையையும் ஏற்று
புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் நேசமுடன்
சுற்றமுடன் நிறைவாய்க்
வாழ்த்தி வணங்குவோம் !

புலம்பெயர் உலகமெங்கும்
மொழியால் ஒன்றுபட்டு
தலைமுறை கண்ட பண்பை
தலைமுறைக்கு கூறி
உழவே தலை என
வாழ்த்தி வணங்குவோம்!

பொங்கல் மகிழ்வுகண்டு
பொங்கலோ பொங்கல்
கூவிய பல குரல்கள்
சொற்களை தாண்டி
தேசத்தின் ஏழையின்
வாசலில் பொங்கி
வாழ்த்தி வணங்குவோம்!

-பங்கிரையான்- 

கருத்துகள் இல்லை: