வெண்பனி மீது பொன்மலர் சூடும்செங்கதிரோனை வாழ்த்திகண்பனி சூடி எம் நினைவோடுஏங்கும் எம் தேசத்தின்கமக்காரனை கை கூப்பிவாழ்த்தி வணங்குவோம் !
தீது மனம் படைத்தோரும்
தீய குணம் உடையோரும்
இல்லறம், நல்லறம்.
குற்றம் குறையையும் ஏற்று
புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் நேசமுடன்
சுற்றமுடன் நிறைவாய்க்
வாழ்த்தி வணங்குவோம் !
புலம்பெயர் உலகமெங்கும்
மொழியால் ஒன்றுபட்டு
தலைமுறை கண்ட பண்பை
தலைமுறைக்கு கூறி
உழவே தலை என
வாழ்த்தி வணங்குவோம்!
பொங்கல் மகிழ்வுகண்டு
பொங்கலோ பொங்கல்
கூவிய பல குரல்கள்
சொற்களை தாண்டி
தேசத்தின் ஏழையின்
வாசலில் பொங்கி
வாழ்த்தி வணங்குவோம்!
-பங்கிரையான்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக