வானத்தின் குளிர்ந்த
நீர்குவளை வற்றும் வரை
கொட்டித்தீர்க்கின்றது பனி
எல்லா நிலையிலும் நிலைகுலைந்த!
அவசர ஊர்தி
அமரர் ஆருடம்
பொதுமக்கள் பேருந்து
எது எப்படியும்
வந்தாலும், சென்றாலும்
வெண் கம்பளத்துக்குள்
புகுந்து முடங்கி இருக்கிறது சாலை !
நீடிக்கும் பனிப் பொழிவால்
மரங்களும் செடிகளும்
உறைந்த நீரை போர்த்து
அழகு பேசுகின்ற்து !
குளிர்ந்த கற்று
உள்புகுந்த உடம்பில்
வெண்கலம் செங்கலத்துடன் மோதுண்டு
உஷ்ணமடையச் செய்கின்றது !
பயணம் செல்லும் பாதசாரிகள்
பாதகமாக இழித்து உயிரற்றவாங்கும்
சாலையின் அனுபவங்களை
பரிமாறி கொள்கின்றனர்!
சதுக்கங்கள், சறுக்கலை -ச்சோ
என பரிதாபப்பட்டாலும்
ஓடும் வாகனங்கள்
யாரும் யாருக்காகவும்
ஒருபோதும் நிறுத்தமாட்டார்கள்
பாதிவழியில் பயணத்தை !
நானும் என் பயணத்தை
நிறுத்தியது இல்லை
சாலை ஓரத்தில் யாருக்காகவும்
நீங்கள் ஏற்காவிட்டாலும்
நானும் நாளாந்த பயணிதான்,
நீண்ட நெடுஞ்சாலை தனிலே !
அதிகம்
ஆனால்
யாரும்
யார்மேலும்
அனுதாபப் படாதீர்கள்
நானும் இந்த அண்டத்தில் ஒருவன் !
-பங்கிரையான்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக