வெள்ளி, 14 ஜூன், 2019

மட்சுவோ பாஷோ கவிதைகள்

மட்சுவோ பாஷோ கவிதைகள் தீவிர கலைப்படைப்புகள் மட்டுமின்றிச் சமுக அக்கறை கொண்டவைகளாகவும் இருந்தன.....  

1-
நீங்கள் தீ மூட்டுங்கள் 
உங்களுக்கு ஒர் அற்புதம் காட்டுகிறேன் 
மிகப்பெரிய பனிப்பந்து.....

2-  
ஒரு தேனீ 
தள்ளாடி விழுகிறது 
வெளிர் சிவப்பு மலர்ச் செடியிலிருந்து.....

3-
ஒரு கம்பளிப்பூச்சி, 
இந்த இலையுதிர் கால வீழ்ச்சியிலும் 
இன்னும் ஒரு பட்டாம்பூச்சியாக மாறவில்லை


4- 
ஒரு சிள்வண்டு 
தன்னைப் பற்றியே பாடியது  . 
முற்றிலும் மாறுபட்டு..

5-
தொடங்கியது ஒரு குளிர் மழை
தொப்பி எதுவும் இல்லை -
அதனால்என்ன...?.


6-
அந்தத் துறவிமடத்தில் 
குளிர்முடிந்த இரவு விருந்துக்கு 
தயாராகக் கத்தரியும் வெள்ளரியும்

7-
மூங்கில் புதருக்குள் 
பின்னிரவு நிலவு ஒளிரும் போது
ஒரு குயில் அழுகிறது...

8-
பருத்திக்காட்டில் 
நிலவுப்பூக்கள் 
மலர்ந்தது போல்..

9-
ஒரு வயோதிக கிழவன் 
மெதுவாக உண்ணுகிறான் 
முள் மீன்

10-
காலைத்தேநீர் அருந்தும் துறவி 
சாமந்திப்பூ மலர்வது போல் 
அமைதி 

11-
ஒரு பனிக்காலை 
எனக்கு நானே சவைத்தப்படி 
வஞ்சிரமீன் கருவாடு

12-
ஒரு விசித்திரமான மலர் 
பறவைகளுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் 
இலையுதிர் வானம்

13-
நினைவுகளின் கொந்தளிப்பு 
கால அழிவின் எஞ்சிய எலும்புக்கூட்டில் 
கத்தியால் குத்துவது போன்று

14-
சடோ(Sado) தீவிலிருந்து தூரமாக 
கொந்தளிக்கும் கடல்-
பால் வெளி.

15-
பழைய குளம் .....
ஒரு தவளை குதிக்கும் 
தண்ணீர் சத்தம்


16-
மழை வெள்ளத்திற்குப் பிறகு 
சாமந்திப்பூக்களின் மனம் போல 
அவர்கள் உயர்வடைகிரார்கள்

17-
இலையுதிர்கால நிலவொளியில்
ஒரு புழு அமைதியாகக் குடைகிறது
பாதாம் கொட்டை மேல் அமர்ந்து.


18- குளிரில் நீர்ஜாடியின் 
விரிசல் ஒலி 
நள்ளிரவில் விழிக்கச் செய்தது.

19- இறந்த பிறகு என் பயணத்தில் 
அனாந்தரப் பொட்டல் வெளிகளில் 
என் கனவுகள் மட்டும் சுற்றும் 

20- கசக்கும் பணிப்பாகு ஆயினும் 
தொண்டை நனைக்கப் போதும் 
பெருச்சாளிக்கு 

21-
மவுண்ட் அசாமா (Mount Asama) சாலை நெடுகிலும்
கற்களை வீசுகிறது
இலையுதிர் காற்று

22-
தவுட்டுக்குருவி
தடுப்பு கம்பி வேலி முகப்பிலிருந்து
சோற்றுக்கவளத்தில் எச்சமிடுகிறது.

23-
புதர்-மணப்புல் மலர்கள்
அசைந்தாடினாலும் கீழே தள்ளவில்லை
அவைகளின் பனித்துளி மணிகளை

24-
இலையுதிர்கால மழை
மவுண்ட் ஃபுஜி(Mount Fuji) மலையை 
மிகவும் அழகாக திரையிட்டு மறைக்கிறது.


25-
குளிர் இரவில் அந்தக் காட்டு வாத்து
வானத்திலிருந்து விழுந்தது போல்  
உடல்வலியில் அசந்து தூங்குகிறது.

26-

இரவில் விழித்து பார்த்தப்போது 
உறைந்த எண்ணெயால் 
குறைந்த விளக்கு வெளிச்சம்  

27-
களத்து மேட்டு வைக்கோல் 
கெட்டு கறுக்கும் அளவுக்கு 
போதுமான அளவு மழை 

28-
குளிர்கால மழை 
மாட்டுக் கொட்டகை மீது விழுகிறது.
சேவல் கூவுகிறது 

29-
புதிதாகக் கழுவிய 
வெள்ளைப்பூண்டின் மனம் 
ஜில்லென்று வீசுகிறது 

30-
கடல் கறுக்கிறது 
கடல் வாத்துக்களின் குரல்கள் 
களையிழந்து வெளிருகிறது....

31- 
காலைப்பனியின்  
சகதியில் சிதறின-
குளிரும் முலாம்பழங்கள்

32-
நீண்ட தூர வெளிகளைக் கடந்ததால்   
சவ்வாரி இருக்கை உறைந்து 
என் நிழல் ஊர்ந்து செல்கிறது.

33-
என்னைப் பின்பற்றாதீர்கள் 
முலாம் பழத்தை பிளப்பது போன்று 
அலுப்பாகத் தெரியும் உங்களுக்கு.

34-
பேன்களையும் உண்ணிகளையும் 
உயிரோடு தின்று இளைப்பாறுகிறது  
அந்த குதிரை என் தலையணையில்    

35-
அந்தக் கஞ்சா செடியில்
கிழிந்த ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகு
எதையோ ஞாபகப் படுத்துகிறது.

36-அந்தச் சாலையின் மீது
யாரும் பயணிக்கவில்லை 
இலையுதிர் கால இரவின் தொடக்கம் 

37-
மலைரோஜாக்களின் இதழ்கள்
அப்போதும் இப்போதும் வீழ்ந்திடுமா
நீர்வீழ்ச்சியின் ஓசைக்கு...? 

38-
மலைப்பகுதி  வயல்வெளியில்
பூச்சாண்டி பொம்மை
நல்ல பயன்

39-
கல்லறையைக் குலுக்குகிறது
என் அழுகைக் குரல்
இலையுதிர்காலக் காற்றால்.

40-
குதிரையின் மீதமர்ந்து குட்டித்தூக்கம்
தூரத்து நிலவின் தொடரும் கனவு  
சூடான நீராவியுடன் தேநீர்

41- ஆன்மாக்களின் திருவிழா
இன்றும்  புகைச்சல்  
சுடுகாட்டிலிருந்து  

42- வசந்த மழை
கூரை வழியாகக் கசிவு
சொட்டும் குளவிக் கூடு 


43-
விடுதியில் தங்குவதும் 
அங்கே விலைமாதர்களுடன் தூங்குவதும் 
தரிசுப்புல் திண்டும் நிலவும்  

44- ஒரு குட்டித்தூக்கம் 
அடிக்கல் நாட்டுவது போன்று 
குளிர் சிறைக்கு எதிராக 

45- கீரை சாலட்டில் கிடந்த 
மணலைக் கடித்த பற்களின் கூச்சம் 
வயோதிகம் வந்த நினைவு 

46-
வாழைமரத்தின் 
காற்றில் கிழிந்த இலைகளிலிருந்து 
வாளியில் கொட்டும் மழைத்துளிகள் 

47- அந்தப் பட்டாம்பூச்சி மணக்கிறது 
அதன் இறக்கைகளில் வாசனை 
மந்தாரை மலர்கள் 

48- அந்தத் தும்பி 
தரையிறங்க முடியாது 
புல் என்ற கத்தி மீது.

49-
முதல் பனியில்  
செவ்வந்திச் செடியின் இலைகள் 
ஒட்டி வளைந்தன 

50- அதிகாலைப் பெருமிதம் 
பழைய வேலியிட்ட 
கோட்டைவாயிலில் மலர்ந்தது.

51- வசந்தம் கடக்கின்றது....
துக்கத்தில். பறவைகள் 
கண்ணீர் சிந்தும் கண்களோடு மீன்கள் 

52- மஞ்சள் மலைரோஜாவின்
இதழ்களில் நடுக்கம்-
நீர்வீழ்ச்சியின் கர்ஜனை

53- அந்த மீன் வியாபாரியின் குரல்
கலந்தது 
குயிலின் குரலோடு 

54- 
மூங்கில் காட்டில் மறைந்திருந்த
பனிப்புயல்
அமைதியை விரட்டியது.

55- அந்தப் பழைய கிராமத்தில் 
ஒரு வீடுகூட....
ஈச்சமரங்கள் இல்லாமல் இல்லை

56- என் மரக்கூரையின் கீழ்
ஏப்ரல் மழையின் தனித்தனி சொட்டுகள்
வரையும் கோடுகள்

57- ஒரு சிறந்த போர்வீரனின்
காலி தலைக் கவசத்திலிருந்து  
ஒரு வெட்டுக்கிளி பாடுகிறது

58- கோடை புற்கள்
துணிச்சலான வீரர்களின்   

மிச்சமுள்ள கனவுகள்

59- 
குளிர்காலத் தோட்டத்தில் 
தேய்ந்துபோன நிலவை 
பூச்சிகள் பாடுகின்றன 

60-
மேகங்கள்-
நிலவைப் பார்த்து ரசிப்பவர்களுக்கு  
ஏமாற்றும் பாசாங்குக்காரர்கள் 


இவைகள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட பாஷோவின் ஹைக்கூ கவிதைகளிலிருந்து எனக்கு பிடித்தவைகள் எனது நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டன விதிமுறைகளுக்கு இங்கே இடமில்லை........
  

வியாழன், 13 ஜூன், 2019

"மன்னித்துவிடு"


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்
முதலில் என் மனதை
காயப்படுத்தினாய்...
பின் என் உணர்வுகளை கூட
சாகடித்தாய்...
இறுதியில் என்னையே
வெறுக்க வைத்தாய்...
நீ என் தோழியென்று
என்னை இதுவரை
நினைக்கவும் வைத்தாய்....
ஆனால்
இனி இதுபோல்
உன் கற்பனைகளுக்கு
நான் இரையாக போவதில்லை...
உண்மையாகத்தான் சொல்கிறேன்
'மன்னித்துவிடு'

நான் கவிஞன் அல்ல...

Bilderesultat for பேனா
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
நிறைய கவிதைகள் படித்து...
நிறைய நிகழ்வுகளை நினைத்து...
பாதிக்கப்பட்டு.. ..
இப்படி பலவித அனுபவங்களில்
எனக்குள் எழுந்த
வார்த்தைக் குவியல்களை சேமித்து வைத்திருக்கிறேன்...
படித்து முடிக்கும் உங்களுக்கு அது கவிதைதானென தோன்றினால்
இந்த வலைப்பூவுக்கு வைத்த தலைப்பில் மகிழ்வேன்...
தொடர்ந்து வாருங்கள்..... இந்தப்பூவை தொட்டுச்செல்லுங்கள்...

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

அழித்துபோன உறவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்
காலையில் எப்போதும் போல
பழக்க தோஷத்தில் முகநூலின் 
முன்பக்கத்தை பார்க்கிறேன்,
அப்போதுதான் விலகிப்போன போன
நட்பார்த்தமான பற்றியே 
நினைவு வருகிறது !

முன்னுணர்வு


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்
அந்தக் கல் வார்த்தை
என் நெஞ்சில் விழுந்தது.
பரவாயில்லை ,நான் தயார்தான்
சமாளித்துக் கொள்வேன்.
இன்று நான் செய்ய வேண்டியது அதிகமுள்ளது;
ஞாபகங்களைக் ஒரேயடியாகக் கொன்றாக வேண்டும்

இதுமாறாது


இது மாறாது இப்போது
பல வருடங்களுக்குப் பின்னும்
வாழ்க்கை இதை உடைத்துவிடாது
பிரிவினாலும் கண்ணீரினாலும்
மரணம் இதை மாற்றிவிடாது
இது வாழும்
என்னுடைய உனக்கான
அனைத்து கவிதைகளும்
நான் சென்ற பிறகும்

மறைந்த நிழல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வரைதல்
எதிர்ப்படும் உன்னை 
என் விழிகளால் விழுத்தும் 
எண்ணம் எனக்கில்லை 
என் கண் பட்டவுடன்
உன்னைக்கான என்
கண்கள் தேடும்
இன்னும் ஒருமுறை பார்க்க
யாரோ ஒருத்தியாக 

கால நிகழ்வு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
மரணம் ஒருவகை அமைதி. 
மரணம் உலகிற்கு புதிதல்ல!
ஆனால் அவரவர்க்கு வரும்போது 
தான் மரணம் புதிதாக உள்ளது!
மரணம் பற்றிய பேச்சு தவறல்ல!
வாழ்வின் யதார்த்தம் தான் மரணம்!

மன உடைவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அவள் மீது எனக்கு காதலில்லை......
அது வருமா எனத் தெரியவில்லை,
வராமல் இருந்தால் நல்லதென அறிந்தும்,
ஒருவித வருத்தம் என்னை ஆட்கொள்கிறது,
அவள் விலகி போகும்போது !

வன்மம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்
எண்ணங்களெல்லாம் - ஏன்
உம்முள்ளே உருவாகின
உன்னை அறியாமல்
எல்லை அற்று விரிகின்றன
இவ்வளவு தன்மானம்
இருக்கிற எதற்காக உனக்கு
நல் வாழ்த்து சொல்லும் பச்சோந்தி...
நினைத்து, நினைத்து முடிவை மாற்றிப்
பேசும் உன் நலத்திற்காக....
மனம் வாடும் நண்பர்கள்
எண்ணித்தான் திருந்தாயோ?
இன்னொருயுகத்தில் -நீ
வன்மம் கொண்டு
பிறக்காத வரம் வேண்டாயோ..???

Shift+Delete

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
ஒரு நேசித்த உறவை,
ஒரு பழகிய முகத்தை,
ஒரு நீண்ட நினைவுகளை,
ஒரு பழக்கப்பட்ட உரையாடலை,
ஒரு முகப்புத்தக முகங்களை
ஒரு தொடர்பு எண்ணை
ஒரு போனிலிருந்து
டெலிட் செய்யப்படுவது போல
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை
மனதிலிருந்து ஒவ்வொன்றாக டெலிட் செய்ய முயற்சிக்கையில்…!

நீ இல்லை நான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
சொல்லிக்கொண்டு இருக்கின்றாய்
நீ இல்லை 
நான் என்று
வரிக்கின்றாய் என்னைப்பற்றி
நீ இல்லை
நான் என்று
வசப்பட்டதில்
வசித்துக்கொண்டிருக்கின்றாய்
நாளாந்தம்
அதுவும் நான் என்று
என் சிறகுகளை
பார்த்திருக்க முடியாது -நீ.
ஏனெனில்
அவை முழுமையாய்
விரிக்கப்பட விடவேயில்லை!
ஒருவேளை கட்டுக்களை
விடுவித்து என் சிறகுகளை
விரித்திருந்தால்
நான் யாரென பாதியாவது
தெரிந்திருக்கும்!
உனக்கு
நினைத்து கொண்டுஇருக்கின்றாய்
நீ இல்லை நான் என்று
-சன் நரேந்திரன் -

கலைந்தஉறவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஆழமாக நேசிக்கப்படடவர்கள் 
என்னில் இன்றில்லை 
கருத்து வேறுபாடு ....
கருணை வேறுபாடு....
காலச்சுலசுழற்சி...
கலைத்துப்போட்டது உறவை !

அடையாளம் தெரியாத உறவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
புதைந்தது கிடந்த 
என் உணர்வுகளை 
எழுத தொடங்கினேன் ,
படித்து விட்டுச் சொன்னார்கள்
யார் உன் காதலி என்று ...
எழுத தெரிந்த எனக்கு
உன்னை அடையாளம்
காணமுடியவில்லை
அன்று ....?
இன்று......?

இழப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
புரிந்துணர்வு என்பது
எல்லாத் தரப்பு உறவு 
முறைகளுக்கும் பொதுவான ஒன்று. 
புரிந்துணர்வு இல்லையென்றால் 
வேலை, 
சொந்தங்கள்,
நட்பு
என்று எல்லாவற்றையும்
இழக்க வேண்டிய
சூழல் உருவாகி விடும்.

முறிந்த பேனா...

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
உன் நிலமை கருதி
என் குருதி சிந்தி,
உன்னாலே உனக்காக
கவிதைகள் பல எழுதியும்,
உன்னால் நான்
முறிந்தது ஏனோ...?

என்ன மனசு:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், வானம் மற்றும் வெளிப்புறம்
உன் சின்ன சின்ன கோபங்களின்
உடைந்து போகிறது எனது இதயம்
இது அதிகாரத்திற்கும் ஆணவத்துக்கும் 
நடக்கும் சண்டையாகவும் இருக்கலாம்
அல்லது காரியம் சாதிப்பதற்குபயன்படும்
ஆயுதமாக இருக்காலம்
முடிவில்
காயங்களும் இழப்புகளும்
மறக்கப்பட்டு
விட்டு கொடுப்பதும்
விட்டு விலகாமல்
நிலைத்திருப்பதிலும் அடங்கியிருகிறது
எனது காதலும் உனது ஊடலும்

துயரம் துரமாகக்கூடாது

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தூர நின்று பார்க்கிறேன் விலகிப்போக அல்ல ------
தூரம் துயரமாகிவிடக்கூடாதுஎன்ற எண்ணத்தில்...
வார்தைகளில் வழுக்குகிறேன்மௌனமாய்ப்போக அல்ல ....
வார்த்தை வாதமாகிவிடும்என்ற அச்சத்தில்...
ஆனாலும் எழுத்துளியால் செதுக்கினேன் .......
நட்பெனும் சிற்பத்தை ஆம் விழியின் ஓவியமாய்...
நட்பே நட்பை உணரவேண்டு மென்பதற்க்காக...

இரவில் மடியில்..!

இரவில் மடியில்..!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நான் உறங்காமல்
விழித்திருந்த இந்த இரவுகள்
இரவல் வாங்கப்பட்டவை அல்ல..!
நான் எனக்காக விழிதிறந்து
காணும் கனவுகள்..!
நான் விழித்துறங்கும் வரை..!
என் விழி திறந்திருக்கும் வரை..!
இந்த கனவு
கலையவோ
களவு போகவோ
வாய்ப்பில்லை..!
என்றும் நான்
இரவல் பிள்ளையாய்,
இரவில் மடியில்..!

ஏழ்மையிலுருந்து விடுதலை

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்துச் சென்றான். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :
அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்த கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம், அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாபிடுகிரர்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள் . நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிக்கொண்டே சென்றான்.
மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது.. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.....!
நீதி: ஏழ்மை என்பது நம் எண்ணத்திலேயே குடி கொண்டால் என்னதான் வசதி கிடைத்தாலும் ஏழ்மையிலுருந்து விடுதலை கிடைக்காதுபடம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

பிரிகின்ற பாதை


பொறாமை பிரிவுகளை முடிவெடுத்தது
சந்தர்ப்பங்கள் சந்திப்பில்
சந்திக்கின்றோம்
நியாயப்படுத்தும் காரணங்களை
வரலாறாக வாசிக்கிறாள்
தொந்தரவுகளைப் பற்றி
ஒவ்வொன்றாக கதைசொல்கிறாள்
எல்லாவற்றையும் நான்
எதிர்க்கருத்துச் சொற்களில்
விளங்கிக் கொண்டிருக்கிறேன்
வாசிப்பு முடிவில்
புத்தகம் மூடப்பட்டது
கண்களின் எல்லையைத்
தாண்டிச் சென்ற கண்ணீர்
அவள் கணங்களில்
தாண்டவம் ஆடுகின்றது !

கவிதை

கவிதை 
ஓர் இடத்தில் கவிதை என்பது 
கற்பனை..... 
ஓர் இடத்தில் கவிதை என்பது 
உணர்வு..... 
ஓர் இடத்தில் கவிதை என்பது
தேடல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மகிழ்ச்சி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பசி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மௌனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வேகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தீர்வு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அன்பு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உண்மை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பொய்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கானல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊற்று.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பேச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மூச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தைகளின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கையின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விதை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விலை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணவு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
குப்பை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மருந்து.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நாதம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாளம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உயிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சுவாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
இலக்கணம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பிழை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நந்தவனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பாலை நிலம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எளிமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதுமை......
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஆடம்பரம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வலி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வழி.......
ஓர் இடத்தில் கவிதை என்பது
அமைதி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணர்வுகளின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீரின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வீரத்தின் மொழி......
ஓர் இடத்தில் கவிதை என்பது
கையாளாகாத தனத்தின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எண்ணத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சமூகத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழகு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழுகை.....
கவிதை எங்கேயும் இல்லை
உனக்குள்ளேயே இருக்கிறது
உன்னை சுற்றி இருக்கிறது
நாங்கள் என்ன
உங்களைப்போல்
மா… மரமனிதர்களா என்ன?
எங்கள் மனவலியின்
கடுகு விதைகள் ஒவ்வொன்றும்
உங்களுக்கு வதைசெயும் ஒருநாள்
தம்பட்டம் அடிக்காதீர்கள்!
பயப்படுகிறோம்…..
எங்கள் வேதனை
எங்கள் மனவலி
உங்களுக்கு தெரியப் போவதில்லை
ஒன்று மட்டும் உண்மை!
எங்களுக்கு உங்களுக்குள்ள
பாரிய நோய்கள் இல்லை..
பயப்படுகிறோம்………
மாமனிதன் என்ற
மாபெரும் பட்டங்கள் எல்லாம்
பரீட்சை எழுதாமலே
உங்களை அடைகின்றனவே!
கொஞ்சம் மனம் வையுங்கள்
நறுமணம் வீசலாம்
உங்கள் அழுக்குகளை
உங்கள் அசிங்க அறைகளுக்குள்
கைவிலங்கிட்டு வையுங்கள்!

பயப்படுகிறோம்……
ஓரிரு நாட்களேனும்
எங்களையும் வாழ விடுங்கள்
எங்கள் உழைப்பில்
உப்புச் சாப்பிட
உயிர்கள் காத்துக் கிடக்கின்றன.
உயிரோடு ஒட்டிப் பிறக்காததை

பயப்படுகிறோம்…………
மேடையிட்டு மேவும் பல ஏமாற்றங்கள்
மேலாடையிடுகிறது மேன்மைக் குணங்களிற்கு.
மேன்மாடம் அமைக்கிறது அவநம்பிக்கை உணர்விற்கு.
மேற் பார்வையை அறிவு மயக்குகிறது.

பயப்படுகிறோம்………
பல்வேறு தருணங்களில்
கடந்து வந்த பாதைகளில்
கடந்து போன பாடங்களை
மீண்டும் படிக்க நேர்கையில்
தோன்றுகிறது, நம் வாழ்க்கை

நாம் விழுந்த இடத்தில் எழுந்து நடப்போம்
எம்மை விழுத்துபவர்களை
தலைவர்களாக விடமாட்டோம்”
எங்கள் வலி புரியும்!
உங்கள் வழி தெரியும் ???????????????