வெள்ளி, 19 ஏப்ரல், 2019

நாங்கள் என்ன
உங்களைப்போல்
மா… மரமனிதர்களா என்ன?
எங்கள் மனவலியின்
கடுகு விதைகள் ஒவ்வொன்றும்
உங்களுக்கு வதைசெயும் ஒருநாள்
தம்பட்டம் அடிக்காதீர்கள்!
பயப்படுகிறோம்…..
எங்கள் வேதனை
எங்கள் மனவலி
உங்களுக்கு தெரியப் போவதில்லை
ஒன்று மட்டும் உண்மை!
எங்களுக்கு உங்களுக்குள்ள
பாரிய நோய்கள் இல்லை..
பயப்படுகிறோம்………
மாமனிதன் என்ற
மாபெரும் பட்டங்கள் எல்லாம்
பரீட்சை எழுதாமலே
உங்களை அடைகின்றனவே!
கொஞ்சம் மனம் வையுங்கள்
நறுமணம் வீசலாம்
உங்கள் அழுக்குகளை
உங்கள் அசிங்க அறைகளுக்குள்
கைவிலங்கிட்டு வையுங்கள்!

பயப்படுகிறோம்……
ஓரிரு நாட்களேனும்
எங்களையும் வாழ விடுங்கள்
எங்கள் உழைப்பில்
உப்புச் சாப்பிட
உயிர்கள் காத்துக் கிடக்கின்றன.
உயிரோடு ஒட்டிப் பிறக்காததை

பயப்படுகிறோம்…………
மேடையிட்டு மேவும் பல ஏமாற்றங்கள்
மேலாடையிடுகிறது மேன்மைக் குணங்களிற்கு.
மேன்மாடம் அமைக்கிறது அவநம்பிக்கை உணர்விற்கு.
மேற் பார்வையை அறிவு மயக்குகிறது.

பயப்படுகிறோம்………
பல்வேறு தருணங்களில்
கடந்து வந்த பாதைகளில்
கடந்து போன பாடங்களை
மீண்டும் படிக்க நேர்கையில்
தோன்றுகிறது, நம் வாழ்க்கை

நாம் விழுந்த இடத்தில் எழுந்து நடப்போம்
எம்மை விழுத்துபவர்களை
தலைவர்களாக விடமாட்டோம்”
எங்கள் வலி புரியும்!
உங்கள் வழி தெரியும் ???????????????

கருத்துகள் இல்லை: