ஏகாந்த இரவு
ஆசைமனம் சிறிது தூங்க
ஓய்வெடுத்த பகல்நினைவு
மதுக்கோப்பைக்குள்
தத்தளிக்கும் வண்டு ஒன்றை
காட்சி படுத்துகின்றது
யாவும் இந்த இரவுக்கு மட்டும்
சொந்தமானவை !

மெல்ல வீச..
கிளையை விட்டு
விலக போகும்
பழுத்த இல்லை ஒன்று
பனியின் குமிழியை
தங்கி நின்று அசைத்து ஆட
கண்கள் விரும்புவதை
நான் உணர்கின்றேன் ..!
மனம் விரும்புவதை
நான் யாசிக்கின்றேன் ..!
வாழ்வு நேசித்து அமுத சுரபி
என் நெஞ்சில்.
மிதந்து பின் அமிழ்கிறது.
நம்பிக்கையான நாளாக
அமையட்டும்!
983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி
திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் இந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளது
தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் (இரத்த காயம்)
.
சம காலப்பகுதியில் சிங்கள பேரினவாதத்தின் உந்துதலில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீதும் சிங்கள காடையர்களாலும் கைதிகளாழும் கொடூரமான தாக்குதல்கள் இடம் பெற்றன.
சிறைச்சாலையில் நிகழ்தேறிய கலவரச் சம்பவத்தில் காந்தியம் பிதா மருத்துவர் சோ. இராஜசுந்தரம்,குட்டிமணி ,தங்கதுரை ,ஜெகன் , தமிழ் அரசியல் கைதிகள் உற்பட 53 பேர் வரையான அநாகரியமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
”சுதந்திரத்தமிழீழத்தை என் கண்கள் காணவேண்டும் அதனால் இறந்தபின் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்“ என்று தன் இறுதி ஆசையை நீதிமன்றத்தில் சொன்னதற்காய் ஜூலை-25 அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து ”குட்டிமணியின்“ கண்கள் உயிருடனிருக்கும்போதே சிங்களக்காடையர்களால் பிடிங்கி புத்தனின் காலடியில் போடப்பட்டது
குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்
1983 ஜூலை 23 தமிழரின் வாழ்வில் ஆறாத வடுவாக நிலைத்து விட்டது.
இன்று புரட்டாசி -5 தேசபக்த மாவீரர், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம்
உலகநாதன் சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் மக்களிடம் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.
திருநெல்வேலியில் ஒரு பொதுகூடத்தில்ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து பேசும்போது அவரை பேச மறுத்தும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறுமாறும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்படடர்
விடுதலைக்கு பின்
வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்து பின் தூத்துக்குடி வந்தார்.
தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.


| நகுலன் (இ. மே 17, 2007) |

![]() |
| ரஸ்கால்நிகாஃப் சோனியாவின் காலில் விழுந்து மன்னிப்பு கோரும் உச்சகட்ட நாடகக் காட்சி- தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் |
“ ஆ, ஆசையே. நீ ஒரு புராதன விருக்ஷம். இச்சைத்தான் உரம்; உனது பட்டை; புடைத்து உறுதிபெற. உனது கிளைகள் வானத்தை இன்னும் - இன்னும் அருகில் காண விழைகின்றன? மகாவிருக்ஷமே, உனது வளர்ச்சிக்கு முடிவே கிடையாதா ? உனது வேர் எவ்வளவு ஆழமாக ஊடுருவுகிறது. ஸைப்ரஸ் மரத்தைவிட? என்னவானாலும் மிகவும் ஜாக்கிரதையாகவே நாங்கள் உனது அடங்காத ஆசை படைத்த ஆல்பத்திற்குச் சில மாதிரிகளைச் சேர்த்திருக்கிறோம். சகோதரர்களே. நீங்கள் எவைகள் வெகு தொலைவிலிருந்து வருக்கின்றனவோ அவைகளில் செளந்தர்யத்தைக் காண்கிறீர்கள்.யானை வடிவான பெருந்தேகம் படைத்த கோவில் சிலைகளை நாங்கள் போற்றுகின்றோம் - ஜ்வலிக்கும் ரத்தினங்கள் பதித்த சிம்மாசனங்களை ; சிற்ப வேலைப்பாடமைந்த அரண்மனைகளை - அவைகளுடைய அமானுஷ்ய சைதன்யம் உங்கள் பாங்கர்களின் கனவுகளை சிதிலமாக்கும் பார்வை எல்லாம் இரண்டாகப் பார்க்கச் செய்யும்; வர்ணம் பூசிய பற்களுடைய கை நகங்களுடைய பெண்கள் ; மந்திரங்களில் தேர்ச்சி பெற்ற பக்கிரிகள்; அவர்கள் மீது அவர்களை மெல்ல வருடும் பாம்புகள்......
“ அவஸ்தைகள் , சரி ? - எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையின் உறுதிநிலை . காதலின் நீண்ட அனுபவம் ; உண்மையைச் சொல்வதென்றால் சொல்லில் சொல்ல முடியாதவைகள் ; ஆனால் பிறகு, நக்ஷத்திரங்களின் கீழ் என்ன பயன் ? இன்னும் சொல்லால் சொல்ல முடியாத நக்ஷத்திரங்களின் கீழ் ? என்றாலும் எந்த வழிப் போக்கனும் மலையில் இருந்து பள்ளத்தாக்கிற்கு ஒரு பிடி மண்ணைக் கூட கொண்டு வருவது கிடையாது - சொல்லில் சொல்ல முடியாத இந்தப் பூமியிலிருந்து ஒரே ஒரு வார்த்தையை மாத்திரம் அவன் பிடித்துவிட்டான். பவித்ரமான , மஞ்சள் நீலமான ஜென்டியன் புஷ்பம் . நாம் இங்கிருப்பது வேறொன்றுமில்லை - இவ்வாறு சொல்வதற்குத் தானோ - வீடு, பாலம், புனல் சிதறும் செயற்கை ஊற்று, வாசல் கதவு, ஜாடி பழ மரம், ஜன்னல் இருக்கலாம் ; ஸ்தூபி, கோபுரம் ? ஆனால் சொல்வதற்கு நினைவு படுத்திக் கொள் , ஆ இந்த மாதிரி சொல்வதற்கு , அவைகள் கூட இவ்வளவு தீவிரமாக நிலைபேறாக இருப்பதற்கு , முயற்சி செய்யவில்லை. இந்தப்பூமியின் தந்திரமான ரகசியம், காதலர்களைத் தூண்டிவிடுவதும் கூட, அவர்கள் காணும் ஒவ்வொன்றும் அவர்களுக்கு உவகை வெறியில் உட்கார்ந்து எழுந்து நர்த்தனம் செய்யத்தானே? வாசற்படி : ஒரு காதல் - இணைக்கு அதன் தாத்பர்யம் என்ன ? வேறென்ன, அவர்கள் தங்கள் வழக்கமான தேய்ந்த வாசற்படியைத் தாங்களே சற்றுக் கடந்திருக்க வேண்டுமின்றி வேறென்ன : அவர்களும் அவர்களுக்கு முன் பலர் செய்த மாதிரி , அவர்களுக்குபு பின் பலர் செய்யப் போவதைப் போல் ...இயல்பாகத்தான் ! ”
மணி மூன்றடிக்க ஐந்து நிமிஷம் : மழை நின்று விட்டது : முற்றத்தில் வசீகரமான வெயில்: ஒரு அழகான அமைதி .


என் மனதில்விர் என்றுஒரு உணர்வு“பார் என்னை”என என்னைஉணர்த்திபோகப் போனேன்நான்.
பருந்துஎன்றுபகரகருடன்என்றுநகரஎன் உள்ளத்தின்உயரத்தில்சுற்றிச் சுற்றிச்சுழலும்
கோழித்தூவல் என்று ஒரு சொல்;வாரணம் என்று ஒரு வார்த்தைபார்த்தாயா, நீ, புறாவைப் பார்த்ததுண்டா?வகை வகையாகவெளுப்பாகசாம்பலாகவிதவிதமாகஅழகான காகமாகஆரும் விரும்புவதானபுறாவே, நீ கண்டதுண்டோகண்ணம்மா?ஆனாலும் என்ன?
விதவிதமாய்க்காசாக தோட்டாகக்கசந்த மனதுடன்என் பிச்சைமனதைகொஞ்சம்கொஞ்சமாகக்கசக்கி கசக்கி
நாரை, ஒரு நாரைஒர் மீன் கொத்திமாமிசம் சாப்பிடும்ஒரு நாரை
வாத்து முட்டையைவேக வைத்துஅதில் ஆத்திக் கீரையைக்கலந்து கபளீகரம்செய்தால்ஐயாமூலவேதனைஐயோ, நான் போறேன்என ஓடிப் போகும்
எனக்குத்தான்எவ்வளவு மகிழ்ச்சிஅதைச் சொல்லதான்படுமோஅல்லதுசொல்லித்தான்தீருமோ
மைனாமைனாவா வா என்றால்மைனாவருமா?
அதுபுல்வெளியில்தத்தித் திரிவதுகண்டால்சூசிப் பெண்ணேரோசாப் பூவேஉன்னைப் போல்அதுவும்தான்ஒரு அழகின் வடிவம்காண்.
சுசீலாஅது ஒரு ஆள் உயரப் பறவைஅதைப் பார்க்கையில்சுசீலாநீ சென்று மறைவதைப்போல்ஒரு பிரமை.
ஆறுமுகம்அவன்என் அண்ணன்சூரபதுமன்வேறுபடவதைத்த முகம்ஏது முகம்?
சுசீலாஇந்த டம்பப் பறவைதனைரம்பம் கொண்டுடகர், டகர்என ராவி எறிவதுஒரு தனி இன்பம்
இந்த மரமேறும்மரங்கொத்திஎன் மனவெளியில்ஒய்யாரமாய்த் திரியும்ஒரு அதிசயப் பறவை
நடுக்கட்டில்ஒரு அதிரூப சந்தரிதன் கூந்தல் விரித்துஅசோக மரத்தடிசீதை போலசோகமயமாய்ச் சாய்ந்திருந்தபோது
இதுஏன்என் அருமைப்பெண்ணேசுசீலா?என்னைப்போல்அவளும்காதல் சுரத்தில்உடல் வெந்தாளா?அல்லதுசெத்துத்தான்மண்ணோடு மண்ஆனாளா?
ஆனால்சுசீலாஇந்த உலகம்என்ற பெருவெளியில்நீ என்னைத் தனியாகத்தவம் புரிய விட்டுச்சென்று விட்டாய்.
என் உள்ள வெளியில் பல மின்னல்கள்வீசக் கண்டேன்பரவசமடைந்தேன்.
நகுலனின் ‘சுருதி’ மற்றும் ‘உரையாடல்’ கவிதைகள்
http://thamizhstudio.com/Koodu/mag_4_vikramadhithan.php | |
-விக்ரமாதித்தன் நம்பி
சுருதி
ஒரு கட்டு
வெற்றிலை பாக்கி சுண்ணாம்பு புகையில் வாய் கழுவ நீர் ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ் ஒரு புட்டிப் பிராந்தி வத்திப்பட்டி/ ஸிகரெட் சாம்பல் தட்டு பேசுவதற்கு நீ நண்பா இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு. (‘நகுலன் கவிதைகள்’ நூல் பக்கம் ; 188)
‘ஒரு கட்டு’ என்ற முதல் வரியிலிருந்து
‘சாம்பல் தட்டு’ என்ற பதினொராவது வரி வரையிலும் விவரணங்களும் தகவல்களும்தாம்; சரியாகச் சொன்னால், ஜடப்பொருள்கள் (புட்டியினுள் இருப்பதில்) ; ‘பேசுவதற்கு நீ’ என்ற அடியில்தான் – முன்னிலையில் – ஓர் உயிர் / ஜீவன்; ‘நண்பா’ –விளி; ‘இந்தச் சாவிலும் / ஒரு சுகம் உண்டு’ என்ற அடிகள்தாம் கவிதாசாரம்; விஷயம்.
இறுதி நான்கடிகளுக்கு முன்னுள்ளவை எல்லாம் குடிப்பதற்கான ஆயத்த ஏற்பாடுகள்; ‘இந்தச் சாவிலும்’ என்ற சொற்க் எதைக் குறிப்பிடுகின்றன; குடிப்பதனால் நேர்கிற விளைவையா; ‘ஒரு சுகம் உண்டு’ என்ற சொற்றொடர் சுட்டுவதென்ன; போதையையா; தம்மைத் தாமே – தெரிந்தே – அழித்துக்கொள்வதைத்தானே இந்த ஈரடிகளும் சொல்கின்றன; ‘சுருதி’, எப்படிக் கவிதையாகிறது; பேசாவடபொருளைப் பேசத்துணிந்தனாலா.
‘சுருதி’ என்ற வடசொல்லுக்குப் பொருள்? ஓசை? ஒழுங்குசெய்யப்பெற்ற ஓசை? அப்படியானால், இசை? இசை சார்ந்த சொல்.
நகுலனின் ஒரு கவிதைத் தொகுப்புதான் ‘சுருதி’; நகுலன் சொல்கிறார், ‘இந்தத்’ தொகுதியில் பிராந்தியைச் சுற்றிச் சில கவிதைகள் இருக்கின்றன. இவை மூலம் உருவாவது, எவ்வாறு ஒரு சிருஷ்டிகரமான உள்ளம் எதிர்த் திசையில், வேறு ஒரு தளத்தில் இயங்குகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதே என்று; இந்த வாக்குமூலம் புரிகிறதா.
------------------------------------------------------------------------------
உரையாடல்
நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்; பிராந்தி அருந்திய உச்ச நிலையில் நான் என்னுடனேயே பேசுகிறேன்; என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன் என்னையே நான் அதட்டுகிறேன் சொன்னார் பிரக்ஞை பிறழாத நிலையிலும் நானும் இதையே செய்கிறேன் என் குடும்பத்தினர் கலவரப்படுகின்றனர். (‘நகுலன் கவிதைகள்’ நூல் பக்கம் ; 221-222)
நண்பரிடம் பேசுகையில் சொன்னவை, முதல்பத்தி; அவர் கூறுபவை, அடுத்து; இவரே பழுதில்லைபோல; பிராந்தியின் உச்சநிலையில்தான் இவர் இப்படி அவரோ ‘பிரக்ஞை / பிறழாத் / நிலையிலும்’.
‘நான் / என்னுடனேயே / பேசுகிறேன்; என்னைக் கண்டு / நானே சிரிக்கிறேன் / என்னையே / நான் அதட்டுகிறேன்;’ என்ன இதெல்லாம் ; இவ்வளவும், ‘குடித்தபின் உடலுக்குள்ளும் மனத்திற்குள்ளும் ஏற்படும் மாற்றங்கள்;’ நகுலன் நான் மீண்டும் படித்துப் பார்த்ததில்- ஐந்து கவிதைகளில் ‘பதிவு செய்திருக்கிறார்’; ‘அகச்சலனம் பற்றிக் கவிதையில் பேசியிருக்கிறார்’.
‘குடித்த மனத்திலிருந்து ஒரு வரி கூட எழுதப்படவே இல்லை அல்லது குடித்த அவஸ்தையைக்கூட அவர் எழுதியில்லை’ என்று திட்டவட்டமாகச் சொல்லும் கவிஞர் சுகுமாரன் வார்த்தைகளை மறுத்துப் பேசாமல் இருக்க முடியவில்லை; நகுலனைத் தெரிந்தவர்கள் அறிவார்கள், அவர் குடித்துவிட்டு(ம்) எழுதுவதுண்டு; இங்கே பேசுவது அதுவல்லை; கவிதைகளே ஆவணமாய் இருக்கின்றன.
பின்னிணிப்பு:
நண்பரும் கவிஞருமான வியாகுலன், நகுலன் அபிமானிகளுள் ஒருவர்; அனன்யா என்ற பதிப்பகமும் நடத்துகிறார்; அவர், நகுலனுடைய ‘Non Being’ என்கிற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பைத் தஞ்சாவூர் கவிராயரைக் கொண்டு மொழிபெயர்க்கச் செய்வித்து வெளியிட்டுள்ளார்; எனக்கு இரு பிரதிகள் அனுப்பிவைத்தார்; அதைப் பற்றி எழுதச் சொன்னார்; ‘இல்லாத இருத்தல்’ என்ற அந்நூலிலிருந்து ஒரு கவிதை, வாசகர் பார்வைக்கு.
வீட்டின் வெறுமைக் கூட்டிலே
தனிமை என்மீது இரைதேடிப் பாய்கிறது அப்படி ஒரு நிசப்தம் ஏதோ ஒரு பூச்சியின் ‘கிறீச்’ சத்தமும் தூக்குவாரிப் போடுகிறது எனக்கு மனிதர்கள் வேண்டும் அவர்கள் எவ்வளவு கெட்டவர்களாக கழிசடைகளாக இருந்தாலும் சரி. அதைவிடவும் ஒரு போத்தல் சாராயம் கிடைக்குமானால் அது போதும் உங்கள் மனநிலையை அது மாற்றிவிடும் உங்களை எதுவும் பயமுறுத்த முடியாது அதாவது இல்லாது இருத்தலை முன்கூட்டி ருசிப்பது. ‘இல்லாது இருத்தல்’ தொகுப்பு பக்கம் ; 14)
வீட்டின் வெறுமை, தனிமை, மனிதர்கள் வேண்டும் என்பனவற்றையெல்லாம் விவரித்துவிட்டு, ‘அதைவிடவும்’ ஒரு போத்தல் / சாராயம் கிடைக்குமானால் / அது போதும்’ எனக்கூறும் நகுலன் மேற்கொண்டு, ஏன் என்பதையும் விளக்கமாகவே சொல்லிச் செல்கிறார், இல்லையா.
மூன்று காரணங்கள்:
‘உங்கள் மனநிலையை / அது மாற்றிவிடும்’. ‘உங்கை எதுவும் / பயமுறுத்த முடியாது’. ‘அதாவது / இல்லாது இருத்தலை / முன்கூட்டி ருசிப்பது’. இன்னும் என்ன சொல்லவேண்டும்.
யுவன்; இப்படிப் புரிந்துகொள்ளலாமா, ஒரு கவிதையில் ‘ஒரு கட்டு வெற்றிலையும் சீவலும் எனக் குறிப்பிடுகிறார்’. அவரைப் பொறுத்தவரை இதற்கும் பிராந்திக் குப்பிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை எனக் கொள்ளலாமா?
சுகு ; ஆமாம். அப்படித்தான்.
(‘நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்’ பக்கம் ; 90)
இல்லை, அப்படியில்லை என்பதையே இந்தக் கவிதைகளெல்லாம் காட்டுகின்றன.
கடந்த பத்துநாள்களுக்கு முன் ஒரு வேலையாகச் சென்னை சென்றிருந்தபோது, நகுலனின் ‘இவர்கள்’ நாவலைத் திரும்பப் படிக்க வாய்த்தது; அதில் சில கவிதைகள் உள்ளன; நாவலை லயித்துப் படித்ததில், சர்ச்சைக்குரிய இந்த விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டது; அவருடைய ‘நினைவுப்பாதை’ நாவலிலும் கவிதைகள உண்டும்; அவற்றையும் பார்க்கவேண்டும்; உரைநடையில் இருந்தால் உலகம் ஏற்காதா; நண்பரும் சிறுகதை எழுத்தாளருமான புலியூர் ப. முருகேசன் புத்தகச் சந்தை போயிருக்கிறார்; அவரை இந்த இரு நாவல்களையும் வாங்கி அனுப்பச் சொல்லியிருக்கிறேன்.
நகுலன் மறைந்து எழு வருடம்தான் ஆகிறது; அவருடைய கவிதை / கட்டுரை / நாவல் / சிறுகதை நூற்கள் அனைத்துமே கிடைக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றன; பிரசுரமாகாத நிலையில் கையெழுத்துப்பிரதியாகவே நிறைய இருக்கும்; இப்படியெல்லாம் உள்ள நிலையில், தமிழ்கூறுநல்லுலகத்தில் பிழையாக எதுவும் பதிவுபெற்று விடலாகதாது; இன்னும் நாம் பாரதியைக் கண்டெடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம், இல்லையா; பெரியவர்கள் பேசினால் / பெரிய இடத்திலிருந்து பேசினால், சரிதான் என்று ஏற்றுக்கொள்ளும் படி நேர்ந்துவிடும், அதுதான்.
பயன்பட்ட நூற்கள் :
நகுலன் கவிதைகள் – காவ்யா வெளியீடு, சென்னை
இல்லாது இருத்தல் – அனன்யா வெளியீடு, தஞ்சாவூர் நகுலன் – தேர்ந்தெடுத்த கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். அர்த்தமற்றப் பெருவெளியில் இதழ் இதழாக விரிகிற பூ: நகுலனின் கவிதைகள் - பெருந்தேவி
மதுநமக்கு, மதுநமக்கு மதுநமக்கு விண்ணெலாம்
மதுரமிக்க ஹரிநமக்கு மதுவெனக் கதித்தலால் மதுநமக்கு மதியுநாளும் மதுநமக்கு வானமீன் மதுநமக்கு மண்ணுநீரும் மதுநமக்கு மலையெலாம் மதுநமக்கொர் தோல்விவெற்றி மதுநமக்கு வினையெலாம் மதுநமக்கு மாதரின்பம் மதுநமக்கு மதுவகை மதுநமக்கு மதுநமக்கு மதுமனத்தொ டாவியும் மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால். (பாரதி) பாரதியின் பாடல் இதில் திரும்பத் திரும்ப வருகிற சொல் மது. வாழ்வின் பல்வேறு நிலைகளோடும் காமங்களோடும் இறைகளோடும் இயற்கையோடும் சுயேச்சையான எலெக்ட்ரான் போல் இந்தச் சொல் பிணைகிறது. வேதிக்கூட்டுப்பொருள் மாறுவதுபோல அவற்றை மதுரமிக்க மயக்கத்தோடு நம்மை உணரவைக்கிறது. அது மட்டுமல்ல, சமயத்தில் அவற்றின் ’இயல்பான’ அர்த்தத்தளத்தையே மீறவைக்கிறது, மாற்றிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, மது நமக்கு வெற்றிதோல்வி என்ற வரியை எடுத்துக்கொள்ளலாம். இங்கே வெற்றி, தோல்வி என்பவை அவற்றுக்கு ‘இயல்பாக’ நாம் கொள்ளும் நேர்மறை, எதிர்மறைப் பொருள்களிலிருந்து மீறியவை, வெற்றி, தோல்வி ஆகியவற்றைச் சமப்படுத்தி இனிதாக்கி, அவற்றை நோக்கி செய்யும் செயலின் பாதையையே பழக்கமயக்கத்தின் வண்ணங்களில் ஆழ்த்துகிறது மது. மதுவை முன்னிட்டுச் சொல்லியபடியே மயக்கப் பித்துநிலையில் இறையின் மதுரத்துக்கு நகர்வது பாரதியின் கவிதை. அதேநேரத்தில், மதுவெனக் கதித்தலால் எனும்போது மதுவை தள்ளிவைத்துவிட்டு இந்த இறைநோக்கிய நகர்தல் நடப்பதில்லை என்பது முக்கியம். இத்தகைய அர்த்தத்தள மயக்கம் நகுலனின் கவிதைகளில் நடக்கின்றதா என்றால் நிச்சயம் நடக்கிறது. பலருக்கும் தெரிந்த அவரது கவிதையையே எடுத்துக்கொள்வோம்: ராமச்சந்திரனா என்று கேட்டேன் ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவில்லை அவர் சொல்லவுமில்லை. அறிமுகம் செய்துகொள்ளும்கட்டத்தில் கேட்கப்படும் வழமையான கேள்விதான் வழமையான பதில்தான். எந்த ராமச்சந்திரன் என்று கேட்கப்படாது விடுபடுகிற கேள்வி, இந்த விடுபட்ட கேள்விக்கு தரப்படாத பதில். விதவிதமான அனுமானங்களுக்கு இட்டுச்செல்லக்கூடியவை. எந்த ராமச்சந்திரனாக அவர் இருக்கலாம், இருப்பார் எந்த ராமச்சந்திரனாக அவர் இல்லாதிருக்கலாம், இல்லாதிருப்பார் என்பதிலிருந்து எந்த ராமச்சந்திரனாக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்றெல்லாம் போகலாம். ஒரே பெயர், யாராகவேனும் இருக்கக்கூடும் அவர். பெயர் ஒருவரின் அடையாளச் சுட்டுதல் எனும்போது அடையாளமயக்கநிலையாகி (blurring of identity) விடுகிறது இங்கே அர்த்தமயக்கநிலை. கலை எனப்படுவதையே அர்த்தமயக்கநிலையோடு இணைத்துப்பார்க்கிறார் நகுலன் என்ற எண்ணவைக்கிறது இன்னொரு கவிதை. வழக்கம்போல் வெளிவாசல் திண்ணையில் சூரல் நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றான். அந்தி மயங்கும்வேளை – அதற்குமுன்; ஒளியும் நிழலும் பக்கத்தில் பக்கத்தில் காணும் போது அவனை ஒரு விசித்திர உணர்ச்சி சூழ்கிறது. வெயிலில் மண்சுவரில் இலை, நிழல்களைக் காணும்பொழுது கலையின் வசீகர-சக்தி அவனை ஆட்கொள் கிறது. அந்திமயங்கும் வேளை. பகலும் இரவும் குழையும் பொழுது. நிழலும் முழுக்க அற்று, ஒளியும் முழுக்க அற்று. விசித்திர உணர்ச்சி என்றே பகரப்படுகிறது. வெளியிலிருந்து, இயற்கையிலிருந்து உருவாகிற உணர்ச்சி. வெயிலில் நிழல் காணும் நிலையில் இயற்கையே கலையின் கோலம்கொள்கிறது. வெயில்/நிழல் என்கிற இயற்கைவெளியின் மயக்கநிலை கலை கொளும் அர்த்தமயக்க வசீகர நிலையையொத்துக் கூறப்படுகிறது. கவிதையை மேலே படித்தால் அர்த்தமயக்கநிலை பற்றிப் புரிதல் மேலும் சிறிது கூடலாம். கையெழுத்து மறையும் வேளை என்று சொல்கிறார்கள். பிரமலிபியும் என்று கூடச் சொல்லத் தோன் றுகிறது. இங்கே கையெழுத்து அவரவருக்கே உரித்தான ஒன்று. தனித்ததொரு அடையாளம் அது. பிரமலிபி எனும் தலையெழுத்தும் தனித்த அடையாளம் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் ஒன்று. கலையின் வசீகர சக்தியைப் பற்றிச் சொல்லியவுடனேயே சிலவரிகளுக்குப் பின்னர் கையெழுத்தும் தலையெழுத்தும் மறைகின்றன என்ற கூறும் வரிகள் வருகின்றன என்பது கவனிக்கத்தகது. கலையின் வசீகர சக்திக்கும் அடையாளங்கள் மறைதலுக்கும் தொடர்பை உருவாக்குகிறது கவிதை என்றே இதைக்கொள்ள முடியும். அர்த்தமயக்கநிலை அடையாளம் மறைதலோடு இங்கேயும் இயைந்துசெயல்படுகிறது. அடையாளம் மறைதலும் மயக்கமும் நகுலனின் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. இரு கவிதைகளைக் கீழே தருகிறேன். … அவன் பயணம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. நடுவில் யாரோ ஒருவர் அவனை நோக்கி “நீங்கள்?” என்று உசாவ அவனுக்கு அவன் பெயர் மறந்துவிட்டது (”எல்லைகள்”) அடையாளம் மறைதல் இதில். நகுலனின் இன்னொரு கவிதையோ அடையாள மயக்கத்தை அப்படியே எழுதிச்செல்கிறது: வேறோரு நண்பனைப் பார்க்கச் சென்றான் இப்பொழுதெல்லாம் இது ஒரு பழக்கமாகிவிட்டது போன இடத்தில் அவன் வெளியே போய்விட்டான் என்றார்கள் “என்னைப்போலவா?” என்று கேட்கச் சென்றவன் … (கோட்-ஸ்டாண்ட் கவிதைகள்) இக்கவிதைகளை மேற்கோள்காட்டி அடையாள மயக்கம்/மறைதல் என்றெல்லாம் நான் எடுத்துரைப்பதிருக்கட்டும். சொல் என்கிற அடையாளத்துக்கான தடையை, எதிர்ப்பை வெளிப்படையாகவே நகுலனின் கவிதை ஒன்று பேசியிருக்கிறது. “பூ” என்கிற தலைப்பிலான கவிதையின் வரிகள் சில இங்கே: காசியபன் சொல்லவில்லையா? அல்லது சொல்கிறாரா? “சொல் ஒரு அடையாளம் அடையாளத்துக்கு அடிமைப்படாதே ஏமாந்து போவாய்” சொல்லுதல் என்பது கூட ஒரு ஏமாற்றம் என்பதுதான் போலும். அர்த்த மயக்க நிலை அடையாள மயக்க நிலையெனும் ரூபம்கொண்டு செயல்படுகிறது நகுலன் கவிதைகளில் என்பதை உணரவைக்கின்றன மேற்காணும் வரிகள். ”நகுலன்: தேர்ந்தெடுத்த கவிதைகள்” தொகுப்பில் கவிதைகளைக் குறித்த உரையாடல் செய்யும் கவிஞர்கள் சுகுமாரனும் யுவன் சந்திரசேகரும் இந்த மயக்கநிலையை பித்துநிலையாகவும் பிறழ்மனமாகவும் உள் உலகச் சிடுக்குநிலையாகவும் சொல்லிவிடுகிறார்கள். நகுலனின் கவிதைகளை அவற்றின் செழுமையோடும் செறிவோடும் அணுக கவிஞனின் இத்தகைய அகவர்ணனைக் குறிப்புகள் உதவாது என்றே நான் கருதுகிறேன். படைப்பாளியின் அகத்தை ஆராய்வதிலிருந்து கவிதையெனும் மொழிச்செயல்பாட்டுக்கு நகர்வதே எனக்கு உவப்பாக இருக்கிறது (சுகுமாரன் – யுவன் ஆகியோரின் உரையாடலில் வேறு சில கவிஞர்கள் அணுகப்படுகிற முறையும் எனக்குப் பிரச்சினையானதே. “சி.மணி, ஆத்மாநாம் போன்றோர் கவிதைகளில் உள்ள மொழிச்சிக்கல் காரணமாக ஓர் எளிய வாசகரால் நேரடியாக இவர்களை அணுக முடிவதில்லை” போன்ற கருத்துகளை மறுப்பேன். சொல்லப்போனால், சி.மணியையும் ஆத்மாநாமையும் வாசித்து ஈர்க்கப்பட்டுத்தான் நான் இலக்கிய உலகத்துக்கே வந்தேன். பெரிய வாசிப்பனுபவம் இல்லாத இருபதுவயதில்கூட இந்த எழுத்தாளர்களை வாசிப்பதில் தடையெதையும் நான் உணரவில்லை என்பதைப் பதியவேண்டும். இது வேறு விவாதம்.) நகுலனின் பல கவிதைகள் தொடர்ந்து முன்நிறுத்தும் அர்த்தத்தள, அடையாள மயக்க நிலை, மது என்கிற காரணி சார்ந்த மயக்கநிலையாக இருக்கிறதா என்றால் மதுவுக்கு அப்பாலான நிலை அது என்றுதான் மேற்கூறிய கவிதை உதாரணங்களிலிருந்து நான் கூறுவேன். பிராந்தியும் பாட்டில்களும் வராத நகுலனின் பல கவிதைகளும் அடையாள மயக்கத்தை வாசிப்பில் தருகின்றன நேரடியாக மதுமயக்க நிலையை உள்ளேகொணரும், இறைநோக்கி நகரும் பாரதியின் கவிதையிலிருந்து சற்றே நகர்ந்துவிட்ட நவீனமொழி நகுலனுடையது. இது கவனிக்கத்தக்கது எனவே, ”மதுவையும், நண்பர்களுடனான உரையாடலையும், போதையையும் நான் என்பது கரைந்து, லேசாக அடிநிலைக்குச் செல்லும் எத்தனமாகவே சித்தரிக்கிறார் நகுலன். அவர் பாஷையில் அது ஒரு சொரூப நிலை. தன் போதத்தை, தன் சுமையைக் கழற்றிக் கொள்வதற்கான இடமாக மதுவையும், அதுதரும் தற்காலிக விடுபடுதலையும் தன் கவிதைகளில் அடிநிலைக்குச் சென்று வெளிப்படுத்தியவர் நகுலன். பாதலேரின் ‘நன்றாகக் குடி’ கவிதையையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். உலக அழுத்தங்கள் என்னும் கனத்தச் சட்டையைக் கழற்றுவது போன்ற உணர்வுநிலையை பிராந்தியும், இலக்கிய நட்புகளும் தருவதை அவர் தொடர்ந்து பதிவுசெய்திருக்கிறார்,” என்று கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுதுவது நகுலனின் படைப்புலகத்தை மதுவின் போதையுலகமாகக் குறுக்குதலாக இருக்கிறது. ஒழுக்கமதிப்பீட்டோடு இதை எழுதுவதாக யாரும் புரிந்துகொள்ளவேண்டாம். ஒரு கவிஞனின் செறிவுமிக்க மொழிவெளியை, மதுவை முன்நிறுத்தி கனத்தச் சட்டையைக் கழட்டுதல் போன்ற உருவகங்களின் வாயிலாக இளைப்பாறுதலாகச் சித்தரித்தல் அவனின் மொழிச்செயல்பாட்டை நீர்க்கவைக்கிற, குறைவுபடுத்துகிற, குறுக்குகிற செயல் என்கிறேன். மொழிச்செயல்பாட்டுக்குப் பிராந்திப் பாட்டில்களாகட்டும் இலக்கிய நட்புகளாகட்டும் அடிப்படை ஆதாரத் தூண்களல்ல என்பதையேக் கூறுகிறேன். நகுலனின் கவிதைகளின் அடையாள மயக்கம் அல்லது மறைதலை ”நான் என்பது கரைந்தது” என எழுதுகிறார் சுகுமாரனையும் யுவனையும் விமர்சிக்கும் ஷங்கர். சுகுமாரன் – யுவன் உரையாடலில் யுவனும் ”நகுலனின் கவிதைகளில் தொழில்படும் narrative என்பது தானற்ற நிலை” என்கிறார். ஆக, ”தானற்ற நிலை” என்பது இருசாராரும் பாடும் ஒரே கீதம் தான். ஆனால் தானற்ற நிலையைக் கூறுவது நகுலனின் கவிதைமொழி என்பது எளிமையான பார்வை. தானற்ற நிலையை மொழிவதைவிடவும், மொழிக்குறித்தளத்தைப் பிரச்சினைக்குள்ளாக்குகிற, அதை உடைக்கிற புரட்சிகரமான இலக்கியச்செயல்பாடாகவே நகுலனின் கவிதைகளை நான் வாசிக்கிறேன். அவர் கவிதைகளில் அடையாளமயக்கமெனும் தோற்றம் கொள்ளும் அர்த்தமயக்கம் எவ்வாறு நேர்கிறது? மொழிக்குறிக்கும் (sign) அது சுட்டும் குறிப்பொருள் (object/referent) இவை இரண்டுக்குமிடையேயான தொடர்பின் நிச்சயத்தில் ஒரு விரிசலை உண்டுபண்ணுகிறார் நகுலன். சுட்டும் குறிப்பொருளை ஒன்றன்றிப் பலதாக்கிவிடுவதும் இதையே செய்கிறது. உதாரணமாக: நடுவில் யாரோ / ஒருவர் அவனை நோக்கி / ”நீங்கள்?” என்று உசாவ / அவனுக்கு அவன் பெயர் / மறந்துவிட்டது. இந்தக்கவிதையில் ’அவன்’ திரும்பத்திரும்ப வருகிறது. சொற்சிக்கனம் அறியாதவரல்ல நகுலன். பின் ஏன் இத்தனை அவன்? எல்லா அவன்களும் ஒன்றா, கேட்பவன் எவன், அவன் பெயரை மறப்பவன் எவன் இவையெல்லாம் அறுதியிட்டு பதில்சொல்லமுடியாத வினாக்கள். “நீங்கள்?” என்கிற indexical sign சுட்டுமொழிக்குறி இங்கே குறியீட்டுப்பொருளின்றி, அல்லது பல குறியீட்டுப்பொருள்களின் சாத்தியத்தோடு அந்தரத்தில் மிதக்கிறது. கவிதையை வாசித்து அர்த்தப்படுத்திக்கொள்வார்களுக்கு (interpretant) கவிதை தருகிற அர்த்த மயக்கம் இதனால்தான். இப்படி கவிதையில் குறிப்பிட்ட எந்தக் குறியீட்டுப்பொருளோடும் தரிக்காமல், தளைபடாமல் மிதக்கும் மொழிக்குறிகளாலேயே அர்த்தமயக்கம் வாசிக்கையில் உண்டாகிறது. ”ராமச்சந்திரனா” எனத்தொடங்கும் கவிதையிலும் மொழிக்குறியை மிதக்கவிடுகிற இதேபோன்ற கவிதை உத்தியைக் காண்கிறோம். ராமச்சந்திரன் யாராகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் எனும்போது பெயர் என்கிற மொழிக்குறிக்கும் குறிப்பிட்ட நபர் என்கிற குறியீட்டுப்பொருளுக்கும் இடையே தொடர்பில் ஒரு சந்தேகம், ஒரு விலக்கம் ஏற்பட்டுவிடுகிறதுதானே. இப்படியான ஒரு கவிதையுத்தி நகுலன் கவிதைகளில் ஏன் தென்படுகிறது என்பது விரிவான ஆராய்ச்சிக்கான விஷயம். இங்கே சில எண்ணங்களை எழுதுகிறேன். கொஞ்சம் ஓர்மையின்மையோடும். குறியீட்டுப்பொருளோடு தளையை அறுத்த மொழிக்குறி, அதன்பின், இனியும் மொழிக்குறியாக இருக்கமுடியுமா என்ன? மொழிக்குறியாக தன் நிலையைத் துறந்துவிட்ட சொல், தகவல் (information), தொடர்புறுத்தல் (communication) போன்ற சமூக ஒழுங்கமைவுகளைக் கட்டமைக்கும் அன்றாட, அதிகாரச் சொல்லாடல்களிலிருந்தும் (discourses of power) வெளியேறிவிடுகிறது. (தெளிவான சுட்டுப்பொருளன்றி தகவல், தொடர்புறுத்தல் போன்றவை எப்படி நடக்கும் என்பது யோசிக்கத்தகும்.) குறி என்கிற அந்தஸ்திலிருந்து சொல் விடுதலை பெற்றிருக்கிறபோது, அந்தச் சொல்லோடான நம் உறவை இவ்வாறு புரிந்துகொள்ளலாம். ”சொல் முதலில்…தோற்கிறது. சொல் சொல்லாகக்கூட அமைந்துவிடாத நிலையில், சொல் சொல்லிருந்து தப்பிக்கும் கணத்தில்தான் தன்னுடைய முதல் தாவலை அது செய்கிறது. சொல்லிலிருந்து அது தப்பிக்கும் கணம் நிகழ்வு. அந்த நிகழ்வு இருப்பு (being) என்பது பிரசன்னம்கொள்வது (onset of being) பற்றிய குறிப்பாகிறது (hint)” என எழுதுகிறார் ஹைடெக்கர் 1999, 26). ஹைடெக்கரின் இந்தச் சிந்தனையை, அதாவது சொல் அதனிடமிருந்து தப்பித்தலையும், நிகழ்வென உருக்கொண்டு இருப்பை உணரவைப்பதையும் அருமையாக விளக்குகிறார் கிறிஸ்டாஃப் ஜியாரெக் (2013): “சொல் தோற்கும்போது, சொற்களை அது அடைந்தில்லாதபோது (அதாவது, மொழிக்குறிகளை அடைந்தில்லாதபோது), சொல் மொழிக்குறிகளிலிருந்து தப்பித்தும் விடுதலை பெற்றும்விடுகிறது. இந்தத்தப்பித்தல் ஒரு இடைவெளியைத் திறக்கிறது, இந்த இடைவெளி இருப்பு பற்றிய குறிப்பைத் (hint) தருகிறது” என்கிறார். இந்த இடைவெளி, காலமாகவும் இடமாகவும் இருப்பின் விளையாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதை இவ்வாறு விளங்கிக்கொள்கிறேன். குறியீட்டுத்தளத்தில் (plane of signification) சொல் ’தோற்கிறபோது,’ அதாவது வழமையானச் சுட்டுப்பொருளிலிருந்து சொல் தப்பிக்கும்போது தாவல் ஒன்றை அது நிகழ்த்துகிறது. மொழிக்குறியாக இயங்க மறுத்து, தாவலாக அது செயல்படும்போது இருப்பில் அது இடம்கொள்ளுகிறது. மொழிக்குறிகளுக்கும் மீறிய இருப்பின் வியாபகத்தை இந்தத் தாவல் காட்டித்தருகிறது. அர்த்தங்களில் உறைந்திருக்கும் குறிகளால் இயங்கும் அன்றாட பேச்சு மொழிக்கெதிராக, அதன் தர்க்கத்துக்கு எதிராக இலக்கியம் வைக்கிற சவால் இது, நடத்துகிற புரட்சி இது. நகுலன் கவிதையொன்றிலிருந்து இவ்வரிகள்: எல்லைகடந்து நின்று நின் நிலை காக்கும் ஒரு பேராற்றல் கனவு நினைவாக கனவில் நினைவகல நின்னுருவம் என்னுருவமாக எல்லாமல் இல்லாமல் ஆக இந்தக்கவிதையை அர்த்தப்படுத்தும் யுவன் “எல்லாம் இல்லாமல் ஆக” என்பதை இன்மையென்று என்று முடிவுக்கு வந்துவிடுகிறார். “உங்களுக்குப் பார்க்கக்கிடைப்பது வெறுமைதான். நகுலன் ஒரு குணாம்சமற்ற வெறுமையை நோக்கித் தள்ளுகிறார்” என்கிறார். ஆனால் என் வாசிப்பில் கனவும் நினைவும் கலந்து பொழுதில் நின்னுருவம் என்னுருவம் என்கிற வேறுபாடு அழிவதைக் கூறுகிறது கவிதை. ”எல்லாம் இல்லாமல் ஆக” என்கிற கூற்று இந்த வேறுபாடு அழிதலைக் காட்டித்தருவது. மொழிக்குறிகளால் கட்டப்படும் அர்த்தபேதம் தாண்டிய நிலை அது. இருப்பின் வியாபகம் அது. இருப்பின் விசாரம் நகுலனின் கவிதையின் தனிப்பட்ட கூறு என்றே உறுதியாகக் கருதுகிறேன். நகுலனின் ”அது” என்ற தலைப்பிட்ட கவிதையை நினைவுகூர்தல் இங்கே பொருத்தம். ‘நில்லாமல் நிற்கும் இல்லாமல் இருக்கும்’ இருப்பை ஆழ விசாரிக்கும் கவிதை அது. ”எல்லாம் இல்லாமல் ஆக” என்கிற மேலே குறிப்பிட்டிருக்கிற வரி இருப்பைப் பேசுவதாக நான் புரிந்துகொள்ள உதவிய கவிதை ”அது:” சில வரிகள் அக்கவிதையிலிருந்து இங்கே: முதலுக்கும் முடிவுக்கும் முன்னும் பின்னும் முழுவதுமாகப் பின்னிப் பிணைந்து நில்லாமல் நிற்பது இல்லாமல் இருப்பது தெரியாமல் தெரிவது சொல்லாமல் சொல்லிக்கொள்வது எல்லாரும் நினைப்பது யாவரையும் கடந்தது புலனுக்குப் புரியாதது சொல்லுக்குச் சிக்காதது என்றுமே கேள்வியாக எஞ்சி நிற்பது அது அதுவே. நகுலனின் மொழியை “இளைப்பாறும்” பரப்பாக ஏன் புரிந்துகொள்ளமுடியாது, இருப்பு குறித்த பொருண்மையான விசாரணையாக அவர் மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்னுமொரு கவிதையைக் கூறி முடிக்கிறேன். ... சொற்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா? அல்லது கவிஞன் சொற்களைத் துகிலுரித்துக் கொண்டே இருக்கின்றானா? … “பூ” என்று உதறிச் சென்று நான் என் பயணத்தைத் தொடர்கையில் கூட அந்த சாக்ஷாத் சந்தர்ப்பத்தில்கூடப் பூ என்னைக் கண்டு சிரிக்கின்றது—தோன்றுகின்றது. … அர்த்தமற்றப் பெரு வெளியில் இதழ் இதழாக ஒரு பூ விரிவதைக் கண்டு பூ என்று உதறி எழுந்து போக விரைந்தவன் பூ என்று சொல்லி வாயடைத்து நின்றேன். அர்த்தமற்றப் பெருவெளியில் சொல் தன் குறித்தளத்தை விட்டுவிலகி நிகழ்வாகிற அற்புதம் எழுதப்பட்டிருக்கிறது. பூ என்ற சொல் விரிகிற பூவைச் சுட்டமுடியாமல் தோற்றுப்போய் நிற்கிறது. அதே நேரம் இருப்பை நோக்கிய தாவலாக அச்சொல் மாறுகிறது. விரிகிற பூவுக்குமுன் வாயடைத்துப்போகிறது கவிதைசொல்லிக்கு. எனக்குமே இக்கவிதைக்குமுன் கைகட்டி, வாய்பொத்தி மட்டுமே நிற்கமுடிகிறது. போதாமையோடான மொழிக்குறிகள் மட்டுமே கைவசமிருக்கும்போது இக்கவிதை கிளர்த்தும் உணர்வை எப்படி எழுதுவேனென்று. எப்போதுமே. நூல்/கட்டுரைத் தரவுகள்: தமிழ் சுகுமாரன், யுவன் சந்திரசேகர். “தமிழ் இலக்கியச் சூழலில் வாசிக்கப்படாமலேயே அதிகம் பேசப்பட்ட கவிஞராக நகுலன் இருக்கிறார்”. நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல். நகுலன்: தேர்ந்தெடுத்த கவிதைகள். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம், 2011. ஷங்கர்ராமசுப்ரமணியன். வலைப்பூப் பதிவு:http://shankarwritings.blogspot.com/2015/09/blog-post.html?spref=fb ஆங்கிலம் Heidegger, Martin. Contributions to Philosophy. Trans. Parvis Emad and Kenneth Maly. Bloomington: Indiana University Press, 1999. Ziarek, Krzysztof. “Giving its Word: Event (as) Language.” Heideggar and Language. Ed., Jeffrey Powell. Indiana University Press, 2011. (முதல்வரைவு: பின்னர் விரித்தும் செம்மைப்படுத்தியும் எழுத எண்ணம்.) Share Meenakshipuram Deivakumar Muthukumaraswamy, Rajan Kurai Krishnan and 12 others like this. 2 shares ![]() Ken Tvlm ஜ்யோவ்ராம் சுந்தர் fyi 12 hrs ![]() Rajan Kurai Krishnan அருமை பெருந்தேவி. உங்கள் அறிவார்த்தப் பயணத்தின் சாத்தியங்களை என்றுமே முன்னுணர்ந்து எதிர்பார்த்திருப்பவன் என்ற முறையில் என்னை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது இந்த வரைவு. உங்களிடமிருந்து பெருவதற்கு தமிழ் சமூகத்திற்கு நிறையவே இருக்க்றது. வாழ்த்துக்கள். 1 · 11 hrs ![]() Perundevi Perundevi உங்களின் வெளிப்படையான பாராட்டு சந்தோஷத்தைத் தருகிறது ராஜன் Rajan Kurai Krishnan உண்மையில் எழுதும் நம் போன்றோருக்கு இதுதான் அங்கீகாரம். வேறென்ன வேண்டும்? அடுத்தக் கட்டுரைக்கான உத்வேகத்தை உங்கள் சொற்கள் தருகின்றன. Cheers! 2 · 11 hrs ![]() Lakshmi Chitoor Subramaniam பெருந்தேவி, நகுலன் பற்றி நான் படித்த கட்டுரைகளில் மிகச் சிறந்த கட்டுரை இது. ஒரு படைப்பைப் புரிந்துகொள்ளல் என்ற தளத்திலிருந்து மட்டுமே பார்க்கக் கூடாது என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். காரணம் கவிதை பற்றி எனக்கு அதிகம் தெரியாது; இருந்தும் நகுலன் கவிதை என்னை ஈர்க்கிறது. இசையும் அப்படித்தானே? எந்த படைப்பையும் இசை கேட்கும் அனுபவத்துடன் நான் படிக்கும்போது எனக்குப் “புரிந்துவிடுகிறது”! உன் கவிதையும்தான்! 2 · 5 hrs ![]() Yuvabharathy Manikandan மிக நல்ல கட்டுரை Perundevi Perundevi. 1 · 4 hrs ![]() Harikrishnan Mu manalveetukku tharalaam allava jan- issue kku 1 · 2 hrs ![]() Sarwothaman Sadagopan Good article... 18 mins |