ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

வாசிப்பில் பிடித்த கவிதை

 Bilderesultat for பாட்டனார் வீடு
////////////////////////////////////////////////////////
பாட்டனார் வீட்டுக்குட்
படியேறி எல்லாரும்
அடிவைக்க முடியாதாம்.
வைக்கிறபேர் அனைவருமே
அமருமென்று சொல்லாமல்
உட்கார முடியாதாம்
அமர்வதற்குத் தகுதியிலார்
கைகட்டித் தம்தோளிற்
துணிகழற்றி நிற்பாராம்
பாட்டனார் வளவுக்குட்
கண்டநின்ற பேரெல்லாம்
கால் பதிக்க முடியாதாம்.
வரத்தகுந்த பேரெல்லாம்
முன்படலை வழியாக
உள் நுழைய முடியாதாம்
பின்படலை வழிவருவோர்
குரல்கொடுத்து உத்தரவு
பெற்றாற்தான் வரலாமாம்.
பாட்டானார் செத்துப்போய்
பலகாலம் இப்போது.
ஊர்ச்சனங்க ளெல்லாரும்
போய்வருவார் தெருவழியே.
வாகனங்கள் விரைந்தோடும்.
வாலிபங்கள் விசிலடிக்கும்.
வாசல்வரை வருவோரை
வழிமறிக்க இயலாது.
வீட்டுக்குள் நுழைவோரின்
சாதிகுலந் தெரியாது.
பாட்டனார் குலப்பெருமை
பழங்கதையாய்ப் போயாச்சு.
பேரர்மார் சந்திப்பிற்
பாட்டன்மார் காலத்துப்
பழங்கதைகள் பேசிடுவார்.
போயொழிந்த காலத்தின்
மேன்மைகளைக் கீர்த்திகளை
மீட்டுமிக மனம் நெகிழ்வார்
சுற்றிவரும் வரலாற்றின்
பொற்காலம் மீளுமெனத்
தேற்றித் தம்வழி மீள்வார்.
அயல் மண்ணில் அனைவருமே
அகதிகளாய் வாழ்ந்தாலும்
கரியவராய் அந்நியராய்க்
கழித்தொதுக்கப் பட்டாலும்
பாட்டனார் இருக்கின்றார்
பழங்கள்ளின் போதைதர.

பொன் நாள் வாழ்த்து

Image may contain: 1 person, flower and plant
//////////////////////////////////////////////////////
வாழ்வில் அழகான தருணம்
புதிதாய் பூத்த மலர்களின் மேல்
பனித்துளியாய் சிலிர் என்ற புன்சிரிப்பில் 
புன்னகைக்கும் நீர்த்துளியாய்
விடிந்த இன் நாள் நீ பிறந்த நாள் !
நாட்கள் நகருவதும்
வருடங்கள் வருவதும்
அவை நம்மை கடப்பதும்
விந்தையில்லையே
இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது!
அன்பின்வழிநின்று..
அறிவுவலம்வந்து..
#அன்பு#ஆதரவு#பகிர்தல்
இது மூன்றுக்கும் அர்த்தமாய்
பண்பின்விளக்கேற்றி பாசச்சுடராக..
நன்மைபல புரிந்து நாளும் வாழுகின்ற
தோழி எனிலும் துளியும் மிகையில்லை..!
புரிந்தோ புரியாமல் வேதாந்தத்தில்
மூழ்கியவாள் நீ -ஆனாலும்
உன் சித்தர்ந்தம் எனக்கு பிடிக்கும்
பெருமையை பிறருக்கு கொடுத்து
தான் மட்டும் சிறுமை பெறுகின்றவள் -நீ
துணி மணி வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்கின்றவள் -நீ
உனக்குள் இருக்கும்
சுயநலமே உனக்கான யுத்தி
புதிய அகவையில்
புயலாய் புகுந்து
வளங்களையும் நலன்களையும்
அகமகிழ பெற்று
அகத்திலும் புறத்திலும்
சந்தோசத்துடன்
நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்
அன்பு தோழமை 

உரிமை பருவத்துக்குள் பிரவேசம்


**********************************************
புதிய அகவையில்
புயலாய் புகுந்து
மகிழ்வான பதினெட்டு வருடம் !
அகவைகள் அனைத்துமே
அழகு நிறைந்தவை
மலரும் இதயம்
நிறைந்த வாழ்த்துக்கள் !
அகவையின் உயர்வில்
ஆளுமைகள் உமதாக்கி ,
வெற்றியின் பாதையில்
வெற்றி நடை போட்டு ,
உச்சமான உவகை நிறைத்து
பல்லாண்டு வாழ்ந்து !
இனிய சவால்கள்
இதமான தென்றல்கள்
காற்றில் மலரும் கீதங்கள்
இரவில் நிசப்தங்களை
காதலிக்க கற்றுக்கொள் !
நாளை உன்கரங்கள் இல்லாமையை
போக்க உதவட்டும்
ஏழைகளின் தோழனாய் நாளெல்லாம்
நீ நடைபோட இன் நாளில்
தாழ்வின்றி என்னென்றும் நீ வாழ
வாழ்த்துகிறேன் வாழ்த்துகின்றோம் !

இனிய நாள் வாழ்த்து

உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
வந்து வாழ்த்துக்க்ள் 
என்றாய் …
எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை…
ஆவாரம் பூ போலே,
இல்லாமை இல்லாது
தாழ்வின்றி என்றென்றும்,
பல்லாண்டு வாழ்க
வாழ்த்துகின்றேன் வாழ்த்துகின்றோம் !

அடிமைபட்ட ஆண் மனம்



//////////////////////////////////////////
காலை உன் குரல் கேட்ட..
அந்த நிமிடங்களில்!
என்னை மறந்து உன் குரலில்
தொலைந்தே போனேன்..!
காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து
உன் குரல் தொடுத்த இனிமையான
அன்பான பண்பான வார்த்தைகள் !
என்னில் புகுந்து இதயத்தை உனது வசமாக்கியது..!
உன் குரல் மட்டும் கேட்க்காமல் போய் இருந்தால்
இன்றய நாள் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்!

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018




No automatic alt text available.

1956 ஆம் ஆண்டில் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால்(த்) தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது.
குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால்(த்) தலை அமைந்திருந்தது.
தபால்(த்) தலையைப் பார்த்த சிங்களத் தலைவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்தத் தபால்(த்) தலையை மீளப் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.
பலரின் எதிர்ப்புக்களை அடுத்து இலங்கை அரசானது, விஜயனின் வருகை பற்றிய தபால்(த்) தலையை மீளப் பெற்றுக் கொண்டது.

பொன் நாள் வாழ்த்து



Image may contain: 1 person, flower and plant
//////////////////////////////////////////////////////
வாழ்வில் அழகான தருணம்
புதிதாய் பூத்த மலர்களின் மேல்
பனித்துளியாய் சிலிர் என்ற புன்சிரிப்பில் 
புன்னகைக்கும் நீர்த்துளியாய்
விடிந்த இன் நாள் நீ பிறந்த நாள் !
நாட்கள் நகருவதும்
வருடங்கள் வருவதும்
அவை நம்மை கடப்பதும்
விந்தையில்லையே
இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது!
அன்பின்வழிநின்று..
அறிவுவலம்வந்து..
#அன்பு#ஆதரவு#பகிர்தல்
இது மூன்றுக்கும் அர்த்தமாய்
பண்பின்விளக்கேற்றி பாசச்சுடராக..
நன்மைபல புரிந்து நாளும் வாழுகின்ற
தோழி எனிலும் துளியும் மிகையில்லை..!
புரிந்தோ புரியாமல் வேதாந்தத்தில்
மூழ்கியவாள் நீ -ஆனாலும்
உன் சித்தர்ந்தம் எனக்கு பிடிக்கும்
பெருமையை பிறருக்கு கொடுத்து
தான் மட்டும் சிறுமை பெறுகின்றவள் -நீ
துணி மணி வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்கின்றவள் -நீ
உனக்குள் இருக்கும்
சுயநலமே உனக்கான யுத்தி
புதிய அகவையில்
புயலாய் புகுந்து
வளங்களையும் நலன்களையும்
அகமகிழ பெற்று
அகத்திலும் புறத்திலும்
சந்தோசத்துடன்
நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்
அன்பு தோழமை
சன்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறப்பு நாள் ஆணி 03 இறப்பு நாள் ஆவணி 06




முத்துவேல் கருணாநிதி, இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி 

பிறப்பு நாள் ஆணி  03 -1924 இறப்பு  நாள்  ஆவணி 06 .2018

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளமைப்பருவம்  
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் சூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்[சான்று தேவை]. நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.
Billedresultat for கருணாநிதி
அரசியல்
மாணவர் மன்றம்
கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.

முரசொலி நாளிதழ் 
இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 

1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும்இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர்
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆண்டு தொகுதி வாக்கு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்கு வாக்கு வேறுபாடு
1957 குளித்தலை 22785 கே. எ. தர்மலிங்கம் காங்கிரசு 14489 8296
1962 தஞ்சாவூர் 32145 பரிசுத்த நாடார் காங்கிரசு 30217 1928
1967 சைதாப்பேட்டை 53401 எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு 32919 20482
1971 சைதாப்பேட்டை 63334 என். காமலிங்கம் காங்கிரசு 50823 12511
1977 அண்ணா நகர் 43076 ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 16438 16438
1980 அண்ணா நகர் 51290 எச். வி. ஹண்டே அதிமுக 50591 699
1989 துறைமுகம் 41632 கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 9641 31991
1991 துறைமுகம் 30932 கே. சுப்பு காங்கிரசு 30042 890
1996 சேப்பாக்கம் 46097 S. S. நெல்லை கண்ணன் காங்கிரசு 10313 35784
2001 சேப்பாக்கம் 29836 தாமோதரன் காங்கிரசு 25002 4834
2006 சேப்பாக்கம் 34188 தாவுத் மியாகான் சுயேச்சை 25662 8526
2011 திருவாரூர் 109014 எம்.இராசேந்திரன் அதிமுக 58765 50249
2016 திருவாரூர் 121473 பன்னேர்செல்வம் அதிமுக 53107 68366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம்
2016 தேர்தல்[தொகு]
2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். வேட்பு மனுவில் தனக்கு அசையா சொத்து எதுவும் இல்லை என்றும், தனது மனைவி மற்றும் துணைவியாருக்கு ரூ. 62.99 கோடி அளவிற்கு சொத்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தனது துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு வங்கிக் கடன் ரூ. 11.94 கோடி உள்ளது என்றும், தனது பெயரில் வங்கிக் கடனோ, காரோ, வேளாண் நிலமோ இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த போது தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.44 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருந்ததாக தெரிவித்திருந்தார்.

பொருளாளர் 
1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.

தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி 
பதவி வகித்துள்ளார்.

1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
1971-1976—இரண்டாவது முறையாக
1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001—நான்காம் முறை ஆட்சி
2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி
விமர்சனங்கள்[தொகு]
1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. சர்க்காரியா கமிசன்  1973 ல் மிசா 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது.

தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது..

2008–2009 இல் இவரது ஆட்சியின் போதே பெரும் ஈழத்தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. நடுவண் அரசு இவரது கட்சியின் ஆதரவிலேயே ஆட்சியில் இருந்தும் இவர் எந்தவித பலனைத் தந்த நடவடிக்கைகளை எடுக்காதற்காக அப்பொழுதும் பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதே காலப் பகுதியில் கருணாநிதியின் பிற குடும்பத்தாரும் ஊழல் விவகாரங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

குடும்பம் 
மனைவிகள்

பத்மாவதி
ராசாத்தி அம்மாள்
தயாளு அம்மாள்
மகன்கள்

மு. க. முத்து
மு. க. அழகிரி
மு. க. ஸ்டாலின்
மு. க. தமிழரசு
மகள்கள்

செல்வி
கனிமொழி
மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் (2007), (2009)-2011 தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். மு. க. அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக இருந்தவர். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.

இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.

திரைப்படப் பணி
கதை / வசனம் எழுதிய திரைப்படங்களில் சில[தொகு]
கண்ணம்மா
மண்ணின் மைந்தன்
பராசக்தி
புதிய பராசக்தி
மந்திரிகுமாரி
பாலைவன ரோஜாக்கள்
நீதிக்கு தண்டனை
பாசப் பறவைகள்
பாடாத தேனீக்கள்
பாலைவனப்பூக்கள்
மனோகரா
உளியின் ஓசை
பூம்புகார்
இளைஞன்
மேடை நாடகங்கள்
சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்
நச்சுக் கோப்பை
புத்தகங்கள்
குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
‎பாயும் புலி பண்டாரக வன்னியன்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்கத் தமிழ்
பொன்னர் சங்கர்
திருக்குறள் உரை
‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
உலகக் கலைப் படைப்பாளி
உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின் முதல்வராக, 2009ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

கடந்த 9. அக்டோபர் 2009 அன்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்களின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளான அன்று, அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், அதன் தலைவர் வி. சி. குகநாதன் தலைமையில், சம்மேளனத்தின் நிர்வாகிகள் கருணாநிதிக்கு உலகக் கலைப் படைப்பாளி என்ற விருதை வழங்கினர்.

கருணாநிதி தனது 17 வயதில் இருந்து 86 வயது வரை தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். 1947ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் ராஜகுமாரி என்ற தமிழ் திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதினார். அவர் எழுதி இப்போது சினிமாவாக தயாராகிக் கொண்டிருக்கும் பொன்னர் சங்கர் அவரது 74வது படைப்பாகும். இதை பாராட்டும் வகையில் பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவும் நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


கலைஞர் கருணாநிதி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி! ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும்  புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.




*டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க!.


*’ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.


*தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.


*தினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்!.


*அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்!.


*கருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்!.


*ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை!.


*தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.


*சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.


*ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.


*கோபாலபுரம் வீட்டில் செயல்மணி, அறிவாலயத்தில் நீலமேகம் ஆகிய இருவரும் தான் கருணாநிதிக்கு உதவியாளர்கள். இருவருக்கும் வயதாகி விட்டதால், புதிதாக நித்யா என்ற இளைஞர் நியமிக்கபட்டு இருக்கிறார்!.


*ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.


*பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.


*கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும்  சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.


*ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.


*பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.


*சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.


*’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’  கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.


*12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.


*புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.


*படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.


*கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும்  கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.


*கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.


*கருணாநிதிக்குப்  பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.


*தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!.

திங்கள், 2 ஜூலை, 2018

யுகம் கடந்த பாடசாலை தோழர்கள் கூடி மகிழ்ந்த இரு நாட்கள்

This note is published. Edit note
நியங்களில் இருந்து அகம் நிரம்பித்தந்த
நெஞ்சுணர்வில் எப்பொழுதும்
நினைவலைகளில் தித்திக்கும்
நிழல் பாடசாலை நட்ப்பு




புலம்பெயர்ந்து நம் வாழ்வில் எத்தனையோ கோடி மகிழ்ச்சியான தருணங்களை கடந்து சென்றிருந்தாலும் அது நம் தோழர்களுடன் கூடி கழித்த சிலமணிநேரங்கள் மகிழ்ச்சிக்கு ஈடாகுமோ .....

குட்டிசுவற்றின் மேல் அமர்ந்து குட்டிகதைகள் பேசி அரட்டை அடித்ததில் தொடங்கி தேநீர்விடுதியில் மறைவாக நின்று ஒரு புகயிலைசுருள் வாங்கி நட்போடு பகிர்ந்த்திளுத்த நினைவு ...



பாடசாலை பெண்கள் சாலையில் செல்லும் போது கூடி சண்டையிட்டு பார்வையால் ரசித்தது...
எப்பவும் எங்கள் ஹிரோ தனது ஆடம்பர துவிச்சக்கரவண்டியில் வந்து எங்களுக்கு இலவச விருந்தோம்பல் செய்யும் நண்பன்
தனக்கு பிடித்த பெண்களுக்கு தான் விரும்பிய கண்டோஸ் வாங்கிக்கொடுத்து மகிழ்ந்த நாட்க்கள் ...



காதலிக்கும் பெண் தன் விருப்பத்தை தெரிவித்த கடிதம் அண்ணனின் கையில் பிடிபட்ட தருணம் ...
அதே பெண் தன் நண்பனின் காதலியாக மாறிவிட்டால் அவளை தன் தமக்கையாக பாவித்து
பாசமலரானது......

சினிமா கொட்டகையில் சேர்ந்து சென்று அப்பாவிடம் சிக்கி தர்மஅடிவாங்கி நண்பனிடத்தில் மச்சான் வலி எப்புடிடா இருக்கு என்று கேள்வி வினவி அந்த வலியிலும் கூடி சிரித்தது......
முதல் முதல் களவாக பார்த்த படத்தின் பாடல்கள் படி மகிழ்வு ...



ஆசிரியர் இருந்து சக தோழர் வரை புனைப்பெயர் வைத்தவர் யார் என்று அறிந்து மகிழ்வு
^நாங்க எல்லாம் அந்த காலத்துல^ என்று போதனை செய்ய வரும்ஆசிரியர்களை ^நாராயணா இந்த கொசுதொல்ல தாங்கலடா^ என்று குறும்பு செய்தது..
ஒரேவகுப்பறை தோழர்கள்


மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை புகழ்பெற்ற நினைவு சுவடு அனுபவப்பகிர்வு....
முற்சந்தி நிலவொளியில் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டே அறடடை அடித்த நேரம் இலங்கை இராணுவத்தின் கொடுபிடியில் பிடியின்றி தப்பித்த நாட்க்கள்....
எங்கும் காக்கை கூட்டம்போல ஒன்றாக சுற்றித்திரிந்தது



சிறுவயதில் இருந்து ஒரே வகுப்பறையில் படித்த தோழர்கள் பிரிவு கொண்ட போராட்ட அமைப்புளுடன் இணைந்து வாழ்ந்த அனுபவப்பகிர்வு .....
நண்பனின் மரணம் அவன் பெற்றோர் கொண்ட துயர்
வயோதிபர் இல்லத்தில் இருக்கும் ஆசிரியரை ஒன்றாய் சென்று சந்தித்து மகிழ்வு
சிறு சிறு நினைவு விவாத சண்டைகள் இட்டு பின் பிரிவின் வலியை உணர்ந்து கூடி திளைத்து......




ஒரு யுகம் கடந்து மீண்டும் இந்த இரு நாட்கள் புது உணர்வுகள்
இதைவிட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்வில் கிடைக்குமா? எப்போதும் இப்படியே வாழ்ந்துவிட வேண்டும் என்று மனது நினைக்கிறது , ஆனால் காலமோ நம்மை இதனை கடந்து செல்லவைத்து அதனை வெறும் நினைவலைகளாக மட்டும் உலாவர


செய்கிறது......
நன்றி ஒருங்கிணைப்பு நண்பர்கள் குட்டி ,வினோ உடன் பவான்
பாடசாலை நட்பின் சுகம் வேறு எதிலுண்டு கூறுங்கள் தோழர்களே .......
















அன்புடன் நண்பன் நரேன்

வியாழன், 28 டிசம்பர், 2017

காட் பாதர்- 1 - உலக சினிமா

காட் பாதர்- 1 - உலக சினிமா

                              
      "காட் பாதர்-  1 " 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட்   இயக்கத்தில்  மர்லன் பிராண்டோ , அல் பாசினோ நடிப்பில் வெளி வந்த ஆங்கில படம்..... 'நாயகன்" இல் ஆரம்பித்து வரப்போகும் "மங்காத்தா"  வரை இந்த படத்தின் பாதிப்பில்லாமல் எந்த ஒரு "தாதா" படமும் எடுக்கப்பட்டதுமில்லை , இனி மேல் எடுக்கப்போவதுமில்லை....

       " காட் பாதர்-  1 " நிச்சயம் இப்படத்தை நிறைய பேர் பார்த்திருப்பார்கள் ...ஆனாலும் பார்க்காதவர்கள் ஏராளம்...அவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று...இன்று ஹீரோயிசத்தை முன்னிறுத்தி எடுக்கப்படும் எல்லா படங்களுக்கும் ஒரு முன்னோடி இப்படம் ...

     இதில் டானாக நடித்த பிராண்டோ மற்றும் அல் பாசினோ நூறு பேரை அடிக்கவில்லை பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசவில்லை ..படத்தில் பெரிதாக ரத்தம் சொட்டவில்லை ..முகம் சுளிக்கும் வன்முறை இல்லை ... ஆனாலும் இதெல்லாம் ஏற்படுத்தாத சிலிர்ப்பும் பாதிப்பும் படத்தில் உண்டு .....
.
       சிறு வயதில் இட்டாலியில் இருந்து ஓடி வந்து அமெரிக்காவின் பெரிய டானாக உருவாகிறார் பிராண்டோ .....முதல் காட்சியிலேயே அவரின் அரசியல் செல்வாக்கும் பலமும் , அதே நேரத்தில் அவர் நட்பிற்கும் , குடும்பத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவமும் தெளிவாக சொல்லபடுகிறது ...மூத்த பையனும் , தத்து பையன் சாமும் பிராண்டோவின் உடன் இருக்க கடைசி பையன் பாசினோ இதில் எதுவும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் ...

      சூதாட்டம், கட்டை பஞ்சாயத்து இதை டான் தொழிலாக செய்தாலும் போதை பொருட்களை விற்பனை செய்ய இவரின் உதவி கேட்டு வரும் பெரிய பணக்கார குடும்பத்தை பிராண்டோ மறுக்கிறார் ..இதில் ஆத்திரம் அடையும் அவர்கள் டானை கொல்ல முயற்ச்சிக்க அதில் இருந்து உயிர் பிழைக்கிறார் .......இருந்தும் கொலை முயற்சி தொடர்கிறது ..
                 
                                  
       எதிரிகளை ஒன்றும் செய்ய முடியாது என மற்ற சகோதரர்கள் நினைக்க பாசினோ முடியும் என்கிறார் ... அவர் திட்டப்படி சமரசம் செய்ய போகும் இடத்தில் முன்பாகவே மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து எதிரிகள் இருவரையும் சுட்டு தள்ளுகிறார் பாசினோ.....

        பிறகு அங்கிருந்து வெளியூர் செல்லும் பாசினோ ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறார் .காதல் மலர்கிறது ...திருமணமும் முடிகிறது ......இவருக்கான கொலை முயற்சியில் இவரின் மனைவியும் இறக்கிறார்...இதற்கிடையில் எதிரிகள் இவரின் அண்ணனின் கதையை முடித்து விடுகிறார்கள் ....
ஊருக்கு திரும்பிய பாசினோ பழைய காதலியை சந்திக்கிறார் ..மணம் முடிக்கிறார் ....குழந்தையும் பிறக்கிறது .... பிராண்டோவும் முழு பொறுப்பையும் பாசினோவிடம் கொடுத்து விட்டு சிறிது காலத்தில் இறந்து விடுகிறார் .
.
        பாசினோ தனது தந்தை மற்றும் அண்ணன் சாவிற்கு பழி தீர்க்க எந்த சபதமும் எடுக்கவில்லை ஆனால் தனது குழந்தையின் பெயர் சூட்டும்  விழா முடிவதற்குள் இதற்கு காரணம் ஆன ஐவரின் கதையையும் முடிக்கிறார் .....இதில் இவரின் சகோதரியின் கணவரும் உண்டு ....

      பாசினோவை தேடி அனைவரும் வருகிறார்கள் ...இவரை டானாக முழு மனதுடன் ஏற்கிறார்கள் ...இதனால் மனைவியிடம் விரிசல் ஏற்படுகிறது .அத்துடன் படமும் முடிகிறது.........
                             
        இப்படத்தில் பிராண்டோ பேசும் ஒரு வசனம் மிக பிரபலம் ..." IAM GONNA GIVE HIM AN OFFER WHICH HE CANT REFUSE " ..பெரிய டானாக இருந்தாலும் மனைவி,மகன், பேரன்,பேத்தி என பெரிய குடும்ப சூழலில் வாழ்வது , போதை பழக்கம் இளைஞர்களிடம் பரவ கூடாது என தடுப்பது ....தனக்கு வேண்டிய ஹீரோவிற்கு சான்ஸ் தர மறுக்கும் தயாரிப்பாளரை வழிக்கு கொண்டு வர அவருக்கு பிடித்த மிக விழை உயர்ந்த குதிரையின் தலையை அவருக்கே பரிசாக கொடுப்பது , சாவதற்கு  முன் பேரனுடன் கொஞ்சி  விளையாடுவது   என எல்லா இடங்களிலும் பிராண்டோ மனதில் நிற்கிறார் .....

        யதார்த்தமான நடிப்பு என்ன என்பதை பாசினோவிடம் தான் கற்க வேண்டும் எடுத்த எடுப்பில்லேயே காதலியின் தந்தையிடம் பெண் கேட்கும் தைரியம் ,மரண படுக்கையில் இருக்கும் அப்பாவை காப்பாற்ற காட்டும் தவிப்பு ,... எதிரிகள் அனைவரையும் அழிப்பதற்கு அவர் போடும் சாமர்த்தியமான திட்டம் இப்படி நிறைய இடங்களில் அவரின் கண்களே பேசி விடுகின்றன ........
.
         இப்படத்தில் இருந்து உருவி எடுக்கப்பட்ட படங்கள் ஏராளம் ..அதில் முக்கியமானவை நாயகன் மற்றும் சர்கார் ...மணி கதை கருவை அப்படியே எடுத்திருந்தாலும் சில காட்சிகள் புதுமையாக செய்திருப்பார் ..அதிலும் ஒளிப்பதிவு , இசை,வசனம்,திரைக்கதை  போன்றவைகளில் இன்றும் இந்த
 படம் ஒரு முன்னோடியாக இருக்கிறது ..ஆனால் சர்க்கார் அப்படியே எடுக்கப்பட்ட படம்....

        போலீஸ் அதிகாரி தன் பெண் கற்பழிக்கப்பட்டதை கமலிடம் சொல்வது , வியாபார விஷயத்தில்  ரெட்டி குடும்பம் நாயகனிற்கு எதிராவது , போன் பூத்தில் வைத்து நிழல்கள் ரவி கொல்லபடுவது , கமலின் மனைவி கொல்லபடுவது ( GOD FATHER2 ) , காரின் பின் சீட்டில் இருந்து எதிரியின் கழுத்தை நெரித்து கொல்வது , கமலின் நடிப்பு என நிறைய காட்சிகள்  இப்படத்தின் பாதிப்பு .முன்பே சொன்னது போல சர்கார் படமே " GOD FATHER " தான் .....
 
      இந்த இரண்டு படங்களையும் தவிர  குறிப்பாக சொல்ல வேண்டிய மற்றொரு படம்  தேவர் மகன்"..ஆனால் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக தெரியாமல் கமல் மிக புத்திசாலித்தனமாக கதைக்களத்தையும் , சூழலையும் மாற்றியிருப்பார்.

       சினிமா ஆர்வமுடைய ஒவ்வொருவருடைய வீட்டையும் அலங்கரிக்க வேண்டிய முக்கியமான டி.வி.டி தொகுப்பு காட் பாதர்.. காட் பாதர் -2 விமர்சனத்துடன் அடுத்த முறை சந்திக்கலாம்... உலக சினிமா

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

விரும்பிய வரிகள்

காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய உன் இமைகளின் தாக்கம் மெல்லியதாய் கேட்டது என்னிடம் உன் இதயத்தை தருவாயா.....! என்று



இறுதியாக ஒரு கவிதை எழுது என்றால்

உயிர் மூச்செடுத்து ஒரு கவிதை எழுதுவேன்




என் இறுதி ஊர்வலத்தில்
பூக்களை தூவாதிர்கள் முட்களை தூவுங்கள்
அப்பொழுதாவது என்னை
பின் தொடராமல் இருப்பாள்-அவள்
என் நிம்மதியை கெடுக்க


சிரிதுகொண்டிருப்பது என் இதழ்கள் மட்டும் தானடி உன்னையே நினைத்து அழுதுகொண்டிருக்கும் என் இதயத்தின் வலி தெரியாமலே போகட்டும் உனக்கு


உன்னை பார்க்காதபோது என் சிந்தனைகள்
சிதைந்து போகின்றது ... இதை நீ அறிவாயா .


காதலை சொல்ல உதடுகள் வேண்டும்
என நினைத்திருந்தேன். கண்ணீர்த்துளிகளை
கண்டபிறகு தெரிந்துகொண்டேன்....
காதலை சொல்ல கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று....



கனவுகள் எனக்கு பிடிக்கும் ... நீ வருவதால் .. கண்ணீர் எனக்கு பிடிக்கும் .. உனக்காக வருவதால்... தனிமை எனக்கு பிடிக்கும்.. உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்...





ஒருவர் இதயத்தில் இன்னொருவர் வாழ்வது காதல்,ஆனால் ஒருவர் இன்னொருவரின் இதயமாக வாழ்வது நட்பு 




பிரிந்துவிட்டால் இறந்து விடுவோம் இது love " "இறந்து விட்டால் மட்டுமே பிரிந்துவிடுவோம் இதுதான் friendship.....




நண்பர்கள் யாரும் மீண்டும் பிரபதில்லை , நட்புகள் என்றும் இரபதில்லை , உன் நட்பை நான் ஒருபோதும் மறப்பதில்லை , என்றும் நட்புடன் உன் .........




காதலைவிட நட்பு சிறந்தது காதல் சில காலம் தான் இனிக்கும் ஆனால் நட்பு உயிர் உள்ள வரை இனிக்கும்


காதல் என்பது காற்றாடி போல பறந்து விடும் ஆனால் நட்பு என்பது நடைபாதை போல தொடர்ந்து வரும்

உன் நினைவால் உன்னை பார்க்க வந்தேன் என்பதற்காக,
பாதையை மாற்றினாய்!
உன்னுடன் தான் நான் இருக்கின்றேன், என்பதை மறந்து.
உன்னிடம் பேச வந்தேன் மறுத்துவிட்டாய்,
உன் நினைவுதான் என்னை பேச வைக்கிறது, என்பதை மறந்து.


தூண்டிலில் சிக்கிய மீனாய் சிக்கி தவிக்கிறேன்....
என் இதயத்தில் உன் பார்வை பட்ட நாள்முதல்.


மாயம் செய்யவில்லை... மயங்கிவிட்டேன்.... நீ பார்த்த ஒரேஒரு பார்வையில்.

கண்கள் உன்னை கண்டதும் கவலைகள் பறந்தன
கண்ணீர் மறைந்தன புன்னகை பூத்தது முழு நிலவுடன்-என்
வாழ்க்கை பயணம் தொடந்தது- ஒரு தலை காதலுடன்



தென்றலை நேசித்தேன் புயல் வரும் வரை...!பூக்களை நேசித்தேன் வாடும் வரை...!நிலவை நேசித்தேன் விடியும் வரை...!உன்னை நேசித்தேன் என் உயிர் போகும் வரை...!


இறக்கப் பிறந்த இதயம் ஏனோ துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்
உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ துடிக்க மறுக்கின்றது உன்னைக் காணாத பொழுதுகளில்


காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும்
பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்றஆசை




நீ பிரிந்தற்காக வருந்தவில்லை புரிந்து கொள்ளாமல் சென்றுவிட்டாய் என்பதுதானே என் வருத்தம்......

பிரிவு என்பது மறக்க முடியாத சோகம் கண்ணீரால் நடத்தப்படுகிற யாகம்....



எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும் உள்ளம் திறந்து உண்மை வடித்து உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட உன்னையே நாடும் என் மனம்!



நெஞ்சம் ஏனோ கலங்குது கரணம் சொல்ல நானறியேன்!!
வீட்டின் முற்றத்தில் தள்ளாடும் சிட்டு குருவின் கூட்டை போல் என் மனமும் தள்ளாடுது! தாங்கி கொள்ள யாரும் இன்றி ..



நீ நடப்பது என்னவோ நிலத்தில் தான் ஆனால் அதிர்வுகளை என் இதயத்தில் உணருகிறேன். காத்திருத்தல் சுகம் அதுவும் உனக்காய் காத்திருத்தல் தவம். என் இதயத்தில் உன் பெயர் எழுதி என் உதட்டில் கையொப்பம் இட்டவன் உனக்காய் அழுது என் கண்கள் வறட்சி கொண்டது உன் நினைவுகள் தடுக்கி விழுந்தே நான் காயம் கொள்கிறேன் மருந்தாய் வா விடை சொல்ல வா



நிழலும் நிஜம் தான்...வெளிச்சம் உள்ள வரை... காதலும் நிஜம் தான்... நீ என்னை நினைக்கும் வரை... நீ இன்றி நிழலும் துணை இல்லை... மீண்டும் நீ என்னை தொடரும் வரை... கரைக்கு ஈரம் அலைகள் அடிக்கும் வரை... பெண்ணே உன் நினைவுகள்... என் இதயம் துடிக்கும் வரை...



எத்தனை முறை சொன்னாலும் எப்படி சொன்னாலும் எழுதிவைத்து சொன்னாலும் எழுதாமல் சொன்னாலும் என் இதயம் உனக்காகத் துடிக்கிறது



இமை இல்லாமல் கண் இல்லை... இரவு இல்லாமல் பகல் இல்லை...: இதயம் இல்லாமல் சுவாசம் இல்லை. நீ இல்லாமல் நான் இல்லை..



பணம் உலகத்தை கவரும்,
அழகு உள்ளத்தை கவரும்,
என்னால் இந்த உலகத்தையும் கவர முடிய வில்லை, அவள் உள்ளதையும் கவர முடியவில்லை,
ஏன் என்றால் எனக்கு இந்த இரண்டுமே இல்லை....



எத்தனையோ நிகழ்வுகள் உருவாக்கியிருக்கலாம் நம்மில் சச்சரவுகளை.. உன்மீது நான் கொண்ட நட்போ என்மீது நீ கொண்ட அன்போ.... எது தடுத்ததெனத் தெரியவில்லை. எதிர்பார்த்தேன் உன் இதழ்களில் சிறு புன்னகையொன்றை..... ஆனால், செவியில் விழுந்த வார்த்தைகளோ கல்லாகி உடைத்தெறிந்தது - "என் கண்ணாடி போன்ற மனதை..............



சாஜஹான் தன காதலிக்காக அன்று ஒரு நாள் தாஜ் மகால் கட்டினான் ,, என்னுயிரே நான் உனக்காக தாஜ் மகால் எல்லாம் கட்டுவேன் என்று பொய் சொல்ல வில்லை நான் உனக்காக என் உயிரை தருகிறேன் நீ எனக்காக உன் இதயத்தை தருவாயா



பெண்ணே தாலிக்கட்டி உன்னை தாரமாக்க நினைத்தேன் நீயோ... வேறொருவனை மனதில் நினைத்துக்கொண்டு என்னை தாடிக்காரனாய் மாற்றிவிட்டாய இது நியாயமா 



வாழ்கையில் ஒரு அழகான பொண்ண காதல் பண்றத விட நம்ம வாழ்கை அழகா வச்சுகுற பொண்ண காதல் பண்றதுதான் நல்லது..



காதலித்துபார் வாழ்கை புதிதாகவும்
காதலித்து தோற்றுபார் உலகமே உனதாகும்
தோல்வி உன்னை வெற்றிஇன் விளிம்பிற்கு அழைத்து செல்லும் !!!!!!!



நீயும் நானும் கைகோர்த்து நடந்தால் அதை காதல் என்று சொல்லும் இந்த சமுதாயத்திற்கு என்ன தெரியும் நீயும் நானும் நட்பு என்னும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்று,,,,,



நான் சிரிக்கும் போதெல்லாம் உன் இதயம் திறக்கவில்லை நீ சிரிக்கும் போதெல்லாம் என் இதயம் என்னிடம் இல்லை



உன்னை நிழலாய் தொடர நினைக்கும் என் நட்பு உன் இதயம் தன்னில் மறைந்து கொண்ட சோகங்களை தோண்டி எடுத்து என்னுள் புதைத்து கொள்ள விரும்புகிறது நான் பார்க்க நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!



எனக்குள் வாழ்ந்து கொண்டு எனக்காய் துடிக்கும் உனது நட்பின் ஆழம் கண்டு கண்ணீர் வடிக்கிறேன் என் அருகில் நீ இல்லை என..



ஆயிரம் உறவுகள் எல்லோருக்கும் அன்பான உறவு நட்பு மட்டுமே.. பொறுமையாய் பாசமாய் ஆறுதலாய் அரவணைக்க நட்பு இருக்குமே ஆனால் நம்மை விட அதிர்ஷ்டசாலி யாரோ??நட்புக்கு அர்த்தம் அறிந்து பழகுங்கள்.. நட்பை அறியாமல் பழகி நட்பை அழித்து விடாதீர்கள்....



உன்னை காணாமல் என்னை விட்டு பிரியமாட்டேன் , என்கிறது என் உயிர் !

நிம்மதி இல்லாமல் துடிக்கிறது உன்னையே நினைத்து என் நெஞ்சம் !



மனதினுள் வைத்தால் தொலைந்துவிடும் என்று உன் இதயத்தை என் இதயத்தினுள் வைத்தேன் பத்திரமாய்! நீயோ என் இதயத்தையே அறுத்து உன் இதயத்தை எடுத்துச் செல்கிறாய்!!



கண்ணை காப்பது இமைதானடி
காதலின் சுகம் இதயத்தின் வலிதானடி
ஒரு முறை பார்த்தால் போதும்
ஆயுள் வரை சுகம் நீளும்
இறந்தாலும் மீண்டும் பிறப்பேன்
உன் காதலனாக மட்டும்
உன் காதலுக்காக மட்டும்



கண்களின் அனுமதி கேட்டா நான் உன்னைப் பார்த்தேன்?

இதயத்தின் அனுமதி கேட்டா நீ உள்ளே வந்தாய்?
நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நம்முள் வந்தது?

இப்போது யார் அனுமதி கேட்டு என்னை நீ பிரிந்தாய்???



கவிதை எழுதினேன் உன் அழகை பற்றியே மொழியை திருப்பினேன் உன் வடிவாமாக்கியே கனவு காண்கிறேன் உன்னுடன் வாழவே பகல் கனவாய் போவதற்குள் பதில் ஒன்று சொல்லிவிடேன்



நிலா தேய்வதால் வானம் வருத்தப்படுவதில்லை...
பூக்கள் உதிர்வதால் செடிகள் புலம்புவதுமில்லை...
மழையில் நனைவதால் மரங்கள் குடை பிடிப்பதுவுமில்லை...
மதங்கள் வேறுபடுவதால் மனிதம் மாறுவதுமில்லை...
நம்பிக்கை தொடர்வதால் தோல்வி வெற்றியின் வேரறுப்பதுமில்லை..
அதே போல் உன் மௌனத்தை கலைப்பதால் உன் உயிர் உன்னை விட்டு பிரிவதும் இல்லை ...
கலைத்து விடு பெண்ணே உன் மௌனத்தை 



நீ பேசுவதெல்லாம் நிஜம் என்று நினைக்கும் என்னிடதிலா நிஜமாகவே நீ மௌனமா இருக்கிறாய்



உயிர் போகும் வலி
உன் நினைவுகள் என் நெஞ்சில் உளியாய்
செதுக்கியது காதலை மட்டுமல்ல
உன் உருவையும் தான்



சிலிர்க்க செய்யும் காற்று மெல்ல எட்டிபார்க்கும் சூரியன் கரையை அலசும் நதி சுமக்க முடியாத உன் நினைவுகளுடன் காத்திருக்கிறேன் இன்னமும்



நீ வேறு, நான் வேறல்ல என்பதாய் வளர்ந்தது நம் நட்பு நினைத்துக் கூட பார்க்கவில்லை நீ என்னை பிரிவாய்யென்று என்னை நீ மறந்ததை நினைத்து துடித்துப் போகிறேன்!



நான் உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம்
என் உயிரையும் தாண்டி சென்று விட்டது உன் நினைவுகள்
உன்னை மறப்பதா என்னையே மறப்பதா முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறேன்
உன்னை மறக்க நினைத்தால் என்னையே மறக்க செய்கிறது உன் நினைவுகள்



கடவுளைத் தேடித் தேடி தேய்ந்து போனது கால்கள்!
காண முடியாமல் காய்ந்து போயின கண்கள்!
இறுதியில் இமைகளை மூடிக் கொண்டு தேடினேன்!
ஞானம் பிறந்தது... பத்து மாதங்களாய் கருவறையில் காத்து பெற்று வளர்த்த தாயே கடவுள்..!



என் உயிரை எடுத்துக்கொண்டு என்னை விட்டு போனவளே என் இதயத்தை கிழித்துவிட்டு நிம்மதியாய் சென்றுவிட்டாய்... உன்னையே உலகம் என நம்பும் நான் உனக்காக சாவதா? என்னையே உலகம் என நம்பும் என் குடும்பத்துக்காக வாழ்வதா?



கண்ணை காப்பது இமைதானடி
காதலின் சுகம் இதயத்தின் வலிதானடி
நீ ஒரு முறை பார்த்தால் போதும்
என் ஆயுள் வரை அந்த சுகம் நீளும்
இறந்தாலும் மீண்டும் பிறப்பேன்
உன் காதலுக்காக மட்டும்
உன் காதலனாக மட்டும்



பல நாள் உன் பதிலுக்கு காத்திருந்து...
பல பொழுது உன் வரவுக்கு காத்திருந்து...
பல நேரங்களில் உன் அன்புக்கு காத்திருந்து...
பல இரவுகளில் உன் அணைப்பிற்கு காத்திருந்து...
நான் வாழும் நாள் வரை உன்னுடன் வாழ... உனக்காக காத்திருக்கிறேன்.



 நாம் ஒன்றாய் கழித்த அந்த நினைவுகளை என் இதயத்தில் செதுக்கி விட்டேன்.. என் கனவுகளை கவிதைகளாக வரைந்து கண்ணீரில் கரைக்கிறேன். யாருக்கும் தெரியாமல் என்னுயிரில் கலந்த உன்னை மட்டும் பிரிந்து செல்ல நினைக்காதே…… நானில்லாமல்நீயிருப்பாய்……… ஆனால்….. நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….



உன்னை பிரிந்தால் உயிர் பிரியும் நிலையில் நானிருப்பேன் என்று தெரிந்தும் நீ பிரிந்து சென்று விட்டாய்



மனதுக்கு பிடித்தவர்களை பார்க்காமல் -கூட
இருந்து விடலாம் .......! - அனால்
நினைக்காமல் ஒரு போதும்
இருக்க முடியாது ......!
என்றும் உன் நினைவில் நான்.



காலையிலும் மாலையிலும் கனவிலும் நீ தானடி ...உறவிலும் உறக்கத்திலும் உயிரே நீதானடி ....காதல் வேண்டுமா..? கவிதை வேண்டுமா ..?கவிதை தான் வேண்டும் எனக்கு காரணம் என் கவிதையே நீதானடீ



என் தேவதையே நீ இன்றி என் இதயம் இறந்து கொண்டிருக்கின்றது நீ வந்து உயிர் கொடுப்பாயா அல்லது தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பாயா...? உன் வருகையை மட்டுமே எதிர் பார்த்து கொண்டு என் இதயம் அனாதையாக அழைத்து கொண்டிருக்கிறது



உயிருள்ள்ள ரோஜா பூவே உனக்காக பிறந்தவன் நான் நீ என்னை விட்டு போனால் என் இதயம் தாங்காது
என் இதயம் என்ற தோட்டத்தில் பாசம் என்னும் பூக்களை வளர்த்தேன்.,,அந்த பூக்கள் கூட வாடிப்போகும் நீ என்னை விட்டு போனால் ...
நான் ஒரு ஏழை என்பதக்காக என்னை விட்டு பிரிந்து செல்கிறாய் பெண்ணே என் இதயம் ஏழை அல்ல என்பதை நீ மறந்து விட்டாய் ,,, பெண்ணே உன்னை நினைத்து உருகுவது என் இதயம் மட்டுமல்ல என் உயிரும்தான் ....



உன் நினைவுகள் என் நெஞ்சினில் புதைந்ததினால் தீயால் என் நெஞ்சை சுடுகின்றேன் ....உன் உருவம் என் கண்களில் பதிந்ததினால் கண்ணீர் விட்டு அளிக்கின்றேன்.....பெண்ணே உன் தாய் தந்தைக்காக என்னை விட்டு பிரிந்து விட்டாய் ..... என் காதலை பழைய காகிதம் போல் தூக்கி எரிந்திட முடிந்தது .. ஆனால் என்னால் முடியவில்லை உன்னை மறக்கவும் உன்னைவெறுக்கவும் ..... இப்போதெல்லாம் எனக்கே என்னை பிடிக்கக வில்லை



கனவுகள் இல்லாத கண்களும் இல்லை ...உணர்வுகள் இல்லாத உயிரும் இல்லை ..பிரிவுகள் இல்லாத உறவுகள் இல்லை ...நட்பு இல்லாத இதயமும் இல்லை ....காதலிக்காத ஜீவனும் இல்லை 



கண்கள் அசையவில்லை,,, உதடுகள் பேசவில்லை,,, காதுகள் கேக்க வில்லைஅனால் இதயம் மட்டும் துடிக்கிறதடி அன்பே உன்னை காணாததால்



உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது,,, உந்தன் அன்பில் வாழ்வதுக்கு ஜென்மன் ஒன்று போதாது ..நீ என்னை சேர்த்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சுவர்க்கம் ஆகுமே



உலகமெங்கும் காதல் இல்லாத இடமும் இல்லை அது நுழையாத மனமும் இல்லை ...சிலறது காதல் பேசும் காதல் ,, சிலறது காதல் மௌன காதல் ,, சிலறது காதல் சேர்த்திடும் காதல் ,, சிலறது காதல் பிரிந்திடும் காதல் ,,,சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,,யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...,சொல்லாத காதல் செல்லாத காசாய் ஆக முன்பே உன் காதலை சொல்லிவிடு



பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என் கண்களுக்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றன ... ??? ... கனவாக அல்ல ... ??? <<<... கண்ணீராக ... >>>



மலர்ந்த உன் நினைவுகளை பறித்து வீச நினைத்தேன் மனமில்லை ஆனால் உயிரோடு நீ கலந்ததால் சேமிக்கிறேன் என் சின்ன இதயத்தில் உன் இனிய நினைவுகளை மலரும் நினைவுகளாய்.....


உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்

காதல் நூலகத்தில் மௌனத்தின் அர்த்தத்தை அறிமுகப்படித்தியவள் நீ ! 
சிறகுகள் இல்லை என்றாலும் நீ என் தேவதை தான், 
செயற்க்கைகோளை போல உன்னை சுற்றியே என் கண்கள் படம் பிடிக்கின்றன, 
உன்மௌன மொழிக்கு ஒரு நிமிடம் விடுமுறை கொடுத்து சொல்லிவிடு, உன்காதலை!

என் இதயமே நீ தான் உன் மூச்சு காற்றில் தான் தான் என் இதயமே துடிக்கிறது பெண்ணே

உன் புன்னகையில் பூத்த காதல்-ஒரு
கண்ணீர் துளியில் கலந்து பிரிந்தாலும். காற்றிருக்கும் வரை-என் காதல் காத்திருக்கும்-என் இதயம்



நீ..!!! எனக்கு வேண்டும்.. நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்....

வானவில்லின் அழகு சிறிது நேரம் தான் 
ஆனால் உந்தன் நினைவுகள் என் காலம் முழுவதும்..!

உன்னுடன் வாழ்வதற்கும் , 
உன் நினைவுகளுடன் வாழ்வதற்கும், 
ஒரு-சிறு வித்தியாசம் தான்..., 

உன்னுடன் வாழ்வது --"வரம்" 
உன் நினைவுகளுடன் வாழ்வது--"தவம்

நீ பிறக்காமல் இருந்திருந்தால் 
நான் உன்னை நினைக்காமல் இருந்திருப்பேன் 
நீ பிறந்து விட்டதால் நான் இறந்து கொண்டிருக்கிறேன்

உன் சிரிப்பை பார்த்தேன், என் சிந்தனைகளில் கலந்தாய்.. 
உன் கண்ணை பார்த்தேன் என் கனவில் கலந்தாய். . எப்படி என்னுள் கலந்து இருக்க 
உன்னை பிரிந்த நாட்கள் மட்டும் எனை கலங்க செய்தாய்.