ஞாயிறு, 23 மே, 2021

 



வாழ்வே பயணம்
நடந்தேன் சுவைத்தேன்
காணும் பொழுதில்
மறைந்தேன் திரிந்தேன்

இடறி விழுந்து முட்டி உடைந்த பிறகு
மீண்டெழுந்து தவழ்தேன் நகர்ந்தேன்
இதயம் மருந்து போட்ட பிறகு துணிந்து
நிமிர்ந்து பறந்தேன் திகைத்தேன்

மீன்கள் மூழ்கும் கடலில் விழுந்தே
நீச்சல் தன்னை பயின்றேன் கை
முள்ளில் தைத்த பின்பே
பூவின் தேனை ருசித்தேன்

மரங்கள் தாண்டி மலைகள் தாவி
பூமியோடு சுழற்ன்றேன் ஓடி
காற்று கண்ணம் கிள்ள இந்த
உலகைக் காண விரைந்தேன்

அளமியம் பறவை பறந்து செல்ல
அதில் உள்ள அனைவரும் என்னைப்
பார்ப்பதுபோல் வானம் பார்த்துக்
கையசைத்து நகைத்தேன்

என்னைப் போல நிழல் ஓடி
ஆடுவதைக் கண்டு துணையின்
அருமை உணர்ந்து நாளும்
நட்பைத் தேடி அணைத்தேன்

என் கால்களை நானே இடறிக் கொண்டு
அதில் இருந்து மீண்டு வருவதையும்
கேளி செய்து கை தட்டிச் சிரித்து
என் தவறுகளை ரசித்தேன்

பிறர் மனதில் என்னைக் காண
அதை யூகித்துக் கணித்து சலித்து
என் உள்ளத்தில் என்னைக் கண்டு
என்னை மீட்டு எடுத்தேன்

என் உலகின் தோளில் கைபோட்டு
மனக் கண்ணாடியின் கறை துடைத்து
எங்கும் மகிழ்வை மட்டும் நிறைத்து
இந்தப் பயணம் கடக்கின்றேன்

வாழ்வே பயணம்
நடந்தேன் சுவைத்தேன்
காணும் பொழுதில்
மறைந்தேன் திரிந்தேன்

இடறி விழுந்து முட்டி உடைந்த பிறகு
மீண்டெழுந்து தவழ்தேன் நகர்ந்தேன்
இதயம் மருந்து போட்ட பிறகு துணிந்து
நிமிர்ந்து பறந்தேன் திகைத்தேன்

மீன்கள் மூழ்கும் கடலில் விழுந்தே
நீச்சல் தன்னை பயின்றேன் கை
முள்ளில் தைத்த பின்பே
பூவின் தேனை ருசித்தேன்

மரங்கள் தாண்டி மலைகள் தாவி
பூமியோடு சுழற்ன்றேன் ஓடி
காற்று கண்ணம் கிள்ள இந்த
உலகைக் காண விரைந்தேன்

அளமியம் பறவை பறந்து செல்ல
அதில் உள்ள அனைவரும் என்னைப்
பார்ப்பதுபோல் வானம் பார்த்துக்
கையசைத்து நகைத்தேன்

என்னைப் போல நிழல் ஓடி
ஆடுவதைக் கண்டு துணையின்
அருமை உணர்ந்து நாளும்
நட்பைத் தேடி அணைத்தேன்

என் கால்களை நானே இடறிக் கொண்டு
அதில் இருந்து மீண்டு வருவதையும்
கேளி செய்து கை தட்டிச் சிரித்து
என் தவறுகளை ரசித்தேன்

பிறர் மனதில் என்னைக் காண
அதை யூகித்துக் கணித்து சலித்து
என் உள்ளத்தில் என்னைக் கண்டு
என்னை மீட்டு எடுத்தேன்

என் உலகின் தோளில் கைபோட்டு
மனக் கண்ணாடியின் கறை துடைத்து
எங்கும் மகிழ்வை மட்டும் நிறைத்து
இந்தப் பயணம் கடக்கின்றேன்

காதல் என்ற சொல்லே

                 காதல் என்ற சொல்லே



ஒரு அழகு எனலாம்.
மெல்லிய வார்த்தையில்

அத்தனை அர்த்தங்கள் !
அது புனிதமாகவும் கொள்ளப்படும்

கொச்சையாகவும் கருதப்படும்.
ஆணும் பெண்ணும் காதல்

வயப்படுவதில் தவறில்லை !
தப்பு எங்கு வருகிறது

மாற்றான் மனைவியை
நோக்கும் போது !

 

மேகத்தில் இருந்து
சீறிக் கொண்டு வரும்
மழைத்துளி போல !!
சில நேரங்களில் என்
என் சிந்தனையை
சீறிக் கொண்டு எழுகிறது
என் கவிதைகள் !!

விண்ணில் தொடங்கும் மழைத்துளி
எங்கு விழுகிறோம் என்றுத் தெரியாமல்
அலைந்துக்கொண்டிருக்கிறது அங்கும் இங்குமாய் !
அது போலத்தான்
என் கவிதைகளும் எங்கு விழுவது,யாரிடம் விழுவது
என்று தெரியாமல்
அலைந்துக்கொண்டிருக்கிறது அங்கும் இங்குமாய் !

சனி, 24 ஏப்ரல், 2021

நானும் ஒரு பாதுகாவலன் 
கையை காப்பதுடன் 
முடிகிறது என் வேலை
உன்  கர்வம் பற்றி
நான் கவலைப் படுவதில்லை !

கையுறையின் ஆதங்கம் !


 



திங்கள், 19 ஏப்ரல், 2021

 எத்தனைநாள் தான்
தனிமையில் உரையாடி
கொண்டிருப்பது
என் முகத்துடன்
காலத்தாலும் ..
தனிமையிலும் ..
மூடப்பட்ட
நானில்லாதா என்முகத்தை
சாமர்த்தியமாக பேசி
விலக பார்க்கிறேன் !


கவிதை


ஓர் இடத்தில் கவிதை என்பது
கற்பனை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணர்வு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தேடல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மகிழ்ச்சி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பசி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மௌனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வேகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தீர்வு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அன்பு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உண்மை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பொய்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கானல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊற்று.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பேச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மூச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தைகளின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கையின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விதை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விலை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணவு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
குப்பை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மருந்து.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நாதம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாளம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உயிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சுவாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
இலக்கணம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பிழை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நந்தவனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பாலை நிலம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எளிமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதுமை......
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஆடம்பரம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வலி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வழி.......
ஓர் இடத்தில் கவிதை என்பது
அமைதி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணர்வுகளின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீரின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வீரத்தின் மொழி......
ஓர் இடத்தில் கவிதை என்பது
கையாளாகாத தனத்தின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எண்ணத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சமூகத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழகு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழுகை.....
கவிதை எங்கேயும் இல்லை
உனக்குள்ளேயே இருக்கிறது
உன்னை சுற்றி இருக்கிறது
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
Yaso Sivakumar, Suseenthira Sambhanthar மற்றும் 8 பேர்
1 கருத்து
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

 காலத்தின் சூழ்நிலை

ஒற்றையாகவும் இரு

என்பதற்க்கு

அடையாளமாக நான்

தனி ஒருவன் !

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தாடி இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்
Arul Sivanesasundarm, Sudda Ramakrishnan மற்றும் 49 பேர்
8 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்