வெள்ளி, 12 மார்ச், 2021

முகமூடி

 

இப்போதெல்லாம் முகமூடிக்கு மேல்
மற்றொரு முகமூடி
அணியச் சொல்கிறார்கள்..
பல காலமாய் அணிந்த
பழைய முகமூடியால்
அரிப்பெடுத்து முகம் எரிகிறது.
எரிச்சல் தாளாமல்
முகமூடிகளை அனைவரும்
கழட்டி எறியும் போது,
இந்த உலகம் பிணங்கள்
வேகும் சுடுகாடாய்
மாறி இருக்கும்!
உரை இன் கார்ட்டூனாக இருக்கக்கூடும்
Yaso Sivakumar, Gengaharan Arumugam மற்றும் 4 பேர்
1 கருத்து
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்


அம்பலம் (மடம் ) = அம்பலம


அம்பலம என்பது சிங்கள மொழியில் யாத்திரீகர்களும், வழிப்போக்கர்களும் தங்கி இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தைக் குறிக்கும்.
இது தமிழ்நாட்டில் காணப்படும் சாலையோரத் தங்கு மடங்களுக்கு ஒப்பானது. இவற்றில் தங்குவதற்குக்கட்டணங்கள்அறவிடப்படுவதில்லை.
அம்பலம என்னும் சிங்களச் சொல் அம்பலம் என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. தமிழில் அம்பலம் என்னும் சொல்லுக்குப் பொது மண்டபம் அல்லது பொது இடம் என்னும் பொருள் உண்டு. இந்தப் பொருளிலேயே அம்பலம என்னும் சிங்களச் சொல் உருவாகிச் சாலையோரத் தங்கு மடங்களைக் குறிக்கப் பயன்பட்டுவருகிறது. சிங்களச் சொற்கள் ம், ன் போன்ற மெய்யெழுத்துக்களில் முடிவதில்லை. அவ்வாறான சொற்களைக் கடன்வாங்கிச் சிங்களமாக்கும்போது இறுதி மெய்யெழுத்து அகரம் ஏற்கிறது. இதனாலேயே அம்பலம் என்பதன் இறுதி ம், ம ஆகி அம்பலம ஆனது.
இலங்கையின் சிங்களப் பகுதிகளில் பல பழங்கால அம்பலம கட்டிடங்கள் காணப்படுகின்றன. பல அம்பலம கட்டிடங்கள் ஒரு மேடைமீது நாட்டப்பட்ட தூண்களின்மீது தாங்கப்பட்ட கூரையைக் கொண்ட எளிமையான திறந்த அமைப்புக் கொண்டவை. பழைய காலத்து அம்பலம கட்டிடங்கள் மரத்தூண்களையும் மரத்தாலான கூரைச் சட்டகங்களையும் கொண்டவை. சில அம்பலம கட்டிடங்களின் தளமும் மரத்தாலானவை. கரகககெதர அம்பலம இவ்வாறான கட்டிடத்துக்கு எடுத்துக்காட்டு. எளிமையான கட்டிடங்களாக இருந்தாலும், பழைய அம்பலம கட்டிடங்கள் பல சிங்களக் கட்டிடக்கலைப் பாணியைப் பிரதிபலிக்கும் வகையிலான சிறந்த மரவேலைப்பாடுகளுடன் கூடியவை.






உளவியல் உணர்வுநிலை:


ஒவொரு மனிதனின் சிந்தனை
இரு வகைகள் பிரிவுகள் மட்டுமே
* கருப்பு (இரவு )
* வெள்ளை (பகல் )
இரண்டும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது
1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்
Yaso Sivakumar, Suganthini Kandasamy மற்றும் 8 பேர்

அவன் வேறு ! நான் வேறு !


சாலையில் நடந்து போகையில்
பனிமழை சாரல்
குடையெடுத்து
வந்திருக்கலாமோ
என்ற சலிப்பில்
நான் வேகமாய் நடக்க,
நல்லவேளை
குடையெடுத்து
வரவில்லை
என்ற சந்தோசத்தில்
மெதுவாய் பின்தொடர்கிறான்
மகன்!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விரும்பு
கருத்துத் தெரிவி

எதுசரி

  எதுவும் சரியாக இல்லை 

எதையும் சரியாக விடுவதில்லை 

சரிவதெல்லாம் சரியாக இருப்பதில்லை 

சரிந்தவர்களும் சரியாக மாண்டதில்லை 

சாதித்தவர்களும் சரிகளில் சரியாகவில்லை







சூழல்

 அத்துமீறலுக்கு அணை போட்டு

விட்டு விலக்காமல் விதி போட்டு

மனத்தில் தொடு தொடராமல் மூடி போட்டு

என் இதயத்தில் கால்மேல்கால் போட்டு

அமர்ந்திருக்கிறது நினைவுகள் !

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தாடி இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்
Muhunthan Mahalingam, Mallika Jeya மற்றும் 28 பேர்
2 கருத்துக்கள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

குறுங்கதை

 

அவனது கதை இது
நினைவுகள் முணுமுணுக்கப்படுகிறது.
அவன் சிந்தனை சிதறுகின்றது
மூளை வரள்கிறது,
கிறுக்கிய தாள் கிழிக்கப்படுகிறது,
அந்தப் பெயர் உச்சரிக்கப்படுகிறது,
உறவு பேசப்படுகின்றது
கருத்துக்கள் தீர்மானிக்கப்படுகிறது,
ஒரு உறவு முறிகிறது.
உணர்வுகள் ஏகாந்தம்மாகின்றது
கதை மூடுகின்றது
பிரமையை . ........