வெள்ளி, 14 ஜூன், 2019

மட்சுவோ பாஷோ கவிதைகள்

மட்சுவோ பாஷோ கவிதைகள் தீவிர கலைப்படைப்புகள் மட்டுமின்றிச் சமுக அக்கறை கொண்டவைகளாகவும் இருந்தன.....  

1-
நீங்கள் தீ மூட்டுங்கள் 
உங்களுக்கு ஒர் அற்புதம் காட்டுகிறேன் 
மிகப்பெரிய பனிப்பந்து.....

2-  
ஒரு தேனீ 
தள்ளாடி விழுகிறது 
வெளிர் சிவப்பு மலர்ச் செடியிலிருந்து.....

3-
ஒரு கம்பளிப்பூச்சி, 
இந்த இலையுதிர் கால வீழ்ச்சியிலும் 
இன்னும் ஒரு பட்டாம்பூச்சியாக மாறவில்லை


4- 
ஒரு சிள்வண்டு 
தன்னைப் பற்றியே பாடியது  . 
முற்றிலும் மாறுபட்டு..

5-
தொடங்கியது ஒரு குளிர் மழை
தொப்பி எதுவும் இல்லை -
அதனால்என்ன...?.


6-
அந்தத் துறவிமடத்தில் 
குளிர்முடிந்த இரவு விருந்துக்கு 
தயாராகக் கத்தரியும் வெள்ளரியும்

7-
மூங்கில் புதருக்குள் 
பின்னிரவு நிலவு ஒளிரும் போது
ஒரு குயில் அழுகிறது...

8-
பருத்திக்காட்டில் 
நிலவுப்பூக்கள் 
மலர்ந்தது போல்..

9-
ஒரு வயோதிக கிழவன் 
மெதுவாக உண்ணுகிறான் 
முள் மீன்

10-
காலைத்தேநீர் அருந்தும் துறவி 
சாமந்திப்பூ மலர்வது போல் 
அமைதி 

11-
ஒரு பனிக்காலை 
எனக்கு நானே சவைத்தப்படி 
வஞ்சிரமீன் கருவாடு

12-
ஒரு விசித்திரமான மலர் 
பறவைகளுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் 
இலையுதிர் வானம்

13-
நினைவுகளின் கொந்தளிப்பு 
கால அழிவின் எஞ்சிய எலும்புக்கூட்டில் 
கத்தியால் குத்துவது போன்று

14-
சடோ(Sado) தீவிலிருந்து தூரமாக 
கொந்தளிக்கும் கடல்-
பால் வெளி.

15-
பழைய குளம் .....
ஒரு தவளை குதிக்கும் 
தண்ணீர் சத்தம்


16-
மழை வெள்ளத்திற்குப் பிறகு 
சாமந்திப்பூக்களின் மனம் போல 
அவர்கள் உயர்வடைகிரார்கள்

17-
இலையுதிர்கால நிலவொளியில்
ஒரு புழு அமைதியாகக் குடைகிறது
பாதாம் கொட்டை மேல் அமர்ந்து.


18- குளிரில் நீர்ஜாடியின் 
விரிசல் ஒலி 
நள்ளிரவில் விழிக்கச் செய்தது.

19- இறந்த பிறகு என் பயணத்தில் 
அனாந்தரப் பொட்டல் வெளிகளில் 
என் கனவுகள் மட்டும் சுற்றும் 

20- கசக்கும் பணிப்பாகு ஆயினும் 
தொண்டை நனைக்கப் போதும் 
பெருச்சாளிக்கு 

21-
மவுண்ட் அசாமா (Mount Asama) சாலை நெடுகிலும்
கற்களை வீசுகிறது
இலையுதிர் காற்று

22-
தவுட்டுக்குருவி
தடுப்பு கம்பி வேலி முகப்பிலிருந்து
சோற்றுக்கவளத்தில் எச்சமிடுகிறது.

23-
புதர்-மணப்புல் மலர்கள்
அசைந்தாடினாலும் கீழே தள்ளவில்லை
அவைகளின் பனித்துளி மணிகளை

24-
இலையுதிர்கால மழை
மவுண்ட் ஃபுஜி(Mount Fuji) மலையை 
மிகவும் அழகாக திரையிட்டு மறைக்கிறது.


25-
குளிர் இரவில் அந்தக் காட்டு வாத்து
வானத்திலிருந்து விழுந்தது போல்  
உடல்வலியில் அசந்து தூங்குகிறது.

26-

இரவில் விழித்து பார்த்தப்போது 
உறைந்த எண்ணெயால் 
குறைந்த விளக்கு வெளிச்சம்  

27-
களத்து மேட்டு வைக்கோல் 
கெட்டு கறுக்கும் அளவுக்கு 
போதுமான அளவு மழை 

28-
குளிர்கால மழை 
மாட்டுக் கொட்டகை மீது விழுகிறது.
சேவல் கூவுகிறது 

29-
புதிதாகக் கழுவிய 
வெள்ளைப்பூண்டின் மனம் 
ஜில்லென்று வீசுகிறது 

30-
கடல் கறுக்கிறது 
கடல் வாத்துக்களின் குரல்கள் 
களையிழந்து வெளிருகிறது....

31- 
காலைப்பனியின்  
சகதியில் சிதறின-
குளிரும் முலாம்பழங்கள்

32-
நீண்ட தூர வெளிகளைக் கடந்ததால்   
சவ்வாரி இருக்கை உறைந்து 
என் நிழல் ஊர்ந்து செல்கிறது.

33-
என்னைப் பின்பற்றாதீர்கள் 
முலாம் பழத்தை பிளப்பது போன்று 
அலுப்பாகத் தெரியும் உங்களுக்கு.

34-
பேன்களையும் உண்ணிகளையும் 
உயிரோடு தின்று இளைப்பாறுகிறது  
அந்த குதிரை என் தலையணையில்    

35-
அந்தக் கஞ்சா செடியில்
கிழிந்த ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகு
எதையோ ஞாபகப் படுத்துகிறது.

36-அந்தச் சாலையின் மீது
யாரும் பயணிக்கவில்லை 
இலையுதிர் கால இரவின் தொடக்கம் 

37-
மலைரோஜாக்களின் இதழ்கள்
அப்போதும் இப்போதும் வீழ்ந்திடுமா
நீர்வீழ்ச்சியின் ஓசைக்கு...? 

38-
மலைப்பகுதி  வயல்வெளியில்
பூச்சாண்டி பொம்மை
நல்ல பயன்

39-
கல்லறையைக் குலுக்குகிறது
என் அழுகைக் குரல்
இலையுதிர்காலக் காற்றால்.

40-
குதிரையின் மீதமர்ந்து குட்டித்தூக்கம்
தூரத்து நிலவின் தொடரும் கனவு  
சூடான நீராவியுடன் தேநீர்

41- ஆன்மாக்களின் திருவிழா
இன்றும்  புகைச்சல்  
சுடுகாட்டிலிருந்து  

42- வசந்த மழை
கூரை வழியாகக் கசிவு
சொட்டும் குளவிக் கூடு 


43-
விடுதியில் தங்குவதும் 
அங்கே விலைமாதர்களுடன் தூங்குவதும் 
தரிசுப்புல் திண்டும் நிலவும்  

44- ஒரு குட்டித்தூக்கம் 
அடிக்கல் நாட்டுவது போன்று 
குளிர் சிறைக்கு எதிராக 

45- கீரை சாலட்டில் கிடந்த 
மணலைக் கடித்த பற்களின் கூச்சம் 
வயோதிகம் வந்த நினைவு 

46-
வாழைமரத்தின் 
காற்றில் கிழிந்த இலைகளிலிருந்து 
வாளியில் கொட்டும் மழைத்துளிகள் 

47- அந்தப் பட்டாம்பூச்சி மணக்கிறது 
அதன் இறக்கைகளில் வாசனை 
மந்தாரை மலர்கள் 

48- அந்தத் தும்பி 
தரையிறங்க முடியாது 
புல் என்ற கத்தி மீது.

49-
முதல் பனியில்  
செவ்வந்திச் செடியின் இலைகள் 
ஒட்டி வளைந்தன 

50- அதிகாலைப் பெருமிதம் 
பழைய வேலியிட்ட 
கோட்டைவாயிலில் மலர்ந்தது.

51- வசந்தம் கடக்கின்றது....
துக்கத்தில். பறவைகள் 
கண்ணீர் சிந்தும் கண்களோடு மீன்கள் 

52- மஞ்சள் மலைரோஜாவின்
இதழ்களில் நடுக்கம்-
நீர்வீழ்ச்சியின் கர்ஜனை

53- அந்த மீன் வியாபாரியின் குரல்
கலந்தது 
குயிலின் குரலோடு 

54- 
மூங்கில் காட்டில் மறைந்திருந்த
பனிப்புயல்
அமைதியை விரட்டியது.

55- அந்தப் பழைய கிராமத்தில் 
ஒரு வீடுகூட....
ஈச்சமரங்கள் இல்லாமல் இல்லை

56- என் மரக்கூரையின் கீழ்
ஏப்ரல் மழையின் தனித்தனி சொட்டுகள்
வரையும் கோடுகள்

57- ஒரு சிறந்த போர்வீரனின்
காலி தலைக் கவசத்திலிருந்து  
ஒரு வெட்டுக்கிளி பாடுகிறது

58- கோடை புற்கள்
துணிச்சலான வீரர்களின்   

மிச்சமுள்ள கனவுகள்

59- 
குளிர்காலத் தோட்டத்தில் 
தேய்ந்துபோன நிலவை 
பூச்சிகள் பாடுகின்றன 

60-
மேகங்கள்-
நிலவைப் பார்த்து ரசிப்பவர்களுக்கு  
ஏமாற்றும் பாசாங்குக்காரர்கள் 


இவைகள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட பாஷோவின் ஹைக்கூ கவிதைகளிலிருந்து எனக்கு பிடித்தவைகள் எனது நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டன விதிமுறைகளுக்கு இங்கே இடமில்லை........
  

வியாழன், 13 ஜூன், 2019

"மன்னித்துவிடு"


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்
முதலில் என் மனதை
காயப்படுத்தினாய்...
பின் என் உணர்வுகளை கூட
சாகடித்தாய்...
இறுதியில் என்னையே
வெறுக்க வைத்தாய்...
நீ என் தோழியென்று
என்னை இதுவரை
நினைக்கவும் வைத்தாய்....
ஆனால்
இனி இதுபோல்
உன் கற்பனைகளுக்கு
நான் இரையாக போவதில்லை...
உண்மையாகத்தான் சொல்கிறேன்
'மன்னித்துவிடு'

நான் கவிஞன் அல்ல...

Bilderesultat for பேனா
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
நிறைய கவிதைகள் படித்து...
நிறைய நிகழ்வுகளை நினைத்து...
பாதிக்கப்பட்டு.. ..
இப்படி பலவித அனுபவங்களில்
எனக்குள் எழுந்த
வார்த்தைக் குவியல்களை சேமித்து வைத்திருக்கிறேன்...
படித்து முடிக்கும் உங்களுக்கு அது கவிதைதானென தோன்றினால்
இந்த வலைப்பூவுக்கு வைத்த தலைப்பில் மகிழ்வேன்...
தொடர்ந்து வாருங்கள்..... இந்தப்பூவை தொட்டுச்செல்லுங்கள்...