வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

முறிந்த மரகொப்பு!


நேற்றைய போரின் 

கதாநாயகர்கள் 

`புனர்வாழ்வு` எனும்

சித்திரவதைக்குப்
பின்

வாழ
வழியின்றி

வாழ்வை
முடித்துக்கொள்கிறார்கள்

மனக்குழப்பத்தோடு
....!


தங்கத்தலைவன்
வழிகாட்டுதலில்

சாதனைகள்
பலபடைத்த

சரித்திர
நாயகிகள்

ஒதுக்கப்பட்டும்

துன்புறுத்தப்பட்டும்

`யார் காப்பார் எம்மை இனி `

என்று
பெருமூச்சுவிடுகிறார்கள்

வாழ்க்கையைத்
தொலைத்துவிட்டு ...!


`யாரும் இருக்குமிடத்தில்

இருந்துகொண்டால்

எல்லாம்
சௌக்கியமே ...`

சரித்திர
நாயகரின்

இன்றைய
நிலை பார்த்தபின்

ஞாபகத்திற்கு
வருகிறது

கண்ணதாசனின்
வரிகள் ...! 

கருத்துகள் இல்லை: