
நேற்றைய போரின்
கதாநாயகர்கள்
`புனர்வாழ்வு` எனும்
சித்திரவதைக்குப்
பின்
வாழ
வழியின்றி
வாழ்வை
முடித்துக்கொள்கிறார்கள்
மனக்குழப்பத்தோடு
....!
தங்கத்தலைவன்
வழிகாட்டுதலில்
சாதனைகள்
பலபடைத்த
சரித்திர
நாயகிகள்
ஒதுக்கப்பட்டும்
துன்புறுத்தப்பட்டும்
`யார் காப்பார் எம்மை இனி `
என்று
பெருமூச்சுவிடுகிறார்கள்
வாழ்க்கையைத்
தொலைத்துவிட்டு ...!
`யாரும் இருக்குமிடத்தில்
இருந்துகொண்டால்
எல்லாம்
சௌக்கியமே ...`
சரித்திர
நாயகரின்
இன்றைய
நிலை பார்த்தபின்
ஞாபகத்திற்கு
வருகிறது
கண்ணதாசனின்
வரிகள் ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக