வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

அப்பாவின் நினைவில்...25 ஆண்டுகள் கழிந்தன



கடவுள் முகம் கண்டதில்லை ! 
படைக்கும் கடவுளின் முகமாக- நீ
என்னைப்படைத்த உந்தன் அன்புமுகம் கண்டேன் !


மென்மையாய் பேசுபவனேபணிவினைக் கற்பித்தவனே...........

அன்பு ஒன்றை வாடகையாய்க் கொடுத்து-என்
நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று !
உண்மையான நண்பனாக இருப்பவர்...

நேரம் தவறாமை கடுஞ்சொல் கூறாமை
மறு மனம் நோகமை
நன்றி மறவாமை
பகைமையைத் தொடராமை..
சேயான எனக்கு அனைத்தையும் கற்பித்தாய்!


உதவி புரிவதற்கு நீ என்றும் சிந்தித்தவனில்லை
உனக்கு உபத்திரம் செய்ததை நினைப்பதுமில்லை

பள்ளிக்கு பின்பே பல்கலை கழகம் செல்வார்கள்-நான்
 பல்கலை கழகமே உன்னிடம் பயின்றபின் தான் பள்ளிக்குச் சென்றேன்!


நீ நம்பின ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?
விரைந்து உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டானே???
சுயநலம் பிடித்த கடவுள் அவன் .


என்னை உலகிற்களித்தவனே -இன்று
உன் பிரிவால் நான்சிந்தும் கண்ணீருடன்
உன்னிடம் வரம் ஒன்று யாசிக்கிறேன்?

என் பிள்ளை உன்னைப்போல் இருக்கவேண்டும்
பிற்காலத்திலும் என்னை காத்திட நீ வேண்டும்!!
உள்ளத்தில் உதயமாக இருப்பவர்..!

குடும்ப கஷ்டத்திற்கு உழைப்பாளியாக இருப்பவர்...
குணத்தில் நல்ல மனிதராக இருப்பவர்..!
அவர் தான் அப்பா ! என் கடவுள் !


அன்புக்குரிய தோழன்

சன் நரேன்

கருத்துகள் இல்லை: