சனி, 27 ஜனவரி, 2018
வியாழன், 28 டிசம்பர், 2017
காட் பாதர்- 1 - உலக சினிமா
காட் பாதர்- 1 - உலக சினிமா
"காட் பாதர்- 1 " 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசினோ நடிப்பில் வெளி வந்த ஆங்கில படம்..... 'நாயகன்" இல் ஆரம்பித்து வரப்போகும் "மங்காத்தா" வரை இந்த படத்தின் பாதிப்பில்லாமல் எந்த ஒரு "தாதா" படமும் எடுக்கப்பட்டதுமில்லை , இனி மேல் எடுக்கப்போவதுமில்லை....
" காட் பாதர்- 1 " நிச்சயம் இப்படத்தை நிறைய பேர் பார்த்திருப்பார்கள் ...ஆனாலும் பார்க்காதவர்கள் ஏராளம்...அவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று...இன்று ஹீரோயிசத்தை முன்னிறுத்தி எடுக்கப்படும் எல்லா படங்களுக்கும் ஒரு முன்னோடி இப்படம் ...
இதில் டானாக நடித்த பிராண்டோ மற்றும் அல் பாசினோ நூறு பேரை அடிக்கவில்லை பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசவில்லை ..படத்தில் பெரிதாக ரத்தம் சொட்டவில்லை ..முகம் சுளிக்கும் வன்முறை இல்லை ... ஆனாலும் இதெல்லாம் ஏற்படுத்தாத சிலிர்ப்பும் பாதிப்பும் படத்தில் உண்டு .....
.
சிறு வயதில் இட்டாலியில் இருந்து ஓடி வந்து அமெரிக்காவின் பெரிய டானாக உருவாகிறார் பிராண்டோ .....முதல் காட்சியிலேயே அவரின் அரசியல் செல்வாக்கும் பலமும் , அதே நேரத்தில் அவர் நட்பிற்கும் , குடும்பத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவமும் தெளிவாக சொல்லபடுகிறது ...மூத்த பையனும் , தத்து பையன் சாமும் பிராண்டோவின் உடன் இருக்க கடைசி பையன் பாசினோ இதில் எதுவும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் ...
சூதாட்டம், கட்டை பஞ்சாயத்து இதை டான் தொழிலாக செய்தாலும் போதை பொருட்களை விற்பனை செய்ய இவரின் உதவி கேட்டு வரும் பெரிய பணக்கார குடும்பத்தை பிராண்டோ மறுக்கிறார் ..இதில் ஆத்திரம் அடையும் அவர்கள் டானை கொல்ல முயற்ச்சிக்க அதில் இருந்து உயிர் பிழைக்கிறார் .......இருந்தும் கொலை முயற்சி தொடர்கிறது ..
எதிரிகளை ஒன்றும் செய்ய முடியாது என மற்ற சகோதரர்கள் நினைக்க பாசினோ முடியும் என்கிறார் ... அவர் திட்டப்படி சமரசம் செய்ய போகும் இடத்தில் முன்பாகவே மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து எதிரிகள் இருவரையும் சுட்டு தள்ளுகிறார் பாசினோ.....
பிறகு அங்கிருந்து வெளியூர் செல்லும் பாசினோ ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறார் .காதல் மலர்கிறது ...திருமணமும் முடிகிறது ......இவருக்கான கொலை முயற்சியில் இவரின் மனைவியும் இறக்கிறார்...இதற்கிடையில் எதிரிகள் இவரின் அண்ணனின் கதையை முடித்து விடுகிறார்கள் ....
ஊருக்கு திரும்பிய பாசினோ பழைய காதலியை சந்திக்கிறார் ..மணம் முடிக்கிறார் ....குழந்தையும் பிறக்கிறது .... பிராண்டோவும் முழு பொறுப்பையும் பாசினோவிடம் கொடுத்து விட்டு சிறிது காலத்தில் இறந்து விடுகிறார் .
.
பாசினோ தனது தந்தை மற்றும் அண்ணன் சாவிற்கு பழி தீர்க்க எந்த சபதமும் எடுக்கவில்லை ஆனால் தனது குழந்தையின் பெயர் சூட்டும் விழா முடிவதற்குள் இதற்கு காரணம் ஆன ஐவரின் கதையையும் முடிக்கிறார் .....இதில் இவரின் சகோதரியின் கணவரும் உண்டு ....
பாசினோவை தேடி அனைவரும் வருகிறார்கள் ...இவரை டானாக முழு மனதுடன் ஏற்கிறார்கள் ...இதனால் மனைவியிடம் விரிசல் ஏற்படுகிறது .அத்துடன் படமும் முடிகிறது.........
இப்படத்தில் பிராண்டோ பேசும் ஒரு வசனம் மிக பிரபலம் ..." IAM GONNA GIVE HIM AN OFFER WHICH HE CANT REFUSE " ..பெரிய டானாக இருந்தாலும் மனைவி,மகன், பேரன்,பேத்தி என பெரிய குடும்ப சூழலில் வாழ்வது , போதை பழக்கம் இளைஞர்களிடம் பரவ கூடாது என தடுப்பது ....தனக்கு வேண்டிய ஹீரோவிற்கு சான்ஸ் தர மறுக்கும் தயாரிப்பாளரை வழிக்கு கொண்டு வர அவருக்கு பிடித்த மிக விழை உயர்ந்த குதிரையின் தலையை அவருக்கே பரிசாக கொடுப்பது , சாவதற்கு முன் பேரனுடன் கொஞ்சி விளையாடுவது என எல்லா இடங்களிலும் பிராண்டோ மனதில் நிற்கிறார் .....
யதார்த்தமான நடிப்பு என்ன என்பதை பாசினோவிடம் தான் கற்க வேண்டும் எடுத்த எடுப்பில்லேயே காதலியின் தந்தையிடம் பெண் கேட்கும் தைரியம் ,மரண படுக்கையில் இருக்கும் அப்பாவை காப்பாற்ற காட்டும் தவிப்பு ,... எதிரிகள் அனைவரையும் அழிப்பதற்கு அவர் போடும் சாமர்த்தியமான திட்டம் இப்படி நிறைய இடங்களில் அவரின் கண்களே பேசி விடுகின்றன ........
.
இப்படத்தில் இருந்து உருவி எடுக்கப்பட்ட படங்கள் ஏராளம் ..அதில் முக்கியமானவை நாயகன் மற்றும் சர்கார் ...மணி கதை கருவை அப்படியே எடுத்திருந்தாலும் சில காட்சிகள் புதுமையாக செய்திருப்பார் ..அதிலும் ஒளிப்பதிவு , இசை,வசனம்,திரைக்கதை போன்றவைகளில் இன்றும் இந்த
படம் ஒரு முன்னோடியாக இருக்கிறது ..ஆனால் சர்க்கார் அப்படியே எடுக்கப்பட்ட படம்....
போலீஸ் அதிகாரி தன் பெண் கற்பழிக்கப்பட்டதை கமலிடம் சொல்வது , வியாபார விஷயத்தில் ரெட்டி குடும்பம் நாயகனிற்கு எதிராவது , போன் பூத்தில் வைத்து நிழல்கள் ரவி கொல்லபடுவது , கமலின் மனைவி கொல்லபடுவது ( GOD FATHER2 ) , காரின் பின் சீட்டில் இருந்து எதிரியின் கழுத்தை நெரித்து கொல்வது , கமலின் நடிப்பு என நிறைய காட்சிகள் இப்படத்தின் பாதிப்பு .முன்பே சொன்னது போல சர்கார் படமே " GOD FATHER " தான் .....
இந்த இரண்டு படங்களையும் தவிர குறிப்பாக சொல்ல வேண்டிய மற்றொரு படம் தேவர் மகன்"..ஆனால் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக தெரியாமல் கமல் மிக புத்திசாலித்தனமாக கதைக்களத்தையும் , சூழலையும் மாற்றியிருப்பார்.
சினிமா ஆர்வமுடைய ஒவ்வொருவருடைய வீட்டையும் அலங்கரிக்க வேண்டிய முக்கியமான டி.வி.டி தொகுப்பு காட் பாதர்.. காட் பாதர் -2 விமர்சனத்துடன் அடுத்த முறை சந்திக்கலாம்... உலக சினிமா
ஞாயிறு, 3 டிசம்பர், 2017
விரும்பிய வரிகள்
காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய உன் இமைகளின் தாக்கம் மெல்லியதாய் கேட்டது என்னிடம் உன் இதயத்தை தருவாயா.....! என்று
நீ நடப்பது என்னவோ நிலத்தில் தான் ஆனால் அதிர்வுகளை என் இதயத்தில் உணருகிறேன். காத்திருத்தல் சுகம் அதுவும் உனக்காய் காத்திருத்தல் தவம். என் இதயத்தில் உன் பெயர் எழுதி என் உதட்டில் கையொப்பம் இட்டவன் உனக்காய் அழுது என் கண்கள் வறட்சி கொண்டது உன் நினைவுகள் தடுக்கி விழுந்தே நான் காயம் கொள்கிறேன் மருந்தாய் வா விடை சொல்ல வா
நிலா தேய்வதால் வானம் வருத்தப்படுவதில்லை...
பூக்கள் உதிர்வதால் செடிகள் புலம்புவதுமில்லை...
மழையில் நனைவதால் மரங்கள் குடை பிடிப்பதுவுமில்லை...
மதங்கள் வேறுபடுவதால் மனிதம் மாறுவதுமில்லை...
நம்பிக்கை தொடர்வதால் தோல்வி வெற்றியின் வேரறுப்பதுமில்லை..
அதே போல் உன் மௌனத்தை கலைப்பதால் உன் உயிர் உன்னை விட்டு பிரிவதும் இல்லை ...
கலைத்து விடு பெண்ணே உன் மௌனத்தை
உயிருள்ள்ள ரோஜா பூவே உனக்காக பிறந்தவன் நான் நீ என்னை விட்டு போனால் என் இதயம் தாங்காது
என் இதயம் என்ற தோட்டத்தில் பாசம் என்னும் பூக்களை வளர்த்தேன்.,,அந்த பூக்கள் கூட வாடிப்போகும் நீ என்னை விட்டு போனால் ...
நான் ஒரு ஏழை என்பதக்காக என்னை விட்டு பிரிந்து செல்கிறாய் பெண்ணே என் இதயம் ஏழை அல்ல என்பதை நீ மறந்து விட்டாய் ,,, பெண்ணே உன்னை நினைத்து உருகுவது என் இதயம் மட்டுமல்ல என் உயிரும்தான் ....
உன் நினைவுகள் என் நெஞ்சினில் புதைந்ததினால் தீயால் என் நெஞ்சை சுடுகின்றேன் ....உன் உருவம் என் கண்களில் பதிந்ததினால் கண்ணீர் விட்டு அளிக்கின்றேன்.....பெண்ணே உன் தாய் தந்தைக்காக என்னை விட்டு பிரிந்து விட்டாய் ..... என் காதலை பழைய காகிதம் போல் தூக்கி எரிந்திட முடிந்தது .. ஆனால் என்னால் முடியவில்லை உன்னை மறக்கவும் உன்னைவெறுக்கவும் ..... இப்போதெல்லாம் எனக்கே என்னை பிடிக்கக வில்லை
உலகமெங்கும் காதல் இல்லாத இடமும் இல்லை அது நுழையாத மனமும் இல்லை ...சிலறது காதல் பேசும் காதல் ,, சிலறது காதல் மௌன காதல் ,, சிலறது காதல் சேர்த்திடும் காதல் ,, சிலறது காதல் பிரிந்திடும் காதல் ,,,சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,,யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...,சொல்லாத காதல் செல்லாத காசாய் ஆக முன்பே உன் காதலை சொல்லிவிடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


