வெள்ளி, 12 மார்ச், 2021

சொற்களும் நானும்


சொற்கள்
சிக்கலானவை..
மனதின் நிகழ்வுகளை
சொற்களை கொண்டு பிரதியெடுக்க
முயற்சிக்கும் போதெல்லாம்
ஏதேதோ சொற்கள்
முளைக்கின்றன மொழியறிவின் கட்டுக்குள்..
உள்ளுக்குள் உருவாகும்
சொற்களை
அதன் போக்கில் விட்டுவிட்டால்
சொற்கள் எப்படி எப்படியோ உருமாறி
கடைசியில் அர்த்தமற்று போய்விடுகின்றன..
இறுதியில்
எப்போதும் போல்
தனித்து எச்சமாகிறேன்...
சொற்களற்ற பிரதியாகிறேன் நான்..
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விரும்பு
கருத்துத் தெரிவி


கருத்துகள் இல்லை: