சனி, 15 ஜனவரி, 2022

ஆரோக்கிய முதலீடு

 

நம் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…


சிறுதானியம் என்பது வரகு,சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானிய வகைகள் ஆகும். சிறுதானியங்கள் பழங்கால மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் மிகப் பெரிய அங்கமாக திகழ்ந்துள்ளது. இந்த தானியங்களில் மனித உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. இப்பொழுது நாம் உண்ணும் அரிசி மற்றும் கோதுமையை விட பல மடங்கு சத்து அதிகம் உள்ளது.

🔸வரகு

வரகு தானிய வகைகளில் ஒன்றாகும், இதை ஆப்பிரிக்கா கண்டங்களில் முதன்மை உணவாக பயன்படுத்தி வருகின்றனர். இது கோடை வெயிலுக்கு ஏற்ற நல்ல குளிர்ச்சியான உணவாகும். இதை பறவைகள் எளிதில் உண்ணாமல் இருக்க இதன் வெளிப்புறத்தில் அமைப்பு ஏழு அடுக்குகளைக் கொண்டுள்ளது.

மூட்டு வலி மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கல்லீரலின் செயல்பாடுகளை தூண்டி கண் மற்றும் நரம்பு நோய்களை தடுக்கும் குணம் உள்ளது. மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் வரகை சமைத்து சாப்பிடுவது நல்லது.

🔸தினை


தினைகளில் வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது . இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. உலகில் அதிகம் உற்பத்தியாகும் தானிய வகைகளில் இதுவும் ஒன்று. இதன் கதை பார்ப்பதற்கு நரி வாழை போன்று பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இது பாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது மற்றும் இதை இட்டாலியன் மில்லட் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது மாவுச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. இது உலகிலேயே இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது இதற்கு அடுத்தபடி நைஜீரியா மற்றும் சீனா அதிகப்பங்கு வகிக்கிறது. உலகில் அதிகம் பயிரிடப்படும் தானியத்தில் இது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

நீரிழிவு நோயாளியைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் மாவு சத்து அதிகம் காணப்படுகிறது இது புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள அதிக ஆற்றல் கொண்ட உணவாகும்.

தினை சமையல் – 

நாம் அரிசி தயாரித்து பருப்பு, சாம்பார், ரசம் அல்லது நமக்கு விருப்பமான எந்த கறியுடன் பரிமாறும்போது தினை சமைக்கலாம். பல்வேறு தோசை, இட்லி, உப்மா, பொங்கல், மற்றும் இனிப்புகள் தயாரிக்கலாம், இவை பேக்கிங்கிலும் பயன்படுத்தலாம்.

🔸சாமை


இது புன்செய் நிலப் பயிர். இது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகிறது. இந்த தானியத்தின் மாவை கோண்டு ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் சமைக்கலாம். இது பயிரிடும் பொழுது அதிக பூச்சி தொற்று ஏற்படுவது இல்லை. இது எலும்புக்கு இடையில் உள்ள தசை வலிமையை அதிகப்படுத்துகிறது. இது கோடை காலத்தில் ஏற்படும் நாக்கு வறட்சியை நீக்கவும் காய்ச்சல் காரணமாக ஏற்படும் வறட்சியை நீக்கவும் உதவுகிறது மற்றும் இது மலச்சிக்கலை சரி படுத்துகிறது. இது வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைக்கும் நல்ல ஒரு நிவாரணியாக செயல்படுகிறது. ஆண்களின் ஆண் இனபெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

🔸குதிரைவாலி


இது புற்க்கள் வகையை சார்ந்த புன்செய் பயிராகும். இது உடலை சீராக வைத்து சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இது இந்தியா நேபால் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது மற்றும் பழங்களை உணவில் இது மிகவும் முக்கியமான உணவாக கருதப்பட்டது. இது நெல் விளைச்சல் இல்லாத கால கட்டத்தில் அதிகமாக பயிரிடுவார்கள். இது அரிசி போன்று வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்து ‍உணடு வந்தனர். இது உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அதிகப்பங்கு வகிக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் விதையை ஊறவைத்து பியர் செய்கிறார்கள். இதில் நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. இது இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு மருந்தாகும்.

🔸கம்பு


இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் புன்செய் பயிராகும். இது எல்லாவித மண்ணிலும் விளையக்கூடிய ஒரு தானியம் ஆகும் .இதன் விளைச்சல் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆகும். உலகில் 55% உற்பத்தியில் கம்பு இடம்பிடித்துள்ளது. இது பல நாடுகளில் மனிதனுக்கு உணவாகவும், விலங்குகளுக்கு உணவாகவும், எரி பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகமாக பயிரிடப்படும் தானியங்களில் கம்பும் ஒன்று. இதில் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது நம் தோழர் கண்பார்வைக்கும் மிகவும் நல்லது. கம்பு 3-6 மாதங்கள் கெடாமல் இருக்கும், பின்பு மீண்டும் வெயிலில் நன்றாக காய வைத்தால் இன்னும் 6 மாதங்கள் கெடாமல் இருக்கும். இதில் நொச்சி இலைகளை சேர்த்து சேமித்தால் இன்னும் பல மாதங்கள் கெடாமல் பாதுகாக்கலாம்.

இதை உணவாக உட்கொள்வதற்கு கம்பை தண்ணீரில் ஊறவைத்து பின்பு அதை துணியில் காயவைத்து மேல்புறமாக உள்ள ஈரம் போன பிறகு அதை இடித்து அதில் உள்ள உமியை பிரித்தெடுத்து பின்பு அதை மாவாக இடித்து பயன்படுத்தலாம். இது உணவாக எடுத்துக் கொள்ள அதிக வேலைப்பாடு இருப்பதால் மக்கள் இதை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்வதில்லை,எனவே தமிழக வேளாண்மை உடனடி கம்பஞ்சோறு என்று தயாரித்து காப்புரிமை பெற்றது. இதை பயன்படுத்தி கம்பங்கூழ், இட்டிலி, அடை ,தோசை கம்பஞ்சோறு என்று பல விதமாக சமைத்து உண்ணலாம். இது உடலை நன்கு உற்சாகமாக இருக்க செய்கிறது அது மட்டும் அல்ல மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கிறது. இது உடல் உயிரணுக்களின் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது.

🔸கேழ்வரகு


ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது மற்றும் உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது. கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். இதில் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோயை வராமல் தடுக்கிறது மற்றும் சரி செய்ய உதவுகிறது. இது கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவாகும் ஏனென்றால் இது நம் உடலில் உள்ள வெப்பத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கிறது அதுமட்டுமின்றி ரத்த அழுத்தம் கல்லீரல் நோய் இதய நோய் ஆஸ்துமா நோய் வராமல் பாதுகாக்கவும் சரிசெய்யும் உதவுகிறது. இது புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும் மிகவும் உதவுகிறது. தென்னிந்தியாவில் இதை தினை, சிவப்பு தினை, ராகி மற்றும் மிகவும் பிரபலமான தினை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் கால்சியம் புரதம் இரும்பு சத்து அடங்கியுள்ளது. இது இந்தியாவில் மிகவும் முக்கியமான தானியமாக கருதப்படுகிறது. இதை பயன்படுத்தி கூழ் களி இட்டலி தோசை என்று பல உணவுகளை சமைக்கின்றனர்.

🔸சோளம்


சோளம் என்பது பழமையான தானியங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் எதற்காக பயன்படுத்தப்படுகிறது. சோளத்தில் அதிக ஊட்டச் சத்து நிறைந்துள்ளது. இது முக்கியமாக புரதம் நார்ச்சத்து பாஸ்பரஸ் பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகமாக உள்ளன. சோளம் பலவகைகளில் காணப்படுகிறது இது ஒரு புல் வகையைச் சேர்ந்த தானியம் ஆகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல கால்நடை விலங்குகளுக்கும் தீவனமாக வழங்கப்படுகிறது. இது உலகில் அனைத்து விதமான வெப்பமுள்ள நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.


கருத்துகள் இல்லை: